Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இருந்து முதன்முறையாக ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

Featured Replies

இலங்கையில் இருந்து முதன்முறையாக ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

 

 

 
The%20Frozen%20Fire

‘தி புரோஸன் பயர்’ போஸ்டர்.

09marafiiRohana%20Wijeweera

ரோகண விஜயவீர

 

இலங்கையில் இருந்து முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்கு ‘தி புரோஸன் பயர்’ என்ற சிங்களத் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எனும் கட்சியை, ரோகண விஜயவீர 14.06.1965 அன்று நிறுவினார். ரோகண விஜயவீரவால் கவரப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் ஜே.வி.பி.யில் இணைந்தனர்.

 

ஜே.வி.பி. இலங்கையில் ரகசியமான முறையில் ஆயுதப் புரட்சிக்கு தேவையான ஆயத்தங்களையும் செய்து வந்தது. இதுகுறித்து அன்றைய சிறிமாவோ பண்டாரநாயகா அரசுக்கு தெரிய வந்ததால் 1971-ம் ஆண்டு மார்ச்சில் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரோகண விஜயவீர சிறைக்குள் இருக்கும்பொழுதே, இலங்கை அரசுக்கு எதிராக ஜே.வி.பி.யினர் நாட்டின் பல பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. இலங்கையின் தெற்குப் பகுதியில் சில மாவட்டங்கள் ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இலங்கை அரசு சர்வதேச உதவிகளுடன் இந்த கிளர்ச்சியை முறியடித்து ஜே.வி.பி. கட்சி இலங்கையில் தடை செய்யப்பட்டது. பின்னர் வந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு ரோகண விஜயவீரவை விடுதலை செய்ததுடன் ஜே.வி.பி. மீதான தடையையும் நீக்கியது.

பின்னர் ஜே.வி.பி. ஜனநாயக பாதைக்கு திரும்புவதாக அறிவித்ததுடன், தேர்தல்களிலும் போட்டியிட்டது. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் ரோகண விஜயவீர போட்டியிட்டு 2,75,000 வாக்குகளையும் பெற்றார். 1983-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்துக்கு ஜே.வி.பி.யினரே காரணமெனக் கூறி இலங்கை அரசால் மீண்டும் இக்கட்சி தடை செய்யப்பட்டது.

அதன் பின்னர் ஜே.வி.பி. கட்சியினர் தலைமறைவாக இயங்கத் தொடங்கி 1989-ம் ஆண்டு மீண்டும் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடவே நவம்பர் 12, 1989 அன்று இலங்கை ராணுவத்தினரால் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) நிறுவிய ரோகண விஜயவீரவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் அனுருத்த ஜயசிங்க இயக்கியுள்ள 'கின்னேன் உபன் சீத்தல' எனும் சிங்களத் திரைப்படம் (தி புரோஸன் பயர்-The Frozen Fire) எடுக்கப்பட்டுள்ளது. ரோகண விஜயவீரவின் கதாபாத்திரத்தில் முன்னணி சிங்கள திரைப்பட நடிகர் கமல் ஹத்தர ஆராச்சி நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படத்துக்காக இலங்கை திரைப்படம் ஒன்று ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல்முறை. இந்த படம் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கும் விழாவிலும் திரையிடப்பட உள்ளது.

http://tamil.thehindu.com/world/article24361867.ece

  • தொடங்கியவர்

திரைவெளிச்சம்: உலக அரங்கில் உறைந்த நெருப்பு!

 

 
13CHTheFrozenfire

சிறந்த அயல் மொழித் திரைப்படப் பிரிவில், கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு இலங்கைத் திரைப்படங்கள் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. ‘தி ரோட் ஃப்ரம் எலிஃபண்ட் பாஸ்’ (The Road from Elephant Pass, 2008), ‘மேன்ஷன் பை தி லேக்’ (Mansion By the Lake, 2002) ஆகிய படங்கள்தாம் அவை. தற்போது மூன்றாவதாக ‘தி ஃப்ரோஸன் ஃபயர்’ (The Frozen Fire) என்ற திரைப்படம் நேரடியாக ஆஸ்கர் - 2019 பரிந்துரையில் இடம்பிடித்துள்ளது. அதுவும் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ‘சிறந்த திரைப்பட’த்துக்கான ஆஸ்கர் விருதுப் பிரிவில் இடம்பிடித்துள்ளது.

ஈழத் தமிழர்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையில் உள்நாட்டுப் போர் உருவாக்கிய அசாதாரணச் சமூகச் சூழலைப் பல படங்கள் சித்தரித்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘பாம்ஸ் அண்டு ரோசஸ்’ (2009) உள்ளிட்ட பல படங்களை இயங்கியிருக்கும் கவனத்துக்குரிய படைப்பாளி அனுருத்தா ஜயசிங்கே. அவருடைய முந்தைய திரைப்படங்களான ‘சங்கரந்தி’, ‘தவால் தூவிலி’ ஆகியவை சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றவை.

 

அந்த வரிசையில், சிங்களப் போராளியாகப் பார்க்கப்படுபவரும் ஜனதா விமுக்தி பெரமுனா எனும் அமைப்பின் தலைவருமான ரோஹண விஜயவீராவின் வாழ்க்கையை மையமாகவைத்து அனுருத்தா இயக்கியிருக்கும் படம்தான் ‘தி ஃப்ரோஸன் ஃபயர்’திரைப்படம். மாஸ்கோவில் டாக்டர் பட்டம் பெற்ற விஜயவீரா, ‘சேகுவேரா போன்றதொரு கம்யூனிஸவாதி நான்’ என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டவர்.

1970-களில் சிரிமாவோ பண்டாரநாயகாவுக்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்தவர். விடுதலைப் புலிகளுக்கும் அவருக்கும் இடையில் மர்மங்கள் நிறைந்த தொடர்பு இருப்பதாகப் பல சர்ச்சைகள் உண்டு. அவருடைய வாழ்க்கை வரலாறே தற்போது ‘தி ஃப்ரோஸன் ஃபயர்’ ஆகியிருக்கிறது. இலங்கை மக்களை மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் இப்படம், ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இடம்பெறச் செயலாற்றியது ஆல் லைட்ஸ் ஃபில்ம் சர்வீசஸ் என்ற இந்திய நிறுவனமாம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24400234.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.