Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜ­ப­க் ஷக்­களின் மனமாற்றம்

Featured Replies

ராஜ­ப­க் ஷக்­களின் மனமாற்றம்

 

2020ஆம் ஆண்டில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அர­சியல் கட்­சிகள் இப்­போதே ஆயத்­த­மாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்­களின் பெயர்­களும் அடி­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. யார் தேர்­தலில் போட்­டி­யிட்­டாலும் சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவு இல்­லாமல் வெற்றி கொள்ள முடி­யாது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தனியே சிங்­கள வாக்­கா­ளர்­க­ளினால் வெற்றி கொள்ள முடி­யு­மென்ற மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ சகோ­த­ரர்­களின் கணிப்பு பிழைத்துப் போனது. மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது கடும்­போக்கு அமைப்­புக்­க­ளி­னதும், தேரர்­க­ளி­னதும் ஆதிக்கம் அதி­க­மா­கவே இருந்­தன. இவர்­க­ளுக்கு அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணையும் வெகு­வாக இருந்­தது. இதனால், இந்த அமைப்­புக்கள் சிறு­பான்­மை­யி­னரின் குறிப்­பாக முஸ்­லிம்­களின் மத உரி­மை­களின் மீது தலை­யீ­டு­களைச் செய்­தன. முஸ்­லிம்­களின் வியா­பாரம், வாழ்­விடம் போன்­ற­வற்றுக்கு அச்­சு­றுத்­தல்­களை விடுத்­தன. பல இடங்­களில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டார்கள். முஸ்­லிம்கள் தங்கள் வீடு­களை விட்டு வெளி­யேறும் அள­விற்கு இன­வாதம் கொடுங்­கோ­லாட்சி செய்­தது. இதனால், முஸ்­லிம்கள் மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் மீது மிகுந்த வெறுப்பைக் கொண்­டி­ருந்­தார்கள்.

அர­சாங்­கத்தின் மீதும், தமது மக்கள் பிரதி­நி­திகள் மீதும் முஸ்­லிம்­க­ளுக்கு உச்­சக்­கட்ட வெறுப்பு இருந்தவேளை­யில்தான் 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்­றது. இத்­தேர்­தலில் முஸ்­லிம்கள் ஆட்சி மாற்­றம்தான் முஸ்­லிம்­க­ளுக்கு நிம்­ம­தியைக் கொடுக்கும் என்ற கணிப்பில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளித்­தார்கள்.

முஸ்­லிம்கள் நினைத்­தது போன்று ஆட்சி மாறியபோதிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத அமைப்­புக்­களின் கெடு­பி­டிகள் இன்னும் குறைய­வில்லை. இதனால், ­ரா­ஜ­ப­க் ஷாக்கள் மோச­மா­ன­வர்கள். நல்­லாட்­சி­யா­ளர்கள் நல்­ல­வர்கள் என்று கணித்துக் கொள்ள முடி­யாத நிலைக்கு முஸ்­லிம்கள் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள்.

மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது பேரு­வளை, தர்­கா­நகர் போன்ற பிர­தே­சங்­களில் முஸ்­லிம்கள் இன­வா­தி­களால் தாக்­கப்­பட்­டார்கள். இந்தத் தாக்­குதல் ஒரு நாளில் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வரப்­பட்­டது. ஆனால், திகன, கண்டி பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­களின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களை முழு­மை­யாக கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வரு­வ­தற்கு மூன்று நாட்கள் தேவைப்­பட்­டன. இதன்­போது சட்டம், ஒழுங்கு அமைச்­ச­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருந்தார். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான காட்டு மிரண்டித் தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்த அவரால் முடி­ய­வில்லை.

இன்­றைய அர­சாங்­கத்தின் மீதும் முஸ்­லிம்கள் வெறுப்புக் கொண்­டுள்­ளார்கள். எல்லா ஆட்­சி­யா­ளர்­களும் முஸ்­லிம்­களை பகடைக் காயா­கவே பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அர­சாங்­கத்தின் சலு­கை­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்­நி­லையில் கோத்­தா­பய ரா­ஜ­ப­க் ஷ எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் முடி­வினை எடுத்­துள்ளார். 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் தனது சகோ­தரர் மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ தோல்வியடை­வ­தற்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­கள்தான் கார­ண­மென்று ­ரா­ஜ­ப­க் ஷாக்கள் உணர்ந்­துள்­ளார்கள். 2020ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் கோத்­தா­பய வெற்றிபெற வேண்­டு­மாயின் முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்­ப­தற்­காக முஸ்­லிம்­களை அழைத்து இப்தார் நிகழ்­வு­களை நடத்­தி­யுள்ளார். அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபை­யுடன் மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

