Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘முகாம்களும் இல்லாதுபோகும்’

Featured Replies

‘முகாம்களும் இல்லாதுபோகும்’
 

வடக்கு மாகாணத்திலுள்ள முகாம்களை அகற்ற, இப்போதைக்கு எந்தவோர் அபிப்பிராயமும் இல்லை. இருப்பினும், அனைவரும் ஒன்றிணையும் நேரத்தில், அவை இயல்பாகவே இல்லாமல் போய்விடுமெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு என்பது, இலங்கையின் ஒரு பகுதியென்றும் இங்கு பயங்கரவாதம் காணப்பட்ட போதிலும், படிப்படியாகப் பயங்கரவாதம் இல்லாமல் போகும்போது, முகாம்களும் இல்லாமல் போகவேண்டுமெனக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (22) ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர் கூறியதாவது,

“யுத்தத்துக்கு முன்பு அதிகம் சிறந்த தியாக மனப்பான்மையுடைய ஆசிரியர்கள் வடக்கில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. யுத்தத்தால் அனைத்தும் சீரழிந்து விட்டதால், நாம் அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்வரும் காலங்களில், இவ்வாறான சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதற்கான பயிற்சிகளை அளிக்கவேண்டும். இதற்கான வேலைத்திட்டத்தை, கல்வி அமைச்சர் அகில விராஜ் மேற்கொள்வார்.

“இதுதொடர்பில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை யாழ்ப்பாணத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இவர்களுக்குப் பயிற்சியளிக்க, வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை இலங்கைக்கு வரவழைக்கும் நடவடிக்கையை, முதலமைச்சர், மாகாண மற்றும் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும்.

“வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை, 45 நாட்களுக்குள் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர், இராணுவத் தளபதி, வடக்குக் கட்டளைத் தளபதி ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவில்லையெனக் கூறினர். அவ்வாறாயின், யார் அந்த உத்தரவைப் பிறப்பித்தது? யாழ்ப்பாணத்திலுள்ள படை முகாம்களில், சீர்திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு, பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன” என்று, பிரதமர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/முகாம்களும்-இல்லாதுபோகும்/71-219386

  • தொடங்கியவர்

நாடு அபி­வி­ருத்தி அடை­யும்­ போது – ராணு­வத்­தின் தேவை வீழ்ச்­சி­யு­றும்- ரணில் விக்­கி­ர­ம­சிங்க!!

 

 

37627944_993336947511253_834729990219523

 
 
 

ஒரு நாடு அபி­வி­ருத்தி அடைய அடைய இரா­ணு­வத்­தின் தேவை­யும் வீழ்ச்­சி­ய­டை­யும். அதை நாங்­கள் மூடி மறைத்­துச் செய்­யப் போவ­தில்லை. வெளிப்­ப­டை­யா­கக் கூறியே செய்­வோம். தெற்­கில் சில­ருக்கு பிர­பா­க­ர­னுக்கு உயி­ரூட்­ட ­வேண்டிய தேவை இருக்­கின்­றது. இன­வா­தத்­துக்­கும் அவர்­கள் உயி­ரூட்­டு­ கின்­ற­னர்.

இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.
வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளில் கட­மை­யாற்­றும் தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கும் நிகழ்வு நேற்று யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் நடை­பெற்­றது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு நிய­ம­னம் வழங்­கும் நிகழ்வை ஆரம்­பித்து வைத்­தார். இந்த நிகழ்­வில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

 

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரிக்கு வர வாய்ப்­புக் கிடைத்­த­மைக்கு பெரி­தும் மகிழ்ச்­சி­ய­டை­கின்­றேன். ஆறு­மு­கம் நாவ­ல­ரின் செயற்­பாடே இவற்­றுக்கு முன்­னு­தா­ர­ணம். அவ­ரின் காலத்­துக்­குப் பின்­னரே இந்­துக் கல்­லூ­ரி­கள் வளர்ச்­சி­ய­டைந்­தன. இந்­துக் கல்­லூ­ரி­க­ளைப் பின்­பற்­றியே தென்­ப­கு­தி­க­ளில் செயற்­பா­டு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இவை அத்­த­னை­யும் ஒரு தொடர்­பு­பட்ட விட­ய­மா­கும். போரின் பின்­ன­ரான காலத்­தில் பாட­சா­லை­க­ளில் ஆசி­ரி­யர்­கள் பற்­றாக்­குறை இருந்­தது. நாம் அறி­வித்­தி­ருந்த தகு­தி­கள் உடை­ய­வர்­கள் இருக்­க­வில்லை. தற்­போது தகு­தி­யான அனை­வ­ரை­யும் உள்­வாங்­கும் முக­மாக நாங்­கள் இந்­தச் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­துள்­ளோம்.

