Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் ஓரங்கட்டப்படும் தமிழர் தரப்பு

Featured Replies

ஜெனீவாவில் ஓரங்கட்டப்படும் தமிழர் தரப்பு

samakalamgeneva25-03-2018-9056582f6aaf6c7e221e75dc4d0d1808552bf04b.jpg

 

கபில்

இன்று பக்க அமர்­வுகள் மிக­அ­தி­க­ளவில் ஒழுங்­க­மைக்­கப்­ப­டு­கின்­றன. அவற்­றுக்குப் பின்னால் யார் இருக்­கி­றார்கள் என்று கூட பல சம­யங்­களில், ஊகிக்க முடி­வ­தில்லை. அந்­த­ள­வுக்கு ஜெனீவா களத்தில் நிலை­மைகள் மாறி­யி­ருக்­கின்­றன.  அதி­க­ளவு பக்க அமர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்ற போதிலும், ஜெனீ­வாவைக் கையாளும் விட­யத்தில் தமிழர் தரப்பு எந்­த­ள­வுக்கு வெற்­றியைப் பெற்­றி­ருக்­கி­றது என்ற கேள்வி உள்­ளது. 

 

கடந்த ஒரு தசாப்த காலத்தில், தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களை வெளிப்­ப­டுத்­து­கின்ற, அநீ­தி­க­ளுக்கு நியாயம் கோரு­கின்ற தள­மாக மாறி­யி­ருந்த ஜெனீ­வாவில், அந்த வாய்ப்­புகள் இனியும் தொட­ருமா என்ற சந்­தே­கங்கள் எழத்­தொ­டங்­கி­யி­ருக்­கின்­றன.

ஜெனீவா களத்தை தமிழர் தரப்பு பயன்­ப­டுத்திக் கொள்ளும் விதம் மாத்­தி­ர­மன்றி, தமிழர் தரப்பு ஜெனீ­வாவில் செலுத்தும் ஆதிக்­கத்தை உடைப்­ப­தற்­காக, சிங்­கள பௌத்த பேரி­ன­வாத சக்­திகள் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்ற மாற்று நகர்­வு­களும் தான் இந்த நிலைக்­கான காரணம். ஜெனீ­வாவில் இம்­முறை நடந்த ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 37ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை தொடர்­பான அதி­க­ளவு பக்க அமர்­வுகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை மீதான விவாதம், இலங்கை தொடர்­பாக 2015 மற்றும் 2017இல் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் அமு­லாக்கம் குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் இடைக்­கால அறிக்கை மீதான விவாதம் என இரண்டு முக்­கிய விவா­தங்கள் இம்­முறை ஜெனீ­வாவில் இடம்­பெற்­றன.  அதனால் தான், அதி­க­ளவு இலங்கை தொடர்­பான பக்க அமர்­வுகள் இடம்­பெற்­றன என்று கருத முடி­யாது. 

இலங்கை விவ­கா­ரத்தை ஜெனீ­வாவில் கையாள முனையும் தரப்­புகள் அதி­க­ரித்­தி­ருப்­பதும், ஜெனீ­வாவை நோக்­கிய பய­ணங்கள் ஓர் அர­சியல் உத்­தி­யாக மாறி விட்­டுள்ள நிலை­யிலும், இத்­த­கைய பக்க அமர்­வுகள் வரும் கூட்­டத்­தொ­டர்­களில் இன்னும் இன்னும் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன.

முன்­ன­ரெல்லாம், இலங்கை பற்­றிய ஒரு பக்க அமர்வு இடம்­பெ­று­வ­தென்­பதே மிகவும் பெரிய விட­ய­மாக இருக்கும். அதற்­கான ஒழுங்­க­மைப்­பு­களைச் செய்­வ­தற்கு, பெரி­ய­ளவில் போராட வேண்­டிய நிலையில் தமிழர் தரப்பு இருந்­தது.

ஆனால் இன்று பக்க அமர்­வுகள் மிக­அ­தி­க­ளவில் ஒழுங்­க­மைக்­கப்­ப­டு­கின்­றன. அவற்­றுக்குப் பின்னால் யார் இருக்­கி­றார்கள் என்று கூட பல சம­யங்­களில், ஊகிக்க முடி­வ­தில்லை. அந்­த­ள­வுக்கு ஜெனீவா களத்தில் நிலை­மைகள் மாறி­யி­ருக்­கின்­றன.

