Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட விரும்பாதவனுக்கு நிலம் கோணல்

Featured Replies

ஆட விரும்பாதவனுக்கு நிலம் கோணல்

sas-6d6933033204063645cc14dadd1b24bb6043baea.jpg

 

இந்­தியா கொடுத்த வாக்கை மீறக் கூடாது என அண்­மையில் சம்­பந்தன் அழுத்­த­மாகக் கூறி­யி­ருந்தார் அல்­லவா? அது சூரி­ய­நா­ரா­ய­ணனின் தளம்பல் கருத்­து­க­ளுக்குப் பதி­லா­கவே அமைந்­தி­ருந்­தது. இதைத்தான் நான் சென்ற கட்­டு­ரையில் இப்­போ­தைக்கு 13 ஆம் ஷரத்­து­ வி­ட­யத்தில் ஓய்ந்து இருந்­த­போதும் அதை இப்­போதும் இந்­தியா உயிர்ப்­பி­லேயே வைத்­தி­ருக்­கி­றது. அதன் உயிர்ப்பை அழிக்க இட­ம­ளிக்­கா­தி­ருக்­கி­றது எனக் குறிப்­பிட்­டி­ருந்தேன்.

சம்­பந்­தனின் கருத்தை எதிர்த்து பேரி­ன­வா­தத்தின் பிதா மகன்­மாரில் ஒரு­வ­ரான குண­தாச அம­ர­சே­கர என்ன கூறு­கிறார் தெரி­யுமா? 13 ஆம் ஷரத்தை வலுப்­ப­டுத்தி இந்­தி­யாவை நாடி, சம்­பந்தன் ஈழத்தைப் பெற­மு­யன்றால் கடும் விளை­வு­களை எதிர்­கொள்­ள­நேரும் என்­கிறார்.

ஈழக்­கோ­ரிக்­கையும் பிரி­வி­னைக்­கோ­ரிக்­கையும் சம்­பந்­தனால் கைவி­டப்­பட்டு விட்­டது அவர் யாப்­புக்கு முர­ணற்ற சமஷ்­டி­யையே கோரு­கிறார். எனவே, குண­தாச அமரசேக­ரவின் கருத்து அர்த்­த­மற்­ற­தா­கி­றது. 13 ஆம் ஷரத்து ஒரு தரப்­புக்கே சாதகம். அதை இரத்­துச்­செய்ய வேண்டும் என அவர் கூறு­வதும் கூட சுத்த அபத்­த­மாகும். உண்­மையில் பேரின யாப்­புதான் ஒரு தரப்­புக்கு மட்­டுமே சாத­க­மாக இருக்­கி­றது. பேரி­ன­வா­தத்தால் கலா­நி­திக்கே இந்த நிலை என்றால் மற்­றோரின் நிலைதான் என்ன?

பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் சம்­ம­த­மின்றி சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மை­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்த முடி­யாது. அது யதார்த்­தமோ நடை­முறைச் சாத்­தி­யமோ அல்ல என ஒரு­முறை முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தாச கூறி­யி­ருந்தார். இதன் அர்த்தம் என்ன? 74 வீத­மாக இலங்­கையில் சிங்­கள மக்கள் வாழு­கையில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு மூலமும் சாதிக்­க­மு­டி­யாது. முக்­காற்­பங்கு ஆச­னங்கள் பாரா­ளு­மன்­றத்தில் அவர்­க­ளுக்கே இருப்­பதால் அங்கும் நிறை­வே­றாது என்­ப­தே­யாகும்.

அப்­ப­டி­யானால் என்ன செய்­வது? சிங்­களப் பெரும்­பான்மை அனு­ம­தித்­தால்தான் சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மைகள் கிடைக்கும் என்­பதா? சிங்­களப் பெரு­ம் பான்மை முடி­யாது என்றால் இல்லை என்­றா­கி­வி­டுமா? அதன் பிறகு பிறி­தொரு முறை அவர் அப்­பட்டா ஈழங் தெண்­டபே எல்லாம் தெனவா (எம்மால் ஈழம் தர முடி­யாது எல்லாம் தருவோம்) எனவும் கூறி­யி­ருந்தார். சிங்­கள மக்­களின் அனு­ம­தி­யின்றி சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மை­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்த முடி­யாது என்றால் அவர்கள் எப்­போது சம்­ம­திப்­பார்கள் எனும் கேள்வி எழு­கி­றது. சரி இதற்­கான சம்­ம­தத்­தை­யா­வது பெரும்­பான்மைச் சிங்­கள மக்­க­ளிடம் கோரி­யி­ருந்­தாரா இல்லை. சரி ஈழம் தர­மு­டி­யாது ஏனை­ய­வற்றைத் தருவோம் என்­றா­வது கூறி­னாரே? அதன்­படி அவர் சமஷ்­டி­யை­யா­வது உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தி­யி­ருக்­க­லாமே? இந்­தியா வழங்­கி­யி­ருந்த 13 ஆவது ஷரத்து பெய­ர­ள­வுக்­கான சமஷ்­டி­யா­கத்­தானே இருந்­தது. மத்­திய அரசு பேரின வடி­வத்­தோடு காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் அகற்­றப்­பட்டு தற்­கா­லிக வடக்கு, கிழக்கு இணைப்­புடன் 7 சிங்­கள மாகா­ணங்­க­ளுக்கும் பர­வ­லாக்கி உள்­ளூ­ராட்சி சபைகள் போன்­று­தானே ஜே.ஆர். அமைத்­தி­ருந்தார்.

