Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கி: நாட்டின் வரலாற்றையே மாற்றப்போகும் தேர்தல்

Featured Replies

துருக்கி: நாட்டின் வரலாற்றையே மாற்றப்போகும் தேர்தல்

 
 

துருக்கியில் நடைபெற உள்ள தேர்தலில் நாட்டின் பொருளாதார நிலைதான் முக்கிய விவகாரம என பலரும் கருதுகின்றனர். இதில் கேள்விக்கே இடமில்லை.

துருக்கிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

துருக்கியில் நாளை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் யார் வென்றாலும் அவர் புதிதாக உருவாகியுள்ள அதிபர் முறையிலான ஆட்சியை தொடங்க வேண்டியிருக்கும்.

கடந்த ஆண்டு துருக்கியில் சர்ச்சைகளுக்கு இடையில் கருத்து கணிப்பு ஒன்று நடந்தது. இதில் துருக்கி நாடு அதிபர் ஆட்சி முறைக்கு மாற மக்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஒரு நபரை மனதில் கொண்டுதான் இந்த முறையை கொண்டுவந்திருக்க வேண்டும். அந்த நபர் வேறு யாருமல்ல... எர்துவான்தான் அந்த நபர்.

புதிய நடைமுறையின்படி பிரதமர் அலுவலகம் என ஒன்று இருக்காது. நாட்டை வழிநடத்தும் அதிகாரம் அதிபருக்கு மாற்றப்படும். அதிபரே இனி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருப்பார்.

அதிபராக இருப்பவரே அமைச்சர்களை, நீதிபதிகளை, அதிகாரிகளை நியமிப்பார். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை அதிபர்களையும் அதிபர் நியமிப்பார். ஆனால் துணை அதிபர் என்பவர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படமாட்டார்.

தேசிய வரவு செலவு அறிக்கையை முன்பு நாடாளுமன்றம்தான் தயாரித்துக்கொண்டிருந்தது. இனி அந்த பணியை அதிபரே கவனிப்பார். இந்த அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரிக்கும் பட்சத்தில் முந்தைய ஆண்டின் வரவு செலவு அறிக்கையே அமலில் இருக்கும்.

துருக்கிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரெசெப் தாயிப் எர்துவான்

அதிபரை நாடாளுமன்றம் பதவி நீக்க முடியும். ஆனால் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. எனினும் இவ்விவகாரத்தில் இறுதி முடிவு அரசியல் சட்ட நீதிமன்றத்தின் கையில் உள்ளது. நீதிமன்றத்தின் பெரும்பகுதி உறுப்பினர்களை நியமிப்பது அதிபர்தான்.

துருக்கியில் கொண்டுவரப்பட்டுள் இந்த சீர்திருத்தங்களைப் பற்றி அந்நாடு உறுப்பினராக உள்ள ஐரோப்பிய கவுன்சில் சில கவலைகளை வெளியிட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் அதிபரிடம் அதிகாரங்களை குவிப்பதுடன் நாட்டின் நிர்வாகத்தில் நாடாளுமன்றத்திற்கு உள்ள பிடியை வலுவிழக்க செய்துவிடும் என்கிறது ஐரோப்பிய கவுன்சில். இந்த தகவல் கருத்துக்கணிப்பிற்கு முன்பே வெளியாகியிருந்து.

ஆனால் இந்த சீர்திருத்தங்களால் நாட்டின் வளர்ச்சி வேகமடையும் என எர்துவானின் நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி கூறுகிறது.

ராணுவ நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட்டு அதிகாரங்கள் அதிபரிடம் வழங்கப்படும்.

துருக்கிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

புதிய நடைமுறை சிறந்தது என்பதுடன் சிக்கலான சமயங்களில் நாட்டின் நிர்வாகத்தில் நிலைத்தன்மையை கொடுக்கும் என்கிறது அக்கட்சி.

அதிபர் என்பவர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்.இதன் மூலம் அவர் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் ஆகிறார் என்கிறார் நீதி மற்றும் முன்னேற்றக் கட்சியின் ஜெய்னப் ஜேன் காண்டுர். இவர் அக்கட்சியின் இஸ்தான்புல் கிளையின் உறுப்பினராக உள்ளார்.

இது ஜனநாயகத்தை பலவீனமாக்காது. மாறாக பலம் ஊட்டவே செய்யும். ஏனெனில் அதிபரை நேரடியாக தேர்வு செய்வது மக்கள்தானே என்கிறார் ஜெய்எனப் காண்டுர்.

மேற்கத்திய நாடுகளின் அதிபர் பாணி ஆட்சி முறையுடன் ஒப்பிடத்தக்கது இது என்கிறது அரசு. ஆனால் அதிபர் ஆட்சி முறை என்ற முடிவை ஆய்வுக்கு உட்படுத்தினால் அம்முடிவு சரிதான் என நிரூபணமாகுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை அதிகார பகிர்வு என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், நாடாளுமன்றம், நீதித்துறைக்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

துருக்கிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

நாடாளுமன்றம் வரவு செலவு அறிக்கையை நிராகரிக்கும் பட்சத்தில் அதற்கு தீர்வு காணும் வரை அரசு தனது நிர்வாகத்தை முடக்கி வைத்திருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அங்கு, நீதிபதிகளையும் அமைச்சர்களையும் அதிபர் நியமித்தாலும் இவற்றுக்கெல்லாம் நாடாளுமன்றம் ஒப்புதல் தந்தாகவேண்டும்.

