Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும்

[30 - March - 2007] [Font Size - A - A - A]

இந்தியா ஸ்ரீ லங்காவுக்கு நல்லது செய்வதை தற்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது என்பதே எமது கருத்தாகும்.

முதன் முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் மிகச் சிறந்த நன்மை ஒன்று இந்தியாவிடமிருந்து ஷ்ரீ லங்காவுக்கு கிடைத்தது. அது தான் புத்த சமயமாகும். அதைத் தொடர்ந்து இந்திய கலைகள் கலாசார நன்மைகளும் எமக்குக் கிடைத்தன.

ஆனால், இதற்குப் பின்னர் இந்தியா எமக்கு நேரடியாக கொடுத்தவைகளும் இந்திய மத்தியஸ்தம் மூலம் கொடுத்தவைகளும் கெட்டவைகளேயாகும். அவற்றின் பிரதானமானவை கீழே காட்டப்பட்டுள்ளன.

1. இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு அழுத்தம்.

2. பிரபாகரனின் தாயகக் கொள்கை

3. இந்திய இலங்கை ஒப்பந்தம் (1987)

மேற்படி மூன்று விடயங்களில் இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு என்பது ஸ்ரீ லங்காவுக்கு இந்தியா நேரடியாக இல்லாத முறையில் சுற்றி வந்து கொடுக்கும் அழுத்தமாக அமைந்துள்ளது. இதற்கேற்ப இந்தியாவுக்கு வேண்டாத முறையிலான ஸ்ரீ லங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறியடித்தல் மேற்படி இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையில் ஒரு அங்கமாகும். (கட்டுநாயக்கவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலுக்கும் இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையே பொறுப்புக் கூற வேண்டும். இது பற்றி தொடரும் பந்திகளில் விபரித்துள்ளோம்.) ஸ்ரீலங்கா குழப்பங்களற்ற சமாதானமான பிராந்தியமாக முன்னேற்றமடைந்து வருவதை விரும்பாத நிலையில் இந்தியாவே பிரபாகரன் என்ற வியாதியை ஸ்ரீலங்காவில் அறிமுகப்படுத்தியது. இந்தியா ஸ்ரீ லங்கா மீது பலாத்காரமாக 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை திணித்ததற்குக் காரணமும் இந்தியாவின் ஆதிக்க விஸ்தரிப்பு நிலைப்பாட்டுக்கேற்ப ஸ்ரீ லங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலத்தை பிரபாகரனிடம் ஏலம் போடுவதற்கேயாகும்.

இனி மேற்படி இந்தியாவின் விஸ்தரிப்பு அழுத்தமும் மற்றும் இந்நாட்டின் மீதான பலவந்தக் கொள்கையும் கட்டுநாயக்காவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம். கடந்த 2002 ஆம் ஆண்டில் அதிநவீனமான ராடர் உபகரணத்தின் தேவை ஸ்ரீ லங்காவுக்கும் ஏற்பட்டிருந்தது.

அது நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராடர் உபகரணத்தைப் பெற வேண்டிய அத்தியாவசிய தேவையாகும். இவ்வாறான உயர் தொழில் நுட்ப ராடர்களை சீனா உற்பத்தி செய்து நியாயமான விலைகளில் விற்று வந்ததால் சீனாவிலிருந்து ராடர்களை விலைக்கு வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா முயற்சி எடுத்தது. ஆனால், சீனாவுடன் பனிப்போரில் நெடுங்காலமாக ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு இவ்வாறு ஸ்ரீ லங்கா சீனாவுடன் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக் கொள்வதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் உடைய ராடர் கருவிகளை ஸ்ரீ லங்காவில் பொருத்தி வைத்தால் இந்தியப் பிரதேசங்களிலுள்ள யுத்த தளங்களின் இரகசியங்கள் அந்நியர் கைகளில் கிடைத்து விடுமே என்ற காரணத்தால் இந்தியா தானாகவே முன்வந்து அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ராடர் கருவியை ஸ்ரீ லங்காவுக்கு வழங்கியது.

கட்டுநாயக்க விமானப்படை முகாமில் பொருத்தப்பட்ட இந்தியாவின் ராடர் உபகரணம் இன்னும் முற்றாகப் பொருத்தி முடிக்கப்படாத பழைய வகை ராடர் உபகரணமாகும்.

தொழில் நுட்ப ரீதியில் முன்னைய முதலாம் பரம்பரைக்குரியதென கருதப்படும் இரட்டை அமைப்புடைய அந்த ராடர் கருவி மூலம் பெறக்கூடிய பயனைப் பொறுத்தவரை எந்த பிரியோசனமும் கிடையாது என்பது இப்போது தெரிந்து விட்டது. (அப்படி ஏதேனும் பயன் இருந்திருந்தால் பிரபாகரனின் விமானங்கள் கட்டுநாயக்காவை நெருங்கியிருக்க முடியாது).