 அவற்­றையே கடு­மை­யாக எதிர்த்த பிரே­ம­தாச அதற்குப் பின் புலி­க­ளுக்கு ஆயு­தங்­களும் பொருளும் வழங்­க­லாமா? புலிகள் தமி­ழீழக் கோரிக்­கையைக் கைவிட்ட நிலை­யிலா அவர் அதை வழங்­கினார். இந்­தி­யாவின் தலை­யீட்டை முற்­றிலும் அகற்­றி­வி­டவே அவர் இதைச் செய்­தி­ருக்­கிறார்.

இந்­தி­யா­வுடன் ஒப்­பந்தம் இருந்­ததால் இந்­தி­யா­வோடு போராட இலங்கை இரா­ணு­வத்தை ஈடு­ப­டுத்த முடி­யா­த­தா­லேயே பிரே­ம­தாச முகாம்­க­ளுக்குள் முடக்கி வைத்து புலி­களை ஏவி­விட்டார்.

இந்­திய இரா­ணுவம் சமா­தானப் படை­யாக இலங்­கைக்கு வந்­த­தா­லேயே கடு­மை­யாக மோதாமல் ஒப்­பந்­தப்­படி இலங்­கையின் கோரிக்­கைக்கு இணங்கி இடை நடுவில் போய்­விட்­டது. அதனால் வடக்கு, கிழக்கு முழுதும் இந்­திய சமா­தா­னப்­ப­டை­யிடம் இருந்த பிர­தே­சங்கள் முழு­வதும் புலி­களின் ஆதிக்­கத்­துக்­குட்­பட்­டு­விட்­டது.

புலி­க­ளோடு ஒப்­பந்தம் செய்­யும்­போது பெரும்­பான்மைச் சிங்­கள மக்­களின் சம்­ம­த­மின்றி சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மை­களை வழங்க முடி­யாது என்­பது பற்றி பிரே­ம­தாச சிந்­தித்­தாரா? ஈழம் தர­மு­டி­யாது எல்லாம் தருவேன் என்­றா­வது கூறி­யி­ருந்­தாரா இல்­லையே?

ஜே.ஆர்.இந்­திய இரா­ணு­வத்தை வர­வ­ழைத்து, புலி­க­ளோடு மோத­விட்டு எப்­படி எனது இரா­ஜ­தந்­திரம் அவர்­க­ளுக்­குள்­ளா­கவே மோத­விட்டு எனது இரா­ணு­வத்தைக் காத்­துக்­கொண்டேன் எனக் கூறி­யி­ருந்தார். அது­போ­லவே தான் இந்­தி­யா­வுடன் நேர­டி­யாக மோத முடி­யாது. எனத் தெரிந்து கொண்டு ஒப்­பந்தம் செய்து கொண்டு விளக்­கமும் கூறி­யி­ருந்தார்.

ஜேர்மன் படை இரண்டாம் உலக மகா­யுத்­தத்தின் போது திடீ­ரென ரஷ்­யாவை ஆக்­கி­ர­மித்­ததும் எந்த ஏற்­பா­டு­களும் அற்­றி­ருந்த ரஷ்யா சமா­தான ஒப்­பந்தம் செய்து கொண்டு பின்னர் ஜேர்­ம­னியைத் தோற்­க­டித்­தது என ஜே.ஆர். ஒரு நூலை வெளி­யிட்­டி­ருந்தார். அடல்ப் ஹிட்­லரை ஜோஸப் ஸ்டாலின் சமா­ளித்­தது பற்றி அந்­நூலில் அவர் விலா­வா­ரி­யாக விளக்­கி­யி­ருந்தார். அதன்­ப­டியே அவர் 13 ஆம் ஷரத்தின் இறுக்­கத்தை இளகச் செய்து கொண்டார்.

