Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியில் முடிந்த ஒபரேசன்

Featured Replies

தோல்வியில் முடிந்த ஒபரேசன்

pp1-b4cd266d54a8b90f9e924aa6c3fdc004ec74000e.jpg

 

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த புதன்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­யலர் சுசில் பிரேம ஜயந்­தவும், வெளி­யிட்ட கூட்டு அர­சாங்கம் இன்­னமும் தொடர்­கி­றது என்ற அறி­விப்­புடன், ஆட்சிக் கவிழ்ப்­புக்­கான ஒப்­ப­ரேசன் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது.

மைத்­திரி- ரணில் கூட்டு அர­சாங்­கத்தை வீழ்த்­து­வ­தற்­காக உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் தீட்­டப்­பட்ட திட்­டங்­களும், மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­களும், தோல்­வியில் முடிந்­தி­ருக்­கின்­றன.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கிய பின்­ன­ரான ஒரு வார­கா­லத்தில் கொழும்பு அர­சியல் களம் பெரும் பர­ப­ரப்­பிலும், குழப்­பத்­திலும் ஆழ்ந்­தி­ருந்­தது.

அடுத்து என்ன நடக்கப் போகி­றது என்ற கேள்­விக்­கான பதில், யாராலும் சரி­யாக கூற­மு­டி­யாத நிலை காணப்­பட்­டது. இந்த அர­சியல் குழப்­பங்­களால், நாட்டின் பொரு­ளா­தாரம் நிலை­கு­லைந்து போனது. முத­லீ­டுகள் பாதிக்­கப்­பட்­டன. அந்­நிய செலா­வணி கையி­ருப்பு குறைந்­தது. டொலரின் மதிப்பு அதி­க­ரித்து, ரூபாவின் பெறு­மதி வீழ்ச்சி கண்­டது.

கடந்த சில ஆண்­டு­க­ளாக நீடிக்கும் பொரு­ளா­தார மந்­த­நிலை மேலும் மோச­ம­டைந்து கொண்­டி­ருப்­பதை கண்­டு­கொள்­ளா­ம­லேயே பிர­தான அர­சியல் தலை­மைகள் ஆட்சிக் குழப்­பங்­க­ளுக்குள் மூழ்கிப் போயி­ருந்­தன. உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வு­களைப் பயன்­ப­டுத்தி, எப்­ப­டி­யா­வது பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து தேர்­தலை நடத்த வேண்டும் என்­பது, மஹிந்த ராஜபக் ஷ தரப்பின் முதல் தெரி­வாக இருந்­தது. அதற்­கான அழுத்­தங்­க­ளையே அவர்கள் முதலில் கொடுத்­தனர்.

அதற்கு சட்­டத்தில் இட­மில்லை என்­ற­வுடன், அந்த முயற்­சியைக் கைவிட்டு விட்டு, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வெளி­யேற்றி, பிர­தமர் பத­வியில் மஹிந்த ராஜபக் ஷவை அமர வைக்க முயற்­சிக்­கப்­பட்­டது. அதுவும் முடி­யாத போனது, மஹிந்த ராஜபக் ஷ அணியின் ஆசி­யு­டனும், ஆத­ர­வு­டனும், நிமால் சிறி­பால டி சில்­வாவை பிர­த­ம­ராக நிய­மிக்க முயற்­சிக்­கப்­பட்­டது. இது இந்த ஆட்­சிக்­க­விழ்ப்பு முயற்­சியின் ஒரு பக்கம்.

இன்­னொரு பக்கம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மைத்­து­வத்­துக்கு சவால் விடுக்கும் வகையில் ஐ.தே.க. உறுப்­பி­னர்கள் சிலர் செயற்­பட்­டனர். அவர்கள் ஜனா­தி­ப­தி­யுடன் இர­க­சியத் தொடர்­பு­க­ளையும் வைத்­தி­ருந்­தனர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைக் கொண்டு கட்­சிக்­குள்­ளேயும் ஆட்­சிக்­குள்­ளேயும் மறு­சீ­ர­மைப்­பு­களை மேற்­கொள்­வது, தமது செல்­வாக்கை அதி­க­ரிப்­பது அவர்­களின் திட்­ட­மாக இருந்­தது,

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­கி­விட்டு, அவ­ருக்குப் பதி­லாக கரு ஜய­சூ­ரி­யவை பிர­த­ம­ராக நிய­மிப்­பது இவர்­களின் இன்­னொரு திட்டம்.

அடுத்து, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்­சி­க­ளுக்கு இன்­னொரு பக்­கமும் இருந்­தது.

அது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை எப்­ப­டி­யா­வது ஆட்­சிக்குக் கொண்டு வரும் திட்டம். உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் நிகழும், சுதந்­திரக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்கும் என்­றெல்லாம் அமைச்­சர்கள் சிலர் முன்­னரே கூறி­யி­ருந்­தனர்.

