Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் படையதிகாரிகளிடம் சிறிசேன தெரிவித்த இரகசியம் என்ன?

Featured Replies

முன்னாள் படையதிகாரிகளிடம் சிறிசேன தெரிவித்த இரகசியம் என்ன?

 

 
 

விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் குறித்த வரலாற்றை மீள எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி  சிறிசேன முன்னாள் முக்கிய அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன அந்த சந்திப்பின் ஆரம்பத்திலேயே அங்கு ஆராயப்படும் விடயங்கள் மிகவும் இரகசியமானவை என தெரிவித்துள்ளார்.

நாங்கள் இங்கு ஆராயப்போகின்ற விடயங்களை வெளியில் எவருடனும் பகிர்ந்துகொள்ள கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் 25ற்கும் மேற்பட்ட முன்னாள் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

விமானப்படையின் முன்னாள் தளபதிகளான ஜயலத் வீரக்கொடி பத்மன் மென்டிஸ் கடற்படையின் முன்னாள் தளபதிகளான தயா சந்தகிரி  போன்றவர்களும் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இதுதவிர முப்படைகளின் தளபதிகள்,பாதுகாப்பு செயலாளருடன்  உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் சிறிசேனவை சந்தித்துள்ளார்.

may_19.jpg

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர் அதனை விபரிக்கும் பலநூல்கள் வெளியாகியுள்ளன ஆனால் அனைவரும் தங்கள் மனவோட்டங்களிற்கு ஏற்ற விதத்தில் அவற்றை எழுதியுள்ளனர் அவற்றில்  எழுதப்பட்டுள்ள விடயங்கள் சரியானைவயல்ல என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

உங்களிடம் உள்ள அறிவை இழப்பதற்கு நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ள சிறிசேன யுத்தம் குறித்து பல திரிபுபடுத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அழைக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38322

  • தொடங்கியவர்
மைத்திரியின் இரகசிய சந்திப்பு; தனக்கு தெரியாது என்கிறது இராணுவம்
 

நடைபெற்று முடிந்த யுத்தத்தை முறையாக ஆவணப்படுத்துவது தொடர்பில் கடந்த திங்கட் கிழமை(06), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெற்ற படைதளபதிகளை இரகசியமாக சந்தித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில், உத்தியோகப்பூர்வமான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, இது தொடர்பான செய்திகளை ஊடகங்களினூடாக தானும் அறிந்து கொண்டதாகவும், எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் கூறினார்.

மேலும், இந்த இரகசிய சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரிடம் கேட்டறிந்து கொள்ள முடியும் எனவும், அவர்களே ஜனாதிபதியின் இவ்வாறான சந்திப்புக்கள் குறித்து அறிந்து வைத்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ரஞ்சித் செனவிரத்னவிடம் இது குறித்து வினவியபோது, “இது தொடர்பான முழுமையான எந்தவொரு தகவல்களும் தனக்கு தெரியாது. ஊடகங்களில் அவ்வாறான செய்திகள் வெளியாகியிருப்பதை நான் இதுவரையில் அறிந்துகொள்ளவில்லை” எனவும் பதிலளித்தார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடைபெற்று முடிந்த யுத்தத்தை முறையாக ஆவணப்படுத்துவது தொடர்பான இரகசிய சந்திப்பு தொடர்பில், முறையான குறித்த ஆவணம் வெளிவரும் வரையில், இரகசியம் பேணப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மைத்திரியின்-இரகசிய-சந்திப்பு-தனக்கு-தெரியாது-என்கிறது-இராணுவம்/175-220210

On 8/12/2018 at 9:16 AM, நவீனன் said:

விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் குறித்த வரலாற்றை மீள எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி  சிறிசேன முன்னாள் முக்கிய அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.

On 8/12/2018 at 9:16 AM, நவீனன் said:

உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும்

சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் மகா பொய்வாம்சத்தின் அடுத்த பகுதிகளை உலகை ஏமாற்றும் விதத்தில் எப்படி எழுதுவது என யோசிக்கின்றனர் போலவுள்ளது? 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.