Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடு பிடிக்கும் பொதுவேட்பாளர் விவகாரம்

Featured Replies

சூடு பிடிக்கும் பொதுவேட்பாளர் விவகாரம்

2-35750a3b96c383e5d2d21f139d40dd4b6b2863f0.jpg

 

என்.கண்ணன்

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறுத்­தப்­படும் வேட்­பாளர் தொடர்­பான விவா­தங்கள் இப்­போதே சூடு­பி­டிக்கத் தொடங்கி விட்­டன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாச, கோத்­தா­பய ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ, என போட்­டி­யிடக் கூடிய வேட்­பா­ளர்கள் என்று எதிர்வு கூறப்­ப­டு­ப­வர்­களின் பெயர்­களின் பட்­டி­யலின் நீளம் அதி­க­ரித்துக் கொண்டு செல்­கி­றது.

இந்த வரி­சையில் இப்­போது புதிய பெயர் ஒன்று அடி­ப­டு­கி­றது. அவர் ஒன்றும் அர­சி­யல்­வா­தி­யல்ல. ஆனால், முன்­னணி அர­சி­யல்­வா­தி­களை விடவும் பிர­ப­ல­மா­னவர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வ­ரான குமார் சங்­கக்­கா­ரவே அவர். அவரை ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றக்கும் முயற்­சிகள் நடப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யா­கின்­றன.

கூட்டு எதி­ரணி கோத்­தா­பய ராஜபக் ஷவை கள­மி­றக்­கினால், அவரை தோற்­க­டிப்­ப­தற்­கா­கவே, குமார் சங்­கக்­கா­ரவை பொது­வேட்­பா­ள­ராக்கும் முயற்­சிகள் நடப்­ப­தாகத் தெரி­கி­றது,

குமார் சங்­கக்­கா­ரவின் ஒப்­பு­தலைப் பெறா­ம­லேயே, இது­பற்­றிய ஊகங்கள் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­த­நி­லையில் குமார் சங்­கக்­கார அல்­லது அவரைப் போன்ற ஒரு­வரை - பொது­வேட்­பா­ள­ராக தெரிவு செய்­வ­தற்­கான முயற்­சிகள் நடப்­பது ஏன் என்ற கேள்வி பல­ருக்கும் உள்­ளது.

அர­சியல் களத்தில் பல­மான தலை­வர்கள் பலர் இருந்­தாலும், அதற்கு வெளியே இருந்து வேட்­பாளர் ஒரு­வரைக் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இது தான் முக்­கி­ய­மா­னது.

இதனை முள்ளை முள்ளால் அகற்­று­கின்ற ஒரு வைத்­தியம் என்று கூடத் கூறலாம்.

கோத்­தா­பய ராஜபக் ஷவை கூட்டு எதி­ரணி கள­மி­றக்­கினால் அவரை சுல­ப­மாகத் தோற்­க­டித்து விடுவோம். அவர் ஒரு, பல­வீ­ன­மான வேட்­பாளர் என்ற கருத்தை ஐ.தே.கவின் தலை­வர்கள் மாத்­தி­ர­மன்றி ஜே.வி.பியின் தலை­வர்­களும் வெளி­யிட்­டி­ருக்­கி­றார்கள்.

அதற்கு முக்­கி­ய­மான காரணம், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு சிங்­கள பௌத்த மக்­க­ளிடம் காணப்­ப­டு­கின்ற செல்­வாக்கு, சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழ், முஸ்­லிம்­க­ளிடம் கிடை­யாது. இன்னும் விரி­வாகச் சொல்­வ­தானால், சிறு­பான்­மை­யின மக்கள் மத்­தியில் கோத்­தா­பய ராஜபக் ஷ அச்­சத்தை ஊட்­டு­கின்ற ஒரு­வ­ரா­கவே இன்­னமும் இருக்­கிறார்.

ஜனா­தி­பதித் தேர்­தலைப் பொறுத்­த­வ­ரையில், சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் முக்­கி­ய­மா­னவை. அந்த வாக்­குகள் தான் வெற்றி தோல்­வியைத் தீர்­மா­னிக்கக் கூடி­யன.

2005ஆம் ஆண்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தோல்­வி­ய­டைந்­த­தற்கும், 2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்­ற­தற்கும், தமி­ழர்­களின் வாக்­குகள் முக்­கிய கார­ண­மாக இருந்­தன.

கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு, தமிழ், முஸ்லிம் மக்­க­ளிடம் ஆத­ரவு கிடைக்­காது என்­பதால் தான், அவரை இல­கு­வாக வீழ்த்­தப்­படக் கூடிய வேட்­பாளர் என்று ஐ.தே.க., ஜே.வி.பி. போன்ற கட்­சிகள் அடை­யா­ளப்­ப­டுத்த முனை­கின்­றன.

இந்தப் பல­வீ­னத்­தையும் கவ­னத்தில் கொண்டு தான், கூட்டு எதி­ரணி தனது வேட்­பா­ளரைத் தெரிவு செய்யும். கோத்­தா­பய ராஜ பக் ஷ ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக தன்னைத் தயார்­ப­டுத்தி வந்­தாலும் இன்­னமும் அது அதி­கா­ர­பூர்­வ­மாக உறு­தி­யா­க­வில்லை.