அதனை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லேயே சுதந்­திரக் கட்­சி­யி­னரின் தேர்­த­லுக்குப் பிந்­திய செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பிர­தமர் பத­வியில் இருந்து நீக்கி விட்டு, சுதந்­திரக் கட்சி அரசை நிறுவ வேண்டும் என்ற பிரச்­சினை கிளப்­பப்­பட்­டது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட இந்த விட­யத்தில் அவ்­வப்­போது தளம்­ப­லான நிலைக்கு உள்­ளானார். அவ­ருக்­குள்­ளேயும் கூட ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பிர­தமர் பத­வியில் இருந்து நீக்கி விட்டு கரு ஜய­சூ­ரி­யவை பிர­த­ம­ராக நிய­மிக்­கலாம் என்ற தெரிவு ஒன்று இருந்­தது.

அதை­விட உள்­ளூ­ராட்சித் தேர்தல் தோல்­விக்­கான பழியை எப்­ப­டி­யா­வது யார் தலை­யி­லேனும் கட்டி விட வேண்டும் என்ற எண்ணம் ஜனா­தி­ப­திக்கும் சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கும் காணப்­பட்­டது.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் பிர­சா­ரத்தில் ஐ.தே.கவும், சுதந்­திரக் கட்­சியும் எதி­ரிக்­கட்­சி­க­ளா­கவே மோதிக் கொண்­டன. எனவே, தேர்தல் தோல்­விக்கு ஒருவர் மீது மற்­றவர் காரணம் கூற முடி­யாது, ஆனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி நீக்கி விட்டால், அவரே தோல்­விக்குக் காரணம் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு விடும். ஐ.தே.கவினால் தோல்­வி­ய­டைந்­ததால் அவர்­களை வெளி­யேற்றி விட்டோம் என்று கூறிக் கொள்­ளலாம்.

எனவே, பிர­த­மரை வெளி­யேற்­று­வது, தனித்து ஆட்­சி­ய­மைப்­பது என்று இரண்டு திட்­டங்­களை முன்­னி­றுத்தி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி செயற்­பட்­டது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த விட­யத்தில் பெரும் குழப்­பத்­துக்­குள்­ளானார். அவர் தனக்­கான மக்­க­ளா­ணையைப் பற்றி சிந்­திப்­பதா- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் என்ற நிலையில் இருந்து சிந்­திப்­பதா- நாட்டின் தலைவர் என்ற வகையில் நாட்டின் நலனை மாத்­திரம் கருத்தில் கொள்­வதா என்று ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள் அவ­ருக்கு இருந்­தது,

இதனால் அவர் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பல்­வேறு முகங்­களைக் காட்ட வேண்­டிய நிலைக்கு உள்­ளானார். அது அவ­ரது ஆளு­மை­யையும் பாதித்­துள்­ளது.

ஏற்­க­னவே தேர்தல் காலத்தில் ஜனா­தி­ப­தியின் உரைகள் அனைத்தும், அவர் தொடர்­பாக இருந்த ஆரம்­ப­கால மதிப்­பீ­டு­களை தகர்த்து விட்­டி­ருந்த நிலையில், தேர்­த­லுக்குப் பின்னர் அவர் காட்­டிய பல்­வேறு முகங்கள், அவரை பல­வீ­ன­மான ஒரு தலை­வ­ரா­கவே அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது.

ஒரு கட்­டத்தில் தனது அர­சியல் எதி­ரி­யா­கவே கரு­திய மஹிந்த ராஜபக் ஷவுடன் கூட்டு வைப்­ப­தற்குக் கூட அவர் தயா­ரானார்.  அது­பற்­றிய பேச்­சுக்­க­ளையும் விரும்­பியோ- விரும்­பா­மலோ முன்­னெ­டுக்­கவும் செய்தார். 

யாரை திரு­டர்கள் என்­றாரோ, யாரை மோச­டிக்­கும்பல், நாட்டை கொள்­ளை­ய­டித்­த­வர்கள் என்­றாரோ- அவர்­க­ளுடன் சேர்ந்து, அவர்­களின் உத­வி­யுடன் ஆட்­சி­ய­மைக்­கவும் தயா­ராக இருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிர­தமர் பத­வியை வழங்­காமல், அமைச்சுப் பத­வி­களை ஏற்­றுக்­கொள்ள கூட்டு எதி­ரணி இணங்­கி­யி­ருந்தால், அத்­த­கைய ஆட்­சிக்கு அவர் உடன்­பட்­டி­ருக்­கவும் கூடும்.

பிர­த­மரைப் பத­வி­நீக்கும் விட­யத்தில் உள்ள சட்­டச்­சிக்­கலும், ஆட்­சியில் சேர­மாட்டோம் என்ற கூட்டு எதி­ர­ணியின் விடாப்­பி­டியும் தான், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை படு­கு­ழியில் இருந்து காப்­பாற்­றி­யி­ருந்­தது.

