Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

62 விசைப்படகில் 1920 பக்தர்கள் கச்சத்தீவு நோக்கி பயணம்.! (படங்கள்)

Featured Replies

62 விசைப்படகில் 1920 பக்தர்கள் கச்சத்தீவு நோக்கி பயணம்.! (படங்கள்)

 

இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­ க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா இன்று  கொடி­யேற்­றத்­துடன் ஆரம்பமாகவுள்ளது.

28308336_1055897184561650_1560247100_n.j

இன்று மாலை 4 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் நற்­க­ருணைப் பெரு­விழாத் திருப்­பலி வழி­பா­டுகள் நடை­பெறும். நாளை  சனிக்­கி­ழமை காலை 7 மணிக்கு யாழ்.மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை மற்றும் காலி மறை­மா­வட்ட ஆயர் றேமன் விக்­கி­ர­ம­சிங்க ஆண்­டகை ஆகியோர் இணைந்து பெரு­விழா கூட்டுத் திருப்­பலியை நிறை­வேற்­ற­வுள்­ளனர். 

28308577_1055897144561654_1019904720_n.j

இந்த நிலையில், 62 விசைப்படகில் 1920 பக்தர்கள் கச்சத்தீவு புறப்பட்டு சென்றனர். 

28308993_1055897157894986_98577602_n.jpg

இதில் 1532 ஆண் பக்தர்களும், 336 பெண் பக்தர்களும், ஆண் குழந்தைகள் 29 மற்றும் பெண் குழந்தைகள் 23 பேர் என 1920 பக்தர்கள் கச்சத்தீவு சென்றனர். 

28313384_1055897181228317_2129316977_n.j

2103 பக்தர்கள் தங்களின் பெயர்களை பதிவேற்றம் செய்திருந்த நிலையில்  1920 பக்தர்கள் மட்டுமே கச்சத்தீவு சென்றுள்ளனர்.

28381299_1055897111228324_756735342_n.jp

http://www.virakesari.lk/article/30941

  • தொடங்கியவர்

கச்சதீவுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்தில்.!

 

 

ரி.விஷரூஷன்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்வதற்காக குறிகாட்டுவான் துறையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

பெருமளவான பக்தர்கள் இம்முறை கச்சதீவுக்கு செல்வதற்காக குறித்த இறங்கு துறைக்கு சென்ற நிலையில் அங்கு போதிய படகுகள் காணப்படவில்லை. இதனால் மிக நீண்ட நேரம் அங்கு மக்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் கடற்படையினர் மீள காங்கேசன்துறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

காங்கேசன்துறையில் இருந்து கடற்படையின் கப்பலில் இம் மக்களை கச்சதீவுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சுமார் 300 பக்தர்கள் இவ்வாறு தற்போது கடற்படையினரால் காங்கேசன்துறைக்கு பேரூந்துகளில் அழைத்து செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.virakesari.lk/article/30950

  • தொடங்கியவர்

களைகட்டியது கச்சத் தீவு திருவிழா!

 
 

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 

katchatheevu

 

இந்திய ராமேஸ்வர மீனவர்கள் கொண்டு வந்த 40 அடி உயரம் தேக்குக் கொடிமரத்தில், நெடுந்தீது பங்குத்தந்தை ’எமில் பால்’ கொடியினை ஏற்றி வைத்தார். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பக்தர்களும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தலைமன்னார் மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த இலங்கை பக்தர்களும் கலந்து கொண்டனர். 

katchatheevu

கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்புத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இத்திருவிழாவில் தீருச் சிலுவை பாவை நிகழ்வும், தேர்பவனியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது வருகின்றன. 

an1_17291.jpg

இவ்விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 62 விசைப்படகுகளில் கச்சத்தீவுக்கு வந்தடைந்தனர். மேலும், புனித அந்தோணியார் ஆலயத்துக்குத் தமிழக பக்தர்களின் காணிக்கையாக, சுமார் 2,00,000 மதிப்புடைய 40 அடி உயரமுள்ள தேக்குக் கொடிமரம் வழங்கினர். 

WhatsApp_Image_2018-02-23_at_6.34.36_PM_

https://www.vikatan.com/news/tamilnadu/117327-katchatheevu-festival-live-report.html

  • தொடங்கியவர்

இலங்கை, இந்திய பக்தர்கள் படை சூழ இனிதே நிறைவு பெற்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் திருவிழா!!!

 

 

இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

28407149_10209085293564211_209409675_o.j

 

இந்நிலையில் இன்று காலை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமதுங்க தலைமைத்துவத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருவிழா புனிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்தது.

வரலாற்றில் முதன்முறையாக சிங்கள மொழியில் ஆராதனைகள் இடம்பெற்றதோடு இந்தியாவிலிருந்து தேக்கு மரத்திலான புதிய கொடி மரம் கொண்டு வரப்பட்டு கொடியேற்றிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 62 படகுகளில் 1,968 பேர் இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்து 6,182 பேரும் பங்கேற்றுள்ளனர்.

28459652_10209085294124225_1306780079_o.

28417892_10209085301124400_1089908242_o.

இவர்களுக்கான குடிநீர் வசதி, தங்குமிட வசதி உள்ளிட்ட ஏனைய அனைத்து வசதிகளையும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் உதவியுடன், யாழ் உள்ளுராட்சி மன்றங்களின் அனுசரனையுடன் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்ற இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்கான உணவு இலங்கை கடற்படையால் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

28418043_10209085306324530_1796120620_o.

மேலும் இங்கு வந்த பக்தர்கள் தங்களுக்குள் இனம் மதம் எல்லை வேறுப்பாடுகளை கடந்து உணவுகளையும் இனிப்புக்களையும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.

கடந்த வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை அதனால் இவ் வருட திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

28459692_10209085192441683_215205583_o.j

http://www.virakesari.lk/article/30959

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.