Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வில்- முதல்வர் பங்கேற்கார்- டெனீஸ்வரன் விவகாரத்தால் பின்வாங்கல்!!

Featured Replies

வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வில்- முதல்வர் பங்கேற்கார்- டெனீஸ்வரன் விவகாரத்தால் பின்வாங்கல்!!

 

 

CM-NPC.jpg

 
 

வடக்கு மாகாண சபையில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பாக இன்று சிறப்பு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு அவர் தகவலை அறிவித்துள்ளார்.

 

டெனீஸ்வரனுக்கு எதிரான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருப்பதன் காரணமாக அவர் சிறப்பு அமர்வைப் பின்னடித்துள்ளதாகத் தெரியவருகிறது.

http://newuthayan.com/story/09/வடக்கு-மாகாண-சபையின்-சிறப்பு-அமர்வில்-முதல்வர்-பங்கேற்கார்-டெனீஸ்வரன்-விவகாரத்தால்-பின்வாங்கல்.html

  • தொடங்கியவர்

டெனீஸ்வரன் விவகாரம்- சிறப்பு அமர்வு ஆரம்பம்- முதல்வர் புறக்கணிப்பு!!

media-share-0-02-03-a88d27d8800be0569493
 
 

வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி்.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ள அமர்வில் உறுப்பினர் 15 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

டெனீஸ்­வ­ரன் விவ­கா­ரம் தொடர்­பில் இன்று சிறப்பு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

வடக்கு மாகாண அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­மைக்­குக்கு எதி­ராக டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

கடந்த 29ஆம் திகதி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் இடைக்­கா­லக் கட்­ட­ளையை வழங்­கி­யி­ருந்­தது.

டெனீஸ்­வ­ரன் அமைச்­ச­ரா­கத் தொடர்­கின்­றார் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது. இருப்­பி­னும் டெனீஸ்­வ­ரன் வகித்த அமைச்­சுப் பொறுப்­புக்­கள் அவ­ரி­டம் மீள­வும் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை. அமைச்­சர் சபை மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வு­மில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://newuthayan.com/story/10/டெனீஸ்வரன்-விவகாரம்-சிறப்பு-அமர்வு-ஆரம்பம்-முதல்வர்-புறக்கணிப்பு.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்காக 15 நிமிடங்கள் ஓய்வு

 

 

media-share-0-02-03-a88d27d8800be0569493

 
 

வடக்கு மாகாணசபையில் நிலவும் முரண்பாடுகளை சுமுகமாகமுறையில் தீர்ப்பதற்கு தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக தற்போது சபை அமர்வு 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் இன்று சிறப்பு அமர்வு இடம்பெற்று வருகிறது.

http://newuthayan.com/story/14/பிரச்சினையை-சுமுகமாகத்-தீர்ப்பதற்காக-15-நிமிடங்கள்-ஓய்வு.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை - சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை - சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

 

வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவையை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை ஆளுநருக்கு வழங்குமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் 127 விசேட அமர்வு இன்று (16) கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, வட மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய நான்கு அமைச்சர்கள் சபைக்கு வருகை தரவில்லை.

சபையில் தமிழரசுக் கட்சி சார்ந்த உறுப்பினர்களும், எதிர்க்கட்சி தலைவர் உட்பட ஏனைய எதிரணி உறுப்பினர்களும் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளையின் பிரகாரம் வட மாகாண சபையில் யார் அமைச்சர்கள் என கோரி சபையில் விவாதங்கள் இடம்பெற்றன.

விவாதங்களின் போது உறுப்பினர்கள் பலர் முதலமைச்சருக்கு எதிராக காரசாரமான வார்த்தைகளை தெரிவித்ததுடன், சிலர் முதலமைச்சருக்கு சார்பான கருத்துக்களையும் முன்வைத்தனர்.

இவ்வாறு பல விவாதங்களின் இறுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்காலக் கட்டளை மூலம் எழுந்துள்ள நிலைமையை கருத்திற் கொண்டும், கட்டளை வழங்கப்பட்ட தினமான 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதியில் இருந்து முறைப்படியான அமைச்சர் சபை ஒன்று வடக்கு மாகாண சபைக்கு முழுமையாக பொறுப்புக் கூறக் கூடிய வகையில் இல்லாத நிலை ஒன்று தோன்றியுள்ளது.

