Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிறிக்கட் குழுவில் இடம்பெறும் தமிழ் வீரர்கள்

Featured Replies

வட மாகாண வீரர்களின் சாதனையே தேசிய அணிக்கான தெரிவு

 

 

Untitled-1-159-696x464.jpg
 

வட மாகாணத்தில் இரு கிரிக்கெட் வீரர்கள் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இணைந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்று இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முகாமையாளர் ஹேமந்த தேவப்பிரிய குறிப்பிட்டார்.

”யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் டெஸ்ட் குழாமில் 16 ஆவது வீரராக இருக்கும் வலதுகை சுழல் பந்துவீச்சாளர் (விஜயகாந்த்) வியாஸ்காந்த். அந்த பகுதியில் இருந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் வருவது மிகப்பெரிய சாதனையாகும்” என்று அவர் தெரிவித்தார்.

 

இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ளது. இதுபற்றி விளக்கும் ஊடக சந்திப்பு கொழும்பில் திங்கட்கிழமை (16) நடைபெற்றபோதே ஹேமந்த தேவப்பிரிய இதனை தெரிவித்தார்.

யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான வியாஸ்காந்த் இந்த டெஸ்ட் தொடருக்கு மேலதிக வீரராக இலங்கை இளையோர் குழாமில் முதல் முறை சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒருநாள் தொடரில் வட மாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்தியதை அடுத்தே அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த மாகாண மட்ட கிரிக்கெட் தொடரில் திறமையை வெளிப்படுத்திய பல வீரர்களும் இந்தியாவுடனான இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

”தொடர்ச்சியாக நடத்தப்பட்ட மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளால் தேர்வாளர்களுக்கு அனைத்து மாகாணங்களில் இருக்கும் வீரர்களையும் பார்க்க முடிந்தது. அணித் தேர்வில் அந்த திறமைகள் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.

நல்லதொரு குழாம் எமக்கு கிடைத்திருக்கிறது. எதிர்காலத்தில் இலங்கை அணிக்கு ஆடக்கூடிய வீரர்கள் இருக்கும் ஒரு குழாமாக இது உள்ளது. தமது திறமைகளை வெளிக்காட்ட அந்த வீரர்களுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமையவுள்ளது” என்று ஹேமந்த தேவப்பிரிய தெரிவித்தார்.

பந்துவீச்சில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வரும் வியாஸ்காந்த் கடந்த ஜூலை 13, 14 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை 19 வயதுக்கு உட்பட்ட பதினொருவர் அணிக்காக அதிகபட்சம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தேர்வுக் குழுவினரின் அவதானத்தை பெற்றுள்ளார்.

அதேபோன்று 19 வயதுக்கு உட்பட்ட வட மாகாண அணியின் தலைவராக செயற்பட்ட யாழ் மத்திய கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளர் எஸ். மதுஷனும் இலங்கை இளையோர் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொழும்பு, NCC மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கு தமது அணி தயாராக இருப்பதாக இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவர் நிபுன் தனஞ்சய பெரேரா குறிப்பிட்டார்.

 

”சமபலமான அணி ஒன்று எம்மிடம் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக தொடர் முழுவதும் நன்றாக ஆட எதிர்பார்த்துள்ளோம். இந்திய அணி பலமான அணியாக இருந்தபோதும் எமது அணியும் அதற்கு நிகராக உள்ளது. தொடரை சிறந்த முறையில் பூர்த்தி செய்யவே எதிர்பார்த்திருக்கிறோம்” என்று வென்னப்புவ புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த சகலதுறை வீரரான நிபுன் தனஞ்சய நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை இளையோர் குழாமில் கடந்த முறை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் ஆடிய ஐந்து வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த 15 வயதுடைய இளம் வீரர் துனித் வெல்லாலகேவும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.  

”இந்த குழாத்தில் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஆடிய வீரர்களுடன் 1999 ஆம் ஆண்டு பிறந்த வீரர்களும் உள்ளனர். இந்த தொடரிலும் அடுத்து வரவிருக்கும் ஆசிய கிண்ண தொடரிலும் எதிர்வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண அணியில் ஆட முடியுமான வீரர்கள் அதிகம் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த தொடரில் திறமையை வெளிப்படுத்துவதை இலக்காகக் கொண்டே அணி தேர்வுகள் இடம்பெற்றபோதும் அடுத்த இளையோர் உலகக் கிண்ணமே பிரதான இலக்காக உள்ளது” என்று ஹேமந்த தேவப்பிரிய குறிப்பிட்டார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டித் தொடர் ஜூலை மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையுடன் இணைந்து எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பல சுற்றுப்போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