அதி­க­ளவு பக்க அமர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்ற போதிலும், ஜெனீ­வாவைக் கையாளும் விட­யத்தில் தமிழர் தரப்பு எந்­த­ள­வுக்கு வெற்­றியைப் பெற்­றி­ருக்­கி­றது என்ற கேள்வி உள்­ளது.

அது ஒரு­பு­றத்தில் இருக்க, ஜெனீ­வாவில் தமிழர் தரப்பு இது­வ­ரையில் செலுத்தி வந்த ஆதிக்­கத்தை உடைப்­ப­திலும், அவர்­களின் கருத்­தி­யலை வாய்ப்­பு­களை முடக்கும் வகை­யிலும், சிங்­கள பௌத்த பேரி­ன­வாத சக்­திகள் திட்­ட­மிட்டு செயற்­படத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்த வரை­யிலும், ஜெனீ­வா­வுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­ட­வில்லை.

ஜெனீ­வாவில் எழுப்­பப்­படும் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தற்கு அப்பால் எதையும் செய்ய அர­சாங்கம் விரும்­ப­வில்லை.

இலங்­கையில் நடந்த பிரச்­சி­னைகள் அனைத்தும் உள்­நாட்டு விவ­காரம், அதனை சர்­வ­தேச மயப்­ப­டுத்­தக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டை முன்­னைய அர­சாங்கம் கொண்­டி­ருந்­தது.

அதனால், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் பொது அமர்­வு­களில் தான் அர­சாங்கம் பெரும்­பாலும் கவனம் செலுத்­தி­யது.

 ஒரு சில பக்க அமர்­வு­களை அர­சாங்கம் ஒழுங்கு செய்யும்.

அதே­வேளை, தமிழர் தரப்பும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பு­களும் ஒழுங்கு செய்யும் பக்க அமர்­வு­களில் ஜெனீ­வாவில் உள்ள இலங்கை இரா­ஜ­தந்­தி­ரி­களை கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளாக அனுப்பும். அதற்கு அப்பால் அத்­த­கைய அமர்­வு­களில் தலை­யீ­டுகள், வாதப்­பி­ர­தி­வா­தங்கள் அதி­க­ளவில் இடம்­பெ­று­வ­தில்லை.

ஆனால், இப்­போது நிலை­மைகள் அப்­ப­டி­யில்லை. ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், அர­சாங்­கத்தின் ஜெனீவா தொடர்­பான கொள்கை மாறி­யி­ருக்­கி­றது. முன்­னைய ஆட்சி ஜெனீவா தீர்­மா­னங்­க­ளுடன் முரண்­பட்டுக் கொண்­டி­ருந்­தது. இப்­போ­தைய அர­சாங்கம், அதற்கு இணங்­கு­வ­தாக கூறி இழுத்­த­டிக்கும் கொள்­கையைப் பின்­பற்­று­கி­றது.

இத்­த­கைய நிலையில், தெற்­கி­லுள்ள சிங்­களக் கடும்­போக்­கா­ளர்கள், ஜெனீ­வாவைத் தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட ஆரம்­பித்­துள்­ளனர்.

ஒரு காலத்தில் இலங்கை விவ­கா­ரத்தை ஜெனீ­வா­வுக்குச் கொண்டு செல்­வதைப் பெரும் பாவ­மா­கவும், ஜெனீ­வா­வுக்கு செல்­ப­வர்­களைத் தேசத் துரோ­கி­க­ளா­கவும் விமர்­சித்த, சிங்­களக் கடும் போக்­கா­ளர்­களே இப்­போது ஜெனீ­வாவைப் பயன்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்­ளனர்.

