Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவிதியை தீர்மானிக்கப்போகும் புதன்கிழமை

Featured Replies

தலைவிதியை தீர்மானிக்கப்போகும் புதன்கிழமை

 

கடந்த 2003 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதத்தில் ஒருநாள் நேரம் மாலை 3 மணி­யி­ருக்கும். அமெ­ரிக்­காவின் வொஷிங்­டனில் அமைந்­துள்ள வெள்­ளை­ மா­ளிகை பர­ப­ரப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. அப்­போ­தைய அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை சந்­திக்க அப்­போ­தைய இலங்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க புஷ்ஷின் உத்­தி­யோ­கபூர்வ அலு­வ­ல­கத்தில் அமர்ந்­தி­ருக்­கிறார். ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை சந்­திப்­ப­தற்கு ஐந்து நிமிடம் வரை இருக்­கும்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஒரு தகவல் கிடைக்­கி­றது. அதா­வது இலங்­கையில் அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­கத்தின் பாது­காப்பு அமைச்சு, உள்­துறை அமைச்சு மற்றும் ஊட­கத்­துறை ஆகிய அமைச்­சுக்­களை கைப்­பற்­றி­விட்­ட­தா­கவே அந்த தகவல் கிடைக்­கி­றது. தக­வலைப் பெற்­றுக்­கொண்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதற்­ற­ம­டை­ய­வில்லை. அடுத்த சில நிமி­டங்­களில் அவர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை சந்­தித்து சுமார் அரை மணிநேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

இச் சம்­ப­வத்தை நினை­வூட்­டு­வ­தற்­கான காரணம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எப்­போ­துமே நிதா­ன­மா­னவர். பொறு­மையே அவரின் மிகப்­பெ­ரிய வலு­வான ஆயுதம். பிர­த­மரின் பலம் என்­ன­வென்று கேட்டால் அவரின் பொறு­மை­யையே அனை­வரும் கூறுவர். கடந்த 23 வரு­டங்­க­ளாக ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் தலை­வ­ராக இருக்­கின்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு தோல்­விகள், சவால்­களை சந்­தித்து பொறு­மை­யு­ட­னேயே தனது அர­சியல் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருக்­கின்றார்.

அவ்­வாறு பொறு­மை­யையே ஒரு மிகப்­பெ­ரிய ஆயு­த­மாக பயன்­ப­டுத்தி வரும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்ெகதி­ராக தற்­போது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் எப்­போதும் பொறு­மை­யாக இருக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போதும் அதே பொறு­மை­யு­ட­னேயே இருந்து வரு­கின்றார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் உற­வினர் ஒரு­வரின் திரு­மண வைப­வத்தில் கலந்­து­கொண்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முகத்தில் எந்­த­வி­த­மான பதற்­றமோ சல­னங்­களோ இன்றி இயல்­பான வகையில் அங்­கி­ருந்­த­வர்­க­ளுடன் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­தாக திரு­ம­ணத்தில் கலந்­து­கொண்ட ஒருவர் தெரி­வித்தார். ஸ்திர­மற்ற அர­சாங்க நிலை, நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை போன்­ற­வற்றை எதிர்­கொண்டுள்ள இம் மனிதர் எவ்­வாறு இயல்­பாக இருக்­கின்றார் என்று அங்­கி­ருந்­த­வர்கள் கேள்வி எழுப்­பி­னார்­களாம்.

இந்­நி­லையில் தற்­போது பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பாரிய அர­சியல் பூகம்­பத்­தையே அர­சியல் களத்தில் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியே பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் சமர்ப்­பித்­தி­ருக்­கி­றது. தற்­போ­தைய நிலை­மையில் பிர­த­ம­ருக்ெகதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையே தேசிய அர­சி­யலில் நெருக்­கடி மிக்க மற்றும் அர­சியல் பர­ப­ரப்­பு­மிக்க விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது.

