Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அர­சாங்கம் அக்­கறை காட்­டுமா?

Featured Replies

பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அர­சாங்கம் அக்­கறை காட்­டுமா?

 

உள்­ளூ­ராட்சி தேர்­தலின் பெறு­பே­றுகள் தேசிய அர­சாங்­கத்­திற்குள் ஏற்­ப­டுத்­தி­யுள்ள நெருக்­க­டியை கார­ண­மாகக் கொண்டு இலங்கை அர­சாங்­கத்­தினால் ஜெனி­வா­விற்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்து பின்­வாங்க முடி­யாது. அர­சாங்கம் அவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு முற்­பட்டு கார­ணங்­களை முன்­வைக்கும் பட்­சத்தில் அதனை ஜெனி­வாவின் உறுப்பு நாடுகள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டாது என்று தான் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். ஏ. சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

தேசிய அர­சியல் நிலைவ­ரங்கள் எவ்­வா­றாக இருப்­பினும் வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்து நழுவிச் செல்ல முடி­யாது என்­பதை உறுப்பு நாடுகள் வலி­யு­றுத்­த­வேண்டும் என்றும் தான் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கின்றார். ஜெனி­வாவின் பிரித்­தா­னிய மிஷன் பணி­ம­னையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் மற்றும் மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்­பின்­போதே இவ்­வாறு சுமந்­திரன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இது குறித்து கருத்து தெரி­வித்த அவர், 2015 ஆம் ஆண்டில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. எனினும் சில விட­யங்­களைத் தவிர, பல விட­யங்கள் இது­வரை நடை­மு­றைக்கு வர­வில்லை. குறிப்­பாக காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­போதும் அது நடை­மு­றைக்கு வர­வில்லை. அர­சாங்­கத்தின் நகர்­வுகள் வேக­மாக இல்லை என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. அர­சாங்­கத்தின் சார்பில் ஜெனிவா வரு­கின்ற பிர­தி­நி­திகள் பல்­வேறு கதை­களை கூற முடியும். உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களின் நம்­பிக்­கையை வெல்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருப்­ப­தாக கூற முடியும்.

குறிப்­பாக அர­சி­யல்­யாப்பு உரு­வாக்­கப்­ப­ணிகள், நல்­லி­ணக்க நகர்­வுகள் குறித்து பிரஸ்­தா­பிக்க முடியும். எனினும் இவற்றில் எந்­த­ முன்­னேற்­றமும் இல்லை. எவ்­வா­றா­யினும் இலங்கை அர­சாங்கம் ஜெனி­வா­விற்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை ஒரு­ வ­ரு­ட ­கா­லத்­திற்குள் நிறை­வேற்­று­வ­தற்கு அழுத்தம் கொடுக்­க­வேண்டும் என்று உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 26 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. இந்த கூட்டத் தொடரில் இவ் விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இவ்விவ­காரம் குறித்து மீளாய்வு அறிக்­கை­யொன்­றினை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் விடுக்­க­வுள்ளார்.

இந்த நிலை­யில்தான் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்­டு­மென்று அழுத்தம் கொடுக்­கு­மாறு தான் கோரி­யுள்­ள­தாக சுமந்­திரன் எம்.பி. கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இலங்­கையில் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணையின் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. 2012 ஆம் ஆண்டு சர்­வ­தேச விசா­ரணை கோரிய பிரே­ரணை ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறை­வேற்­றப்­பட்­டது. அதன் தொடர்ச்­சி­யாக 2013 ஆம் ஆண்டு 2014 ஆம் ஆண்­டு­க­ளிலும் தொடர்ச்­சி­யாக பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்ட போதிலும் அன்­றைய மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் அந்த விட­யத்தில் ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. மனித உரிமை பேர­வையின் தீர்­மா­னங்­களை அலட்­சியம் செய்யும் வகை­யி­லேயே அன்­றைய அர­சாங்கம் செயற்­பட்டு வந்­தது.

இத­னை­ய­டுத்து 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து மார்ச் மாதம் நடை­பெற்ற மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடரில் பொறுப்­புக்­கூறும் விட­யத்­திற்­காக அர­சாங்­கத்­திற்கு ஆறு­மா­த­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஊக்­கு­விக்கும் வகையில் சர்­வ­தேச சமூகம் இந்த அவ­கா­சத்தை வழங்­கி­யது.

