Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்­டுச்­சட்­டிக்­குள் ஓடும் குதி­ரை­யாக தமிழ் அர­சி­யல்!!

Featured Replies

குண்­டுச்­சட்­டிக்­குள் ஓடும் குதி­ரை­யாக தமிழ் அர­சி­யல்!!

கடந்த சில நாள்­க­ளாக வெளி­வந்து கொண்­டி­ருக்­கும் செய்­தி­கள் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் பெரும் கவலை அளிப்­பவை.
நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மையை இந்த அரசு இழந்­து­விட்ட நிலை­யில், எஞ்­சிய ஆட்­சிக் காலத்­தில் அத­னால் புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்ற முடி­யாது என்று கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளில் ஒன்­றான ரெலோ­வின் செய­லா­ளர் என்.சிறி­காந்தா தெரி­வித்­தி­ருந்­தார்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின்­போது ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வா­க­வும் எதி­ரா­க­வும் கிடைத்த வாக்­கு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு அவர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தார்.

அந்­தத் தீர்­மா­னத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்த ஜே.வி.பியி­னர் , புதிய அர­ச­மைப்பு முயற்­சியை ஆணித்­த­ர­மாக வர­வேற்­கின்­ற­னர் என்­பதை அவ­தா­னிக்­கும்­போது, தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள் தமது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை இழந்­து­வி­ட­வில்லை என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, அந்த நில­மை­யை­யொட்டி சிறிகாந்தா கூறிய கருத்தே கவ­னத்­தில் எடுக்­கப்­ப­ட­வேண்­டிய முக்­கி­ய­மான விட­யம்.

மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை இந்த ஆட்சி இழந்­து­விட்­ட­தால், அத­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தான விட­யங்­க­ளைக் கேட்­டுச் சாதிக்க வேண்­டும், அதா­வது 13ஆவது திருத்­தச் சட்­டத்­தில் கூறப்­பட்­டுள்ள காணி, பொலிஸ் அதி­கா­ரங்­க­ளை­யா­வது மாகாண சபைக்கு வழங்க இந்த ஆட்­சி­யைக் கொண்டு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

அவ­ரது கருத்­துத் தெரி­விக்­கப்­பட்ட அதே­ச­ம­யத்­தில் தொலைக்­காட்சி ஒன்­றுக்­கு செவ்வி வழங்கிய பேட்­டி­ய­ளித்த கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், புதிய அர­ச­மைப்பு முயற்­சியை இந்த ஆட்­சி­யா­ளர்­கள் மீண்­டும் ஆரம்­பிக்­க­வில்லை என்­றால், அரச நிர்­வாக முடக்­கப் போராட்­டத்தை நடத்­தப் போவ­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இது அவர் சார்ந்த கட்­சி­யின் முடிவா அல்­லது கூட்­ட­மைப்­பின் முடிவா என்று உறு­தி­யா­கத் தெரி­யா­த­போ­திலும் (அப்­ப­டிப்­பட்ட முடிவு குறித்து எது­வும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை என்று தமிழ் அர­சுக் கட்­சி­யி­ன­ரும் கூட்­ட­மைப்­பி­ன­ரும், கூறு­கின்­ற­னர்)அந்த அறி­விப்பு அர­சுக்கு எதி­ரா­கக் கூட்­ட­மைப்பு மீண்­டும் அறப் போரில் ஈடு­ப­டப்­போ­வ­தற்­கான முன்­ன­றி­விப்பு என்ற கோணத்­தி­லும் ஒரு சாரா­ரால் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மூன்­றா­வது செய்தி, தமி­ழர் தாய­கத்­தில் காணப்­ப­டும் அரச பணி வெற்­றி­டங்­க­ளுக்கு, அதி­லும் குறிப்­பாக சிற்­றூ­ழி­யர் தரங்­க­ளுக்கு தென்­ப­கு­தி­யைச் சேர்ந்த சிங்­க­ள­வர்­கள் நிய­ம­னம் செய்­யப்­ப­டு­கின்­ற­னர் என்­பது.