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­ மீ­தான விவாதம் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதற்­கான ஆயத்­தங்­களில் அர­சியல் கட்­சிகள் ஈடு­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில் இந் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் என்ன நடக்­கப்­போ­கின்­றது என்ற கேள்வி தற்­போது பர­வ­லாக எழுந்­தி­ருக்­கின்­றது. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்டு பிர­தமர் தனது இருப்பை காப்­பாற்­றிக் ­கொள்­வாரா, அல்­லது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வெற்­றி­பெற்று பிர­தமர் தோல்வியடை­வாரா ஆகிய விட­யங்களே தற்­போது அனைவர் மத்­தி­யிலும் எழுந்­தி­ருக்­கி­ன்றன.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்கும் நோக்கில் ஐக்­கி­ய­ தே­சி­யக்­கட்சி கடும் காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொண்­டி­ருக்­கி­றது. கூட்டு எதி­ர­ணி­யா­னது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை வெற்­றி­கொள்ளும் நோக்கில் அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கி­றது. பிர­தான கட்­சி­யான ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இது­வரை உறு­தி­யான முடிவை அறி­விக்­காமல் இருக்­கி­றது. இந்­நி­லையில் நாம் தற்­போ­தைய நிலை­மையில் பாரா­ளு­மன்­றத்தின் எம்.பி.க்களின் எண்­ணிக்கை நிலைமை எவ்­வாறு இருக்­கின்­றது என்­பதை முதலில் அவதானிக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­னணி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் விடு­தலை முன்­னணி, ஈ.பி.டி.பி., தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு, ஆகிய கட்­சி­களின் சார்­பி­லேயே உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­பட்டு அங்கம் வகிக்­கின்­றனர்.

இப் பிர­தான கட்­சி­க­ளுக்குள் இணைந்து பல்­வேறு கட்­சிகள் ஆச­னங்­களைப் பெற்­றுள்­ள­போ­திலும் பாரா­ளு­மன்­றத்தைப் பொறுத்­த­வ­ரையில் ஆறு கட்­சி­களே பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்­றன. அதன்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை மற்றும் அதன் பிரி­வுகள் எவ்­வாறு இருக்­கின்­றன என்று அவதானிக்­க­வேண்­டி­யுள்­ளது. அந்­த­வ­கையில் ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சிக்கு 107 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.

அதில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விஜ­ய­தாஸ ராஜ­ப­க் ஷவும் அத்­து­ர­லிய ரத்­ன தேரரும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது எவ்­வா­றான முடிவை எடுப்­பார்கள் என்­பது குறித்து இது­வரை வெளிப்­ப­டுத்­த­வில்லை. அடுத்­த­தாக ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்சி வச­முள்ள 107 எம்.பி.க்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 7 உறுப்­பி­னர்­களும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் 5 உறுப்­பி­னர்­களும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் 6 உறுப்­பி­னர்­களும் உள்ளடங்கு­கின்­றனர். மறு­புறம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வசம் 95 எம்.பி.க்கள் உள்­ளனர்.

அதில் ஜனா­தி­ப­தி­ மைத்­தி­ரி­பா­ல­ சி­றி­சே­ன­ த­ரப்­பிடம் 42 எம்.பி.க்கள் உள்­ளனர். மஹிந்த ராஜ­ப­க் ஷ­ த­ரப்­பி­டம் 53 எம்.பி.க்கள் உள்­ளனர். அதே­போன்று தமிழ் ­தே­சி­ய­ கூட்­ட­மைப்­பு­ வசம்16 எம்.பி.க்களும் ஜே.வி.பி. வசம் 6 எம்.பி.க்களும் உள்­ளனர். அதே­போன்று ஈ.பி.டி.பி. வசம் ஒரு எம்.பி. பத­வியும் உள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. இவ்­வா­றான எம்.பி.க்களின் கட்­ட­மைப்­பி­லேயே பாரா­ளு­மன்­றத்தில் பிர­த­ம­ருக்ெகதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பி­லான வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வுள்­ளது.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்கும் முயற்­சியில் ஐக்­கிய தேசி­யக் ­கட்சி கங்­கணம் கட்­டிக்­கொண்டு செயற்­ப­டு­கின்­றது. கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சியின் செயற்­கு­ழுக்­கூட்­டத்தில் பிர­தமர் ரணி­லுக்ெகதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்­க­வேண்­டு­மென்ற தீர்மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