பிரான்ஸ் நாட்டில் அரசு நிர்வாகத்தின் தலைவர் பிரதமர் என்ற போதிலும் அவர் அதிபர் சார்ந்திராத வேறொரு கட்சியை சார்ந்தவராகவும் இருக்கமுடியும்.

பிரான்சில் உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகளில் மூவரை மட்டுமே அதிபர் நியமிக்க முடியும். ஆனால் துருக்கியை பொறுத்தவரை இனி 15 நீதிபதிகளில் 12 பேரை அதிபர் நியமிக்க முடியும்.

இது தவிர முக்கிய விஷயம் ஒன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. அரசியல் சட்டத்தை சூழ்ந்துள்ள அரசியலை புரிந்துகொள்ளாமல் அச்சட்டத்தை அறிந்துகொள்ள முடியாது என்பதுதான் அது.

துருக்கிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

துருக்கியில் ஒரு நபர் ஆட்சி வந்துவிடுமோ என எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. இச்சூழலை ரஷ்யாவில் விளாடிமீர் புடின் இருப்பதுடன் ஒப்பிட்டு பார்க்கின்றன எதிர்க்கட்சிகள்.

எர்துவான் தற்போதே மிகுந்த அதிகாரங்களுடன் உள்ளதாக கூறுகிறார் எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் ஆதரவாளர் டெசர் ஒல்கெய்டோ.

எர்துவான் மீண்டும் தேர்வானால் அது நாட்டை மோசமான நிலைக்கு தள்ளும் என கூறுகிறார் அவர்.

எர்துவான் வென்றால் நாங்கள் வாக்களிக்கப்போகும் கடைசி தேர்தலாக அது இருக்கும் என முத்தாய்ப்ப்பாக கூறுகிறார் மெகமுத் என்பவர்.

துருக்கிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதிபர் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நாளில் நடைபெற வேண்டும் எனக்கூறுகிறது புதிய அரசியல் சட்டம். ஒருவர் அதிபராக அதிகபட்சம் 2 பதவிக்காலம் இருக்கலாம் என்றும் கூறுகிறது புதிய சட்டம். (அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல இடைக்கால தேர்தலுக்கெல்லாம் இங்கு வாய்ப்பில்லை).

அதிபர் 3 வது முறையாக போட்டியிடுவதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. 2வது முறை ஆளும்போது முன்கூட்டியே பதவிக்காலத்தை முடித்துக்கொள்ளும் போது 3வது முறை போட்டியிட முடியும்.

எர்டோகன் ஏற்கனவே 15 ஆண்டுகள் பிரதமாகவும் பின்னர் அதிபராகவும் ஆட்சி புரிந்துவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

துருக்கு குடியரசின் நூறாவது நிறுவன ஆண்டான 2023லும் ஆட்சி புரிய ரெசெப் தாயிப் எர்துவான் திட்டமிட்டுவிட்டார் என அந்நாட்டில் பலரும் நம்புகிறார்கள்.

துருக்கிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அந்த இலக்கை குறி வைத்தே இந்த தேர்தல் என அவர்கள் நம்புகின்றனர். இப்படி பல எதிர்ப்புகள் சந்தேகங்கள் இருந்த போதிலும் துருக்கியில் ரெசெப் தாயிப் எர்துவானுக்கு இன்னும் கோடிக்கணக்கான தீவிர ஆதரவாளர்கள் உள்ளனர். நாடு சந்திக்கும் பல சவால்களை சமாளிக்க அதிபர் ஆட்சி முறை நல்ல தீர்வாக இருக்கும் என்றும் இதன் மூலம் திறமையான தலைவர் பிரச்னைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் கூறுகிறார் எர்டோகன்.

மக்களும் இதையே விரும்புகின்றனர் என்கிறார் ஆளும் கட்சியை சேர்ந்த காண்டுர். இதன் மூலம் நாட்டிற்கு நல்ல அரசு கிடைக்கும் என்கிறார் காண்டுர்.

ஆனால் அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட பல மாற்றங்கள் நீக்கப்பட வேண்டும் என்கின்றனர் எதிர்க்கட்சி த்தலைவர்கள். ஆனால் எதையும் மாற்ற வேண்டுமென தாங்கள் நிர்பந்திக்கவில்லை என்கிறது வெனிஸ் கமிஷன். மக்களின் கவலைகளையும் கருத்தில் கொள்வதாக அது தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-44586507

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தமுறையும் இந்த கெட்டாஸ் தான் வருமெண்டு கனபேர் கதைக்கிறாங்கள். :grin:

tenor.gif?itemid=7193472

  • தொடங்கியவர்

தொடங்கியது துருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகும் நம்பிக்கையில் எர்துவான்

 
துருக்கி தேர்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரெசெப் தாயிப் எர்துவான்

துருக்கியின் அடுத்த நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்ந்தேடுக்கும் தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியுள்ளது. இத்தேர்தல், தற்போதைய அதிபர் ரிசெப் தயிப் எர்துவானின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ளது.