அண்­மையில் பேரு­வ­ளையில் நடை­பெற்ற இப்தார் நிகழ்­வொன்­றுக்கு கோத்­தா­பய ­ரா­ஜ­ப­க் ஷ அழைக்­கப்­பட்­டுள்ளார். இதில் கலந்துகொண்டு கோத்­தா­பய ஆற்­றிய உரை முஸ்­லிம்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. ' இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் எந்த சந்­தர்ப்­பத்­திலும் அச்­சத்தில் வாழக் கூடிய சூழலை உரு­வாக்க நான் இட­ம­ளிக்க மாட்டேன். மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் தலை­மையில் எதிர்­கா­லத்தில் அமை­ய­வுள்ள ஆட்­சியில் முஸ்­லிம்கள் அச்­ச­மின்றி தமது சமயக் கட­மை­களை செய்ய முடியும். இதற்­கான வாக்­கு­று­தியை நான் உங்­க­ளுக்கு வழங்­கு­கின்றேன்' என்று தெரி­வித்­துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ அநு­ரா­த­புரம் - வலஸ்­முல்­லையில் நடை­பெற்ற சமய நிகழ்­வொன்றின்போது, புத்த தர்­மத்தை பற்றி பேசு­கின்ற பௌத்­தர்­களே தொல்­பொருள் பிர­தே­சங்­களை அழித்து வீடு­களைக் கட்­டு­கின்­றார்கள். ஏனைய சம­யத்­த­வர்­களை வீணாக சாடா­தீர்கள். அநு­ரா­த­­புரம், அம்­பாறை போன்ற இடங்­களில் இவ்­வாறே செய்­துள்­ளார்கள்' என்று தெரி­வித்­துள்ளார்.

மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட அநி­யா­யங்­களை அன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் கண்டு கொள்­ள­வில்லை. ஆனால், இப்­போது இவர்­களின் கருத்­தி­யலில் ஏற்­பட்­டுள்ள மன­மாற்றம் உண்­மை­யா­னதா அல்­லது போலி­யா­னதா என்ற ஆராய்ச்­சிக்கு அப்பால் முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்­டால்தான் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி கொள்ள முடியு­மென்ற அனு­ப­வத்தை ­ரா­ஜ­ப­க் ஷாக்கள் பெற்­றுள்­ளார்கள்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ வெற்றி பெற்­றி­ருந்தால் பௌத்த வாக்­கு­களின் மூல­மாக ஆட்சி அமைக்­க­லா­மென்ற அவர்­களின் முடிவு உண்­மை­யாக்­கப்­பட்­டி­ருக்கும். அதேவேளை, சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான இன­வாத அமைப்­புக்­களின் நட­வ­டிக்­கைகள் கட்­டுக்கு அடங்­கா­தி­ருந்­தி­ருக்கும்.

மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது கோத்­தா­பய பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்தார். பொது பலசேனவின் தலைமைக் காரி­யா­ல­யத்­தையும் அவரே திறந்து வைத்தார். இவ­ருக்கும் கடும்­போக்கு அமைப்­புக்­க­ளுக்கும் இடையே நெருக்­க­மான தொடர்­புகள் காணப்­பட்­டன.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற அனைத்து நட­வ­டிக்­கை­களின் பின்­னாலும் கோத்­தாவே இருந்தார் என்றே முஸ்­லிம்கள் நம்­பி­னார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­ட­வர்கள் சட்­டத்­திற்கு முன் பகி­ரங்­க­மா­கவே உலாவிக் கொண்­டி­ருந்­தார்கள். இத்­த­கைய கொடு­மை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பாது­காப்பு செய­லாளர் என்ற வகையில் கோத்­தா­பய எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை என்­பதே முஸ்­லிம்­களின் நிலைப்­பா­டாகும்.

இவ்­வாறு செயற்­பட்ட இவர் நாட்டில் நிலை­யான ஆட்­சியை அமைக்க வேண்­டு­மாயின், ஜனா­தி­பதித் தேர்­தலில் தாங்கள் வெற்றி பெற வேண்­டு­மாயின் முஸ்­லிம்­களின் வாக்­குகள் தேவை என்று தற்­போது உணர்ந்­துள்ளார். இதை சந்­தே­கத்­து­ட­னேயே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

ஏனெனில், இன்­றைய நல்­லாட்­சி­யா­ளர்கள் முஸ்­லிம்­களின் சமயக் கட­மை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டாது, முஸ்­லிம்­களின் பாது­காப்பு உறுதி செய்­யப்­படும் என்று தெரி­வித்தே ஆட்­சியை அமைத்­தார்கள்.

ஆனால், முஸ்­லிம்­களின் நிலை கடந்த ஆட்­சியை விடவும் மோச­மாக இருக்­கின்­றது.

ஊழல்­வா­தி­களை கூண்டில் அடைப்போம் என்று கூறிய நல்­லாட்­சி­யா­ளர்­களே ஊழல் குற்­றச்­சாட்­டிற்குள் சிக்கி விசா­ரிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆதலால், கோத்­தா­பயவின் உறுதிமொழி ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்­காக முஸ்­லிம்­களின் வாக்­குகள் மீது இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றதா என்று சிந்­திக்­கவும் செய்­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்கம் புதிய அர­சியல் யாப்பு, புதிய அர­சியல் கலா­சாரம், சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அதி­காரம் போன்ற கவர்ச்­சி­யான திட்­டங்­களை முன் வைத்து தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்­டது. குறிப்­பாக தமி­ழர்கள் நீண்ட கால­மா­க­வுள்ள இனப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு கிடைக்­கு­மென்று நம்­பியே நல்­லாட்சி அர­சாங்கம் அமை­வ­தற்கு துணை போனார்கள். இது கூட நடை­பெ­ற­வில்லை.

