Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் மரித்த ஒரு சிங்களக் கொமாண்டோவின் தம்பி

Featured Replies

http://indikadefonseka.com/my-brother-jani-a-portrait-of-a-real-life-jason-bourne/

போரில் மரித்த ஒரு சிங்களக் கொமாண்டோவின் தம்பி, மரித்த கொமாண்டோ சார்ந்து 2013ம் ஆண்டில் எழுதிய இந்தப் பதிவினை இன்று படிக்க நேர்ந்தது. எழுதியவர் இதயசுத்தியாக எழுதியிருக்கிறார் என்பதையும் அவரால் மனிதம் சார்ந்து எழுப்பப்படும் ஆசைகள் உண்மையானவை என்றும் என்னால் நம்ப முடிகிறது. அத்தோடு அவரது எழுத்து வளம் அழகாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. இருப்பினும், ஒரு தமிழனாக என்னால் இந்தக் கொமாண்டோவின் வீரத்தைக் கொண்டாட முடியவில்லை. ஆனால் சில சமாந்தரங்களை உணர முடிகிறது. இந்தப் பதிவு அது சார்ந்தது.

மேலே செல்வதற்கு முன்னர், மேற்படி இணைப்பில் கடந்த ஐந்தாண்டுகளாக இடப்பட்டுள்ள பின்னூட்டங்களைப் படிக்கையில் அங்கு ஒரு பொழுதுபோக்குச் சுவாரசியமும் கைப்படுகிறது. இறந்த கொமாண்டோவின் முன்னை நாள் காதலி, அவரை ரசித்த அவரின் பதின் வயதுத் தோளி முதலானோரதும் அவரது வாழ்வில் இடம்பெற்றிருந்த இன்னோரன்ன இதரபாத்திரங்களும் பதிவு சார்ந்து தங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டிருப்பமை ஒரு திரைப்படம் பார்த்த உணர்வைத் தருகிறது.

சமாந்தரங்கள்

எமது எதிரி பற்றிய வர்ணனை என்றபோதும், இந்தக் கதையில் எமது நாயகர்கள் பலரை இலகுவில் பொருத்திப் பொதுமை காண முடிகிறது. நான் மிகச் சிறுவனாக, காரணகாரியம் தெரியாது, பிரமித்துப் பார்த்த முதல் கதாநாயகன் கேடிள்ஸ். மேற்படி இணைப்பில் உள்ள யானி என்பதற்குப் பதில் கேடிள்ஸ் என்று போட்டு, நுகேகொடவிற்குப் பதிலாகத் தென்மராட்சி என்று மாற்றிப் படிப்பின், சில தவிர்க்கக் கூடிய வித்தியாசங்களிற்கு அப்பால் கதை அப்படியே பொருந்திவரும்.

பாலுமகேந்திரா படத்தில் வரும் நாயகிகள் போன்ற அக்காக்கள், கேடிள்ஸ் மோட்டார் சைக்கிளிள் செல்கையில் நளவெண்பா சித்தரித்த காப்புக் கழன்று விழும் நிலையில் நின்றதை நான் பார்த்திருக்கிறேன். கேடிள்ஸ் விபத்திற்குள்ளானதாய் வந்த வதந்தியால் அலரி விதை உண்ட அக்காவை நான் அறிந்திருந்தேன். ஏறத்தாள யானி நுகேகொடவில் நடத்திய ஊர்உலாவினை அதே காலப்பகுதியில் தென்மராட்சயில் கேடிள்ஸ் நிகழ்த்திக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஊரிற்கு ஒவ்வொரு நாயகர்கள். வரியுடை வந்து இயக்கம் நிறுவனமானவதற்கு முன்னான சறமும் கோடன் சேட்டும், ஏசியா சைக்கிளும் உரப்பையிற்குள் ஆயுதமுமான காலம் பதின் வயதுப் பெண்களிற்கு ஒரு வகைக் கிளர்ச்சியினையும் பதின்ம பையங்களிற்கு ஆயுதம் தூக்க விரும்பிய கிழர்ச்சியினையும் தந்தது மறுப்பதற்கில்லை. 

தோமியன் பெருமை சிங்களவர் கட்டுரை முழுவதும் பரந்து கிடக்கிறது. “இந்துவின் சொந்தம்” என்ற வரி ஆரம்பகால வீரவணக்கப் போஸ்ட்டர்களில் பார்த்தபோது உணரப்பட்ட சற்று அதிகரித்த பெருமை மறுப்பதற்கில்லை. றாதா அண்ணா இறந்த காலப்பகுதியில், யாழ் இந்துவின் பிறேயர் கோலிற்கு அருகில் இருந்து, இற்றைவரை வீரமரணம் எய்திய லெப்.கேணல் எண்ணிக்கையில் இந்துவின் சொந்தங்கள் அதிகம் என்ற பெருமை பேசிய நண்பரை நினைவிருக்கிறது. 

யானியின் சாகசங்கள் செவிவழிக் கதைகளாக மட்டும் எழுத்தாளரால் பதியப்பட்டிருக்கிறது. எங்கள் நாயகர்கள் எங்கள் கண் முன்னே எண்பதுகளில் நிகழ்த்திய சாகசங்கள் கொஞ்சமா நஞ்சமா. வங்கி வாகனம் என எல்லோராலும் அறியப்பட்ட கேடிள்ஸ் அண்ணையின் வாகனம் இராணுவ ட்றக் முன்னால் அலாதியாகத் திருப்பியோட்டப்பட்டதை எத்தனை கிழவிகள் வெற்றிலை உரலை உணர்ச்சிவசப்பட்டு இடித்தபடி பேசி நான் பார்த்திருக்கிறேன். 

