Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறை - காங்கேசன்துறை பகுதிகளில் குண்டுச்சத்தம்

Featured Replies

காங்கேசன்துறை, பருத்தித்துறை கடற்பகுதிகளில் குண்டு சத்தங்கள்

- பாண்டியன் வுரநளனயலஇ 27 ஆயசஉh 2007 20:06

இன்றிரவு 7.45 மணி முதல் யாழ்.குடாவின் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதிகளில் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சங்கதி

செய்திகளை வழங்கி கொண்டு இருப்பவர் மின்னல் கணணிக்கு முன்னால் இருந்து இதை விட்டுவிட்டீங்கள் மின்னல்

காங்கேசன்துறை கடற்கரையில் துப்பாக்கி சந்தங்கள் மற்றும் வெடியோசைகள்

காங்கேசன்துறை பதித்தித்துறை கடற்கரைப் பகுதியில் வெடியோசைகள் மற்றும் துப்பாக்கிச் சந்தங்களும் கேட்டுள்ளவண்ணம் உள்ளதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 7.45 மணியளவில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறைப் பகுதியில் வெடியோசைகள் துப்பாக்கிச் சத்தங்கள் மற்றும் பரா வெளிச்சங்களும் செவிமடுக்கப்பட்டுள்ளளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

pathivu.com

  • தொடங்கியவர்

இச்செய்தி சங்கதியில் சுட்டது. அதுதான் போடாமல் விட்டு விட்டன். (அனா மட்டக்களப்பு கரும்புலித்தாக்குதல் செய்தி தமிழ் ஊடகங்களில் யாழ். களத்திலேயேதான் முதலில் வந்தது. அதுதான் கொஞ்சம் ஓவர் பில்டப் முதலில் கொடுத்தன். இதையெல்லாம் கண்டுக்க் கூடாது :lol: :P )

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குடாரப்புத் தரையிறக்கத்தின் ஏழாவது ஆண்டு நிறைவு பெற்று ஒருநாளில் இன்றைய சம்பவம் நடைபெறுகிறது.

இதனை வைத்து மின்னல் தனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுள்ளது. குதிரை ஓடுகிறது. ஓடிக்கொண்டே இருக்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதெண்டு....

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல்! குதிரையை விடாமல் விரட்டுங்கோ.

பருத்தித்துறை, காங்கேசன்யிலிருந்து அப்படியே பலாலி,கீரிமலையூடாக கூவிலில் கொஞ்சம் சார்ச்

பண்ணிக்கொண்டு மாதகல் திருவடிநிழல் பொன்னாலையென்டு போய் காரைநகரில் ஒரு மிதி மிதித்துப்

பாய்ஈஈஈஈஈந்து ஊர்காவற்துறையில் இளைப்பாறவேனும்.(போராளிகளுக்க

நாம் எல்லோரும் நினைத்ததைவிட மிகவிரைவிலேயே போராட்டம் ஒரு முடிவுக்கு வருமென நினைக்கிறேன். கட்டுநாயக்கா தாக்குதலைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் தாக்குதல், யாழில் தாக்குதல் என தொடர்ந்து அடி நடந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை, கரும்புலிகள் நாளுக்கு முன்னரே தமிழீழத்தின் பல பகுதிகள் மீட்கப்பட்டுவிடுமோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்

தமிழச்சி காங்கேசன்துறை, பருத்தித்துறைக் கடற்பரப்பில் நடைபெற்றது படையினரின் ஒத்திகை எண்டு தமிழ்நெட் எழுதியுள்ளது.

கரும்புலிகள் நாளிற்கு முன்பு பெரும்பகுதிகள் மீட்கப்பட்டால் மகிழ்ச்சிதானே! அதற்குரிய வாய்ப்புக்களும் உள்ளன.

போர் நிறுத்தம் தொடங்கியபோது விடுதலைப் போரை ஆரம்பபிக்க ஆண்டுகளை எண்ணினோம்.

தொடர்ந்து அடிகள் விழ, வாங்கிக் கொண்டு மாதங்களை எண்ணினோம்.

தலைவரின் மாவீரர் நாள் உரைக்குப் பி;ன்னர் வாரங்களை எண்ணினோம்.

வான்புலிகளின் தாக்குதலிற்குப் பின்னர் நாட்களை எண்ணுகின்றோம்

"சென்று போய் வென்று வாருங்கள்" என தனது வேங்கைகளிற்கு தலைவர் வழியைக் காட்டுவார்கள்.

தலைவர் காட்டும் வழியில் வேங்கைகள் பாயும் தலைவரின் திட்டத்தை அவரி;ன் படைகள் நிறைவேற்றி, தாயகத்தை மீட்டெடுக்கும்.

மின்னல், தலைவர் அவர்கள் நிதானமாகத் தான் ஒவ்வொரு தாக்குதலையும் செய்வார். ஆனால் அவர் ஒன்றைத் தொடங்கினால் விரைவில் முடித்துவிடுவார். கடந்தகால தாக்குதல்களை நினைவிற் கொண்டால் உங்களால் விளங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். முல்லைத்தீவு, ஆனையிறவு போன்றவற்றைக் கூறுகிறேன்.

அறுபதிற்கும் மேற்பட்ட எமது இளம் மாணவிகளை இழந்தபோதும், அவர் அவசரப்பட்டு எதுவும் செய்யவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்தத் தாக்குதலை அப்போதே செய்திருக்கமுடியும். ஆனால் அவர் அந்தத் தாக்குதலை இப்போது செய்ததானது, அவர் விரைவில் போரை முடிக்கப் போகிறார் என்றே அர்த்தம். இன்னொரு விடயம், அவர் காலதாமதித்தால், உலகநாடுகள் தலையிட்டு அவர்களை முடக்கப் பார்க்கலாம். சிலநேரங்களில், அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிலங்காவிற்கு பல ஆயுத உதவிகளை வழங்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அரசாங்கத்திற்கெதிராகப் போராடும் அமைப்புகளில் எமது அமைப்பு மட்டுமே வான்படையை வைத்திருக்கிறது. இதனை உலகநாடுகள் தங்களுக்குச் சார்பாகப் பார்க்கமாட்டாது.

