Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி?: நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு!

Featured Replies

ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி?: நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு!

 

 
dhoni9191

 

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ரன்களை எடுத்தனர். முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 71 ரன்களை குவித்தார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் தோனி செய்த ஒரு காரியம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அனைத்து வீரர்களும் பெவிலியன் நோக்கித் திரும்பியபோது தோனி மட்டும் நடுவர் அருகே சென்று அன்றைய ஆட்டத்தின் பந்தை வாங்கிக்கொண்டார். 

இது தோனியின் வழக்கமான செயல் அல்ல. இந்திய அணி வெற்றி பெறுகிற தருணங்களில் மட்டும் ஒரு ஸ்டம்பை எடுத்துக்கொள்வது தோனியின் வழக்கமாக உள்ளது. மற்றபடி நேற்று தோல்வி பெற்ற ஓர் ஆட்டத்தின் முடிவில் புதிய வழக்கமாக நடுவரிடமிருந்து பந்தை வாங்கியது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. 

2014-ல் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகும் முன்பு தோனி இதேபோல ஒரு செயலைச் செய்தார். அதிதான் தற்போதைய பயத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ஸ்டம்பை எடுத்துவைத்துக்கொண்டார் தோனி. இது இந்திய அணி வீரர்களுக்குப் புதிராக இருந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் தோனி. அதேபோல தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தோனி விலக முடிவெடுத்துள்ளார், அதனால்தான் பந்தை நடுவரிடமிருந்து வாங்கியுள்ளார் என நேற்றிரவு முதல் பரபரப்பு உருவாகியுள்ளது. 

2-வது ஒருநாள் போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார் தோனி. இதற்குக் கடுமையான விமரிசனங்களை அவர் எதிர்கொண்டார். நேற்றும் சுமாராகவே ஆடினார். 66 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோற்று ஒருநாள் தொடரிலும் தோல்வியை எதிர்கொண்டது. 

இதனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற முடிவெடித்துள்ளார், அதற்கான அறிவிப்பைச் சில நாள்களில் அறிவிக்கவுள்ளார், அதனால்தான் தன்னுடைய கடைசி ஆட்டத்தின் ஞாபகமாக பந்தை வாங்கிவைத்துக்கொண்டார் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

நேற்றைய ஆட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஷர்துல் தாக்குரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நான் அதைப் பார்க்கவில்லை, எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என்று பதிலளித்தார்.

 

http://www.dinamani.com/sports/sports-news/2018/jul/18/ms-dhoni-takes-odi-match-ball-from-umpire-sparks-conjectures-about-retirement-2962673.html

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருட உலகக் கோப்பையைக் கொண்டு தான் போவார்.

  • தொடங்கியவர்

எதற்கு  நடுவரிடமிருந்து பந்தை வாங்கினார் தோனி?- நெட்டிசன்கள்  குழப்பம்

fgtypng

நடுவரிடமிருந்து பந்தை வாங்கும் தோனி

இங்கிலாந்துடனான மூன்றாவது ஆட்டத்தின் முடிவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி நடுவரிடமிருந்து பந்தை வாங்குகிறார். இந்த வீடியோவைக் கண்ட சிலர் தோனி ஓய்வை அறிவிக்கப் போவதாக அச்சம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒரு நாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

 

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி சிறப்பாக ஆடவில்லை என்று அவர் ஓய்வுபெற வேண்டும் தோனி வெறுப்பாளர்கள் ஒருபக்கம் குரல் கொடுத்துவரும்வேளையில்,  தோனி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

இங்கிலாந்துடனான மூன்றாவது போட்டியின் ஆட்டத்தின் முடிவில் நடுவர்களிடமிருந்து பந்தை தோனி வேகமாகப் பெற்றுச் செல்லும் வீடியோதான் அது.

கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவர்கள் தங்கள் கடைசி ஆட்டங்களின்போது அந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பந்தையோ, ஸ்டெம்பையோ  பெற்றுக் கொள்வார்கள். அதன்படி ஓய்வுக்கான முடிவை தோனி அறிவிப்பதற்காக பந்தை வாங்கிக் கொண்டாரா? என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் குழப்பங்களூடன், வருத்தங்களுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பான சிலரின் பதிவுகள்:

Nucky

‏யார் வந்தாலும் போனாலும் கிரிக்கெட் தனக்கான தலைவனை உருவாக்கிக் கொள்ளும். இதில் தோனி மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு..!!