இதனால் உடனடியான அரசியல் அமைப்பு மீறல் ஒன்று ஏற்பட்டு விடக்கூடும் என்ற நியாயமான அச்சம் எழுந்துள்ளமையைக் கருத்திற் கொண்டும், மக்களிற்குச் சேவை வழங்கக் கூடிய நிறைவேற்று தீர்மானங்களை எடுக்க முடியாதவாறு வட மாகாண நிர்வாகம் முழுமையாக முடங்கக் கூடிய ஒரு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், மாகாண சபையினது பிரதான கடமையான சட்ட வாக்கத் தத்துவத்தை பிரயோகித்து நியதிச் சட்டங்களை ஆக்க முடியாத தேக்க நிலை ஒன்று உருவாகியுள்ளதாலும் அதன் விளைவாக மாகாண செயற்பாடுகளிற்கு மத்தியின் சட்ட வாக்கங்களே பிரயோகமாகி அதிகாரப் பகிர்வுக் கோட்பாடே அர்த்தமற்றதாகி போய் விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் வடக்கு மாகாண முதலமைச்சர், அரசியலமைப்பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரது தத்துவத்தை முறையாகப் பயன்படுத்தி வடக்கு மாகாண சபைக்கு ஓர் முழுமையான அமைச்சர்கள் சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை எதுவித தாமதமும் இன்றி வடக்கு மாகாண ஆளுநருக்கு வழங்க வேண்டும் என்று இச்சபை தீர்மானிக்கின்றதாக அவைத் தலைவர் அவையில் அறிவித்தார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=104156

  • தொடங்கியவர்

வட மாகாண சபையில் ஆளும் கட்சியினரின் செயற்பாடு! தவராசா சாடல்

 

வடமாகாணசபையின் ஆளுங்கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால், இன்றைக்கு வடமாகாணசபை கேலிக்குரியதாக மாறியிருக்காது என வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சை குறித்து ஆராய்வதற்காக இன்று வடமாகாணசபையில் விசேட அமர்வு ஒன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்வாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாணசபை ஆளுங்கட்சியின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால் ஆயுதப்போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட குறைந்தபட்ச அதிகாரங்களை கொண்ட மாகாணசபை இன்று கேலிகுரியதாக மாறியிருக்காது.

இவ்வாறு கேலிக்குரியதாக மாற்றிய பொறுப்பு ஆளுங்கட்சி தலைவர்களையே சேரும். இன்றும்கூட ஆளுங்கட்சிக்குள் இருக்கும் கட்சி பிரச்சினைகள்தான் இப்படி மாறியிருக்கின்றது. ஆளுங்கட்சி கொரடாவாக யார் இருக்கிறார்கள்?

மேலும் ஆளுங்கட்சி கூட்டங்களை ஒழுங்காக நடாத்தியிருந்தால் இங்கே பேசப்படும் பல பிரச்சினைகளை பேசவேண்டிய அவசியம் வந்திருக்காது. இன்று பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக குடியேற்றங்கள் நடக்கின்றன.

இங்கே நீதியரசர், பல சட்டத்தரணிகள், அரச நிர்வாகிகள் இருக்கின்றீர்கள். ஆனால் குடியேற்றங்கள் குறித்து எவரும் கவனத்தில் எடுப்பதாக இல்லை. இன்று அமைச்சர்கள் தங்கள் நலன்களுக்காக மக்களை பாதிக்க விட்டிருக்கின்றார்கள்.

வெளியே மக்கள் கேட்கிறார்கள் வடமாகாணசபை எப்போது கலைக்கப்படும் என கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வடமாகாணசபை கடந்த 4 வருடங்கள் 8 மாதங்களில் எதனையுமே திறம்பட செய்யவில்லை.

என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இப்போது இந்த அமைச்சர்கள் பிரச்சினை வந்துள்ளதால் மிகுதி காலத்திலும் எதுவும் பயனுள்ளதாக நடக்காது என்றார்.

 

http://www.tamilwin.com/politics/01/188267?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற பிரச்சனைகளை விடுவம்.இது வரை  மாகன சபை என்ன செய்திருக்குது.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.