Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்­குத் தொடர்­பாக- பிறந்த திடீர் ஞானம்!!

Featured Replies

வடக்­குத் தொடர்­பாக- பிறந்த திடீர் ஞானம்!!

 

 

Suwasariya-750x430.jpg

 

 
 
 
 

வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பாக அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­குப் பிறந்த திடீர் ஞானம் தமிழ் மக்­களை வியக்க வைத்­துள்­ளது. இந்­திய அர­சின் நிதி­யு­த­வி­யு­டன் இடம்­பெற்ற நோயா­ளர் காவு வண்­டி­யின் இல­வச சேவைக்­கான ஆரம்ப நிகழ்­வின்­போது இதை அவ­தா­னிக்க முடிந்­தது.
இலங்­கை­யின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏனைய பிர­தே­சங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது வட­ ப­கு­தி­யில் அபி­வி­ருத்தி திட்­டங்­கள் இடம்­பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்­லை­யெ­னக் கூறி­யுள்­ளார்.

இந்த நிகழ்­வில் காணொலி மூல­மாக உரை­யாற்­றிய இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி, வட­ ப­குதி மக்­க­ளின் கண்­ணீ­ரைத் துடைத்து அவர்­களை வள­மான எதிர்­கா­லத்­துக்கு இந்­தியா இட்­டுச் செல்­லு­மெ­னத் தெரி­வித்­துள்­ளார். இரண்டு தலைமை அமைச்­சர்­க­ளும் கூறி­ய­தைக் கேட்­கும்­போது மகிழ்ச்­சி­யா­கத்­தான் இருக்­கின்­றது. ஆனால் தமி­ழர்­கள் தாம் கடந்து வந்த பாதை­யை­யும் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். தமி­ழர்­கள் இந்த நாட்­டில் மகிழ்ச்­சி­யாக இருந்­த­தா­கச் சரித்­தி­ரமே கிடை­யாது. மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தற்கு அவர்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்­ப­து­தான் உண்மை.

வேடிக்­கை­யான
வெளிப்­பா­டு­கள்
தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பா­கக் கருத்து வெளி­யிட்­டமை வேடிக்­கை­யா­னது. போர் ஓய்ந்து 10ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யில் வடக்கு அபி­வி­ருத்­தி­யைக் காண­வில்­லை­யென அவர் கூறி­யி­ருப்­பதை எந்த வகை­யில் எடுத்­துக்­கொள்­வது என்­பது புரி­ய­வில்லை. நாட்­டின் பிற­ப­கு­தி­கள் அபி­வி­ருத்தி கண்ட நிலை­யில் காணப்­ப­டும்­போது வட­ப­குதி அபி­வி­ருத்­தி­யைக் காணாது மிக­வும் பின்­தங்­கிய நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது.

 

இங்­குள்ள இளை­ஞர் யுவ­தி­கள் தொழில் வாய்ப்­பின்றி வேத­னை­யு­டன் தமது காலத்­தைக் கடத்தி வரு­கின்­ற­னர். இவர்­க­ளுக்­குத் தொழில் வாய்ப்­பினை வழங்க வேண்­டியது அரசின் கடமை. அரசு அதற்­கான எந்த முயற்­சி­யை­யும் மேற்­கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை. தெற்­கில் அரசு கொண்­டுள்ள அக்­க­றை­யில் ஒரு சத­வீ­தத்­தைத்­தா­னும் வடக்­கில் கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. இந்த மாற்­றாந்­தாய் மனோ­பா­வம் இன்று நேற்­றல்ல பல ஆண்­டு­க­ளா­கத் தொடர்ந்த வண்­ணம் காணப்­ப­டு­கின்­றது. தெற்­கின் இந்த மன­நி­லை­தான் தமி­ழர்­க­ளின் ஆயு­தப் போராட்­டத்­துக்கு வழி­வ­குத்­தது. ஆனா­லும் தெற்கு அர­சி­யல்­வா­தி­கள் இன்­ன­மும் திருந்­தி­ய­தா­கத் தெரி­ய­வில்லை.

