Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வர­லாற்றில் இடம்­பி­டிப்­பாரா மைத்­திரி?

Featured Replies

வர­லாற்றில் இடம்­பி­டிப்­பாரா மைத்­திரி?

samakalammaithiri25-03-2018-e66146ff35ded18bb7a5406f9eadf3819adf281d.jpg

 

சத்­ரியன்

 

“தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இருப்­ப­தாக நாங்கள் அறி­கிறோம். இந்த விட­யத்தில் அவ­ருக்கு இருக்­கின்ற சவால்­களை சமா­ளித்து தமிழ் மக்­க­ளுக்­கான பிரச்­சி­னை­களை தீர்க்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அவ்­வாறு செய்­வா­ராக இருந்தால் சர்­வ­தேச சமூகம் அவரை உள்­நாட்டில் பிரச்­சி­னை­களை தீர்த்த தலைவர் என்று அங்­கீ­க­ரிக்கும்.”

யாழ்ப்­பாணம் சென். பற்றிக்ஸ் கல்­லூ­ரியில் நடந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு முன்­பாக- வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் மேடையில் அமர்ந்­தி­ருக்­கையில், இவ்­வாறு கூறி­யி­ருந்தார் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன்.

இரா.சம்­பந்­தனின் இந்தக் கருத்து பல்­வேறு விட­யங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தாகத் தோன்­று­கி­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கின்ற விருப்பம் கொண்­ட­வ­ராக இருக்­கிறார் ஜனா­தி­பதி என்­பது முத­லா­வது.

ஆனால் அவ­ருக்கு அதனை நிறை­வேற்­று­வ­தற்கு சவால்கள் இருக்­கின்­றன என்­பது இரண்­டா­வது.

அந்த சவால்­களைக் கடந்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்டால், சர்­வ­தேச அளவில் மதிக்­கப்­படும் ஒரு­வ­ராக திகழ்வார் என்­பது மூன்­றா­வது.

இந்த மூன்று விட­யங்­க­ளையும் இனி ஒவ்­வொன்­றாக பார்க்­கலாம்,

தாம் இப்­போது வகிக்­கின்ற பத­விக்கு வருவேன் என்று - 2015ஆம் ஆண்­டுக்கு முன்­பாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு­போதும் கனவு கூடக் கண்­டி­ருக்­க­மாட்டார்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக தோன்­றிய எதிர்ப்பு அலை- அதனை ஒருங்­கி­ணைப்­பதில் பெறப்­பட்ட வெற்றி என்­ப­னவே அவரை ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமர வைத்­தது.

மஹிந்த ராஜபக் ஷவின் அமைச்­ச­ர­வையில் அதிகம் பிர­பலம் இல்­லாத ஒரு அமைச்­ச­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஜனா­தி­ப­தி­யா­னதும், அவ­ரது எளி­மை­யான தோற்றம் மற்றும் நட­வ­டிக்­கை­களும், ஆரம்­ப­கா­லத்தில் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் மிகவும் மதிக்­கப்­படும் ஒரு தலை­வ­ராக நோக்க வைத்­தது. ஊட­கங்கள் அவரை வியப்­புடன் பார்த்­தன.

2015இற்கு முன்னும் பின்­னு­மான கால­கட்­டத்தின் வேறு­பாட்டை, மக்­களும் அனு­ப­வ­பூர்­வ­மாக உணர்ந்­தனர். திடீ­ரென சர்­வ­தேச அளவில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு புகழ் உச்­சத்தை அடைந்­தது.

அவ­ருக்கு நோபல் பரிசு கிடைக்கப் போவ­தா­கவும், எதிர்­பார்ப்­புகள் கிளப்பி விடப்­பட்­டன.