இந்த வருடம் தமிழீழத்தை வென்றெடுப்பதென அவர் தனது மாவீரர் நாளுரையில் கூறிவிட்டார். இந்த வருடம் முடிவதற்குள் தமிழீழம் கிடைத்துவிடுமென நான் பலதடவைகள் யாழ்களத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். நான் இந்தத் தாக்குதலை ஆவணி மாதம்தான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவர் இப்போதே தொடங்கியதால்தான் கரும்புலிகள் நாளுக்குள் தமிழீழத்தின் பல பகுதிகள் எமது கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று கூறினேன். பொறுத்திருந்து பார்ப்போம். எம்மால் எதுவும் உறுதியாகக் கூறமுடியாது. ஏனென்றால் தலைவர் அவர்கள் தனது போர் வியூகங்களை எப்படி அமைப்பார் என்று யாருக்குமே தெரியாது. :blink:

என்ட குஞ்சு மணிகள் நீர்மூழ்கி கூட செய்திருப்பீனம். தலைவரின் சிறு துறும்புகள் ..ஒரு காட்லிக்கல்லூரி மாணவன் 4 அதி விசேட சித்திகள் பெற்றவர் 85 களில்...பேராதனை பல்கலைக்களக பொறியியல் துறைக்கு எடுபட்டு வந்தவர். 3 வருடம் படி படி என படித்து வெஸ் கிழாஸ் தான். எலெக்ரோனிக்ஸ் என்றா அவரிட்டதாம் பலர் போவார்கள் டபுட் கிளியர் பண்ண.

ஒரு நாள் மாகாவலி கங்கை ஆற்றில் பாய்ந்து தற்கொலை என்று எழிதி போஸ்டரா அடித்துப்போட்டு செத்துப்போனார். அதனால் தமிழ மாணவர்கள் கவலையில் மிதந்திருக்கும் போது கடற்படை பெரிய தளபதி கோல்பேஸ் ரோட்டில தற்கொலைக்தாக்குதலினால் மண்டையைப்போட்டு விட்டார் என்று ஒரு செய்தி....நாங்க அதன் பின்பு வாயே துறக்கலிங்க....

அபபடி ஒரு கெட்டிக்காரர் எல்லாம் இப்படி தியாக மாகி கட்டப்பட்ட விடுதலை இயக்கம் ஒரு போதும் தோற்காது. இன்றைக்கு என்னும் மேலே வழர்ந்து தான் வந்திருக்கு ஒழிய கீழே போகவில்லை.

தலைவருக்கு தெரியும் தானென்ன செய்யிறார். எங்களுக்குத்தான் பிறேன்ய்ன் டமேஜ்.

Edited by puli_pasarai

நல்லா அடிவாங்க பயிற்சி எடுங்கோ வாழ்த்துக்கள்

எனக்கு அவுஸ்திரேலியாவில அடி விளப்போறதை சொல்லுகிறீரோ மறை முகமாக. அடியுங்கோ என் இறுதி மூச்சு இருக்குமட்டும் தமிழீழ்த்துக்குதான் என் ஆதரவு....

தமிழீழத்தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'நிலவரம்" நிகழ்ச்சியில்இ இனிநடக்கவேண்டியவை பற்றி மிக விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாகஇ இளந்திரையன் அண்ணாவின் கடைசி வாக்கியமானஇ "போர்வலுச்சமநிலை மற்றப்பக்கம் மேலெழுந்து காணப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" எனக் குறிப்பிட்டதைக் கூறலாம். இந்நிகழ்வு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் பதியப்பட்ட ஒன்றாகும். இந்நிகழ்வைக் கூர்ந்து கேட்டால் பல விடயங்கள் உங்களுக்கு வெளிச்சமாகும். யோகி அண்ணா மற்றும் இளந்திரையன் அண்ணா ஆகிய இருவரும் மிகத்தெளிவாகஇ பல முக்கிய செய்திகளை எமக்குத் தந்திருக்கிறார்கள். இருவரும் கூறும் ஒவ்வொரு வாக்கியத்திலும் செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி தமிழச்சி அவர்களே,

நீங்கள் குறிப்பிட்ட நிலவரம் நிகழ்ச்சி இன்றுதான் கனடா ரீ.வி.ஐ இல் ஒலிபரப்பானது அங்கு முக்கியமாக வலியுறுத்தப்பட்ட விடயம் புலம் பெயர் தமிழர்கள் ஒற்றுமையுடன் ஓங்கி ஒலிக்க வேண்டிய குரல் " தமிழீழத்தின் அங்கீகரிப்பு". என்பதுதான். நமக்கான பணியை அவர்கள் சொல்லி விட்டார்கள். இனி இங்கு கலங்கிப்போய் இருக்கும் எம் ஈழத்து சோதரர்களை தெளிய வைத்து ஒருங்கிணைக்க வேண்டும்.

வெற்றிகளில் மகிழ்வது மட்டுமல்ல அதைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டுமானால் போராடியே தான் ஆகவேண்டும்!.

புலம்பெயர்ந்த நாங்கள் செய்ய வேண்டியது அதுதான். இங்கிருந்து போராட வேண்டும் எங்கள் உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.