இந்­தியா ஆரம்­பத்தில் தற்­காப்­புக்­கான 100 தமிழ் போரா­ளி­க­ளுக்கு மட்­டுமே ஆயு­தங்­களும், பயிற்­சியும், பணமும் கொடுத்­தி­ருந்­தது. அதன் நோக்கம் ஈழம் பெற்றுக் கொடுப்­ப­தாக இருக்­க­வில்லை. வடக்கு கிழக்கு தமி­ழரின் தற்­காப்பை முதலில் உறுதி செய்து கொண்டு அடுத்த கட்­டத்தில் இணக்­கப்­பாட்டை எட்டிக் கொள்­வ­தா­கவே இருந்­தது. ஆக முழு­மை­யான சிங்­கள இரா­ணு­வத்தை எதிர்­கொள்­ளவே சிறு­தொகை ஆயுதப் போரா­ளிகள் கொரில்லா தாக்­குதல் முறையைக் கையாண்­டி­ருக்க வேண்டும். இதுவே சிங்­கள, தமிழ் ஆயுத மோத­லாக 30 வரு­ட­காலம் நிகழ்ந்­தது.

ஆக, ஜே.ஆர் சிக்­கலை வைத்­து­விட்­டுத்தான். பிரே­ம­தா­ச­விடம் கொடுத்­தி­ருந்தார். இதனால் அவர் தலை­யோடு போனது தலைப்­பா­கை­யோடு போன­து போல் தப்­பி­விட்டார். பிரே­ம­தா­சதான் பத­விமேல் அதிக விருப்பம் கொண்­டதன் கார­ண­மாக சிக்­கிக்­கொண்டார். இந்­தி­யாவை சாதா­ர­ண­மாக மதித்­ததும், புலி­களை அதி­க­மாக நம்­பி­யதும் அவர் விட்ட பிழை­க­ளாகும். இறு­தியில் அவ­ரோடு லலித் அத்து­லத்­மு­தலி, காமினி திஸா­நாயக்க, ரஞ்சன் விஜே­ரத்ன ஆகி­யோரும் பலி­யா­னார்கள்.

அதற்­குப்பின் காபந்து ஜனா­தி­ப­தி­யாக வந்த டி.பி.விஜே­துங்க பேசா­தி­ருக்க வேண்­டாமா? அவரும் கூட மேகப்­ப­தி­யன துரு ஈழந்­தென்னெ நே (இந்த உடல் இருக்­கின்­ற­வரை ஈழம் வழங்­க­மாட்டேன்) என்றார். அவ­ரது அந்த சொல்லால் புலி­களின் ஆத­ரவு சந்­தி­ரி­காவின் பக்கம் திரும்­பி­யது. அவர் காபந்து தற்­கா­லிக ஜனா­தி­ப­தி­யாக இருந்­ததால் பேசா­தி­ருந்­தி­ருக்­கலாம். தமிழ் வாக்­கு­களும் முஸ்லிம் வாக்­கு­களும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு நிச்­சயம். சிங்­கள வாக்கு வங்கி குறை­யக்­கூ­டாது என்­ப­தற்­காக அவர் பேசி­யி­ருக்­கலாம். புலி­க­ளுக்கு பிரே­ம­தாச ஆயு­தங்­களும் பணமும் வழங்­கு­கையில் பிர­த­ம­ராக இருந்த இவர் என்ன செய்தார்?

அரு­கி­லி­ருந்தோர் படு­கொ­லை­யுண்ட கார­ணத்­தால்தான் இவர் இந்த உடல் இருக்கும் வரை என்­றாரோ? சந்­தி­ரிகா ஜனா­தி­ப­தி­யா­னதும் பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் எனும் சட்ட மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வந்­தாரே அதை ஏன் ரணில் எரித்தார்? ரணில் பிர­த­ம­ரா­னதும் பாரா­ளு­மன்றம் புலி­க­ளோடு ஒஸ்­லோவில் உடன்­ப­டிக்கை செய்து வடக்கு, கிழக்கு நிர்­வா­கத்தின் உள்­கட்­ட­மைப்பு புலி­க­ளிடம் கைய­ளிக்க முனைந்­தது. ஜனா­தி­பதி சந்­தி­ரிகா ஏன் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்தார். அவை இரண்டும் ஈழ­மற்ற இரு வகைத்­தீர்­வு­க­ளாகும் என அவர்கள் நினைக்­க­வில்லை. உண்­மையில் இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான ஒரே வாய்ப்பு ஜே.ஆர் காலத்­தி­லேயே இருந்­தி­ருக்­கி­றது. காரணம் நாட்டு மக்கள் மத்­தி­யிலும் பாரா­ளு­மன்­றத்­திலும் ஆறில் ஐந்து பெரும்­பான்மை கொண்­டி­ருந்­த­தே­யாகும். 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் மக்­க­ளாணை பெற்ற தமிழ் ஜன­நா­ய­கங்­களைப் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றி­யதன் மூலமும் அந்த தலை­வர்கள் சட்ட பூர்வ தேர்­தலில் பெற்ற மக்­க­ளா­ணைக்கு விரோ­த­மாக அரசு செயற்­ப­டவும் தமிழ் ஆயுதப் போரா­ளிகள் உரு­வாக கார­ண­மாக அமைந்­தன.