”19 வயதுக்கு உட்பட்ட சுற்றுப்போட்டிகள் இளம் வீரர்களுக்கு தமது திறமையை வெளிப்படுத்த வழி ஏற்படுத்தி கொடுப்பதாக உள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையாக நாம் இந்திய கிரிக்கெட் சபையுடன் நீண்ட காலமாக நல்ல உறவை பேணி வருகிறோம். இந்திய கிரிக்கெட் சபையுடன் எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இதேபோன்ற இரு தரப்பு சுற்றுப்பயணங்களை எதிர்வரும் காலங்களிலும் நடத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

இந்திய கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட்டுக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது. வயது மட்ட போட்டி தொடர்களில் அவர்கள் பலம் மிக்கவர்களாக உள்ளனர். இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இலங்கை சுற்றுப்பயணம்  இலங்கை இளம் வீரர்களுக்கு தமது திறமை மற்றும் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

இலங்கை இளையோர் அணிக்காக பந்துவீச்சில் சோபித்த யாழ் மத்திய கல்லூரி வீரர் வியாஸ்காந்த்

  • கருத்துக்கள உறவுகள்

 சிறிலங்காவின் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான  கிறிக்கட் குழுவில் இடம்பெறும் தமிழ் வீரர்கள்

37225243_1620320448077395_74212413747767

 

37338410_1620320488077391_32964292025966

  • தொடங்கியவர்

 

இலங்கை அணியில் தமிழ் பேசும் வீரர்களின் பிரவேசம் ஆரம்பம்

இலங்கை இளம் அணியில் தமிழ் பேசும் வீரர்கள் உள்வாங்கப்பட்டமை எதனை உணர்த்துகின்றது என்பது குறித்து விளக்கும் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜயப்பிரகாஷ்.

  • தொடங்கியவர்

இன்று ஆரம்பமாகிய 2 வது டெஸ்ட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான வியாஸ்காந்த் 16 ஓவர்கள் பந்துவீசி  71 ஓட்டங்களை விட்டு கொடுத்து 1 விக்கெட்யை வீழ்த்தி உள்ளார்.

356/3 *

 

 

 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தமிழ் கிரிக்கெட் வீரர்

 

19 வயதிற்குட்பட்டோருக்கான இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலாள கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சார்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் வீரரொருவர் களமிறங்கியுள்ளார்.

Vijayakanth-Vijayakanth.jpg

19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

இப் போட்டியிலேயே யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற வீரர் இலங்கை பதினொருவர் அணியில் விளையாடுகின்றார்.

 

யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியஸ்காந்த், மேல், வடமத்திய மற்றும் வடமேல் மாகாண அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சுப்பெறுதிகளைப்பெற்றுள்ளார். இதேவேளை, அணி இக்கட்டான நேரத்தில் துடுப்பெடுத்தாடும் திறமை கொண்டவர்.

அண்மையில் இடம்பெற்ற இந்திய மற்றும் இலங்கை பத்தொன்பதுக்கு வயதிற்குட்பட்டோருக்கான பயிற்சிப் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களைக் வியஸ்காந்த் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்திய அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. தற்போதுவரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 59 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/37179

  • தொடங்கியவர்

இந்திய அணியின் மிகப்பெரிய இணைப்பாட்டத்தை முடித்தார் வியாஸ்காந்த்

Vijayakanth-Viyaskanth-696x464.jpg
 

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி இமாலய ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

 

இதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய  அணிக்கு முதல் முறை களமிறங்கிய யாழ் மத்திய கல்லூரி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது சுழற்பந்து மூலம் தீர்க்கமான விக்கெட்டை வீழ்த்தினார். எனினும் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவின்போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 428 ஓட்டங்களை பெற்று இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது.

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (24) ஆரம்பமான நான்கு நாட்கள் கொண்ட இந்த இளையோர் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் அனுஷ் ராவத் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இந்தியாவுடனான தோல்வியை சந்தித்த முதல் டெஸ்ட் போட்டில் ஆடிய இலங்கை இளையோர் அணியில் இருந்து இந்த போட்டியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. நவீன் பெர்னாண்டோ, துலித் வெல்லாலகே மற்றும் ஷஷிக்க துல்ஷான் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் வியாஸ்காந்த், சொனால் தினூஷ மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

இதில் வியாஸ்காந்த் 36 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை தேசிய அணி ஒன்றில் இடம்பெறும் முதல் வட மாகாணத்தைச் சேர்ந்த வீரராக பதிவானார்.