நாட்டின் அர­சியல் குழப்­பத்­திற்கும், பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைக்கும் இன்­றைய அர­சாங்­கம்தான் முழுக்­கா­ர­ண­மல்ல. மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது நடை­பெற்ற பல சம்­ப­வங்­களும் இன்­றைய நிலைக்கு கார­ண­மா­க­வுள்­ளது. ஆதலால், கோத்­த­ாபய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டாலும், வேறு நபர்கள் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டாலும் இன்­றைய பொரு­ளா­தார பின்­ன­டை­வினை இல­கு­வாக சீர­மைக்க முடி­யாது.

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்ட பின்­ன­டை­வுக்கு காலத்­திற்கு காலம் ஆட்சி செய்­த­வர்­களின் ஊழல் நட­வ­டிக்­கை­களே பிர­தான கார­ண­மாகும். ஊழலை ஒழிப்போம் என்று ஆட்சி பீடம் ஏறிய எல்லா ஆட்­சி­யா­ளர்­களும் ஊழல் மூல­மா­கவே தமது பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்திக் கொண்­டார்கள்.

ஆனால், தேர்தல் ஒன்­றுக்­காக கோத்­தா­பய அளிக்­கின்ற வாக்­கு­று­தி­களை முஸ்­லிம்­க­ளினால் நம்ப முடி­யாது. கடந்த காலங்­களில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக முன்வைத்த கருத்­துக்­களை சிறு­பான்­மை­யினர் இன்னும் மறக்­க­வில்லை. இதேவேளை, எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் மும்­முனைப் போட்­டி­யாக அமை­வ­தற்கும் வாய்ப்­புக்கள் உள்­ளன.

பொது முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி ஆகி­யன ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களை நிறுத்தும் சூழல் இன்­றைய நிலையில் காணப்­ப­டு­கின்­றது. அது மட்­டு­மல்­லாமல் அங்­கி­க­ரிக்­கப்­பட்­டுள்ள வாக்­கு­களில் 51 வீத வாக்­குகள் அளிக்­கப்­பட வேண்டும். அவற்றில் 51 வீத வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ளும் நபரே வெற்றி பெற்­ற­வ­ராக அறி­விக்­கப்­படுவார். ஆனால், மும்­முனைப் போட்டி ஏற்­படும்போது 51 வீத வாக்­கு­களை பெற்றுக் கொள்­வதும் சிர­ம­மாகிப் போகலாம். இந்த நிலையில் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்­குகள் கவ­னத்திற் கொள்­ளப்­படும். ஆனால், ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­கா­ளர்கள் தமது மூன்று விருப்பு வாக்­கு­க­ளையும் பயன்­ப­டுத்தி பழக்­கப்­பட்­ட­வர்­க­ளு­மல்லர். மேலும், இத்­த­கைய நிலை­மைகள் ஏற்­ப­டு­வது ஆபத்­தாகும்.

இத­னால்தான், சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு கோத்­தா­பய மட்­டு­மல்ல ஏனைய கட்­சி­களின் வேட்­பா­ளர்­களும் தங்­களை நல்­ல­வர்­க­ளாகக் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதேவேளை, கோத்­தா­பய முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு உறுதி அளித்­தாலும் அவரால் இன­வாத அமைப்­புக்­க­ளி­னதும், தேரர்­க­ளி­னதும் விருப்­பத்­திற்கு மாற்­ற­மாக செயற்­பட முடி­யுமா என்­பது சந்­தே­க­மாகும். இவர் மட்­டு­மல்ல வேறு யாராக இருந்­தாலும் இன­வா­தி­க­ளையும் அர­வ­ணைத்துக் கொண்டு செல்­லவே முற்­ப­டு­வார்கள்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக துண்டுப் பிர­சு­ரங்கள் மூலமாக பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இந்த அமைப்புக்களின் கட்டுப்பாட்டில் இனவாத வாக்குகள் உள்ளன. மேலும், இனவாத அமைப்புக்களுக்கு அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் பின்புலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆதலால், முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள் தேர்தலை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. தேர்தலின் பின்னர் வாக்குறுதிகள் காற்றில் பறக்கும் என்பதே அனுபவமாகும். இதே வேளை, முஸ்லிம்கள் இன்றைய ஆட்சியாளர்களையும் நம்புவதற்கில்லை. யார் ஆட்சி செய்தாலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்பதே முஸ்லிம்களின் முடிவாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை மனதிற் கொண்டு செயற்படாத வரையில் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொள்வதனை தவிர்க்க முடியாது.

ஆதலால், இலங்கையை ஒரு சிறந்த நாடாக முன்னேற்ற வேண்டுமாயின் இனவாதமில்லாத, எல்லோரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்று கருதி சேவை செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் வேண்டும். ஆட்சியாளர்கள் ஊழல் செய்யாதவர்களாகவும், ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். இதுவே பெரும்பாலான மக்களின் விருப்பமாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-06-10#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.