கோத்­தா­பய ராஜபக் ஷ வினால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள ‘எலிய’ என்ற அமைப்பின் ஊடாக, ஜெனீ­வா­வுக்கு சிங்­களக் கடும்­போக்­கா­ளர்­களை அதி­க­ளவில் அனுப்­பு­கின்ற சூழல் தற்­போது உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

இதனை முதலில் ஆரம்­பித்து வைத்­தவர் றியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர. முன்னாள் கடற்­படை அதி­கா­ரி­யான இவர், மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும், பிரதி அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்­தவர்.

சிங்­களக் கடும்­போக்­கு­வா­தி­யான இவர், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு மிக நெருக்­க­மா­னவர். இவரே ஆட்சி மாற்­றத்­துக்கு பின்னர், ஜெனீவா நோக்­கிய பய­ணத்தை தொடங்­கினார்.

இலங்­கையில் இருந்து சுதந்­தி­ர­மான தரப்­பாக, தமி­ழர்கள், மற்றும் சிங்­கள மனித உரிமை ஆர்­வ­லர்கள் மாத்­தி­ரமே ஜெனீ­வா­வுக்கு செல்­லு­கின்ற நிலையை மாற்றி, போர்க்­குற்­றம்­சாட்­டப்­படும் இரா­ணு­வத்­தி­ன­ருக்­காக வாதிடப் போவ­தாக அங்கு சென்றார்.

தனி­யொ­ரு­வ­ராகச் செல்லத் தொடங்­கிய அவ­ருடன், இரண்டு மூன்று பேராகச் செல்லத் தொடங்கி, இம்­முறை மிக அதி­க­ள­வானோர் ஜெனீவா சென்­றி­ருக்­கி­றார்கள்.

இவ்­வாறு சென்­ற­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் முன்னாள் படை அதி­கா­ரிகள். கோத்­தா­பய ராஜபக் ஷவின் எலிய அமைப்பு இப்­போது. ஜெனீவா களத்தை ஒருங்­கி­ணைக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. 50இற்கும் அதி­க­மா­னோரை இம்­முறை அந்த அமைப்பு ஜெனீ­வா­வுக்கு அனுப்­பி­யி­ருக்­கி­றது.

இவர்கள், இலங்கை தொடர்­பான பக்க அமர்­வுகள் அனைத்­துக்கும் கூட்­ட­மாகச் செல்­கி­றார்கள். அங்கு தமிழர் தரப்பு நியாயம் கோரி கருத்­துக்­களை முன்­வைக்கும் போது, அதனை எதிர்த்து வாதம் புரி­கி­றார்கள். பல சம­யங்­களில் குழப்­பங்­க­ளையும் விளை­விக்­கி­றார்கள்.

இத்­த­கைய குழப்­பங்­களால் சில அமர்­வு­களை விட்டு தமிழர் தரப்பு வெளி­யேற வேண்­டிய சூழலும் கூட ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இத்­தை­கைய நிலை அடுத்­த­டுத்த அமர்­வு­க­ளில தீவி­ர­ம­டை­யவும், குழப்­பங்கள் அதி­க­ரிக்­கவும் வாய்ப்­புகள் உள்­ளன.

அமை­தி­யாக ஜெனீவா பக்க அமர்­வு­களில் தத்­த­மது தரப்பு வாதங்­களை முன்­வைத்து விட்­டுப்­போன நிலை மாறி, அமர்வு அறை­களில் மோதிக் கொள்­கின்ற நிலை ஒன்று உரு­வாகி வரு­கி­றது. இது, ஜெனி­வாவை, தமி­ழர்கள் நீதி கோரும் தள­மாகப் பயன்­ப­டுத்தும் நிலையில் இருந்து அகற்­று­வ­தற்­கான ஒரு சதி.

சரத் வீர­சே­க­ரவோ அவ­ருடன் சென்­ற­வர்­களோ, தமது பக்­கத்தில் நியா­யங்­களைக் கோரு­வதில் தவ­றில்லை. மனித உரிமை மீறல்கள் இரண்டு பக்­கங்­க­ளிலும் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. அவை இரண்­டையும் விசா­ரிக்க வேண்டும் என்­பது தான், சர்­வ­தே­சத்தின் நிலைப்­பா­டாக இருந்து வரு­கி­றது.