ஆனால், இப்­போது அவரால் அந்த நிலையை தக்­க­வைத்துக் கொள்ள முடி­யுமா என்­பதே இன்­றுள்ள சிக்கல். அதனைத் தான், இரா.சம்­பந்தன் யாழ்ப்­பா­ணத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

ஒரு நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கவோ, பிர­த­ம­ரா­கவோ இருப்­பதால் மாத்­திரம், ஒரு தலை­வரின் புகழ் சர்­வ­தே­சத்­தினால் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. அவர் ஆட்­சிக்­கா­லத்தில் எதனைச் செய்து முடித்­தாரோ அதன் மூலம் தான் வர­லாற்றில் அவ­ருக்­கான இடம் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கையின் வர­லாற்­றிலும், சில தலை­வர்கள் செய்த நற்­செ­யல்­க­ளுக்­காக போற்­றப்­ப­டு­கி­றார்கள். இன்னும் சில தலை­வர்கள் அவர்­களின் மோச­மான செயல்­க­ளாலும் நினைவு கூரப்­ப­டு­கி­றார்கள்.

இவ்­வா­றான சூழலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனக்­கான இடம் எது என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான தரு­ணத்தில் இருக்­கிறார் என்றே கூற வேண்டும்.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர் போட்­டி­யி­டு­வாரா -இல்­லையா என்­பது தெளி­வில்லை. அவ்­வாறு போட்­டி­யிட்­டாலும், அவரால் வெற்­றி­பெற முடி­யுமா என்­பதும் கேள்­விக்­கு­ரிய விடயம் தான்.

இந்­த­நி­லையில், இப்­போ­துள்ள பத­விக்­காலம் மாத்­தி­ரமே, தனக்­கான இடத்தை அவர் உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான உச்­ச­மான கால­கட்­ட­மாக இருக்கும். அதிலும் கூட மூன்று ஆண்­டுகள் கழிந்து விட்­டன. இந்தப் பத­விக்­கா­லத்தை அவர் அனு­ப­விப்­ப­தற்கு இன்னும் எஞ்­சி­யி­ருப்­பது, முழு­மை­யாக 20 மாதங்கள் மட்டும் தான்.

அதற்குள் முடிந்­ததைச் செய்ய வேண்டும், சவால்­களைச் சமா­ளித்து, பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும் என்­பதே சம்­பந்­தனின் கோரிக்கை.

தமிழ் மக்­களின் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாமல் இழு­ப­றிக்­குள்­ளா­வ­தற்கு இரண்டு பிர­தான கார­ணங்கள் தடை­யாக இருந்து வந்­தி­ருக்­கின்­றன.

முத­லா­வது- பிரச்­சி­னையைத் தீர்க்கும் விருப்பம் இல்­லாமை.

இரண்­டா­வது- பிரச்­சி­னையைத் தீர்க்கும் விருப்பம் கொண்ட தலை­வர்­களால், அதனைத் தீர்க்­கின்ற அர­சியல் அதி­கா­ரமும், ஆற்­றலும் இல்­லாமை.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்று சொல்­வதைப் போலத் தான் இது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைப் புரிந்து கொண்டு அதனைத் தீர்த்து வைக்­கின்ற விருப்­பத்தைக் கொண்­டி­ராத தலை­வர்கள் தான் பெரும்­பாலும் ஆட்­சியில் இருந்­தி­ருக்­கி­றார்கள்.

அவர்கள், தம்மைச் சிங்­கள மக்­களின் தலை­வர்­க­ளாக வரிந்து கொள்­வ­தற்கே விரும்­பினர். அவர்கள் சிங்­கள மக்­களின் எதிர்ப்­பையோ வெறுப்­பையோ சம்­பா­திக்க விரும்­பி­ய­தில்லை.

சிங்­கள மக்­களின் ஆத­ரவை தாம் அல்­லது தமது கட்சி இழந்து விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே அவர்கள் செயற்­பட்­டார்கள். அந்த இலக்கை அடை­வ­தற்­காக, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் அக்­கறை கொள்­ள­வில்லை.