இந்தியா அன்று ஸ்ரீ லங்காவுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு பயங்கரமான ஆபத்துக்கு உள்ளாகிவிட்டது. இதன் மூலம், நிகழ்ந்து கொண்டிருப்பது யாதெனில், இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பிரபாகரன் எனப்படும் நாசகார சக்தி இந்தியாவின் அழுத்தத்திற்கேற்ப தொடர்ந்து மனிதப் படுகொலைகளை செய்து கொண்டிருக்கப் போகிறது. இந்தியா எம்மீது சுமத்தியுள்ள ராடர் எனப்படும் பழைய இரும்புக் குவியலிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த இரும்புக் குவியலை உருக்கி மண்வெட்டிகள் செய்வதற்காக வைத்துக் கொண்டு வேறுநாட்டிலிருந்து அதிநவீன டாடர் உபகரணங்களை நாம் பெற்றுக் கொள்ளா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து மிகப் பெரியதாகவே இருக்கும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயுள்ள பகைக்கு ஸ்ரீலங்கா பலியாகிவிடக் கூடாது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீ லங்காவின் அனைத்து அரசாங்கங்கள் மீதும் இந்தியா பிரயோகித்த அழுத்தங்கள் பற்றி அனைவரும் அறிவார்கள். எமது மூத்த சகோதரன் என்ற ஸ்தானத்தில் இருக்க வேண்டிய நாடு இன்று எங்களை அழித்தொழிக்க முயற்சி செய்வதைப் புரிந்து கொள்ளுவதும் கடினமாகும்.

-திவயின ஆசிரிய தலையங்கம்: 28.03.2007-

நன்றி தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி,

இந்தியா ஒரு முன்யோசனையின் அடிப்படையில் இத்தகைய ராடாரை வழங்கியிரிக்கிறது.

இது ஒரு வகையில் புலிகளுக்கு நன்மையே!!!

நல்ல ராடாரை கொடுத்திருந்தால் புலிகளுக்குத்தானே கடினம்!!!

- கப்பல்பயணி

என்ன காரணத்திற்காக அந்த ராடாரை கொடுத்திருந்தாலும் அது வலுவற்ற ஒன்றாக இருந்தால் கொடுத்தவர்களுக்கு நன்றி.

சும்மா போன பாம்பை மடிக்குள் பிடித்து விட்ட கதைதான். நன்றாக வாங்கிக் கட்டட்டும். என்ன தான் யார் தான் சொன்னாலும் உதுகளுக்கு ரோசம் மானம் இல்லாததுகள்.

ஈழத்திலிருந்து

ஜானா

ஓய் மண்வெட்டி செய்யுறது எண்டால் செய்யவேண்டியது தானே அதைவிட்டு புனைவுக் கதையள் வேற

இப்பதானாக்கும் புரிஞ்சுது விமானத்தால அடிக்கேக்க பக்கர் வெட்டி படுக்கவேணும் எண்டு அது தான் மண்வெட்டியைப் பற்றி யோசனை வந்திருக்கு போல கிடக்க ஏதோ நல்லா செய்தா சரி உதையாவது ஓழுங்கா செய்யிறியளோ எண்டு பாப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை இராணுவத்தை வைத்து பல நாடுகள் தங்களுடைய அதி நவீன கருவிகளை பரிசோதிப்பது காலம் காலமாக நடந்து வருவதே!! அதே போல் இந்தியாவும் இலங்கை இராணுவத்திற்கு இப்படியா சாமான்களை கொடுத்து பரிசோதித்திருக்கலாம்.

அல்லது அதற்காக "மருந்தை" புலிகளிற்கு வித்திருக்கலாம்.

நிச்சயம் செய்ல் திறன் கொண்ட ராடராக தான் இருக்க முடியும். அதை இயக்குகிற சிங்களவன் மோட்டு சிங்களவனா இருந்திருப்பான். அங்க யார் தொழில் திறன் கொண்டவர்கள் இராணுவத்தில் இருகிறார்கள்

இளநீர் விற்றவனும் ,கஜு விற்றவனும் தானே இராணுவம். எப்படி ராடரை இயக்க தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேகத்தின் கையுக்கு கிட்டிய துரும்புக்கும் பெருமை வந்து சேரும்.

அவிவேகத்தின் கையுக்கு கிட்டிய பெருமைக்கும் சிறிமையே வந்து தொலைக்கும்.

