Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை ஐ.பி.எல். கூடாது: உருவெடுக்கும் புதுப் பிரசாரம்

Featured Replies

காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை ஐ.பி.எல். கூடாது: உருவெடுக்கும் புதுப் பிரசாரம்

ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக திரும்பிய காவிரி விவகாரம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் வேண்டாம் என்பதைக் குறிக்கும் #NoIPLTamilNadu என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் டிரெண்டாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் இதற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசத்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் போட்டியை புறக்கணித்தால் சேப்பாக்கம் மைதானம் காலியாக இருக்கும் என்றும், தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்கு காரணம் தெரிய வந்தால் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் இப்பிரச்சனை சின்ன தியாகத்தால் சென்று சேர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் முக்கிய திருப்பம் - ஐபிஎல் போட்டிகளுக்கு குவியும் எதிர்ப்பு! Image captionஜேம்ஸ் வசந்தன்

ஒரு ஐம்பதாயிரம் பேர் செய்யக்கூடிய இந்த தியாகத்தால் ஏழு கோடி பேர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன், இது மொழிப்பிரச்சனை அல்ல வாழ்வுப் பிரச்சனை என்றும், விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழகத்தில் மக்கள் உணர்வோடு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் சொந்த பணத்தில் டிக்கெட்டை பெற்று மைதானத்திற்குள் சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வேல்முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.

கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி. ராமன், காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தில் ஓர் ஒருங்கிணைந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு விளையாட்டுப் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்பதை தான் யோசித்து வருவதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதற்கு இணையான அமைப்பை மத்திய அரசு அமைக்கும் வரை தான் எந்தவொரு ஐபிஎல் போட்டிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் முக்கிய திருப்பம் - ஐபிஎல் போட்டிகளுக்கு குவியும் எதிர்ப்பு! Image captionசுமந்த் ராமன்

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி, சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என்றும், மீறி அங்கு விளையாட வரும் வீரர்களை சிறைபிடிக்கப்போவதாகவும் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ஒரு புறம் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், இதற்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை ஐ.பி.எல். கூடாது: உருவெடுக்கும் புதுப் பிரசாரம்படத்தின் காப்புரிமை@DEVASHAK

ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடைவிதிப்பதால் காவிரிப் பிரச்சனை எப்படி தீரும் என்று கேட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் #NoIPLTamilNadu ஹேஷ்டேக்கிற்கு எதிர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

http://www.bbc.com/tamil/sport-43643639

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராட்டம் பரவாயில்லையே!

வெற்றி பெறுமா?

  • தொடங்கியவர்

நடக்குமா ஐபிஎல்?- முற்றும் காவிரி விவகாரம்: வைரலாகும் போராட்ட யுக்திகள்

 

 
dhonicaptain1

சென்னை சூப்பர் கிங்க்ஸ் - கோப்புப் படம்

ஐபிஎல் போட்டிகள் காவிரி விவகாரத்தால் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகள் வரும் நிலையில் போட்டி நடக்கட்டும், நாம் எப்படி அதை காவிரி போராட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் அப்பில் சிலர் யோசனைகளைப் பதிவிட்டு வருவது வைரலாகி வருகிறது.