ஆக, வடக்கு கிழக்கு முழு­வ­தையும் புலிகள் கைய­கப்­ப­டுத்­திக்­கொள்ள பிரே­ம­தாச அவர்­க­ளுக்குப் புரிந்த உத­வி­களே கார­ண­மா­யிற்று. இலங்­கையின் இறை­மை­யையும் சுய­நிர்­ண­யத்­தையும் காத்துக் கொள்­ளவே இவர் அவ்­வாறு உதவி புரிந்­த­தாகக் கூறி­ய­போதும் கூட அவற்றின் மூலம் புலிகள் தமது இறை­மை­யையும் சுய­நிர்­ண­யத்­தையும் ஈட்­டவும் செய்­யலாம் என்­ப­தையும் கூட எண்­ணிப்­பார்த்­தி­ருக்க வேண்டும். இதே நிலைப்­பாட்டை இந்­தி­யாவும் சிந்­தித்­தி­ருக்­க­வேண்டும். காரணம் புலிகள் வடக்கு கிழக்கு தமி­ழர்­களின் சுய­நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் முன்­வைத்தே போராட்­டத்தை முன் வைத்­தி­ருந்­த­தாகும்.

அது ஜே.ஆரின் ஒடுக்கு முறை­யினால் மக்கள் போராட்­ட­மாக மாறி தமி­ழக 7 கோடி தமி­ழர்­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருந்­தது. இலங்­கை­யிலும் கூட வடக்கு – கிழக்கு தமிழ்த் தலை­வர்கள் ஒதுக்­கப்­பட்டு அவர்­களின் இடங்­களை தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளிகள் பிடித்­துக்­கொண்­டார்கள். பின்னர் புலிகள் ஏனைய தமிழ் ஆயு­தக்­கு­ழுக்­களை அகற்றி வடக்­கு–­கி­ழக்கின் ஏக ஆட்­சியைப் பிடித்­துக்­கொண்­டனர்.

ரணில் வடக்கு, கிழக்கில் புலி­க­ளுக்கு அதி­காரக் கட்­ட­மைப்பு வழங்க ஒப்­பந்தம் செய்­கையில் யாப்­பி­லுள்ள பௌத்த மத சாசன முன்­னு­ரி­மைகள் பற்றி சிந்­தித்­தாரா? காரணம் புலிகள் அப்­போது வலி­மை­யோடு இருந்­த­தே­யாகும்.