 

 

இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்தியதை அடுத்தே அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் முதல் விக்கெட்டை வலதுகை சுழற்பந்து வீச்சாளர் கல்ஹார செனரத்னவினால் வீழ்த்த முடிந்தது. இந்திய அணித்தலைவர் ரவாத் 11 ஓட்டங்களுடன் செனரத்னவின் பந்துக்கு போல்டானார்.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆரம்ப வீரர் அதர்வா டயிட் மற்றும் பவன் ஷா ஜோடி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இருவரும் முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை துடுப்பெடுத்தாடி 263 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்மூலம் இந்திய அணி 300 ஓட்டங்களை கடந்தது.

 

இந்த இருவரதும் இணைப்பாட்டமானது இளையோர் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்களை சமப்படுத்துவதாகும். 2007ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற இலங்கை இளையோர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய இளையோர் அணியின் அபினவ் முகுந்த் மற்றும் தன்மாய் சிறிவாஸ்தாவா ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 263 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இவ்வாறான ஒரு நிலையில், செயற்பட ஆரம்பித்த வியாஸ்காந்த் அபாரமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அதர்வா டயிடின் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் இந்திய அணியின் மிகப்பெரிய இணைப்பாட்டத்தை (260) முறியடித்த வியாஸ்காந்த் தேசிய அணிக்காக தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். டயிட் 172 பந்துகளில் 20 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 177 ஓட்டங்களை பெற்றார்.

டயிடின் விக்கெட் வீழ்த்தப்பட்ட பின் இந்திய அணியின் ஓட்ட வேகம் குறைந்தது. இந்நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு ரன் அவுட்களை பெற்றது இலங்கைக்கு ஆறுதலை ஏற்படுத்தியது. தேவதூத் பதிக்கல் 6 ஓட்டங்களுடன் ஓடும்போது ஆட்டமிழந்தார்.

 

 

பவன் ஷாஹ்வுடன் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட ஆர்யான் ஜுவாலும் 41 ஓட்டங்களுடன் தேவையற்ற முறையில் ரன் அவுட் ஆனார்.

எனினும் ஒரு முனையில் சிறப்பாக ஆடிவரும் பவன் ஷாஹ் ஆட்டமிழக்காது 177 ஓட்டங்களுடன் இரட்டைச் சதத்தை நெருங்கியுள்ளார். அவர் இந்த ஓட்டங்களை பெறுவதற்கு 227 பந்துகளுக்கு முகம்கொடுத்து 19 பௌண்டரிகளை பெற்றுள்ளார். அவருடன் நேஹால் வதேரா 33 பந்துகளில் 5 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார்.     

இதன்போது இலங்கை இளையோர் சார்பில் ஆறு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் வியாஸ்காந்த் மற்றும் செனரத்னவினால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டது. 18 ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந்த் 80 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார்.

நாளை (25) போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும்.

போட்டியின் சுருக்கம்

Full Scorecard

 

India U19

 

428/4 & 0/0

(0 overs)

Result

0/0 & 0/0

(0 overs)

Sri Lanka U19

 

India U19’s 1st Innings

Batting         R B
Atharva Taide c N.Madushka b V.Viyaskanth 177 172
Anuj Rawat b K.Senaratne 11 38
Pawan Shah not out 177 227
Devdutt Paddikal (runout) K.Mishara 6 16
Aryan Juyal (runout) V.Viyaskanth 41 61
Nehal Wadhera not out 5 33
Extras
11 (lb 4, nb 7)
Total
428/4 (90 overs)
Fall of Wickets:
: 1-40 (A. Rawat, 11.2 ov), 2-303 (A Taide, 57.4 ov), 3-331 (D Padikkal, 65.2 ov), 4-407 (A Juyal, 80.4 ov)
Bowling O M R W E
Kalana Perera 13 1 58 0 4.46
Nipun Malinga 10 1 50 0 5.00
Kalhara Senaratne 26 1 128 1 4.92
Sandun Mendis 14 2 67 0 4.79
Vijayakanth Viyaskanth 18 2 80 1 4.44
Sonal Dinusha 9 0 41 0 4.56

Sri Lanka U19’s 1st Innings

 

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசிய பவன் ஷா, முச்சதத்தைத் தவறவிட்டார்: இந்தியா யு-19 அணி 613 ரன்களுக்கு டிக்ளேர்

 

 
pawan

பவன் ஷா. | படம்: ட்விட்டர்.