இவை மூன்­றும் எமக்கு உணர்த்­து­வது என்­ன­வென்­றால், தீவி­ர­மான ஆயு­தப் போராட்­டம் ஒன்று 30 வருட காலத்­தைக் கடந்து வந்த பின்­ன­ரும்­கூட, இலங்­கை­யின் சுதந்­தி­ரத்தை அடுத்து வந்த 20 பத்­தாண்டு காலத்­தில் இருந்த நிலை­யில் இருந்து, தமி­ழர்­க­ளின் அர­சி­ய­லும் இலங்­கை­யின் அர­சி­ய­லும் முன்­ன­க­ர­வில்லை என்­ப­தைத்­தான்.

தனிச் சிங்­க­ளச் சட்­டம், திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள், அரச நிர்­வா­கத்­தில் சிங்­க­ள­வர்­க­ளுக்கே முன்­னு­ரி­மை­யும் வேலை­வாய்ப்­பும் என்­ப­வற்­றுக்கு எதி­ரா­கத்­தான் தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­தம் ஏந்தும் நிலை வந்­தது.

முன்­னாள் தலைமை அமைச்­சர் எஸ்.டபிள்.யூ.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்க உட்­பட சிங்­க­ளத் தலை­வர்­களுடன் தந்தை செல்வா செய்துகொண்ட ஒப்­பந்­தங்­கள் அனைத்­தும் சிங்­க­ளத் தலை­வர்­க­ளால் என்ன கொடுக்க முடிந்­ததோ அதைப் பெறு­வ­தற்­கா­ன­தா­கத்­தான் இருந்­தது (கடை­சி­யில் அதைக்­கூட அவர்­கள் கொடுக்­க­வில்லை என்­பது வர­லாறு).

கொழும்பு ஆட்­சி­யா­ளர்­க­ளின் இத்­த­கைய போக்­குக்கு எதி­ராக தந்தை செல்வா தலை­மை­யி­லான தமி­ழ­ர­சுக் கட்­சி­யி­னர் 1950 முதல் 1980 வரை­யான காலப் பகு­தி­யில் பல அற­வழி, அகிம்­சைப் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தார்­கள்.

இன்று, அதா­வது 30 ஆண்­டு­கால அறப் போராட்­டத்­தை­யும் மற்­றொரு 30 ஆண்­டு­கால ஆயு­தப் போராட்­டத்­தை­யும் தமி­ழர்­கள் நடத்­திய பின்­ன­ரும், அவர்­க­ளின் அர­சி­யல் ஆரம்­பப் புள்­ளி­யை­விட்டு நக­ரா­மல் அந்த இடத்­தி­லேயே சுத்­திக்­கொண்­டி­ ருப்­ப­தைப் பார்க்­கும்­போது, குண்­டுச் சட்­டிக்­குள் குதி­ரை­யோட்­டும் உதா­ர­ணம்­தான் தோன்­று­கின்­றது.

இவ்­வாறு தமி­ழர் தம் அர­சி­யல் தேக்க­ம­டைந்து நிற்­ப­தற்கு யார் கார­ணம்? எமது அர­சி­யல்­வா­தி­களா? சூழலா? திற­மை­யும் சாணக்­கி­ய­மு­மற்ற மக்­களா? சிந்­தித்து இதற்கு நாம் விடை கண்­டு­பி­டிக்­க­வில்லை என்­றால், இந்­தத் தேக்க நிலை­யில் இருந்து தமிழ் அர­சி­ய­லால் ஒரு­போ­தும் வெளியே வரவே முடி­யாது.

http://newuthayan.com/story/87513.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாண்டு காலமா எங்கட தமிழ் சட்டாம்பி அரசியல் வியாதிகள் தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலை தான் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். தங்கள் பொக்கட்டுக்கள் தான் அவர்களின் குறி. இவர்கள் ஒழுங்காக இராஜதந்திர மக்கள் நல சுயநலமில்லாத அரசியல் செய்திருந்தால்.. இத்தனை இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடி மடிய வேண்டியே வந்திருக்காது.