ஏனென்றால், கூட்டு எதி­ர­ணியின் துணை­யுடன் ஆட்சி அமைத்­தி­ருந்தால், அதற்குத் தேவை­யான பெரும்­பான்மை கிடைத்­தாலும் சரி கிடைக்­காது போனாலும் சரி, அந்த அர­சாங்­கத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன பெட்டிப் பாம்­பாக அடங்கிக் கிடந்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்கும்.

மஹிந்த ராஜபக் ஷவே மறை­மு­க­மாக எல்­லா­வற்­றையும் கையாண்­டி­ருப்பார். எஞ்­சிய பத­விக்­கா­லத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, வேத­னை­யுடன் கழிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்கும்.

அது­போ­தா­தென்று, எஞ்­சிய ஆட்­சிக்­கால பழி­பா­வங்­க­ளுக்கும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே பொறுப்புச் சொல்­ல­வேண்­டிய நிலையும் ஏற்­பட்­டி­ருக்கும்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வ­ரையில், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வெளி­யேற்ற முடி­யாமல் போனது தோல்­வி­யாக அமைந்­தாலும், மஹிந்­தவின் பிடியில் சிக்கிக் கொள்­ளாமல் தப்­பி­யது பெரும் வெற்றி என்றே கூறலாம்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்குத் தான் இதில் பெரும் வெற்றி. அவ­ருக்கு தலைக்கு வந்­தது தலைப்­பா­கை­யுடன் போனது போல அமைந்­தது இந்தக் கண்டம்.

அவ­ரது தலை­மைத்­து­வத்­துக்கு ஆபத்து வரு­வதும், அவர் அதனை சுதா­க­ரித்துக் கொள்­வதும் இதுதான் முதல் முறை­யல்ல.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் ஐ.தே.க தொடர்ந்து 17 தேர்­தல்­களில் தோல்­வியைச் சந்­தித்த போதிலும், கட்­சியின் பெரும்­ப­குதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் மஹிந்­தவின் பக்கம் போன போதும், சஜித் பிரே­ம­தாச போர்க்­கொடி எழுப்­பிய போதும், தனது தலை­மைப்­ப­த­வியைப் பாது­காத்துக் கொண்­டவர் அவர்.

இந்­த­முறை அவர் பிர­த­ம­ராக வேறு அதி­கா­ரத்தில் இருப்­பதால், இந்த ஆட்­சிக்­க­விழ்ப்பு ஒப்­ப­ரே­சனை அவரால் இல­கு­வாக எதிர்­கொள்­ளவும், தோற்­க­டிக்­கவும் முடிந்­தி­ருக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்தில் இருக்கும் பெரும்­பான்மை பலம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மஹிந்­தவின் பக்கம் போகாது என்ற நம்­பிக்­கையும் இந்த ஒப்­ப­ரே­சனை வெற்றி கொள்­வ­தற்­கான துணிச்­சலைக் கொடுத்­தி­ருந்­தது.

அதே­வேளை, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வ­ரையில், ரணிலை நீக்­கு­வ­திலும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அரசை அமைப்­ப­திலும் அவர் தோல்வி கண்­டி­ருந்­தாலும், மஹிந்த ராஜபக் ஷவை அதி­கா­ரத்­துக்கு வர­வி­டாமல் தடுப்­பதில் வெற்றி கண்­டி­ருக்­கிறார்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் வெளி­யான பின்னர், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும், கூட்டு எதிரணியும் இணைந்து ஆட்சியமைக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது, மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்த ஒரு விடயம் இத்தருணத்தில் நினைவுபடுத்தக் கூடியது.

“ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு சொல்லை நம்புவேன். ஆனால் மைத்திரிபால சிறிசேன ஏழு கடிதங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தாலும் அதனை நம்பமாட்டேன்”என்று அவர் கூறியிருந்தார்.

அது உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது, மஹிந்த ராஜபக் ஷவுக்கு அருகில், அதிஷ்ட தேவதையைக் காட்டி விட்டு பறித்துக் கொண்டு போய் விட்டார் மைத்திரிபால சிறிசேன.

இந்த நிலையில், உள்ளக முரண்பாடுகள் இருந்தாலும், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கூட்டு அரசாங்கத்துக்கு காணப்பட்ட சாதகமற்ற நிலை, அரசியல் குழப்பங்களால் திசைதிருப்பப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.

கூட்டு அரசாங்கத்துக்கு நித்திய கண்டம் இருந்தாலும் அதற்கு பூரண ஆயுள் இருக்கும் வாய்ப்புகளை அவ்வளவாக குறைத்து மதிப்பிட முடியவில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-02-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.