தமி­ழர்­க­ளுடன் உரி­மைகள் விட­யத்தில் சம­ரசம் செய்து கொள்ள விரும்­பாத சிங்­களத் தலை­வர்­க­ளா­கவே பெரும்­பா­லா­ன­வர்கள் இருந்­தி­ருக்­கி­றார்கள். சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் பிர­தி­நி­தி­க­ளாக இயங்­கிய அவர்கள், தமி­ழர்கள் மீது போரையும், வன்­மு­றை­க­ளையும் கட்­ட­விழ்த்து விட்டு வேடிக்கை பார்த்­தனர்.

இவர்கள் பிரச்­சி­னையைத் தீர்க்க முனை­ய­வில்லை என்­பதை விட, தீர்க்­கின்ற அக்­கறை கொண்­ட­வர்­க­ளாக இருக்­க­வில்லை என்று கூறு­வதே பொருத்தம்.

இவர்­க­ளுடன் ஒப்­பீடு செய்­கின்ற போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எந்த வகைக்குள் அடக்­கப்­படக் கூடி­யவர் என்­பதை அவர் ஆட்­சியில் இருக்­கப்­போகும், எஞ்­சிய 20 மாதங்கள் தான் உறுதி செய்யப் போகி­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் விருப்பம் அவ­ருக்கு இருப்­ப­தாக தாம் அறி­கிறோம் என்று இரா.சம்­பந்தன் கூறி­யி­ருக்­கிறார். ஜனா­தி­ப­தி­யு­ட­னான உரை­யா­டல்­களில், அவ­ரது நடத்­தை­களின் மூலம், அவர் அதனை உணர்ந்து கொண்­டி­ருக்­கலாம்.

எனினும், அவ­ருக்குள் இருக்­கின்ற விருப்பம் மாத்­திரம், தீர்­வாக அமை­யாது. அது­மாத்­தி­ரமே தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைத் தராது. தீர்வை அடை­வ­தற்­கான முழு­மை­யான அர்ப்­ப­ணிப்பும், ஈடு­பாடும் முக்­கியம்.

அவை­யி­ரண்டும் எந்­த­ள­வுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இருக்­கி­றது என்­பது தான் கேள்வி.

இந்த ஈடு­பாடும் அர்ப்­ப­ணிப்பும் இருந்தால் மாத்­திரம் தீர்வு கண்­டு­விட முடி­யாது என்­ப­தையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

ஏனென்றால், பேரி­ன­வாத சக்­திகள், போட்டி அர­சியல் தலை­மைகள், கட்சி அர­சியல் நலன்கள் என்று ஏகப்­பட்ட சவால்­களும், தடை­களும் அதற்கு முன்னால் இருக்கும். அதனைக் கடப்­பது அடுத்­துள்ள மிகப்­பெ­ரிய சவா­லாக இருக்கும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வ­ரையில் பிரச்­சி­னையைத் தீர்க்கும் விருப்பைக் கொண்­ட­வ­ராக மாத்­திரம் இருப்­பதால் பய­னில்லை.

அதற்கும் அப்பால், தன்­முன்­பாக உள்ள சவால்­களை எதிர்­கொள்ளும் துணிச்­சலும், தைரி­யமும் அவ­ருக்குத் தேவைப்­ப­டு­கி­றது. எது நடந்­தாலும், அதனை எதிர்­கொள்வேன் என்ற உள­வுரண் அவ­ருக்கு முக்­கியம்.

தன்னைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளாலும், தன்னைச் சுற்­றிய கட்சி அர­சி­ய­லி­னாலும், போட்டி அர­சியல் குழுக்­க­ளி­னாலும் எந்த நேரமும் சிக்­கல்­க­ளையே எதிர்­கொள்ளும் நிலையில் உள்ள மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, அவற்றைக் கடந்து சிந்­திக்­கின்ற நிலை இல்லை.