அந்­த­வ­கையில் இதனை ஒரு தன்­மா­னப்­ பி­ரச்­சி­னை­யாக கையில் எடுத்­துள்ள ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்சி பிரே­ர­ணையை தோற்­க­டித்தே தீருவோம் என்ற உறு­தி­யான நிலைப்­பாட்டிலிருக்­கி­றது. இங்கு ஐக்­கிய தேசி­யக் ­கட்சி பக்கம் இருக்­கின்ற சிக்கல் என்­ன­வெனில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கடு­மை­யாக விமர்­சித்­துக்­கொண்­டி­ருக்கும் இரா­ஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார தன்­னுடன் சேர்ந்து 27 பேர் பிர­த­ம­ருக்ெகதி­ராக வாக்­க­ளிக்கத் தயா­ராக இருப்­ப­தாக தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அதா­வது எதிர்­வரும் 4ஆம் திக­திக்கு முன்னர் ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியில் பாரிய மாற்­றங்கள் இடம்­பெ­றா­விடின் தாம் இவ்­வாறு வாக்­க­ளிக்கப் போவ­தாக பாலித ரங்கே பண்­டார கூறி­யி­ருக்­கின்றார். ஆனால் அவரின் கூற்று எந்­த­ள­வு­ தூரம் சாத்­தி­ய­மாகும் என்­பது குறித்து இது­வரை தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இறுதி நேரத்தில் அவர் தனது முடிவை மாற்றி பிர­த­ம­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்கும் சாத்­தியமிருக்­கி­றது.

ஜே.வி.பி. பிர­த­ம­ருக்ெகதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்து வாக்­க­ளிப்­ப­தாக தெரி­வித்­தி­ருக்­கி­றது. அதே­போன்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி இது­வரை எந்­த­வி­த­மான உறு­தி­யான முடி­வையும் அறி­விக்­க­வில்லை. அதா­வது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்க்க எந்­த­வி­த­மான கார­ணங்­களுமில்லை என்ற விட­யத்­தையே ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தெரி­வித்து வரு­கின்­றது.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மைத்­திரி தரப்பில் 42 எம்.பி.க்கள் உள்­ளனர். அந்த 42 பேரில் 80 வீத­மா­ன­வர்கள் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்து வாக்­க­ளிக்­க­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளனர். எனினும் 20 வீத­மானோர் இது­வரை எந்த முடி­வையும் அறி­விக்­காமல் உள்­ளனர். இந்­நி­லையில் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மைத்­திரி தரப்பிலுள்ள 42 பேர் என்ன செய்­யப்­போ­கின்­றனர் என்­பது தொடர்பில் தெளி­வான முடிவு கிடைக்­க­வில்லை.

இது இவ்­வா­றி­ருக்க கூட்டு எதி­ரணி என்ன நிலைப்­பாட்டிலிருக்­கின்­றது என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். ஆனால் இந் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்­டு­வ­ரு­வதில் கூட்டு எதி­ர­ணிக்­குள்­ளேயே பாரிய கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக மஹிந்த ராஜ­பக் ஷ, பஷில் ராஜ­பக் ஷ, கெஹெ­லி­ய­ ரம்­புக்­வெல்ல உட்­பட சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் தற்­போ­தைய நிலை­மையில் இந் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையைக் கொண்­டு­வ­ர­வேண்­டிய அவ­சியமில்லை என்ற நிலைப்­பாட்டில் இருந்­த­தா­கவும் எனினும் கட்­சியின் கனிஷ்ட உறுப்­பி­னர்­களின் வலி­யு­றுத்­த­லுக்கமை­யவே நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பிர­த­ம­ருக்ெகதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தா­கவும் உள்­ளகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

