Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதத்தால் பாதிக்கப்பட்ட, உடன்பிறவா உறவுக்கு ஓரு மடல்*

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் ஞாபகம் இருக்கின்றது .. “காக்காமாரே ..இஞ்சேயிருந்து போவது உதுதான் கடைசி முறை வடிவாய் இன்னொரு முட்றை பார்த்துக்கொள்ளுங்கோ .. உது ஈழம் ,இஞ்ச இனி உங்களுக்கு இடமில்லை தெற்கே போய் அஸ்ரப்பிட்ட கேளுங்கோ ..” என்று மாங்குளத்தில் கூட்டம் ஒன்றோடு நின்று கொண்டு எங்களை பார்த்து சிரித்த வண்ணம் குரல் எழுப்பிய அந்த கிழட்டு உருவத்தை .. அது நடந்த்து 1990 ஆகஸ்ட் மாதத்தில் ..

ஒரு சில மாதங்களில் அந்த கிழடு சொன்னது உண்மையாகியது . ஆம் , இரண்டு மணி நேரத்தில் எங்களது அனைத்து சொத்துக்களும் பறி முதல் செய்யப்பட்ட நிலையில் இந்தியன் ஆமி செல்லமாக அழைத்த ‘குட்டிச்சிங்கப்பூரில்’ இருந்து அகதிகளாக ஆக்கப்பட்டோம் . எங்களைப்பற்றி வெளி உலகத்துக்கு சொல்லட்டுவதற்கு அப்போது வாட்சப் இருந்திருக்கவில்லை ;பேஸ் புக் இருந்திருக்கவில்லை ;வைபர் இருந்திருக்கவில்லை . மையத்து வீட்டுக்கு கொழும்பு போய்விட்டு வருகின்ற போது “நானா ஊருக்கு போய் வர்ரோ ” என்று கேட்கின்ற நிலையில் தெற்கு சகோதரங்களின் பொது அறிவு இருந்தது . அகதி முகாம் வாழ்க்கையில் படாத பாடுகள் ;வந்தான் வரத்தான் என்கிற உடன்பிறவா உறவுகளின் நெருடல்கள் ; நாஸிக்களின் யூத அடையாள அணிவகுப்புகள் போல அகதி முத்திரை குத்தப்பட்டு முஸ்லீம் பாடசாலைகள்

அதெல்லாம் பழைய கதை … இப்போது இதையெல்லாம் ஏன் கிளறிக்கொண்டு இருக்கிறேனா ..? காரணம் இருக்கின்றது சகோதரமே .. இனவாதத்தின் காயங்கள் நமது நாட்டின் அடையாளங்களாக போய் விட்டன .அடிக்கடி நமக்கு அடி விழும் ; அகதியாக்கப்படுவோம்; அழுகை வரும் ; ஏன் நாட்டின் மீது கூட ஆதங்கம் வரும் சமீபத்தில் நடந்து முடிந்தும் முடியாத சிங்கள இனவாத காடையார்களின் தாக்குதலில் சொத்துக்களை நீ பறி கொடுத்திருக்கக்கூடும். உறவை நீ பறி கொடுத்திருக்க கூடும் .ஏன் நாட்டின் அரசாங்கத்தின் ,அமைச்சர்களின்,அண்டை வீட்டு பிற மத உறவுகளின் , போலீஸின் , நாட்டின் சட்டங்களின்மீது நம்பிகை இழந்து போயிருக்க கூடும் .

உறவே , 90 இல் அனைத்தையும் நாம் தூப்பாக்கி முனையில் இழந்ததை விட பல மடங்குகளாக இன்று வசதியாக இருக்கிறோம் . வடக்குக்குள் முடங்கி கிடந்த நாம் இன்று வட துருவம் வரை பரந்து சர்வதேச மயமாகி விட்டோம் .அளவற்ற அருளாளன் அல்லாஹ் எங்களை கை விடவில்லை ; கை உயர்த்த வைத்தான் என் உடன்பிறக்காத உறவே , சோதனைகள் நம்மை நோக்கி வரும்போதுதான் அல்லாஹ்வின் பக்கம் அடி எடுத்து வைக்கிறோம் . தீட்டப்படுகிற போது ஜொலிக்கிற வைரக்கற்கள் போல.. அதனால், சோதனைகள் நம் மீது இறக்கப்படுவது கூட அல்லாஹ்வின் அருள்தானே .. எனவே கலங்காதே .. உன் துயரத்தின் நிழலில் நாம் இருக்கின்றோம் உன் மீது இனவாதிகள் அடித்த ஒவ்வொரு அடியும் உன்னை மேலும் மேலும் செப்பனிட வைக்கும் ; உன் பொறுமையை அலங்கரிக்கும் ; உனக்காக உலகம் முழுவதுமே துஆ பிரார்த்தனை புரிகிறதே என்று மகிழ்ந்து கொள்; எல்லாவற்றுக்கும் மேலாக அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் அருள் உன் மீது பட்டுக்கொண்டு இருக்கின்றது என்று எண்ணி மகிழ்ந்து கோள் .. *ஒன்று மட்டும் உண்மை உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம் நம்முடன் அல்லாஹ் இருக்கிறான்*

அன்புடன் முஹம்மது ராஜி

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=241355 .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுதிய  தமிழர்களின் பல கடிதங்கள் விலாசம் இல்லாமலே போனது  அடிபட்டவனுக்கு தான் அதன் வலி  தெரியும்tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்

அக்குரணை எழுதுவதெல்லாம் ஒரு பெரியவிடயமா ...வாயை திறந்தாலே பொய்யை கூறும் கூட்டம், கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மன்னன் ஆண்டான் என்று கரடி விட்ட வெடியர்கள் அல்லவா இவர்கள்  , இதனையும் யாழின் கறுப்புப்பட்டியலில் சேர்க்க வேண்டும் ஆனால் சேர்த்தால் இவர்களது ஆக்கத்தை பார்த்து சிரிக்க முடியாது, இப்படித்தான் முகப்புத்தகத்தில் நற்பிட்டிமுனையில் தமிழர்கள் மீது கல்லெறிந்தார்கள் என்று நான் கூற அப்படியெல்லாம் நடக்கவில்லை வீண் பொய் கூறாதீர்கள் என்று ஒருவர் முட்டி மோதினார் , வீடியோ ஆதாரத்தை போட்டவுடன் மூடிக்கொண்டு ஆள் காலி , என்ன முஸ்லிம் காடையர்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்த காடைத்தனங்களுக்கு எம்மிடம் ஆதாரமில்லை ,, 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.