புதிய அர­சாங்­க­மா­னது யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் குறித்தும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் என்று அறி­வித்­தி­ருந்­தது. இத­னை­ய­டுத்து 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் நடை­பெற்ற ஐ.நா. மனித உரிமை பேர­வை யின் கூட்டத் தொடரில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ள­க­ வி­சா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்ற தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்கு அர­சாங்­க­மா­னது இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­ட­துடன் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படு­மென்று உறுதி வழங்­கி­யது.

முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர பேர­வையின் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு இதற்­கான உறு­தி­மொ­ழி­யி­னையும் வழங்­கி­யி­ருந்தார். அர­சாங்கம் இந்த பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்த போதிலும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை விசா­ர­ணையில் ஈடு­ப­டுத்த முடி­யாது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்தார். இதனால் ஜெனி­வாவில் வழங்­கிய வாக்­கு­று­தியை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் விட­யத்தில் அர­சாங்கம் அக்­க­றை ­காட்­டாத நிலைமை எழுந்­தது.

இந்த நிலை­யில்தான் கடந்த வருடம் மார்ச் மாதம் நடை­பெற்ற ஐ.நா. மனித உரிமை பேர­வையில் பொறுப்­புக்­கூறும் விட­யத்தை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு மேலும் இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. இந்த கால அவ­காசம் வழங்­கு­வது தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யு­டனும் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தார். இந்தக் கூட்டத் தொட­ருக்கு முன்­னரும் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் ஜெனி­வா­விற்கு சென்று உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இதன்­போது அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்­கு­வ­தற்­கான இணக்­கத்தை இவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

கூட்­ட­மைப்பின் இணக்­கத்­து­ட­னேயே அர­சாங்­கத்­திற்கு இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. இந்த அவ­காசம் வழங்­கப்­பட்டு தற்­போது ஒரு­வ­ரு­டம் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. ஆனால் மனித உரிமை மீறல் தொடர்­பிலோ, யுத்­தக்­குற்­றங்கள் குறித்தோ உள்­ளக விசா­ர­ணையை நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் கூட அர­சாங்­கத்­தினால் இன்­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

சர்­வ­தேச நீதி­ப­தி­களை விசா­ர­ணையில் ஈடு­ப­டுத்துவதில்லை என்று அர­சாங்கத் தரப்­பினர் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்து வரு­கின்­றனர். இந்த நிலையில் உரிய வகையில் உள்­ளக விசா­ர­ணை­யை­யா­வது நடத்­து­வ­தற்­கான பொறி­மு­றைகள் கூட இன்­னமும் அமைக்­கப்­ப­ட­வில்லை. காணாமல் போனோ­ருக்­கான செய­ல­கத்தை நிறு­வு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு சட்ட அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ள­போ­திலும் இன்­னமும் அந்த செய­ல­கத்தை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் கூட எடுக்­கப்­ப­ட­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது இது­வரை காலமும் பிர­தான இரு கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யையும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யையும் ஒன்­றி­ணைத்து பல­மான நிலையில் ஆட்சி புரிந்து வந்­தது. நல்­லாட்சி அர­சாங்கம் அமைக்­கப்­பட்­ட­வுடன் 19ஆவது திருத்த சட்டம் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது. இவ்­வாறு பல­மான நிலையில் அர­சாங்கம் இருந்­த­போ­திலும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் உரிய அக்­கறை செலுத்­தப்­ப­ட­வில்லை. ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

தற்போது உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் அரசாங்கம் ஸ்திரத் தன்மையை இழந்திருக்கிறது. இந்த நிலையில் பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசாங்கமானது அக்கறை காட்டுமா என்பது சந்தேகத்திற்கிடமான ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்த நிலையில் தான் 37 ஆவது ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடர் இடம்பெறவுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும் அரசாங்கம் சாக்குப்போக்குக்களை கூறி வாக்குறுதிகளை நிறைவேற்று வதிலிருந்து தப்பிக்க முயலக்கூடாது என்ற வகையிலேயே உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து தான் வலியுறுத்தியதாக சுமந்திரன் எம்.பி. கருத்து தெரிவித்திருக்கின்றார்.

ஆனால், தற்போதைய நிலையில் பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் முன்னரைவிட அக்கறை காண்பிக்காத தன்மையையே வெளிப்படுத்தும். எனவே தற்போதைய செயற்பாடானது காலம்பிந்திய ஞானமாகவே காணப்படுகின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-20#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.