அப்படி ஆயுதம் தூக்கிய இளைஞர்களையும் கூட தங்களின் விரோதிகளாக.. பயங்கரவாதிகளாகக் காட்டியும் இவர்கள் பிழைப்பு நடத்தியவர்கள். இவர்களை எல்லாம் இன்னும் அரசியல் களத்தில் வைச்சுக் கொண்டு அவர்களுக்கு வாக்குப் போட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களும் இந்த அபாயகரமான.. கவலைக்கிடமான நிலை நோக்கி தமிழர் அரசியல் இலங்கைத் தீவில் வர முக்கியமான காரணமாகும்.

ஓர் நாளும்... தமிழர்களுக்கு உரிமை கொடுக்கனும் என்று சிங்களவன் சுயமாக சிந்திக்க மாட்டான். அதற்கான தேவையும் அவனுக்கில்லை. இந்த நிலையில்.. சிங்களவனுக்கு சம பல அரசியல் இராணுவ களத்தில் நின்ற விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதிகளாக காட்டி.. இதோ புலிகளின் அழிவில்.. வெட்டுறம் விழுத்திறம் என்டவையும்.. அது வாங்கிறத் தாறம் 13 வாங்கி தாறம்.. அதுக்கு மேல போய் 13+ வாங்கிறம்... என்றவையும்... இப்ப சிங்களவனின் காலடியில் பதவிக்கும் பவிசுக்கும் மண்ணுக்கும்.. மண்டியிட்டுக் கிடக்க வேண்டிய நிலை.

புலிகள் இருந்த போது காட்டிக்கொடுப்பாளர்களையும் துரோகிகளையும் நோக்கி வந்த சிங்களவன்.. இன்று அவர்களை பாராமுகமாக விட்டுள்ள நிலையில்.. இன்று அவர்களே அவனிடம் போய் மண்டியிட வேண்டிய நிலை.

இதில் சட்டாம்பி அரசியல் வாதிகள்.. சிங்களவனிடம் உரிமை பெற்றுத் தந்துவிடுவார்கள் என்பது வெறும் அரசியல் மாயையே தவிர வேறெதுவும் இல்லை.

இருந்த பெற வேண்டிய போர்க்குற்ற நியாயங்களைக் கூட சர்வதேச அரங்கில் சிங்கள எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தப் போய் நீர்த்துப் போகச் செய்ததை தவிர... புலிகள் இல்லாத கடந்த 9 ஆண்டுகளில்.. இவர்கள் சாதித்த அரசியல் என்பது எதுவுமில்லை. 

இதுகளை.. நம்பிக் கொண்டு.. இன்னும் தமிழர்கள் இருப்பார்களானால்.. அவர்களை விட அரசியல் தெரியாத முட்டாள் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது.

அன்றைய முட்டாள் சிங்களவன் இன்று தமிழர்களை முழு முட்டாள்களாக்கி விட்டிருக்கிறான்.. அரசியல் களத்தில். அதற்கு முக்கிய காரணம்.. காட்டிக்கொடுப்பு ஆயுத அரசியலும்.. சுயநல எஜமான விசுவாச சட்டாம்பி அரசியலும் தான் வேறு எதுவும் இல்லை. இவையே தமிழர்களின் அரசியல் சாபக்கேடுகள். tw_angry:

Edited by nedukkalapoovan

புதிய உதயன், புதிய சுதந்திரன் என்று எதற்கு இரண்டு பத்திரிகைகள். கூட்டமைப்புக்கு/ தமிழரசு கட்சிக்கு தாளம் (சிஞ்சிஞ்சா) போடுவது என்று முடிவெடுத்துவிட்டால் ஒரு பத்திரிகையே போதுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.