Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”சிங்­களத் தலை­மை­களின் கடமையே இது” என்­கிறார் சம்­பந்தன்

Featured Replies

”சிங்­களத் தலை­மை­களின் கடமையே இது” என்­கிறார் சம்­பந்தன்

 
 

ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் நிரந்­தரத் தீர்­வினை பெற்­றுக்­கொள்ள பல்­வேறு முயற்­சி­கள் இந்த ஆட்­சியில் முன்­னெ­டுக்கப்­ப­டு­கின்­றன. எனினும் தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ளும் பய­ணத்தில் பல்­வேறு தடை­க­ளையும் நெருக்­க­டி­க­ளையும் சந்­திக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது என எதிர்க்­கட்சி த்தலைவர் சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ் மக்­களின் நியா­ய­மான தீர்­வு­களை சிங்­கள மக்கள் மத்­தியில் சரி­யாக கொண்டு சேர்க்கும் முயற்­சி­களை சிங்­கள தலை­வர்கள் முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

Image result for à®à®®à¯Â­à®ªà®¨à¯à®¤à®©à¯ virakesari

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவின் இறுதி நிகழ்­வுகள் நேற்று வெள்­ள­வத்தை இராம­கி­ருஷ்ண மண்­ட­பத்தில் இடம்­பெற்­றன. இந்­நி­கழ்வில் சிறப்பு அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­ம்போதே எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,  

தமிழ் மக்கள் ஒரு பாரம்­ப­ரிய சரித்­தி­ரத்தை கொண்ட மக்கள். இலக்­கியம், சங்­கீதம், கலா­சாரம், பாரம்­ப­ரியம் நிறைந்­தும் சரித்­திரத் தன்மை கொண்டேதாயுமே தமிழர் வர­லாறு காணப்­ப­டு­கின்­றது. ஆகவே இவ்­வி­த­மான நிகழ்­வு­களை நடத்­து­வதன் மூல­மாக தமிழர் பாரம்­ப­ரியம் பேணிப் பாது­காக்­கப்­ப­டு­கின்­றது. எமது அடித்­தளம் இதில் தான் தங்­கி­யுள்­ளது. அதனை எவரும் மறுக்க முடி­யாது. ஆகவே நாம் அனை­வரும் இதனை பாது­காக்க வேண்டும். ஆகவே நிகழ்வை நடத்தும் அனை­வ­ருக்கும் நன்­றி­களை தெரி­விக்க வேண்டும். மேலும் தமிழர் என்ற வகையில் எமக்கு தீர்­வுகள் அவ­சி­ய­மாக உள்­ளன.  நான்  விரும்பி அர­சி­ய­லுக்கு வந்­தவனல்ல. எனது தொழிலை நேசித்தேன். 

எனினும் அர­சி­ய­லுக்கு வந்­த­வுடன் எனது தொழிலை நான் விட­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது. ஒரு அர­சி­யல்­வா­தி­யாக நாம் சில நகர்­வு­களை கருத வேண்டும். நாடு சுதந்­திரமடைய முன்­பா­கவே எமது பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு நிரந்­த­ரமான தீர்வு கிடைத்­தி­ருக்க வேண்டும். 1935ஆம் ஆண்டு  இலங்­கைக்கு டொனமூர் ஆணைக்­குழு வந்­தது. 

அதன்போது டொனமூர் ஆணைக்­குழு பிரே­ர­ணைகள் அடிப்­ப­டையில் தீர்­வுகள் பெற்­று­க்கொ­டுக்­கப்­பட்­டி­ருந்தால், முறைப்­படி  ஆட்சியமைக்­கப்­பட்­டி­ருந்தால், சுயாட்­சியில் இப் பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு தீர்வு அதுவும் நாடு சுதந்­திரம் அடை­ய­முன்னர் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும். 1935 ஆம் ஆண்டு இந்­திய சட்­டத்தின் மூல­மாக மாகா­ணங்கள் உரு­வாக்­கப்­பட்டு மாகா­ணங்­க­ளுக்கு சுய அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டன. 