பொது­வாக அர­சி­ய­லிலோ, ஆட்­சி­யி­ய­லிலோ, ஒரு பெரிய பிரச்­சி­னையில் இருந்து மீள்­வ­தற்கு, வேறு சிறிய பிரச்­சி­னை­களை தூண்டி விடு­வார்கள். அதற்­குள்­ளாக அந்தப் பெரிய பிரச்­சினை மக்­களின் கவ­னத்தில் இருந்து போய் விடும்.

கண்டி கல­வ­ரங்­களால், மத்­திய வங்கி பிணை முறி மோச­டி­யையும், அர்ஜூன் மகேந்­தி­ர­னையும் மக்கள் மறந்து விட்­டார்கள் என்று மஹிந்த ராஜபக் ஷ புலம்­பி­யது நினை­வி­ருக்­கலாம்.

அது­போ­லவே, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சுற்­றி­யுள்ள ஏகப்­பட்ட பிரச்­சி­னை­களும், தொல்­லை­களும், அவரை பிர­தான பிரச்­சி­னை­களின் மீது கவனம் செலுத்த முடி­யாத நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இது முத­லா­வது சவால்.

அதையும் மீறி, தமிழர் பிரச்­சி­னையைத் தீர்க்க முனைந்தால், அதற்கு அர­சாங்­கத்­துக்குள் இருக்கும் கட்­சிகள் ஒத்து வருமா- அரசை வீழ்த்த நினைக்கும் கூட்டு எதி­ரணி விட்டுக் கொடுக்­குமா என்ற பெரிய சிக்­கல்கள் இருக்­கின்­றன.

ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ, தனக்­கான ஆணையை நிறை­வேற்­று­கின்ற விட­யத்தில் முழு­மை­யான அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வில்லை என்­பதே தமி­ழர்­களின் ஆதங்­க­மாக இருக்­கி­றது.

தாங்கள் நம்பி வாக்­க­ளித்த அவர், தாம் கொடுத்த ஆணையை மீறி சிங்­கள மக்­களின் தலை­வ­ராக மாத்­திரம் நிலை­பெ­று­வ­தற்கு முயற்­சிக்­கிறார் என்ற சந்­தேகம் அவர்­க­ளுக்குள் தோன்­றி­யி­ருக்­கி­றது.

இரா.சம்­பந்தன் குறிப்­பிட்­டது போல, தமி­ழர்கள் ஒன்றும் தனி­நாட்டைக் கேட்­க­வில்லை. அதி­காரப் பகிர்வைத் தான் கேட்­கி­றார்கள். அதையும் கூட வழங்­கக்­கூ­டிய நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இல்லை என்பதே கசப்பான உண்மை.

அவருக்கு முன்பாக உள்ள சவால்களைக் கடப்பது சாத்தியமில்லை என்பது சம்பந்தனுக்கும் தெரியும்.

ஆனாலும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட தலைவர் என்ற சர்வதேசப் பெருமையைப் பெற வேண்டுமானால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு காண வேண்டும் என்று இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதனைச் செய்யாமல் அவரால் சர்வதேச அளவில் மதிக்கப்படும் நிலையை எட்ட முடியாது என்பது சம்பந்தனின் கருத்து. இது ஒரு வகையில் ஜனாதிபதிக்கான எச்சரிக்கை மணியும் கூட.

இந்த நேரத்திலாயினும், அவர் விழித்துக் கொண்டால், வரலாற்றில் அவரும் இடம்பெறுவார். தமிழ் மக்களாலும் அவர் நினைவில் கொள்ளப்படுவார். நோபல் பரிசுக்கான வாய்ப்பும் கூடத் தேடி வரலாம்.

இல்லையேல், இலங்கையில் அதிகாரத்துக்கு வந்துபோன பத்தோடு பதினொன்றான, தலைவராக மட்டுமே அறியப்படும் நிலை தான் அவருக்கு ஏற்படும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-25#page-2

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக...அய்யாவின் எதிர்க்கட்சி ஆசனன் பறிபோக காரணமாக இருக்கமாட்டார்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.