மர­பு­சாரா அர­சி­யல்­வா­தி­க­ளையே மக்கள் இப்­போது விரும்­பு­கி­றார்கள் என்று கோத்­தா­பய ராஜபக் ஷ கூறு­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவும் அதனை , நம்­பினால், கோத்­தா­பய ராஜபக் ஷ கள­மி­றங்­கு­வது சுல­ப­மாகி விடும்.

கூட்டு எதி­ர­ணிக்குள் பல அர­சியல் தலைகள் இருந்­தாலும், அவர்கள் இன்­னமும் ஓர் அர­சி­யல்­வா­தி­யாக இல்­லாத கோத்­தா­பய ராஜபக் ஷவையே நம்­பி­யி­ருக்­கி­றார்கள்.

கோத்­தா­பய ராஜபக் ஷவை விட்டால் வேறு பொருத்­த­மா­னவர் யாரும் தமது பக்கம் இல்லை என்று கூறு­வ­தற்குக் கூட, கூட்டு எதி­ர­ணியில் உள்ள மூத்த அர­சி­யல்­வா­தி­களே வெட்­கப்­ப­ட­வில்லை.

தம்மில் உள்ள யாராலும் ஜனா­தி­பதி பந்­த­யத்தில் ஓட முடி­யாது என்று தீர்­மா­னித்துத் தான், அவர்கள் வெளியே இருந்து கோத்­தா­பய ராஜபக் ஷ என்ற நட்­சத்­திர வேட்­பா­ளரைக் கொண்டு வர முனை­கி­றார்கள்.

அவ­ருக்கு சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­குகள் கிடைக்­காது என்று தெரிந்­தி­ருந்­தாலும், அவரை முன்­னி­றுத்த முயற்­சிக்­கி­றார்கள்.

சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­களை மட்டும் வைத்துக் கொண்டு அவரை வெற்­றி­பெற வைக்க வேண்­டு­மானால், அதற்­காக முகம் சுழிக்க வைக்கும் உத்­தி­களை அவர்கள் கையா­ளவும் கூடும்.

அதே­வேளை, கூட்டு எதி­ரணி சார்பில் ஒரு மர­பு­சாரா அர­சி­யல்­வா­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ கள­மி­றக்­கப்­பட்டால், அவரைத் தோற்­க­டிப்­ப­தற்கு, சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களை ஒருங்­கி­ணைப்­பது முக்­கியம்.

– ஐ.தே.க. தனி­யா­கவும், ஜே.வி.பி. தனி­யா­கவும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தனி­யா­கவும் போட்­டி­யிட்டால், அதனைச் சாதிக்க முடி­யாது. சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களும், கோத்­தா­வுக்கு எதி­ரான வாக்­கு­களும் பிரிந்­துபோய் விடும். அது கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றியை உறு­தி­ப­டுத்தும்.

ஐ.தே.க.வின் சார்பில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ, சஜித் பிரே­ம­தா­சவோ கள­மி­றக்­கப்­பட்டால் அதனை ஜே.வி.பி. ஏற்­காது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் விரும்­பாது. மீண்டும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­காக பிர­சாரம் செய்ய ஜே.வி.பி.யோ, ஐ.தே.க.வோ தயா­ரில்லை.

எனவே, கட்­சி­க­ளுக்குள் இருந்து ஒரு பொது­வேட்­பா­ளரை தெரிவு செய்­வது முதல் சிக்கல். அவ்­வாறு ஒருவர் தெரிவு செய்­யப்­பட்­டாலும் கூட அவர், தமிழ், முஸ்லிம் மக்­களால் ஆத­ரிக்­கப்­படும் ஒரு­வ­ராக இருப்பார் என்றும் எதிர்­பார்க்க முடி­யாது.மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க போன்­ற­வர்கள், தமிழ்­மக்­களின் கடு­மை­யான அதி­ருப்­தியை சம்­பா­தித்­தி­ருக்­கி­றார்கள். ஏனென்றால் அவர்கள், அளித்­தி­ருந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. சஜித் பிரே­ம­தா­சவும் கூட சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு நெருக்­க­மா­னவர் அல்ல. தமிழ் மக்­களின் உரி­மைகள் விட­யத்தில்- அதற்­கான போராட்­டங்கள் தொடர்­பான சஜித் பிரே­ம­தாச வெளி­யிட்ட கருத்­துக்கள் தமிழ் மக்­க­ளுக்கு எரிச்­ச­லையும் கோபத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யது. 

எனவே, சஜித் பிரே­ம­தா­சவை பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தி­னாலும் கூட, சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­குகள் அவ­ருக்கு கிடைக்கும் என்று கூற முடி­யாது.

