Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படையினரிடம் சரணடைந்தோரின், பெயர் விபரங்களை வெளியிடத் தயார்…

Featured Replies

படையினரிடம் சரணடைந்தோரின், பெயர் விபரங்களை வெளியிடத் தயார்…

 

 

saliya-peris.jpg?resize=651%2C430

இறுதிக்கட்ட யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்தோரின் விபரங்களை வெளியிட தயாரென காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள், முல்லைத்தீவில் இன்று (02.06.17) இடம்பெற்றன.  இவற்றை புறக்கணித்து மக்கள் போராடியதோடு, சரணடைந்தோரின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறும் அதன் பின்னர் தாம் சாட்சியப்பதிவிற்கு ஒத்துழைப்பதாகவும் கோரியிருந்தனர். அதற்கு பதிலளித்த  சாலிய பீரிஸ்,  படையினரிடம் சரணடைந்தோரின் விபரங்களை வெளியிடுமாறு   எழுத்து மூலம்  தம்மிடம் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில், அவற்றை  வெளியிடத் தயார் எனக் கூறியுள்ளார்.

 

காணாமல் போனோரது உறவினர்களின் உணர்வை தம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளதென குறிப்பிட்ட சாலிய பீரிஸ்,  கடந்த காலங்களை போலல்லாது, காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் நம்பத்தகுந்த வகையில் அமையும் என்றும், மக்கள் தம்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு, காணாமல் போனோரை கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

http://globaltamilnews.net/2018/81981/

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்­கப்­பட்டோர் விப­ரங்­களை ஓரிரு மாதங்­களில் வெளி­யி­டுவோம்

Page-01-CityGMGPage1Image0009-0a0d5565b6dd7052d22e15c4a1e0c7c8eede65a6.jpg

 

கே.குமணன்

காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸ்

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான விப­ரங்­களை இன்னும் ஓரிரு மாதங்­களில் வெளி­யி­டுவோம். இந்த உறு­தி­மொ­ழியை நாம் எழுத்­து­மூ­லமும் வழங்க தயா­ராக உள்ளோம் என காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரி­வித்தார். 

காணாமல் போனோர் (OMP) அலு­வ­ல­கத்தின் அமர்வு நேற்று முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் நடை­பெற்­றது. இதில் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் நிமல்கா பெர்­னாண்டோ, ஜெய­தீபா, புண்­ணி­ய­மூர்த்தி கண­ப­திப்­பிள்ளை, வேந்தன், எஸ். லிய­னகே, மிராக் ரஹீம், மொகென்ரி பீரிஸ் உள்­ளிட்ட ஆணை­யா­ளர்கள் கலந்­து­கொண்டு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து கொண்­டனர். அத்­தோடு காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் பணிகள் தொடர்பில் விளக்­கத்­தையும் வழங்­கினர்.

குறித்த சந்­திப்பில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் 40 பேர் வரை கலந்­து­கொண்டு சாட்­சி­யங்­களை வழங்­கி­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில், இந்த அலு­வ­லகம் தமக்கு தேவை­யில்லை எனவும் இதில் தமக்கு நம்­பிக்கை இல்லை எனவும் தெரி­வித்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் காலை 8.30 தொடக்கம் மாவட்ட செய­லகம் முன்­பாக கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். சுமார் 250க்கும் அதி­க­மானோர் இவ்­வாறு கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டமைக் குறிப்­பி­டத்­தக்­கது.  

இதனை தொடர்ந்து கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்ட காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களை சந்­தித்த காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் ஆணை­யா­ளர்கள் தமது அலு­வ­ல­கத்தின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் விளக்கம் அளித்­த­தோடு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களின் கருத்­துக்­க­ளையும் கேட்­ட­றிந்­து­கொண்­டனர்.

இதில் கவ­ன­யீர்ப்பில் ஈடு­பட்­ட­வர்­களின் உற­வுகள் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் ஆணை­யா­ளர்­க­ளிடம் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான விப­ரங்கள் மற்றும் அவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இடங்­களை முதற் கட்­ட­மாக வெளி­யி­டு­மாறும் விரைவில் வெளி­யி­டு­மாறும் அதன்­பின்­னரே இந்த அலு­வ­ல­கத்தை தாம் நம்­பு­வதா இல்­லையா என தீர்­மா­னிக்க முடியும் எனவும் தெரி­வித்­தனர்.

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான விப­ரங்­களை இன்னும் ஓரிரு மாதங்­களில் வெளி­யி­டுவோம் இந்த உறு­தி­மொ­ழியை நாம் எழுத்துமூலமும் வழங்க தயாராக உள்ளோம் என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சிவில் சமூக அமைப்புகளுடனும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தினர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-06-03#page-1

  • தொடங்கியவர்

காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்ன?

 

 
 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த  விபரங்களை இன்னும் ஓரிருமாதத்தில் வெளியிடுவோம் இது தொடர்பான உறுதிமொழியை எழுத்து மூலம் வழங்க தயார் என காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இன்று அவர் அதற்கு மாறாக கருத்து வெளியிட்டுள்ளார்.

சரணடைந்தவேளை காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் நான் சரணடைந்தவேளை காணாமல்போனவர்களின் பட்டியலை அதிகாரிகளிடமிருந்து கோருவேன் எனவும் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ompp.jpg

அதேவேளை எனது அலுவலகத்தினால் போலியான வாக்குறுதிகளையோ அல்லது உடனடி தீர்வுகள் குறித்த வாக்குதிகளையும் வழங்க முடியாது என தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/34384

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.