ஆனால், சரத் வீர­சே­கர தரப்போ, இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­ட­வில்லை என்றும், மீறல்கள் நடக்­க­வில்லை என்றும், புலிகள் தரப்­பி­லேயே மீறல்கள் நிகழ்த்­தப்­பட்­ட­தா­கவும் வாதங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இதன் மூலம், குழப்­பங்கள் விளை­விக்­கப்­பட்டு, நிகழ்­வு­களில் அமை­தி­யீனம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

சிங்­கள பௌத்த கடும்­போக்­கா­ளர்­களைப் பொறுத்­த­வ­ரையில், அவர்கள் ஜெனீ­வாவில் தமக்கு நீதி கேட்டுச் செல்­ல­வில்லை.

அவர்­களின் ஒரே நோக்கம், தமி­ழர்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்கும் முனைப்­பு­களைத் தோற்­க­டிப்­பது தான். அதனை அவர்கள் மிகவும் கச்­சி­த­மாகச் செய்யத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

தமிழர் தரப்பு தமது நிலைப்­பா­டு­களை, வாதங்­களை முன்­வைக்கும் பக்க அமர்­வு­களைக் குழப்பி அங்கு ஏற்­ப­டக்­கூ­டிய சூழ்­நி­லையை தமக்கு சாம­த­க­மாக்கிக் கொள்­கி­றார்கள்.

இதனால் தமிழர் தரப்பின் நீதி­கோரும் முயற்­சி­களில் தாம­தங்­களும், தடை­களும் ஏற்­படும்.

இந்த முறை 50க்கும் அதி­க­மா­னோரைக் கள­மி­றக்­கிய சிங்­களக் கடும்­போக்­கா­ளர்கள் அடுத்­த­முறை இன்னும் அதி­க­ள­மா­னோ­ருடன் வரப் போகி­றார்கள். ஏனென்றால், அவர்­களின் நோக்கம் ஜெனீ­வாவில் நிறை­வேறி வரு­கி­றது.

ஜெனீ­வாவில் இவர்கள் தமிழர் தரப்பை அச்­சு­றுத்தும் வகையில் செயற்­படத் தொடங்கி விட்­டனர். ஏற்­க­னவே இது­பற்றி ஐ.நாவின் காவல்­பி­ரி­விடம் கூட முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டன.

இப்­போதும், பேரா­சி­ரியர் போல் நியூமன், தன்னை இலங்கை இரா­ணுவ அதி­கா­ரிகள் பின்­தொ­டர்­கி­றார்கள் என்று குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கிறார்.

ஆக, ஜெனீவா என்­பது தமிழர் தரப்­புக்கு பாதுகாப்பற்ற களமாக மாற்றப்பட்டு வருகிறது. இதனை தமிழர் தரப்பு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

இந்தச் சிக்கலான விடயத்துக்கு இப்போதே தயாராகாவிடின், வரும் காலத்தில், மனித உரிமைகள் விவகாரம் சார்ந்த குரல்கள் ஜெனீவாவில் ஒலிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.

கோத்தாபய ராஜபக் ஷவை அடுத்த ஜனாதிபதியாக்கும் முடிவில் சிங்களக் கடும்போக்காளர்கள் இருக்கிறார்கள். அவர் ஒருபோதும் ஜெனீவாவுடன் உடன்படப் போவதில்லை. சர்வதேச சமூகத்துடன் முரண்படக் கூடியவராக அவர் மாறினால், ஜெனீவாவில் அது எதிரொலிக்கும்.

அப்படியான சூழலில், தனது கடும்போக்கு அணியினரைக் களம் இறக்கி, ஜெனீவாவையும் குழப்பும் வல்லமையை அவர் பெற்றுவிடக் கூடும்.

அது தமிழர் தரப்பு நீதிகோருவதற்கான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும். இந்த நிலையில் தான் ஜெனீவாவில் மாற்று வியூகங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-25#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரரனின் அமெரிக்க விசிட்...அமெரிக்கா ஜெனிவாவில் என்ன சொன்னது தெரியுமா....இலங்கை சகலவிடயத்திலும் முன்னேறி வருகிறது....ஆனால் மெதுவாக......சுமந்திரன் குடுமி சும்மா ஆடாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.