எனினும் அச் சந்­தர்ப்­பத்தை நாம் இழந்தோம். டொனமூர் ஆணைக்­கு­ழு­விற்கு முன்பு பூரண சுதந்­திரம்  வேண்டும் என கேட்டோம். தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகு­தி­களில் சமஷ்டி வழங்­கப்­பட வேண்டும் என நாம் கேட்­க­வில்லை. பூரண சுயாட்­சி­யையே கேட்டோம். கண்­டிய சிங்­க­ள­வர்கள் தங்­க­ளுக்கு சுயாட்சி வேண்டும் என கேட்­டார்கள். ஆனால் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக நாம் இருக்­க­வில்லை. சோல்­பரி ஆணைக்­குழு இலங்­கைக்கு வந்­த­போது நாம்  50க்கு 50 அதி­காரம் கேட்டோம். அது தவ­றா­னது என நான் கூற­வில்லை. ஆனால் அது எந்தள­விற்கு யதா­ர்த்த­மா­னது என்­பது கேள்­விக்­கு­ரிய விட­ய­மாகும். இவ்­வி­த­மான கோரிக்­கைகள் மூல­மாக நாடு சுதந்­திரம் அடைய முன்னர் தீர்­வுகள் கிடைக்­க­வி­ருந்த சந்­தர்ப்­பங்­களை நாம் இழந்தோம். நாடு சுதந்­திரம் அடைந்த பின்னர் எமது பிரச்­சி­னை­களை தீர்ப்­பது மிகவும் சிக்­க­லான விட­ய­மாக இருந்­தது. சாதா­ர­ண­மான  மாவட்ட சபை­களைக் கூட உரு­வாக்க முடி­யாத நிலை­மையில் நாம் இருந்தோம். இந்­திய–இலங்கை ஒப்­பந்­தத்தின் கீழ் 1983ஆம் ஆண்டு இந்­திரா காந்தி மற்றும் ராஜீவ்­காந்தி ஆகியோரின் தலை­யீட்டின் கார­ண­மாக மாகாண சபைகள் உரு­வாக்­கப்­பட்டு வட­கி­ழக்கு இணைக்­கப்­பட்டு ஓர­ளவு சுயாட்சி உரு­வாக்­கப்­பட்­டது. அது போதாது. அது ஒரு தீர்வு அல்ல. ஆனால் ஏற்­று­க்கொள்ளக் கூடிய ஒரு தீர்வை பெற நாம் யதார்த்­த­மாக நடந்­து­கொள்ள வேண்டும். இந்த தீர்வை நாட்டில் வாழும் சகல மக்­களும் குறிப்பாக பெரும்­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் மக்கள் என அனை­வரும் ஏற்­று­க்கொள்ள வேண்டும். அவ்­வி­த­மான ஒரு தீர்வே ஏற்­பட வேண்டும். அதற்­கான முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. எனினும் பிரச்­சி­னை­யான விடயம் என்­ன­வெனில் பல­வி­த­மான தடைகள், பல எதிர்ப்­புகள் எழுந்­துள்­ளன. எனினும் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் ஒரு­மித்த நாட்­டுக்குள் ஒரு தீர்வை எதிர்ப்­பார்கள் என நாம் நினைக்­க­வில்லை. ஆகவே அவர்­க­ளுக்கு உண்­மை­களை தெளி­வு­ப­டுத்தி அனைவரது ஒத்துழைப்புடனும் ஒரு தீர்வை ஏற்படுத்த சிங்கள தலைவர்கள் முயற்சிக்க வேண்டும்.அதன்மூலமாக ஒரு தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். 

அது மட்டுமே எமக்குள்ள ஒரே வழிமுறை. இன்று சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவை பெற்றுள்ளோம். எமது கோரிக்கை ஒரு நியாயமான கோரிக்கை. அது அங்கீகரிக்கப்பட வேண்டிய, தகுதியான கோரிக்கை என்ற நிலைப்பாடு சர்வதேச சமூகத்திடம் உள்ளது. அந்த ஆதரவை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/32133

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, நவீனன் said:

எனினும் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் ஒரு­மித்த நாட்­டுக்குள் ஒரு தீர்வை எதிர்ப்­பார்கள் என நாம் நினைக்­க­வில்லை. ஆகவே அவர்­க­ளுக்கு உண்­மை­களை தெளி­வு­ப­டுத்தி அனைவரது ஒத்துழைப்புடனும் ஒரு தீர்வை ஏற்படுத்த சிங்கள தலைவர்கள் முயற்சிக்க வேண்டும்.அதன்மூலமாக ஒரு தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். 

ஆசை தோசை அப்பளம் வடை........:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.