Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உத­யங்க வீர­துங்க இலங்கை வர விருப்பம் தெரி­வித்துள்ளார்

Featured Replies

உத­யங்க வீர­துங்க இலங்கை வர விருப்பம் தெரி­வித்துள்ளார்

22-609be9087902d63696a11507efbbf23b0227d7fd.jpg

 

அரச சிரேஷ்ட சட்­ட­வாதி உதார கரு­ணா­ரத்ன கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அறி­விப்பு

(எப்.எம். பஸீர்)

 ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கை தூது வர் உத­யங்க வீர­துங்க நாடு திரும்பி அவ­ருக்­கெ­தி­ரா­ன விசா­ர­ணை­க­ளு­க்கு ஒத்­து­ழைக்க விருப்பம் தெரி­வித்­துள்ளார். அது தொடர்பில் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் சமஷ்டி நீதி­மன்­றத்­துக்கு தெரி­விக்க வேண்­டு­மென அரச சிரேஷ்ட சட்­ட­வாதி உதார கரு­ணா­ரத்ன கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு நேற்று அறி­வித்தார்.  

மிக் விமான கொள்­வ­ன­வின்­போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் நிதி­மோ­சடி தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று கோட்டை நீதிவான் நீத­மன்­றத்தில் இடம்­பெற்ற போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இந்த விவ­கா­ரத்தில் சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்­டுள்ள உத­யங்க வீர­துங்க சார்பில் நேற்­றைய தினம் சட்­டத்­த­ரணி சேம­பால ரத்­நா­யக்­க­வுடன் ஜனா­தி­பதி சட்­ட­த­ரணி அணில் சில்வா மனறில் ஆஜ­ராகி இருந்தார். சட்­டமா அதிபர் சார்பில் சிரேஷ்;ட அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­ரத்­ன­வுடன் விசா­ரணை அதி­கா­ரி­யான நிதி­குற்ற புல­னாய்வு பிரிவின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரேன்சிஸ் ஆஜ­ரானார்.

இதன்­போது மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்த ஜனா­தி­பதி சட்­ட­த­ரணி அனில் சில்வா

'கணம் நீதிவான் அவர்­களே எனக்கு கிடைக்­கின்ற ஆலோ­ச­ணை­களின் பிர­காரம் எனது சேவை தருநர் எதிர்­வரும் ஆகஸட் மாதம் இங்கு வருகை தர­வுள்ளார். எனினும் ரஷ்­யாவில் கல்வி கற்று அங்கு தூது­வ­ராக இருந்த எனது சேவை பெறு­நரின் பிள்­ளைகள் அந்­நாட்டு கல்­லூ­ரி­களில் கற்று வரு­கின்­றனர். எனவே அவர்­களை அந்த கல்­லூ­ரி­க­ளி­லி­ருந்து விலக்கிக் கொண்டு இங்கு வர­வேண்­டி­யுள்­ளது. "என்றார்.

இதன்­போது இந்த விட­யங்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வித­மாக அரச சிரேஷ்ட சட்­ட­வாதி உதார கரு­ணா­ரத்ன பின்­வ­ரு­மாறு நீதி­மன்றில் தெளி­வுப்­ப­டுத்­தினார்.

'கணம் நீதிவான் அவர்­களே கடந்த 2016 ஒக்­டோபர் 13ஆம் திகதி இந்த சந்­தேக நபர் நிதி­குற்ற புல­னாய்­வுக்கு முதல் வாக்­கு­மூ­லத்தை அளித்தார். அதில் இந்­நாட்­டுக்கு ஒரு­போதும் நான் வர­போ­வ­தில்லை என தெரி­வித்­தி­ருந்தார். அவ்­வாறு தெரி­வித்­தவர் தற்­போது நாடு திரும்­பு­வ­தாக கூறு­வது வர­வேற்க தக்க விட­ய­மாகும். அவ­ருக்கு எதி­ராக நீதி­மன்றில் பெற்றுக் கொண்ட பிடி­யாணை மறறும் சிவப்பு அறி­வித்தல் பிர­காரம் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தப்பிச் சென்­றி­ருந்தார்.