ஆக இப்­போது வடக்கு, கிழக்குத் தமிழர் யுத்­தத்தில் புலி­களை இழந்த பின்­புதான் யாப்­பி­லுள்ள பௌத்­த­சா­சன முன்­னு­ரி­மைகள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. தலதா மாளிகை புலி­களால் தாக்­கப்­பட்­ட­போதும், அரந்­த­லா­வையில் 200க்கும் மேற்­பட்ட பிக்­குகள் படு­கொலை செய்­யப்­பட்­ட­தாலும் அச்­ச­முற்­றி­ருந்த பிக்­குகள் சந்­தி­ரி­காவின் பிராந்­திய ஒன்­றி­யத்­தையும் ரணிலின் உட்­கட்­ட­மைப்பு அதி­கா­ரத்­தையும் ஆட்­சே­பிக்­க­வில்லை. ஜே.ஆர். திம்புப் பேச்­சு­வார்த்­தையை தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு ஏற்­க­னவே நிகழ்த்­தி­யி­ருந்தார் அல்­லவா? இந்­தி­யா­வோடு ஒப்­பந்தம் செய்தார் அல்­லவா அவற்­றையும் கூட இன்று பௌத்த மத சாசன முன்­னு­ரி­மை­க­ளுக்­காகப் போராடும் பிக்­குகள் ஆட்­சே­பிக்­க­வில்லை. பிரே­ம­தாச புலி­க­ளுக்கு ஆயு­தமும் பணமும் கொடுத்­தாரே அதையும் கூட இன்று பௌத்த மத சாச­னத்­துக்­காகப் போராடும் பிக்­குகள் எதிர்க்­க­வில்லை. இப்­போது தமி­ழீ­ழத்தைக் கைவிட்ட, ஆயு­த­மற்ற, ஜன­நா­யக பிரி­வினை கோராத யாப்பு அனு­ம­தித்த சமஷ்டிக் கோரிக்­கைக்கு எதி­ரா­கவே பௌத்த மத சாசன முன்­னு­ரி­மை­களை முன்­னி­லைப்­ப­டுத்­து­கி­றார்கள் தலைமைப் பிக்­குகள். இப்­போது யாப்­பி­லி­ருந்து பௌத்த மத சாசன முன்­னு­ரி­மை­களை அகற்­றக்­கூ­டாது என மட்­டு­மல்ல தேர்தல் முறையைத் தவிர யாப்­பி­லி­ருந்து எதையும் மாற்­றக்­கூ­டாது எனவும் கூறி­விட்­டார்கள். அதா­வது சமஷ்டி அமை­யக்­கூ­டாது என்­பதே இதன் அர்த்­த­மாகும். பௌத்த மத சாசன முன்­னு­ரி­மைகள் இருக்­கின்ற யாப்பு தான் சமஷ்­டிக்கு முர­ணல்ல என உயர்­நீ­தி­மன்றம் கூறி­யி­ருக்­கி­றது. பிரி­வினை கோர­மாட்டேன் என சம்­பந்தன் செய்த சத்­தி­யத்­தையும் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. எனவே, பௌத்த மத சாசன முன்­னு­ரி­மை­களைத் தக்­க­வைத்துக் கொண்­டா­வது இவர்கள் சமஷ்­டியை ஏற்­றுக்­கொண்­டி­ருக்க வேண்டும்.

புலி­க­ளுக்கு பிராந்­தி­யத்தை வழங்க முயன்­றோரும் வடக்கு, கிழக்கில் நிர்­வாகக் கட்­ட­மைப்பை வழங்க முயன்­றோரும் சம்­பந்தன் விட­யத்தில் ஏன் இழுத்­த­டிக்­கி­றார்கள் என்­பதே கேள்­வி­யாகும்.

சமஷ்டி யாப்புக்கு முரணல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. சம்பந்தனும் பிரிவினை கோரமாட்டேன் என அங்கு சத்தியம் செய்துவிட்டார். பிறகென்ன? ஆயுதத்திற்கு வழங்கப்­பட்ட மதிப்பு ஜனநாயகத்திற்கு இல்லை­யென்பதுதானே.

பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்குகையில் யாப்பிலுள்ள பௌத்த மத சாசன முன்னுரிமைகளை எண்ணிப்பார்த்தாரா? சந்திரிகா புலிகளுக்கு பிராந்தியம் வழங்க நினைக்கை­யில் யாப்பி­லுள்ள பௌத்த மத சாசன முன்னுரிமைகள் பற்றி எண்ணிப்பார்த்தாரா?

சந்திரிகா உருவாக்கியிருந்த பிராந்திய ஒன்றியத்தை ரணில் எதிர்க்காதிருந்தால் அது நிறைவேறியிருக்கும். எனினும் அதனால் தமிழ் பிராந்தியத்தின் ஆட்சியுரிமை ஜனநாயக தமிழ் தலைவர்களுக்கன்றி தமிழ் ஆயுதப் போராளிகளுக்கே கிடைத்திருக்கும். அப்போது அதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கவில்லையா? அது போல் ஒஸ்லோவில் ரணில் புலிகளோடு ஒப்பந்தம் செய்து வடக்கு –கிழக்கின் உட்கட்டமைப்பை ஜனநாயக தமிழ் தலைவர்களுக்கா வழங்கினார். தமிழ் ஆயுதப் போராளிகளான புலிகளிடம்தானே வழங்கினார். அப்போது அதை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்ததா? இல்லையே.

இவ்விரு கட்சிகளும் இப்போது கூட்டரசு செய்துகொண்டு தமிழரின் ஆயுதப் போரும் ஓய்ந்த நிலையில் ஜனநாயக தமிழ்த் தலைவரான சம்பந்தனோடு ஒத்து­ழைக்காதிருக்கின்றன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-05#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.