இளம் மகாராஷ்டிரா பேட்ஸ்மன் பவன் ஷா 282 ரன்கள் விளாசினார், இது யு-19 சர்வதேச போட்டிகளில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசி சாதனை புரிந்துள்ளார் பவன் ஷா. இலங்கை யு-19 அணிக்கு எதிராக இந்திய யு-19 அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 613 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய யு-19 அணி ‘இளையோர் டெஸ்ட்’ தொடரில் ஆடி வருகிறது. இதில் ஹம்பண்டோட்டாவில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியின் 2ம் நாளில்தான் இளைய வீரர் பவன் ஷா 282 ரன்கள் குவித்தார், இந்தியா யு-19 613 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

 
 

பவன் ஷாவின் 282 ரன்கள் 332 பந்துகளில் விளாசப்பட்டது இதில் 33 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் அடங்கும். முச்சதத்தை 18 ரன்களில் தவற விட்டார் பவன் ஷா.

1995ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் ஆஸி.யின் கிளிண்டன் பீக் 304 நாட் அவுட் சாதனையை பவன் ஷா முறியடிக்க முடியாமல் போனது.

இந்த இன்னிங்சின் முக்கிய அம்சம் இன்னிங்சின் 108வது ஓவரில் இலங்கை இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் விசித்ரா பெரேராவை தொடர்ச்சியாக 6 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார் பவன் ஷா.

சந்தீப் பாட்டீல் ஒருமுறை பாப் வில்லிசை 6 பவுண்டரிகள் விளாசினார், அதே போல் மே.இ.தீவுகளின் சர்வான், இந்தியாவின் முனாஃப் படேலை டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்தார், 2015 உலகக்கோப்பையில் இலங்கையின் திலக ரத்ன தில்ஷான், ஆஸி.இடது கை வேகப்பந்து புயலான மிட்செல் ஜான்சனை ஒரேஓவரில் 6 பவுண்டரிகள் விளாசினார்.

இந்த இன்னிங்ஸின் போது பவன் ஷா 2வது விக்கெட்டுக்காக இடது கை தொடக்க வீரர் அதர்வா டைடுடன் (177) இணைந்து 263 ரன்களை இருவரும் சேர்த்தனர். நிகில் வஹேராவுடன் இணைந்து 167 ரன்களைச் சேர்த்தார் பவன் ஷா.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 613/8 டிக்ளேருக்கு எதிராக இலங்கை முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஜங்ரா 43/3.

https://tamil.thehindu.com/sports/article24513018.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

பீனிக்ஸ் பறவையாய் விஸ்வரூபம் எடுத்த தமிழ் இளைஞன்! சர்வதேசத்தை மிரட்ட வரும் யாழ் மைந்தன்

 

வடக்கிலிருந்து போர் மேகங்கள் நகர்ந்து சென்றாலும், மக்களின் மனங்களில் அது கொடுத்த ரணங்கள் இன்னமும் மாறவில்லை.

இழப்புக்களோடும் வலிகளோடும், வாழும் சமூகத்தில் இளைய தலைமுறையினரின் கனவுகளுக்கும் அவை தடையாகிக் கொண்டிருக்கின்றன. அத்தகு தடைகளை உடைத்து வெளியே வரத் துடிக்கும் நமது அடுத்தடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகத் தான் கிடைக்கின்றன.

பொதுவாக இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் தமிழ் வீரர்கள் இல்லாமல் இருப்பது அல்லது உள்வாங்கப்படாமல் இருத்தல் எமக்கான வெற்றிடத்தை எப்பொழுதும் காட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த வெற்றிடத்தை நிரப்பும் கனவோடு களம் கண்டு வெற்றிப் பாதையில் பயணிக்கிறான் யாழ்.மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஒருநாள் தொடரில் வடமாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்திய வியாஸ்காந், அடுத்து இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான தொடருக்கு தெரிவு செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.

தமிழ் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாய் மிளிரத் தொடங்கியிருக்கும் வியாஸ்காந்தோடு பேசினோம்.

”என்னுடைய இந்த வெற்றிக்கு யாழ். மத்திய கல்லூரிக்கு பெரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். என் திறன் கண்டு, அதற்கு ஏற்றால் போல பயிற்சிகளை எடுத்துக் கொள்வத்கு என் பள்ளிக்கூடம் பெரும் உதவியாக இருந்தது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அதேபோன்று என் குடும்பத்தை குறித்துப் பேசியாக வேண்டும். அவர்கள் கொடுக்கும் ஆதரவும், ஊக்குவிப்பும் இல்லையென்றால் என்னால் இவ்வளவு தூரம் வரை செல்ல முடிந்திருக்காது.

என்னுடைய சகோதரர்களும் பயிற்சிக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்தளவு தூரம் நான் வந்திருக்கிறேன்.