தன் தொடர்தோல்விகளை பொய்களால் மறைத்துக் கொண்டேவருகின்ற சிங்கள அரசுக்கு,

அந்த முயற்சியயே தோற்கடிகக் கூடிய சூழ்நிலைகள் எதிர்படும் போது, மற்றவன் தோள்களிலே பழியைப் போட்டு தப்பிக்கப் பாற்க்கிறது.

இதைத்தானே அவர்கள் காலம் காலமாக செய்துகொண்டு வருகிறார்கள்.

அந்த ராடர்களின் செயற்பாட்டுத்திறனை பரிசோதிக்க புலிவிமானங்களைக் கொண்டுதான் செய்யவேண்டும் என்று ஏதாவது நேத்திஇருந்தார்களாமா?

வெள்ளத்தில் தாழ்கின்றவனை காப்பாற்ற வருபவனுக்கு என்ன நேருமோ, அதுவே சிங்கள அரசுக்கு கிட்டும் உதவிகளுக்கு பரிசாகக் கிடைக்கப் போவது.

இந்திய வெளியுறவு யோக்கியத்தின் மாற்று இன்னும் மாற்றம் கண்டுவிடவில்லை.

தமிழன் சாவுகளில் தன்தேசியநலன் குளிர்காய்கின்ற வெளியுறவின் சாத்தன் புத்தி இன்னும் மாறிவிடவேயில்லை இந்தியாவுக்கு.

திருத்த வேலைகளுக்காக ராடர் களற்றிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.இது எப்படி புலிகளுக்குத்தெரியும் என்பதுதான் கேள்வி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'ஆடத் தெரியாதவணுக்கு மேடை சரியில்லை" என்பது போல மோட்டு சிங்களவணுக்கு ரேடார் சரியில்லை. எதற்கும் காத்திருந்து பார்ப்போம். விடுதலை புலிகள் கையில் ரேடார் வந்த பின்புதான் அதன் செயல்திறன் தெரியும்.

இந்த அறிக்கை விடும் மொக்கர் கூட்டம் ஒருவருடன் ஒருவர் தொடர்பு வைத்திருப்பதில்லையா? ஆளுக்கொரு ஆறிக்கை விடுகிறார்கள்முற்றிலும் முறன்பட்டதாக..

புதினம் டொட் கொம் செய்தியின்படி குற்றப்புலனாய்வுத்துறையினர

"இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும்!" இப்படி ஒவ்வொரு சிறீ லங்கா குடிமகனும் நினைத்தால் சிறீ லங்கா பொருளாதாரத்தில் முன்னேறி எங்கோ போய்விடும்!

இதற்கு முன்மாதிரியாக, முதலில் மகிந்து, யூ.என்.பி, ஜே.வீ.பீ மற்றும் சிங்கள உறுமய தறுதலைக் கூட்டம் என்பன அரசியலைக் கைவிட்டு, ஆளுக்கொரு மண்வெட்டியை தூக்கிக்கொண்டு சிறீ லங்காவில் தோட்டம் செய்ய முன்வரவேண்டும்!

:lol::icon_mrgreen::lol:

[size="4"]இந்தியாவுக்கு இனியாவது ரோசம் வருகிறதா என்று பார்ப்போம். யார் விசுவாசமானவ்ர்கள் ? யார் எதிரானவர்கள் என்று திவ்வியன சிங்கள பத்திரிகை செய்தி மூலம் அறியட்டும். நட்புடன் பழக நினைப்பவர்களை எட்டி உதைந்து கொண்டு, தனக்கு ஆபத்தான நாடுகளுடன் கொண்டாடும் இலங்கையுடன் ரோந்து கப்பல், ராடார், உளவு பார்த்து கொடுத்தல், இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு எதிர்ப்பு இப்படி எத்தனையோ...... இனியாவது உணர்ந்தால் சரி.........[/size]

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் டொட் கொம் செய்தியின்படி குற்றப்புலனாய்வுத்துறையினர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்வெட்டியில்லை நாலைஞ்சு உழவாரையும் செய்யலாமெண்டு நினைக்கிறன். :)

மண்வெட்டியில்லை நாலைஞ்சு உழவாரையும் செய்யலாமெண்டு நினைக்கிறன். :)

மண்வெட்டியைவிட பிக்குமார் பிச்சை எடுக்க பாத்திரம் செய்யலாம். அங்கின வயிறு வளர்த்துப்போட்டு பெட்டைகளோடும் உரஞ்சிக் கொண்டு திரியலாம்

நேசன் அது முந்தித்தனான் பெட்டயள உரசுறது இப்ப வீடியோ எல்ல கொண்டு திரியினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.