680 தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நாங்­கள் நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­கி­யுள்­ளோம். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா ஒவ்­வொரு கிழ­மை­யும் இனி இது தொடர்­பில் எனக்கு நினை­வூட்­ட­மாட்­டார் என்று நினைக்­கின்­றேன்.

கல்­வி­யின் சீர­ழிவு

போருக்கு முன்­னர் சிறந்த ஆசி­ரி­யர்­கள் யாழ்ப்­பா­ணத்­தில்­தான் இருந்­தார்­கள். போரால் அனைத்­தும் சீர­ழிந்து போய்­விட்­டது. அதை நாங்­கள் மீண்­டும் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டும். அதற்­குப் பயிற்சி பெற்ற ஆசி­ரி­யர்­கள் தேவை. ஆசி­ரி­யர்­க­ளுக்­கான பயிற்­சி­களை வழங்க கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம் நட­வ­டிக்கை எடுப்­பார். ஓய்வு பெற்று வெளி­நா­டு­க­ளில் உள்­ள­வர்­க­ளைக் கொண்­டு­வந்து இவ்­வா­றான பயிற்­சி­களை வழங்க முடி­யும் என்று நாங்­கள் நம்­பு­கின்­றோம்.

நாம் பாட­சா­லை­யில் கற்­ற­போது போட்டி இருந்­தது. க.பொ.த உயர்­த­ரம், க.பொ.த சாத­ரண தரப் பெறு­பே­று­கள் வெளி­யா­கும்­போது யாழ்ப்­பா­ணப் பாட­சா­லையா? அல்­லது எமது பாட­சா­லையா (கொழும்பு) சிறந்த பெறு­பே­று­க­ளைப் பெறும் என்ற போட்­டித் தன்மை இருந்­தது. ஒக்ஸ்­வேர்ட் பல்­க­லைக் கழ­கத்­துக்­கும் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து தேர்ச்சி பெற்­றி­ருந்­த­னர். அவர்­க­ளின் அதி­க­மா­ன­வர்­கள் ஹாட்­லிக் கல்­லூரி மாண­வர்­கள். அதில் குறிப்­பித்­தக்­க­வர் சுந்­த­ர­லிங்­கம்.

சிறந்த கல்­விச்­சேவை

அதே­போன்ற சிறந்த கல்­விச் சேவையை நாம் வழங்க வேண்­டும். சிறந்த ஆசி­ரி­யர்­கள் இருக்­கும் பட்­சத்­தில் நாம் அப்­ப­டி­யான கல்வி வளத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். இது போன்ற மேல­தி­க­மான ஆசி­ரி­யர்­க­ளை­யும் சேர்த்­துக் கொள்­ளப் போகின்­றோம். விளை­யாட்­டுத் துறை, நட­னத்­துறை என்­ப­வற்­றை­யும் மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம். நாங்­கள் பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளை­யும் அண்­மை­யில் உள்­வாங்­கி­யுள்­ளோம். நாம் முடிந்த அளவு ஏனைய மாகா­ணங்­க­ளுக்­கும் தமிழ் மொழி ஆசி­ரி­யர்­களை இணைத்­துக் கொள்ள முயற்­சிக்­கின்­றோம்.

குழப்­பக்­கூ­டாது

நாம் ஒன்­றித்து இருக்க வேண்­டும். அனை­வ­ரும் ஒன்­றித்­துப் பய­ணிக்க வேண்­டும். அதைக் குழப்­பும் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டக் கூடாது. யாழ்ப்­பா­ணப் படை­யி­னர் தொடர்­பில் சில சீர் திருத்­தங்­கள் நடை­பெ­று­கின்­றன. அது எந்த இரா­ணு­வத்­தி­லும் நடை­பெ­றக் கூடிய ஒன்று. அதன்­போது சில கட்­ட­ளைத் தள­ப­தி­க­ளுக்கு நிர்­வா­கக் கட­மை­கள் வழங்­கப்­ப­டும்.

இது இலங்­கை­யில் ஒரு பகுதி. நாங்­கள் ஒன்று சேரும்­போது இவை இயல்­பா­கவே நடை­பெ­றும். இங்கு பயங்­க­ர­வா­தம் இருந்­தது. தென்­ப­கு­தி­யி­லும் இருந்­தது. படிப்­ப­டி­யா­கப் பயங்­க­ர­வா­தம் இல்­லா­து­போ­கும்­போது படைச்­சீ­ராக்க நில­மை­கள் இயல்­பா­கவே நடை­பெ­றும் – என்­றார்.