வழமையாக அனைத்துப் போட்டிகளும் நன்றாக என்னுடைய திறனை வெளிப்படுத்துவேன். வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப்படும், மத்தியகல்லூரி எதிர் பரியோவான் கல்லூரிகளுக்கிடையில் நடந்த சமர் போட்டிகள் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்தப் போட்டிகளில் ஓரளவுக்கு என் திறனை வெளிப்படுத்தி கல்லூரி வெற்றிக்கு என் பங்கும் இருந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். அந்தப் போட்டியில் இரு இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும், 36 ஓட்டங்களையும் பெற்றேன்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

தொடர்ந்து மாகாண மட்டப் போட்டிகள் சவாலாக இருந்தன. அந்தப் போட்டிகளில் விளையாடுவதற்கு அதிகளவான பயற்சிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. வட மத்திய, வட மேல் மாகாணங்களுக்கிடையிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக 19வயது தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டேன்.

சாதாரணமாக எமது மைதானங்களில் விளையாடி விட்டு பெரும் மைதானங்களில் விளையாடுவதென்பது கடினமான ஒன்று. இதற்கு அதிகளவான பயிற்சிகள் தேவை என்பதை உணர்ந்தேன்.

எமது மாகாணங்களில் பல இளைஞர்கள் மாணவர்கள் விளையாடும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்புக்கள், வசதிகள் இடம் கொடுப்பதில்லை. அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” என்று கூறுகிறார் வியாஸ்காந்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

எங்கள் பிள்ளையின் வெற்றிப் பாதையை எண்ணிப் பெருமை கொள்கிறோம் என்கிறார்கள் வியாஸ்காந்தின் பெற்றோர்கள். சிறு வயதிலிருந்தே அவன் பந்தோடு தான் இருப்பான். அவனுக்கான தடைகளை நாங்கள் விதித்ததில்லை. பாடசாலை அணியில் சேர்ந்து விளையாடுவதற்கும் அடம்பிடித்துக் கொண்டான்.

தேசிய அணியில் விளையாடிய முதலாவது யாழ். வீரர் என்ற பெருமையை அவன் பிடித்திருப்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவனின் அடைவு மட்டத்தை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றோம் என்கிறார்கள் பெற்றோர்கள்.

பதினாறு வயதேயான விஜயகாந்த் வியாஸ்காந் யாழ். மத்திய கல்லூரியே தன்னை அடையாளப்படுத்தியதாக குறிப்பிடுகிறான். தனக்கு பயிற்சி கொடுத்த சிறு வயது- ராஜதுரை வினோத்குமார் தற்போது- சந்திரமோகன் சுரேஷ்மோகன் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறான்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

தன்னுடன் சேர்ந்து விளையாடிய சக வீரர்கள், மாணவர்களை நினைவுபடுத்தும் வியாஸ்காந், முதலாவது சர்வதேசப் போட்டியில் முதலாவது இன்னிங்ஸ் 21 ஓவர் 94 ரண் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருக்கிறான். துடுப்பாட்டத்தில் 3 ரண் (17 பந்துகள்). இரண்டாவது இன்னிங்ஸ் ; துடுப்பாட்டம் 16 ரண்(32பந்துகள்). களத்தடுப்பு - ஒரு ரண் அவுட். எடுத்திருக்கிறான்.

இலங்கையின் தேசிய அணியில் விளையாடி பெரும் சாதனைகளை படைப்பது தனது கனவு என்று கூறும் வியாஸ்காந்திற்கு வாழ்த்துக்கள்.

வடக்கு கிழக்கிலிருந்து தேசிய அணிகளுக்கு தெரிவாகும் வாய்ப்புக்களை பெற இருக்கும் இன்னும் பிற எமது இளைய தலைமுறை வீரர்களுக்கு வியாஸ்காந்தின் வெற்றிப் பயணம் முன்னுதாரணமாக அமையட்டும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஒரு இனத்தின் வெற்றியென்பது ஒட்டுமொத்த இனத்தின் வெற்றியாகவும், அடையாளமாகவும் மாறும். இன்று பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் எம் அடுத்த தலைமுறையினரின் வெற்றி என்பது மகத்தானது. வரலாற்றில் பதியப்பட வேண்டியது.

அத்தகு பாதையில் பயணிக்கும் வியாஸ்காந் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி மற்றைய அணிகளுக்கு மிரட்டலாய் அமையட்டும். அவன் வழி தேசிய அணியில் தமிழ் இடம் மீண்டும் பிடிக்கட்டும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/special/01/189299?ref=imp-news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.