ஒரு நாட்­டின் தலைமை அமைச்­சர் என்ற வகை­யில் சகல பிர­தே­சங்­க­ளின் நில­வ­ரங்­கள் தொடர்­பான பூரண அறிவு அந்­தப் பத­வியை வகிப்­ப­வ­ரி­டம் இருத்­தல் வேண்­டும். சகல பிர­தே­சங்­க­ளும் சம­னாக அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­வதை அவர் உறு­தி­செய்ய வேண்­டும். ஆனால் இலங்­கை­யின் தலைமை அமைச்­சர் அந்­தப் பொறுப்­பி­லி­ருந்து தாம் வில­கி­யதை சொல்­லா­மல் சொல்­கின்­றார். வட­ப­கு­தி­யின் அபி­வி­ருத்தி தொடர்­பா­கத் தாம் இப்­போ­து­தான் புரிந்­து­ கொண்­ட­தாக அவர் காட்­டிக் கொள்­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

காவு வண்­டி­களை
தந்­தால் போதுமா?
இந்­தி­யா­வின் நிதி­யு­த­வி­யு­டன் வட­ப­கு­தி­யில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள இல­வச நோயா­ளர் காவு வண்­டிச் சேவை தொடர்ந்து இடம்­பெ­று­மா­னால் இப்­ப­குதி மக்­க­ளுக்கு பெரி­தும் பய­னுள்­ள­தாக இருக்­கு­மென்­ப­தைக் கூறத் தேவை­யில்லை. ஆனால் இந்­தி­யா­வின் கடமை இத்­து­டன் நிறை­வு­பெற்­று­விட்­ட­தாக எவ­ரும் கூறி­விட முடி­யாது. ஏனென்­றால் வட­ப­குதி மக்­கள் அனு­ப­வித்த துய­ரங்­க­ளுக்கு இந்­தி­யா­வும் ஒரு கார­ண­மாக இருந்­துள்­ளது. புலி­களை அழிப்­ப­தா­கக் கூறிக்­கொண்டு அப்­பா­வித் தமி­ழர்­கள் கொன்று குவிக்­கப்­பட்­ட­தில் இந்­தி­யா­வின் பங்கு அளப்­ப­ரி­யது.
போரில் இலங்கை அர­சுக்­குத் தேவை­யான சகல உத­வி­க­ளை­யும் வழங்­கிய இந்­தியா மறை­மு­க­மாகவும் நேர­டி­யா­கவே போரில் தன்னை ஈடு­ப­டுத்­திக் கொண்­டது.

ஆனால் போர் முடி­வ­டைந்த பின்­னர் தனது கடமை முடிந்­து­விட்­ட­தாக இந்­தியா ஒதுங்­கிக் கொண்­டது. இதுவட­ப­கு­தித் தமி­ழர்­க­ளுக்­குச் செய்த மிகப்­பெ­ரிய துரோ­க­மா­கும். போரி­னால் சின்­னா­பிக்­க­ மாக்­கப்­பட்ட வட­ப­கு­தி­யின் அபி­வி­ருத்­திக்கு உட­ன­டி­யா­கவே இந்­தியா உதவி செய்­தி­ருக்க வேண்­டும். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பில் இலங்­கைக்­குக் கடு­மை­யான அழுத்­தத்தை வழங்­கி­யி­ருக்க வேண்­டும். இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரான நரேந்­தி­ர­மோடி தனது இலங்­கைப் பய­ணத்­தின் போது குடா­ நாட்­டுக்­கும் வருகை தந்­தி­ருந்­தார். அப்­போது சில வாக்­கு­று­தி­க­ளை­யும் கூறிச் சென்­றார். ஆனால் ஒன்­றுமே நடக்­க­வில்லை. தற்­போ­தும் வட­ப­குதி மக்­க­ளின் அபி­வி­ருத்தி தொடர்­பா­கப் பேசி­யி­ருக்­கி­றார். இது­வும் பத்­தோடு பதி­னொன்­றாக மறக்­கப்­பட்­டு­வி­டு­மா­வென வட­ப­குதி மக்­கள் வினா எழுப்­பு­கின்­ற­னர்.

இரு நாட்­டுத் தலைமை அமைச்­சர்­க­ளும் தமி­ழர்­களை இனி­யும் ஏமாற்­றத்­தில் ஆழ்த்­து­வது அவர்­க­ளுக்கு அழ­காக இருக்­காது. அவர்­கள் எந்த வகை­யி­லா­வது அவர்­க­ளின் அபி­வி­ருத்­திக்கு உத­விட வேண்­டும். இதன் மூல­மா­கவே கடந்த காலத் தவ­று­க­ளும் மறக்­கப்­பட்­டு­வி­டும்.

http://newuthayan.com/story/10/வடக்­குத்-தொடர்­பாக-பிறந்த-திடீர்-ஞானம்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.