நிகழ்வு

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கும் நிகழ்­வில் கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம், அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, பிரதி இரா­ஜாங்க அமைச்­சர் காதர் மஸ்­தான், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சோ.சோனா­தி­ராஜா, ஈ.சர­வ­ண­ப­வன், எம்.ஏ.சுமந்­தி­ரன், திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரு­டன் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள், திணைக்­கள அதி­கா­ரி­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி மாண­வர்­க­ளின் வாத்­திய இசை­யு­டன் நிகழ்­வில் விருந்­தி­னர்­கள் அழைத்து வரப்­பட்­ட­னர். யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி மாண­வி­க­ளின் வர­வேற்பு நட­னத்­து­டன் நிகழ்வு ஆரம்­ப­மா­னது.

தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் 457 பேருக்கு நேற்று நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன. 676 தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் நிய­ம­னத்­துக்­கா­கத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளில் 176 பேருக்கு கொழும்­பில் ஏற்­க­னவே நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. மிகுதி 494 பேரில் தகை­மை­களை நிறைவு செய்­த­வர்­க­ளுக்கே நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன.

தெரிவு செய்­யப்­பட்ட 5 பேருக்கு நிய­ம­னங்­களை வழங்கி தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­ம­னம் வழங்­கலை ஆரம்­பித்து வைத்­தார். தொடர்ந்து கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம், வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், பிரதி அமைச்­சர் காதர் மஸ்­தான், வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் சர்­வேஸ்­வ­ரன் ஆகி­யோர் வழங்­கி­னர்.

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கம்

கடன்­க­ளால் பாதிக்­கப்­பட்ட பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கும் நிகழ்வு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நடை­பெற்­றது. நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர கலந்து கொண்­டி­ருந்­தார். கடன்­க­ளால் பெண்­கள் பாதிப்­புக்கு உள்­ளா­கின்­ற­னர் என்று குறிப்­பிட்ட அவர், நுண்­க­டன் வழங்­கும் நிதி நிறு­வ­னங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த சட்­ட­வ­ரைவு கொண்டு வரப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

இங்கு உரை­யாற்­றிய தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வறட்­சி­யால் மக்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர். தனி­யா­ரி­டம் கூடிய வட்­டிக்கு கடன் பெற்­ற­னர். அதனை மீளச் செலுத்த முடி­யா­மல் திண­றி­னர். இந்த மக்­களை மீட்­ப­தற்­கா­கவே, இந்த நிதி உதவி வழங்­கும் திட்­டத்­தைச் செயற்­ப­டுத்­து­கின்­றோம். இதற்­காக 20 ஆயி­ரம் மில்­லி­யன் வரை­யில் தேவைப்­ப­ட­லாம் என்று கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வடக்கு கிழக்கு அபி­வி­ருத்தி

வட கிழக்­கில் பெரிய அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­கி­றோம். உல்­லாச பய­ணத்­து­றையை அதி­க­ரிக்­கின்­றோம். அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளில் ஒரு பகு­தி­யினை பெண்­த­லை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளுக்கு வழங்க இருக்­கின்­றோம். மேலும் போரால் பாதிக்­கப்­பட்ட வீடு­களை மறு­சீ­ர­மைக்க பல்­வேறு தரப்­புக்­க­ளு­டன் பேசி­யி­ருக்­கின்­றோம்.

போரி­னால் யாழ்ப்­பா­ணம் மட்­டு­மல்ல இலங்­கை­யும் அழிந்­தது. ஜூலை கல­வ­ரம் மக்­க­ளி­டத்­தில் தாக்­கம் ஏற்­ப­டுத்­தி­யது. விடு­த­லைப் புலி­கள் போரா­டி­னார்­கள். கொழும்­புக்கு அடுத்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் இருந்­தது. தற்­போது அந்த நிலை இல்லை. எமக்­குப் பின்­னர் வளர்ச்­சி­ய­டைய ஆரம்­பித்த நாடு­கள் இன்று எம்­மைத் தாண்­டிச் சென்­று­விட்­டார்­கள் – என்­றார்.

http://newuthayan.com/story/08/நாடு-அபி­வி­ருத்தி-அடை­யும்­-போது-ராணு­வத்­தின்-தேவை-வீழ்ச்­சி­யு­றும்-ரணில்-விக்­கி­ர­ம­சிங்க.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.