Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் தமிழரே

Featured Replies

ஏதிலிகளாக வாழும் ஈழத்துக் குழந்தைகளுக்கு உதவி செய்த லண்டன் tooting அம்மன் ஆலயம், சிவயோகம் அறக்கட்டளை அமைப்பு சில காட்டிகொடுப்போரின் தகவல்களின் அடிப்படையில் அதன் செயற்பாட்டாளர் சீவரத்தினம் அவர்கள் கோயில் தர்மகர்த்தா வாக தொடர்ந்து பணி செய்யக்கூடாது என்று ஒருவருடத்திற்கு இடைநிறுத்தியுள்ளது உதவி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பு.

கோயிலின் கணக்கும் அவர்களால் முடக்கப்பட்டுள்ளது.

அவர்கள் செய்த குற்றம் ஈழத்துக் குழந்தைகளுக்கு உணவு கொடுத்ததுதான்.

கடிதம் எழுதியவன் புலிகளுக்கு காசு போவதாக எழுதியுள்ளான். இப்படியே போனால் லண்டனில் இருகின்ற தமிழரின் அனைத்து சொத்துக்களும் புலிகளினது என்று முடக்கும் காலம் வரப்போகின்றது.

ஏய் தமிழா இதை தடுப்பதற்கு முன்வருவாயா?

இந்த தகவலை இன்று நடைபெற்ற தமிழ்விழாவில் திரு சீவரட்னம் அவர்கள் தனது வாயால் அடியார்களுக்கு நேரடியாக தெரிவித்திருந்தார்.

லண்டனில்தான் அதிகமாக படித்து பட்டம்பெற்ற டமில்ஸ் இருக்கிறார்களே. இவர்களெல்லாம் எங்கே ?

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே இங்கே சிலவிடயங்களைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. ஏனென்றால் எங்களுக்கும் தமிழ்த்தேசியத்தின் மீது தணியாத ஆர்வம். அப்படித்தேவையில்லை அதை நாங்கள் எங்கள் வட்டத்திற்குள் மட்டும் வைத்துத்கொள்ளுவோம் என்று யாராவது கருதினால்(அப்படித்தான் சிலர் கருதுகிறார்கள்) அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நாங்களும் தமிழீழத்தைத் தாயகமாககட கொண்டவர்களே. தேசியம் சிலரின் வீட்டுச் சீதனமல்ல. சரி விடயத்துக்கு வருவோம். லண்டன் கோயில் விவகாரம் ஒரு கேலிக்கூத்து இருமச்சான் மாருக்கிடையே ஏற்பட்டுள்ள சண்டை. இந்தக் குப்பைத் தனங்களுக்கு தமிழ்த் தேசியமும் மக்களும் பலிக்கடாக்களாள்ளப்படுகிறார

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நேசன் சற்று நான் எழுதுவதை நிதானமாக வாசியுங்கள்.

திரு. சீவரட்ணம் அவர்கள் ஒரு தமிழ்தேசிய ஆதரவாளர் ஆரம்ப காலம் தொட்டே உதவிபுரிபவர் அதிலும் தலைவரின் மேல் மிகுந்த பற்றும் உறுதியும் கொண்டவர்.

ஆனால் அவரிடமிருக்கும் குணாவம்சங்கள் அல்லது முட்டாள்தனங்கள்

1) தான் எல்லாவற்றிற்கும் முண்ணிற்கு நிற்க வேண்டும். அதாவது திருமணவீடென்றால் தான் தான் மாப்பிள்ளை அல்லது செத்தவீடகாவிருந்தால் தான் தான் பிணம்.

2) எல்ல உதவிகளையும் செயற்திட்டங்களையும் பணிகளையும் மற்றவர்களால் செய்ய முடியாது என்று கைவிடப்பட்டவற்றையும் மிகவும் துணிவுடன் நேர்த்தியாகவும் கனகச்சிதமாக இரகசியமாக செய்து முடித்து விட்டு தனது வாயாலேயே அதை கெடுத்து விடுவது.

3) அறக்கட்டளையின் நிர்வாகத்தை தனது குடும்ப சொத்து என்று நினைத்து தனது தம்பியையும் உறவினர்களையும் சேர்த்து கொண்டுள்ளது.