ஐபிஎல்லுக்கும் தமிழகத்துக்கும் ஏகப் பொருத்தம். இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது இலங்கை வீரர்கள் அணியில் இருந்தால் ஐபிஎல் போட்டியை நடத்தவிடமாட்டோம் என்ற பிரச்சினை உருவானது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதுகுறித்து கடிதமே எழுதினார். போட்டியும் வெளி மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் சூதாட்ட விவகாரத்தில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் தமிழக ரசிகர்கள் சோர்ந்து போயினர். அனைவராலும் நேசிக்கப்பட்ட தோனி புனே அணிக்குப் போனார். அங்கு கேப்டனாக இருந்தார். தோனி இருக்கும் அணி தான் சிஎஸ்கே. அதுதான் தமிழக அணி என்ற எண்ணத்துடன் தமிழக ரசிகர்கள் போட்டியை ரசித்தனர்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தடை நீங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் புதுப்பொலிவுடன் மீண்டும் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட அதே வீரர்கள் உள்ளனர். ஒரே ஒரு வருத்தம் அஸ்வின் இல்லை என்பது, ஆனால் அதை ஈடுகட்ட ஹர்பஜன் சிங் வந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அதே நேரம் ஆல்ரவுண்டர் வாட்சன் இணைந்துள்ளதும், இளம் வீரர்கள் இணைந்திருப்பதும் ஒரு புதுவகையான அணியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டைவிட இருமடங்கு கட்டணம் உயர்த்தியும் அடிப்படை டிக்கெட் விலை 1300 ரூபாயாக நிர்ணயித்தும் சில மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டு விட்டது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்றும், நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்று கூறப்படும் நிலையில் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுதுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டால், மேலும் சில முக்கிய அரசியல் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் போட்டியை குறுகிய காலமே உள்ள நிலையில் மாற்றும் வாய்ப்பு இல்லை. போட்டியை நடத்தியே தீர்வோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் கூறியுள்ளது.

இந்நிலையில் சிலர் போட்டிக்கு இடையூறு இல்லாமல் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆலோசனைகளைப் பதிவிட்டு வருகின்றனர். போட்டி நடக்கும் நேரம் அனைவரும் எழுந்து நின்று காவிரி மேலாண்மை வாரியத்துக்காக 10 நிமிடம் தொடர் கோஷமிடலாம், செல்போன் டார்ச் மூலம் மொத்தமாக எதிர்ப்பைப் பதிவு செய்யலாம், பதாகைகளை ஏந்திப் பிடித்து எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்றெல்லாம் ஆலோசனைகள் கூறுகின்றனர்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் அஹிம்சை முறையில் ஒரு யோசனை வைத்துள்ளார். “வரும் 10-ம் தேதி சென்னை அணியின் முதல் போட்டி நடக்கிறது. அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாகச் சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் போதும், சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம்.” என பதிவிட்டுள்ளார்.

இன்னும் சிலர் பெரிய பதிவை இட்டுள்ளனர் அவை வருமாறு:

“மெரினாவில் போராட தடை எதற்கு? மெரினாவுக்கு போகணும். இருக்கவே இருக்கு சேப்பாக்கம் மைதானம், டிக்கெட் எடு கொஞ்சம் சாப்பாடு தண்ணீர் எல்லாம் வாங்கிட்டு உள்ளபோ,

மேட்ச் நல்லா பாரு எவன் தோற்றாலும் வென்றாலும் இடையில் நமது பலகைகளை உலகம் எங்கும் தெரிய காண்பி

போட்டி முடிந்ததும் மைதானத்தை விட்டு எவனும் வெளிய வராதே, அவ்வளவு பெரிய மைதானம் 40 ஆயிரம் பேரு உள்ளே போகலாம் உலகம் முழுவதும் இது பெரிய அளவில் பேசப்படும். மாற்றி யோசியுங்கள்”

“தோனிக்கும் கோலிக்கும் பதாகை தூக்குவதை விட நீ உண்ணும் உணவுக்காக, உன் வயிற்றுச்சோறுக்காக தன் உயிரைக் கொடுத்துப் போராடும் விவசாயிக்காக ஒருநாள் நீ போராடி பதாகையை ஏந்திப்பிடி, அதில் தவறு இல்லை” இவ்வாறு பதிவிட்டுள்ளனர்.

எது எப்படியோ ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட்டும், சிக்சரும் விளையாட்டின் பரபரப்பும் இருக்கும் போதே அரசியலுக்கும் பஞ்சமிருக்காது என தெரிகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/article23436428.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வசந்தனின் பேட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.