காரணம் இந் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வெற்­றி­பெற்­றாலும் அல்­லது தோல்­வி­ய­டைந்­தாலும் அது மஹிந்த தரப்­பிற்கு சாத­க­மான பலனைப் பெற்­றுக்­கொ­டுக்­காது என்றே எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது. ஒரு­வேளை நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்டு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தன்னை ஒரு ஸ்திர­மான தலை­வ­ராக நிலை­நி­றுத்­தினால் அது கூட்டு எதி­ர­ணிக்கு அடுத்­து­வரும் சில மாதங்­க­ளுக்கு நெருக்­க­டி­மிக்­க­தாக காணப்­படும். அதனை சமா­ளித்து மீண்டும் மக்­களின் மனதை வெற்­றி­கொள்ள மஹிந்த தரப்­பிற்கு காலம் தேவைப்­படும்.

தற்­போது உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் மக்­களின் ஆணை கிடைத்­துள்ள நிலையில் இவ்­வா­றா­ன­தொரு அர­சியல் காட்சி மஹிந்த தரப்­பிற்கு அவ­சி­ய­மற்ற ஒன்­றாக இருக்­கின்­றது. அதே­போன்று ஒரு­வேளை நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வெற்­றி­பெற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவியிழப்­பா­ரானால் அதுவும் மஹிந்த தரப்­பிற்கு பாத­க­மா­ன­தா­கவே அமையும். ரணில் பத­வி­யி­ழந்தால் ஐக்­கிய தேசி­யக் ­கட்சி ஒரு­பு­து­மு­கத்தை தலை­வ­ராக்கி புதிய தெம்­புடன் பய­ணிக்க ஆரம்­பிக்கும். இதனை சமா­ளித்து அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்­வ­தென்பதும் கூட்டு எதி­ர­ணிக்கு சிக்­க­லா­கவே இருக்கும். தற்­போ­தைய நிலை­மையில் இவ் விட­யமும் கூட்டு எதி­ர­ணிக்கு சாத­க­மாக அமை­யாது.

 அதே­போன்று ஐக்­கிய தேசி­யக் ­கட்சி இந் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை வெற்­றி­கொள்ளும் நோக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் ஆத­ரவை எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றது. ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எவ்­வா­றான முடிவை எடுக்­கப்­போ­கின்­றது என்­பது குறித்து எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திக­தியே தீர்­மா­னிக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. கூட்­ட­மைப்­பிற்கும் இதில் ஒரு சிக்கல் காணப்­ப­டு­கின்­றது.

 நம்­பிக்­கை­யில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்து பிரதமருக்ெகதிராக வாக்களித்தால் அது தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வைக் கொண்டுவருவதில் ஒரு தடையை ஏற்படுத்தலாம். அம் முடிவுக்கு கூட்டமைப்பு செல்லுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து கூட்டமைப்பு வாக்களிக்குமாயின் அது கூட்டமைப்புக்கு எதிராக செயற்படும் சக்திகளுக்கு தீனிபோடுவதாக அமையும். தென்னிலங்கை அரசாங்கத்தை கூட்டமைப்பு காப்பாற்றிவிட்டது. ஆனால் அவ்வரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்ற பிரசாரத்தை கூட்டமைப்புக்ெகதிராக அரசியல் களத்தில் நிற்கும் சக்திகள் முன்னெடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. எனவே இவ் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக சிந்தித்து இராஜதந்திர ரீதியில் ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.

அந்தவகையில் பிரதமருக்ெகதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தேசிய நெருக்கடியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 4ஆம் திகதி என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அரசியல் களம் சூடுபிடித்து விட்டது. பிரதமர் தமது வழமையான பொறுமையுடன் காய்நகர்த்தி வருகின்றார். என்ன நடக்கப்போகின்றது என்பதை தெளிவாக எதிர்வுகூற முடியாத நிலையில் அரசியல் ஆய்வாளர்கள் இருக்கின்றனர். பிரதமரின் பொறுமை வெற்றிபெறுகின்றதா என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-31#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.