பின்னர் அஜ்மான் பிர­தே­சத்தில் வைத்து அவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அவ­ரது பிள்­ளை­களும் அஜ்கான் பகு­தி­யி­லேயே கல்வி கற்­கின்­றனர். அத்­துடன் அவர் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் சமஷ்டி நீதி­மன்­றத்தின் கட்­டுப்­பாட்டில் உள்­ள­தாக அந்­நாட்டு சட்­டமா அதிபர் இந்­நாட்டு சட்­டமா அதி­ப­ருக்கு கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி அறி­வித்­தி­ருந்தார். இலங்­கையின் அதி­கா­ரிகள் அந்­நாட்­டு­ச­மஷ்டி நீதி­மன்­றுக்கு சந்­தேக நபரை நாடு கடத்­துமு; முக­மாக பல விட­யங்­களை தெளி­வுப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அதன்­படி நாடு கடத்தல் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வா­றான சூழ்­நி­லையில் சந்­தேக நபர் இங்கு று வர விரும்­பு­வதை அந்­நாட்டு நீதி­மன்­றுக்கு கூற­வேண்டும்.

அதன்­பின்னர் சந்­தேக நபர் இலங்­கையின் விமா­ன­மொன்றில் ஏற வேண்டும். இவ்­வி­மா­ன­மா­னது இலங்­கையின் ஒரு நிலப்­ப­ரப்­பாக கரு­தப்­பட்டு அங்கு வைத்து சந்­தேக நபர் கைது செய்­யப்­ப­டுவார். பின்னர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­டுவார்." என்றார்.

இதன்­போது நீதிவான் லங்கா ஜய­வர்­தன நாடு கடத்தல் தொடர்பில் எடுக்க்ப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­க­ளுக்கு அந்­நாடு எவ்­வா­றான பதி­ல­ளிப்­புக்­களை வழங்­கி­யுள்­ளது என வின­வினார். அதற்கு பதி­ல­ளித்த அரசின் சிரேஷ்ட சட்­ட­த­ரணி உதார கரு­ணா­ரத்ன அந்­நாட்டு அதி­காரி இந்­நாட்டின் உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளுடன் தொடர்பில் உள்­ள­தா­கவும் சந்­தேக நபர் இந்­நாட்­டுக்கு வரு­வ­தற்கு கட­வுச்­சீட்டு இல்லை எனவும் இதனால் அந்­நாட்டில் இருந்து இங்கு வரு­வ­தற்­கான ஒரு­வழி ஆவ­ண­மொ­னறை அவர்கள் வழங்­குவர் எனவும் கூறினார்.

இத­னை­ய­டுத்து மிக் விமான கொள்­வ­ன­வின்­போது இடம்­பெற்ற மோச­டிகள் தொடர்­பான விசா­ர­ணைகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட புதிய விட­யங்­களை அரச சிரேஷ்;ட சட்­ட­வாதி மன்­றுக்கு அறி­வித்தார். அதன்­படி சந்­தேக நபரின் மாமி­யா­ரான இந்­தி­ராணி ஊடாக 3 மில்­லியன் ரூபா கொமர்ஷ்ல் வங்­கியில் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் மத்­திய வங்­கியின் உளவு பிரிவு ஊடாக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி முடக்­கப்­பட்ட வங்கி கணக்கிலிருந்து மூன்று கோடியே 57 இலட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபா 69 சதம் அவரது கணக்குக்கு கொமர்ஷல் மற்றும் எச்.எஸ்.பி . சி. வங்கி ஊடாக பரிமாற்றப்பட்டுள்ளதாகவும் முடக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிலிருந்து இவ்வாறு பரிமாற்றல்கள் இடம்பெற்றமை தொடர்பாக தகவல்கள் பெறவுள்ளதாகவும் கூறினார். . அதன்படி இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.