எத்தனை இலட்சம் சாதனைகள் நிகழ்ந்தபின் எண்பதுகளில் கேடிள்ஸ்; வாகனம் ஓடியதைப் பேசுகிறானே என யாரேனும் நினைக்கக் கூடும். காரணம் உள்ளது. இயக்கம் நிறுவனமாவதற்கு முன்னால் மக்களும் இயக்கமும் இருந்த மனநிலையில் தான் எதிரி பக்கம் இருந்து மேற்படி பதிவு வரையப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் மனிதம் என்ற பொதுமை சார்ந்து சிங்களக் கொமாண்டோவின் தம்பியார் நீட்டும் கரம் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

புதுமை

போரில் ஈரணிகளிலும் நின்ற அனைத்து வீரர்கள் சார்ந்தும் மரித்த பொதுமக்கள் சார்ந்தும் தன்னால் ஒரு சகோதரத்துவத்தை உள்ளுர முற்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது என்று சிங்கள எழுத்தாளர் சொன்ன வரி புதுமையாக இருக்கிறது. புத்தன் ஒருவேளை படிப்படியாய் இலக்கைக்கு மீள்கிறானோ என்ற நம்பிக்கையினை வளர்க்கிறது. 

என் அண்ணன் இழைத்த இன்னல்களிற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன். அதற்கான உரிமை என்னிடம் இல்லை. ஆனால், உங்கள் மீது அந்த இன்னலை இழைப்பதற்காக அவர் கொடுத்த விலை அபரிமிதம் என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் என அவர் பதிந்திருப்பது புதுமையாய் இருக்கிறது. நம்பும் வகை இருக்கிறது. எங்களிற்கும் இருந்தது என்று ஒத்துக்கொள்ள முடிகிறது.

கருத்து

மேற்படி கட்டுரையில் போரின் பின் முன்வைக்கப்படும் பட்டவர்த்தமான பொது அறிவு, 2009 தையில் கிளிநொச்சி விழுந்ததைத் தொடர்ந்து பல தமிழராலும் முன்வைக்கப்பட்டுத் தான் வருகிறது. இருப்பினும் ஒன்று நடந்ததன் பின்னர் அது சார்ந்து பிறக்கும் அறிவு, குறித்த விடயம் நடப்பதற்கு முன்னால் அத்தனை இலகுவில் சாத்தியப்படுவதில்லை. அறுபது வருடங்களின் முன்னர் அந்தப் பொது அறிவு இப்போதிருப்பது போன்று பட்டவர்த்தனமாய் வெளிப்பட்டிருப்பின் ஒரு வேளை யானியை நாங்களும் கேடிள்சை அவர்களும் விளையாட்டு மைதானத்தில் சேர்ந்து கொண்டாடியிருக்கும் சாத்தியம் கைப்பட்டிருக்கலாம். ஆனால் தசாப்தங்களாக அந்தத் தீவு பொது அறிவினைத் தொலைத்திருந்தது.

தொலைத்த பொது அறிவினைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு ஒரு விலை எப்போதும் இருக்கும். அந்தவiயில் இன்றைக்கு கட்டுரையில் பொது அறிவினைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி கருத்துக் கூறினும், அந்தத் தெளிவினை கண்டடைவதற்கு நாம் கொடுத்த ஒவ்வொரு சதமும் பேரம்பேசமுடியா விலையாக இருந்ததை மறுத்துவிடமுடியாது. இன்றைக்கு ஒருவேளை மேற்படி கட்டுரை தரக்கூடிய தெளிவினை வைத்து, இவ்விடயம் எப்போதும் இத்தனை இலகுவானதாய் இருந்ததாய் எவரும் நம்பிவிடக்கூடாது. இன்றைக்குக் கூட ஒட்டு மொத்த தேசமும் அந்தப் பொது அறிவினைக் கண்டடைந்துவிடவில்லை. சுவிற்சலாந்தில் கறுத்தச் சட்டையுடன் அடையாள அட்டை வளங்கும் இளையோரைப் பார்க்கிறோம். பிக்குகளைப் பார்க்கிறோம். தொலைத்த பொது அறிவினைத் தேடுதலும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது...

ஒரு வேளை மேற்படி கட்டுரைகள் போன்றன, பொது அறிவினைக் கண்டடையும் விலையினைச் சற்றுக் குறைக்கக் கூடும், பொது அறிவு மேலும் சிலரிற்குக் கிடைக்கும்வகை செய்யக்கூடும். செய்யும் என்று நம்புவோம்.  

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் இணைத்த கட்டுரையை படிக்கவில்லை.

இலங்கைத் தீவில் தொலைந்துபோன பொது அறிவு என்பது நம்பிக்கையீனம் மிகுந்த இனங்கள் தங்களுக்குள் மோதுப்பட்டு பல ஆளுமைகளை இழக்கக் காரணமானது என்று அர்த்தம்கொள்கின்றேன். பிற இனங்களை அடக்கினால்தான் சிங்கள இனம் இலங்கைத் தீவில் நிலைத்திருக்கும் என்ற கருதுகோள் இருக்குமட்டும் பொது அறிவு திரும்பக்கிடைக்காது. இன்றைய சந்தைப்பொருளாதாரமும், சமூக வலைத்தளப் பாவனையும் ஜனநாயகத்தை செழுமையாக்கும் என்ற ஒரு தோற்றப்பாடு இருந்தாலும் அடிப்படையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை தோற்றுவிக்காது. தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் எப்போதுமே ஒருவரை ஒருவர் சந்தேகக்கண்ணோடு பார்த்துக்கொண்டுதான் இருப்பர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.