Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் அடிவாங்கிய 57 ஆவது படையணி: இக்பால் அத்தாஸ்

Featured Replies

மன்னார் - வவுனியா எல்லைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் சிறிலங்காப் படையின் 57 ஆவது படையணியே பங்கு பற்றியிருந்தது என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்திருக்கின்றார்.

அவரின் பத்தியில் சில முக்கிய பகுதிகள் வருமாறு:

மன்னார்ப் பகுதி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து படையினரின் 57 படையணி நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது.

முதலில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் 4 கிலோ மீற்றர் தூரம் வரை முன்னேறியிருந்த படையினர் அன்று இரவு மூண்ட பெரும் சமரைத் தொடர்ந்து தமது நிலைகளுக்கு தந்திரமாக பின்வாங்கி இருந்தனர்.

இச்சமரில் 9 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 அதிகாரிகள் உட்பட 63 படையினர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 57 ஆவது படையணியைச் சேர்ந்தவர்கள்.

இம் மோதல்களுக்கு அஞ்சி 51 சிங்கள மக்களும் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வவுனியா நகருக்குள் சென்றுள்ளனர்.

இதனிடையே பிரகடனப்படுத்தப்படாத 4 ஆம் கட்ட ஈழப்போரில் டிசம்பர் மாதம் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் வரையில் 945 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் இராணுவத்தினர் - 599, கடற்படையினர் - 226, விமானப்படையினர் - 07, காவல்துறையினர் - 72, ஊர்காவல் படையினர் - 41 பேர் என அடங்குவர்.

இவற்றில் முக்கிய சில மோதல்கள் வருமாறு:

ஜூலை 28 ஆம் நாள் மாவிலாறில் இடம்பெற்ற மோதல்களில் 2 அதிகாரிகளும் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 8 அதிகாரிகளும் 113 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர்.

ஓகஸ்ட் மாதம் 03 ஆம் நாள் மூதூரில் இடம்பெற்ற சமரில் 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 7 அதிகாரிகளும் 94 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர்.

ஓகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் முகமாலை, தீவுப்பகுதிகளில் இடம்பெற்ற சமரில் 17 அதிகாரிகளும் 180 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதுடன் 47 அதிகாரிகளும் 778 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர்.

ஓகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் சம்பூரில் இடம்பெற்ற சமரில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 11 அதிகாரிகளும் 156 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர்.

செப்ரம்பர் மாதம் 05 ஆம் நாள் முகமாலையில் இடம்பெற்ற சமரில் 02 அதிகாரிகளும் 36 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதுடன் 10 அதிகாரிகளும் 201 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர்.

ஒக்ரோபர் மாதம் 11 ஆம் நாள் முகமாலையில் இடம்பெற்ற சமரில் 12 அதிகாரிகளும் 124 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதுடன் 24 அதிகாரிகளும் 490 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31225

அக்தாஸின் தரவுகள் சரியென எடுத்துக் கொண்டாலும் தேவையான ஒரு விடயத்தைத் தராமல்

விட்டுவிட்டார். அதுவென்னவென்றால் காயமடைந்தவர்களெல்லாம் படைக்குத் திரும்பிவிட்டார்

களா?

மீண்டுமல்ல மீண்டும் மீண்டும் அடிவாங்கி காணாமல் போன 57வது படையணி என இன்னொருக்க இக்பால் கட்டுரையை விரைவில் எழுதுவார்

அக்பாலின் கணக்கெடுப்பு நம்பக்கூடியதாகவில்லையே. முகமாலை சமரில் சுமார் 200 உடல்களை புலிகள் ஒப்படைத்தார்கள் என்றுதானே செய்திகள் வந்தது

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் புதினத்தின் செய்தியை சங்கதி எவ்வாறு மாற்றி தமது செய்தி போன்று போட்டிருக்கின்றார்கள் என்று பாருங்கள்.

http://sankathi.org/news/index.php?option=...12&Itemid=1

இதனை ஏன் குறிப்பிடுகின்றேன் எனில் சங்கதியும் பதிவும் சில செய்திகளை இவ்வாறுதான் புதினத்திலிருந்து கொப்பியடித்து போட்டு வருகின்றார்கள். இது நீண்டகாலமாக இடம்பெற்று வரும் செயல்.

இங்கே நான் கேட்க விழைவது இதுதான். புதினம் செய்தியை எடுத்துப் போடுகின்றவர்கள் ஏன் புதினத்துக்கு நன்றி போடக்கூடாது? அவ்வாறு போடுவதால் கெளரவக் குறைச்சல் ஏற்படும் எனில், அதனை தவிர்ப்பது நன்று அல்லவா?

தமிழ்வின் இணையத்தளம் புதினத்தின் பெருமளவு செய்திகளை எடுத்துப் போட்டு தமது செய்திகள் போன்றே வெளியிட்டு வருகின்றது. இவ்வாறு பல இணையத்தளங்கள் செயற்பட்டு வருகின்றன.

இன்று பலருக்கு இணையத்தளத்தில் செய்தி போட்டு நல்ல பெயர்கள் எடுப்பது சுலபமாகிவிட்டது.

இதுவெல்லாம் நோகாமல் பிள்ளை பெறுகின்ற செயற்பாடு என்றே கூற வேண்டும்.

மாற்றுக்குழு ஊடகங்களில் இருக்கின்ற ஒற்றுமையில் 10 சதவீதம் கூட தமிழ்த் தேசியத்துக்கு உழைக்கின்றதாக கூறுகின்ற தளங்களில் இல்லை என்பதனை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

Edited by nirmalan

அத்தாஸ், டிசம்பர் மாதம் 2005இல் ஈழப்போர் 4 ஐ தொடக்கி வைத்துள்ளார். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.