Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாவலி ‘எல்’ வலயத்திலே ‘மாயா புரம்’ என்ற சிங்கள குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி-

Featured Replies

மகாவலி ‘எல்’ வலயத்திலே ‘மாயா புரம்’ என்ற சிங்கள குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி-

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு…

sivaji.jpg?resize=720%2C450

 

 

வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களில் ஒரு பகுதியாக மகாவலி ‘எல்’ வலயத்திலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தெற்கில் இருந்து கொண்டு வரப்படுகின்ற சிங்கள மக்களுக்கு கொடுத்து ‘மாயா புரம்’ என்ற குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனை நாங்கள் வண்மையாக கண்டிப்பதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் வைத்து நேற்று புதன் கிழமை(11) மாலை ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மகாவலி ‘எல்’ வலயத்திலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தெற்கில் இருந்து கொண்டு வரப்படுகின்ற சிங்கள மக்களுக்கு கொடுத்து ‘மாயா புரம்’ என்ற குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.

இதன் மூலம் கடந்த காலங்களில் அமைச்சர்களினால் தொடர்ச்சியாக பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களும் இதே போல மீன் பிடி தொழிலை மேற்கொண்டு வரும் தமிழ் தொழிலாளர்களுக்கு வழங்க மறுத்து அவர்களுடைய இடங்களிலே சிங்கள தொழிலாளர்களுக்கு கடல் தொழில் செய்வதற்கான அந்த அனுமதியினை தவறான முறையிலும்,மோசடியான முறையிலும் கொடுத்துள்ளமையினால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள்,வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் அங்கு சென்றோம்.

இந்த நிலைமைகளை உடனடியாக அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.இத்திட்டங்களை உடன் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக குறித்த கோரிக்கையை மகஜர் ஊடாக அனுப்பி வைத்துள்ளோம். இவ்விடையம் தொடர்பாக நாம் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றோம்.

இப்பிரச்சினைகளை அரசு கைவிடும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை.தொடர்ந்தும் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுமாக இருந்தால் தேசிய நல்லினக்கத்தினையோ அல்லது வேறு எதனையும் ஏற்படுத்த முடியாது.

அரசியல் அமைப்பிற்கு முறனாகவும் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாண சபை சட்டத்திற்கு எதிராக அரசங்காம் செயற்படுகின்றது என்பதனை நாங்கள் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/74703/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.