Tamil Sundar R

‏தோனி என்ன சச்சினா..... தோனி சச்சின்லா இல்ல ஆணா.... தோனி தோனிதான்....

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்...

Baladoss

‏தோனி பர்ஸ்ட் மேட்ச் பேட்டிங்கே பண்ணலை... Fitness இல்ல. ரிட்டையர் ஆகணும்.

2வது மேட்ச்ல... 10000 ரன்னே இப்பதான் அடிச்சாரு.. ரிட்டையர் ஆகணும்.

3வது மேட்ச்ல 42 ரன்தான் அடிச்சாரு... ரிட்டையர் ஆகணும்.

இந்தியா 2 மேட்ச்ல டாஸ் தோத்தாங்க.. தோனி கன்டிப்பா ரிட்டையர் ஆகணும்.

மீனம்மா

‏தோனி ஓய்வு பெற்றால்.. கிரிக்கெட் தன் அழிவுக்காலத்தை தொடங்கும் :(

Mahi AK

‏தோனி கேப்டனா இருந்திருந்தால் தோத்ததுக்கு அவன கைகாட்டி விட்ருப்பாய்ங்க. இப்ப பேட்ஸ்மேன், பவுலர், பால்பாய் முதற்கொண்டு எல்லாரையும் குறை சொல்லிட்டு இருக்கானுங்க

Baladoss

‏ஏன்டா.. கோலி சாதனை பண்ணா தோனி ஏன் ரிட்டையர் ஆகணும்...

தோனியின் ஓய்வு குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/opinion/blogs/article24451995.ece?utm_source=HP&utm_medium=hp-online

  • தொடங்கியவர்

தோனி ஓய்வு பெறப்போவதாக உருவான பரபரப்பு: ரவி சாஸ்திரி விளக்கம்!

 

 
dhoni_wk1xx

 

தோனி ஒய்வுபெறப்போவதாக உருவான பரபரப்பு குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ரன்களை எடுத்தனர். முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 71 ரன்களை குவித்தார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் தோனி செய்த ஒரு காரியம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தின. 

இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அனைத்து வீரர்களும் பெவிலியன் நோக்கித் திரும்பியபோது தோனி மட்டும் நடுவர் அருகே சென்று அன்றைய ஆட்டத்தின் பந்தை வாங்கிக்கொண்டார். 

இது தோனியின் வழக்கமான செயல் அல்ல. இந்திய அணி வெற்றி பெறுகிற தருணங்களில் மட்டும் ஒரு ஸ்டம்பை எடுத்துக்கொள்வது தோனியின் வழக்கமாக உள்ளது. மற்றபடி தோல்வி பெற்ற ஓர் ஆட்டத்தின் முடிவில் புதிய வழக்கமாக நடுவரிடமிருந்து பந்தை வாங்கியது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியது. 

2014-ல் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகும் முன்பு தோனி இதேபோல ஒரு செயலைச் செய்தார். அதுதான் தற்போதைய பயத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ஸ்டம்பை எடுத்துவைத்துக்கொண்டார் தோனி. இது இந்திய அணி வீரர்களுக்குப் புதிராக இருந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் தோனி. அதேபோல தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தோனி விலக முடிவெடுத்துள்ளார், அதனால்தான் பந்தை நடுவரிடமிருந்து வாங்கியுள்ளார் எனக் கடந்த இரு நாள்களாகச் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு உருவானது. 

இந்நிலையில் தோனி ஒய்வுபெறப்போவதாக உருவான பரபரப்பு குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

நடுவரிடமிருந்து தோனி பந்தை வாங்கியதற்குக் காரணம் - அந்தப் பந்தின் தன்மை குறித்து பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருணிடம் விளக்குவதற்காகத்தான். பந்து எந்தளவுக்குத் தேய்மானம் கண்டுள்ளது, பந்தின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்பதை விளக்குவதற்காகப் பந்தை வாங்கிச் சென்றார் தோனி. இதை வைத்து தோனி ஓய்வு பெறப்போகிறார் என்று கதை கட்டுவது முட்டாள்தனம். தோனி எங்கேயும் சென்றுவிடமாட்டார். ஆனால் இதை வைத்து உருவான அமளிகள் எல்லாம் அபத்தங்கள் என்று பேட்டியளித்துள்ளார்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jul/19/ravi-shastri-dismisses-speculation-surrounding-ms-dhonis-retirement-2963445.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.