துருக்கியின் உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இத்தேர்தலில் ரிசெப் தயிப் எர்துவான் வெற்றி பெற்றால், புதிதாக சில முக்கிய அதிகாரங்கள் அவரது கைகளுக்கு செல்லும். இது ஜனநாயக ஆட்சியை பலவீனப்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குடியரசு மக்கள் கட்சியின் மைய-இடது வேட்பாளரான முஹர்ரம் இன்ஸ், எர்துவானுக்கு முக்கிய சவாலாக உள்ளார்.

ஜூன் 2016 ஆம் ஆண்டு நடந்த தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர், அமல்படுத்தப்பட்ட அவரச நிலை இன்னும் துருக்கியில் உள்ளது. 2019-ல் நடக்க வேண்டிய தேர்தலை, முன்னமே நடத்த எர்துவான் முடிவு செய்ததால் தற்போது தேர்தல் நடக்கிறது.

பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று(சனிக்கிழமை) எர்துவானும், அவரது முக்கிய போட்டியாளரான முஹர்ரமும் மிகப்பெரிய பேரணியில் கலந்துகொண்டனர். துருக்கியை ஆட்சி செய்ய தகுதியற்றவர்கள் என இவர்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டினர்.

முஹர்ரமும்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionமுஹர்ரமும்

''எர்துவான் வெற்றி பெற்றால், உங்கள் போன் ஒட்டுக்கேட்கப்படும். பயம் தொடரும்'' என இஸ்தான்புல்லில் கூடியிருந்த மில்லியன் கணக்கான மக்கள் மத்தியில் முஹர்ரமும் பேசினார்.

2014-ம் ஆண்டு துருக்கியின் அதிபராவதற்கு முன்பு, 11 ஆண்டுகள் துருக்கியின் பிரதமாக இருந்த எர்துவான் பிரசாரத்தின் போது, தனது போட்டியாளரான முஹர்ரமுற்கு போதுமான திறன்கள் இல்லை என கூறினார்.

முன்னாள் ஆசிரியரான முஹர்ரமும், 16 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

''இயற்பியல் ஆசிரியராக இருப்பது வேறு, நாட்டை வழிநடத்துவது வேறு. அதிபராக இருப்பதற்கு அனுபவம் வேண்டும்'' என எர்துவான் குறிப்பிட்டார்.

வாக்குப்பதிவு எப்படி நடக்கும்?

துருக்கி தேர்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஞாயிற்றுக்கிழமை இரண்டு வாக்குப்பதிவு நடக்கும். ஒரு ஓட்டு அதிபரை தேர்ந்தேடுப்பதற்கு, மற்றொரு ஓட்டு நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தேடுப்பதற்கு.

கிட்டதட்ட 60 மில்லியன் வாக்காளர்கள் துருக்கியில் உள்ளனர்.

அதிபர் பதவிக்கு 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 50%த்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் அதிபராகத் தேர்ந்தேடுக்கப்படுவார்.

யாருமே 50%த்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால், அதிக ஓட்டுகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் இடையே ஜூலை 8-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும்.

உறுதியாக வெற்றி பெற்றுவிடுவோம் என எர்துவான் நம்பிக்கையுடன் உள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44591649

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி அதிபர் தேர்தல் – மீண்டும் அதிபராகிறார் தாயிப் எர்டோகன்

 

Erdogan-e1469687034995-150x150.jpeg550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த 1-11-2015 அன்று தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே தேர்தலை நடத்த அதிபர் தாயிப் எர்டோகன் முடிவெடுத்தார். அதன்படி, அதிபர் தேர்தலின் போது பாராளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் தேர்தலில் தனக்கு செல்வாக்கு நிலவுவதால், அதன் மூலம் பாராளுமன்றத்திலும் அதிக இடங்களை வெல்லலாம் என்ற கணக்கில் எர்டோகன் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.__

 

 

இதற்கிடையே, அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. ஏ.கே. கட்சி சார்பில் தாயிப் எர்டோகனும், குடியரசு மக்கள் கட்சி சார்பில் முஹாரம் இன்ஸ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

 

 

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 53 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார்.

 

 

இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு மக்கள் கட்சி வேட்பாளர் முஹாரம் இன்ஸ்சுக்கு 31 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

 

 

அதிபர் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தாயிப் எர்டோகன் மீண்டும் அதிபராகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதும் எர்டோகன் வெற்றி பெற்றதை அறிந்து அவரது கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

 

 

அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.maalaimalar.com/News/World/2018/06/25022202/1172404/Erdogan-declares-victory-in-Turkish-presidential-poll.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.