4) அறக்கட்டளை நிறுவனங்களை மேற்பார்வை செய்யும் Charity Commission சிவயோகம் அறக்கட்டளைக்கும் விடுதலைப்புலிகளுக்கம் தொடர்பில்லை ஆனால் தனிப்பட்ட முறையில் தனக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு உள்ளது என்று தெரிவித்தது.

எனவே திரு. சீவரடணம் அவர்கள் இந்த சந்தர்ப்பத்திலாவது வேறொருவரை தமிழ்தேசிய ஆதரவாளரை நியமிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

அவரது குண இயல்பை விட்டாலும் தாயக மக்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார்.

பிரச்சனை என்னவென்றால் தாயக மக்களுக்கு செய்யும் உதவிகள் எல்லாவற்றையும் புலிகள் பெறுகிறார்கள் என்று அனைத்தையும் தடைசெய்து அந்த மக்களை தனிமைப்படுத்தி குழப்புவதற்காக தான் சிறிலங்காவின் வேண்டுதலின் பேரில் இந்த வெள்ளையன் நாட்டில் இவை எல்லாம் செய்யப்படுகின்றன.

அப்ப ஒருவரும் வடக்கு கிழக்கு போகக்கூடாது?. தொடர்பு இருக்ககூடாது ? மனிதாபிமான உதவிகள் செய்யகூடாதா.

இப்படியான போக்கை பொதுவாக கண்டிக்க அனைவரும் முன் வர வேண்டும்.

சீவரட்னம் போன்ற தனி மனிதருக்கு வால் பிடிக்க தேவை இல்லை.

இப்படிதான் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் முடக்கப்பட்டது.

தமிழர்கள் பல விடையங்கள் பல முறை சிந்தித்து செயற்பட வேண்டிய காலகட்டம். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையக போகிறது. ஒரு பக்கம் இனவெறி இலங்கையரசு வெளினாடுகளில் எப்படியும் எவ்விதமாகவும் உதவிகள் ஈழத்தமிழர்களிற்கு போய் சேரமால் தடுக்க எல்லாவழிகளிலும் முயற்சி. மறு பக்கம் நமது மக்களுக்குள் நான் பெரிசு, நீ பெரிசு........

சில நல்ல நோக்கங்களுக்காக எல்லா மக்களும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக எப்போது செயற்படப்போகிறர்களோ தெரியவில்லை....

எப்போது எம் இனம் ஒற்றுமை, விட்டுகொடுப்பு, ஒருவரை ஒருவர் குறை சொல்லல் நிறுத்தல் இப்படி எத்தனையோ விடையங்களிலீ

திருந்தினால் தான் நம் ஈழத்தில் பசி, பட்டினி வாழ்க்கை கேள்விகுறியாக இருக்கு எம் இனத்திற்கு விடிவு கிடைக்கும்...

தயவு செய்து எம் பட்டினியாக ஏக்கத்துடன் இருக்கும் எம்மக்களை ஒரு கணம் நினையுங்கள்.... தர்மம் தலைகாக்கும்.... எம்மினத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.....எல்லாபகுதியாலும் திருந்துங்கள்...... சிந்தியுங்கள்.......பண்புகளையும

  • கருத்துக்கள உறவுகள்

நேசன் இப்போது திரு. சீவரட்ணம் அவர்களை தான் ஒரு வருடத்திற்கு தடைசெய்திருக்கிறார்களே தவிர சிவயோகம் அறக்கட்டளையை அல்ல.

வாயால் கெடுவது என்பது முட்டாள்தனம் மீரா சொன்னது போல வேறொருவரை நியமிப்பதே சிறந்தது என நம்புகின்றேன்.இப்படி உளறுவதனாலும் படம் காட்ட முனைவதாலும் அவருக்கு மட்டுமல்ல அவரை சார்ந்தவருக்கும் பிரச்சினை.ஆனால் அவரின் தமிழ் தேசிய பற்றுக்கும் அவரின் சேவைக்கும் தலை வணங்குகின்றேன்.என்னை பொறுத்தவரையில் அவர் பறவாயில்லை ஆனால் சிலர் ஒண்டும் செய்யாமல் சும்மா வாயை மட்டும் வச்சுகொண்டு மீராசொன்ன அத்தனை குணாதிசயங்களுடன் இருக்கீனம் அவையளை என்ன செய்யிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.