இந்த தேர்­தலில் இன்­னொரு சிக்­கலும் உள்­ளது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த எதிர்ப்பு அலை தமிழ் மக்­க­ளிடம் தீவி­ர­மாக இருந்­தது. அவரைத் தோற்­க­டிக்க முடியும் என்ற நம்­பிக்கை தமிழ் மக்­க­ளிடம் இருக்­க­வில்லை. ஆனாலும், அவ­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்து, பழி தீர்க்க வேண்டும் என்ற உணர்வு இருந்­தது.

அது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சாத­க­மாக இருந்­தது. மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்த வாக்­கு­று­தி­களும், மஹிந்­த­வுக்கு எதி­ரான உணர்­வு­களும், அவ­ருக்குத் தமிழ் மக்­களின் வாக்­குகள் பெரு­ம­ளவில் கிடைப்­ப­தற்குக் கார­ண­மா­கி­யது.

ஆனால் வெற்றி பெற்ற பின்னர் அவர் அந்த நம்­பிக்­கையைத் தக்க வைக்கத் தவ­றி­யுள்ளார். தாம் எதிர்­பார்த்து வாக்­க­ளித்து வெற்றி பெற வைத்த மைத்­தி­ரி­பால சிறி­சேன தமக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றத் தவறி விட்டார் என்ற ஏமாற்றம் தமிழ் மக்­க­ளிடம் இருக்­கி­றது.

அது­மாத்­தி­ர­மன்றி, ஜனா­தி­ப­தி­யாகும் எவரும், தமது வாக்­கு­களை பெற்றுக் கொண்ட பின்னர் ஏமாற்றி விடு­வார்கள் என்ற உணர்­வையும் தமிழ் மக்­க­ளிடம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இது, ஜனா­தி­பதித் தேர்தல் மீதான தமிழ்­மக்­களின் ஆர்­வத்தைக் குறைக்கும். தமிழ் மக்­களின் வாக்­க­ளிப்பு வீதம் குறையும் போது, அது கூட்டு எதி­ர­ணிக்குச் சாத­க­மாக மாறும்.

குறைந்­த­ளவு தமிழ் மக்கள் வாக்­க­ளிக்கும் போது, அவர்கள் வாக்­க­ளிப்பில் இருந்து ஒதுங்கும் போது, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கோ, அல்­லது கூட்டு எதி­ரணி நிறுத்­தக்­கூ­டிய வேறு வேட்­பா­ள­ருக்கோ வெற்றி வாய்ப்பை அதி­கப்­ப­டுத்தும்.

எனவே, வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ளரை நிறுத்தும் போது, அவர் தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் ஈர்க்கக் கூடி­ய­வ­ராக- அவர்­களின் வாக்­கு­க­ளையும் பெறக்­கூ­டி­ய­வ­ராக இருக்க வேண்டும்.

தற்­போது அர­சியல் களத்தில் உள்ள எந்­த­வொ­ரு­வரும், தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.

இந்த நிலையில் தான், அர­சியல் கட்­சி­க­ளுக்கு வெளியே இருந்து- மர­பு­சாரா அர­சி­யல்­வாதி ஒரு­வரை உரு­வாக்க வேண்­டிய தேவை, பொது வேட்­பா­ளரைத் தேடும் அணி­யி­ன­ருக்கு எழுந்­துள்­ளது.

பொது வேட்­பா­ளரை நிறுத்தும் முடிவில் உள்ள தரப்­பு­களின் பின்­ன­ணியில் மேற்­கு­லக நாடு ஒன்றின் தூதுவர் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. கூட்டு எதி­ரணி கோத்­தா­பய ராஜபக் ஷவை நிறுத்­தி­னாலும் சரி, வேறொ­ரு­வரை நிறுத்­தி­னாலும் சரி அவரைத் தோற்­க­டிக்க- மேற்­கு­லக நாடுகள் முயற்­சிக்கும்.

அதற்­கா­கவே பொது­வேட்­பா­ளரை நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை ஒருங்­கி­ணைக்க நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இது ஆரம்­ப­கட்ட முயற்சி தான். ஆனால் கடைசி வரை தொடரக் கூடும்.

பொதுவேட்பாளரை நிறுத்தும் விடயத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க. போன்றன இப்போதைக்கு, முழு ஈடுபாட்டைக் காண்பிக்காவிடினும், காலப்போக்கில் நிலைமைகளை உணர்ந்து படியிறங்கும் நிலை ஏற்படலாம்.

எனவே தான் அதனைப் பற்றி கவலைப்படாமல் பொதுவேட்பாளரை தெரிவு செய்யும் முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசியலுக்கு அப்பால் எல்லா மக்கள் மத்தியிலும் செல்வாக்கைச் செலுத்தக் கூடியது விளையாட்டு. விளையாட்டுத் துறையில் பிரகாசித்த- சங்கக்காரவுக்கு தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு இல்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் பேராதரவு உள்ளது.

அதனை முன்னிறுத்தியே அவருக்கு வலை வீசப்படுகிறது. இந்த வலையில் அவர் விழுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆனால் ஒன்று, பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் என்பது இரண்டு மரபுசார் அரசியல்வாதிகளுக்கிடையிலான போட்டியாக இருக்காது போலவே தென்படுகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-05-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.