Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ

Featured Replies

ரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ

 

இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் ரவி சாஸ்திரி, விராட் கோலியிடம் பல கேள்விகளை எழுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #BCCI #ViratKohli

 
 
 
 
ரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் பெரிய அளவில் விமர்சனம் எழும்பவில்லை.

ஆனால் நேற்றுடன் முடிவடைந்த லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது. இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதை இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் பிசிசிஐ-யால் ஜீரணிக்க முடியவில்லை.

சொந்த மண்ணில் பல்வேறு அணிகளை வீழ்த்திய இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியபோது தொடரை 1-2 என இழந்தது. அப்போது அதிக போட்டிகள் காரணமாக பழு அதிகமானது. அதனால் விளையாட முடியவில்லை என்று கூறப்பட்டது.

இதனால் இந்திய அணி நிர்வாகம் இங்கிலாந்து தொடரின்போது டி20, ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அங்குள்ள சூழ்நிலை பழக்கப்பட்டு விடும் என்று கூறியது.

அதன்படியே பிசிசிஐ ஏற்பாடு செய்தது. இதனால் இந்திய அணி நிர்வாகம் சாக்குபோக்கு சொல்ல முடியாது. இதற்கிடையே விராட் கோலி முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

இந்திய அணி 3-வது போட்டியில் வருகிற சனிக்கிழமை (9-ந்தேதி) நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்-யில் விளையாடுகிறது. ஞாயிற்றுக்கிழமை அடுத்த இரண்டு போட்டிக்கான அணி அறிவிக்கப்பட இருக்கிறது. 3-வது போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும்.

201808132043224388_1_ravishastri002-s._L_styvpf.jpg

இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலியிடம் கேள்விகள் கேட்க இருக்கிறது. மேலும், 2014-ம் ஆண்டு இந்திய அணி 1-3 என இங்கிலாந்து தொடரில் தோல்வியடைந்ததால்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சர், துணை பயிற்சியாளர்கள் ஜோ தவேஸ் (பந்து வீச்சு), டிரெவோர் பென்னி (பீல்டிங் கோச்) ஆகியோரி அதிரடியாக நீக்கப்பட்டு ரவி சாஸ்திரி மானேஜராக நியமனம் செய்யப்பட்டார்.

அதன்பின் சஞ்சங் பாங்கர் பேட்டிங் கோச்சராகவும், ஆர் ஸ்ரீதர் பீல்டிங் கோச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இந்தியா பேட்டிங் மற்றும் ஸ்லிப் கேட்ச் ஆகியவற்றில் பலவீனமாக இருப்பதால் இவர்களுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/13204322/1183686/Ravi-Shastri-Virat-Kohli-to-face-BCCI-questions-for.vpf

  • தொடங்கியவர்

‘டிராவிட்டை பயிற்சியாளராக்குங்கள்: ரவி சாஸ்திரியை தூக்கி எறியுங்கள்’: இந்திய அணி தோல்வியால் நெட்டிசன்கள் கடும் கோபம்

 

 
Ravi-Shastri-Rahul-Dr

ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட்   -  படம்: ஏஎப்ஃபி

இங்கிலாந்துடன் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை இரக்கமின்றி மாற்றிவிட்டு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடியது இதில் டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் 2-1 என்று தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்கி நடந்துவருகிறது.

         
 
 

முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் சிறப்பான சதம், அரைசதத்தால், வெற்றி அருகே வந்து, 31 ரன்களில் தோல்வி அடைந்தது இந்திய அணி. இந்தப் போட்டியில் விராட் கோலியைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் மோசமாகவே விளையாடினார்கள்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஒரு இன்னிங்ஸ் 159 ரன்கள்வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. கேப்டன் விராட் கோலியும் இந்த முறை ஏமாற்றினார். முன்னணி வீரர்கள் முரளி விஜய், தினேஷ் கார்த்திக், ரஹானே, புஜாரா உள்ளிட்ட அனைவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். அஸ்வின் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தார்.

இந்த தொடருக்கு புறப்படும் முன், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், கேப்டன் விராட் கோலியும், எந்த களத்தையும், எந்த அணியையும் சந்திப்போம், தயக்கமில்லை என்று தெரிவித்தநிலையில் இப்போது இந்திய அணி படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

ரசிகர்களிடமும் கேப்டன் விராட் கோலி மன்னிப்பு கோரி, தங்கள் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழக்கவேண்டாம். நாங்களும் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுவரை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. இது குறித்து மூத்த வீரர் ஹர்பஜன்சிங் கூட ரவி சாஸ்திரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கு பயிற்சியாளரும் பொறுப்பு அவரும் தோல்விக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நெட்டிசன்கள், ரசிகர்களும் இந்திய அணி வீரர்கள் மீதும், பயிற்சியாளர் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் ஆதங்கத்தை ட்விட்டரில் பதிந்து, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரியை மாற்றிவிட்டு, டிராவிட்டை நியமிக்க வலியுறுத்தியுள்ளனர்.

நெட்டிசன்களில் சிலர் கூறியுள்ள கருத்துக்களில் சிலவற்றை காணலாம்.

dhruvpng
 

துருவ் சிறீவஸ்தவா என்பவர் கூறுகையில், ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, டிராவிட்டை கொண்டு வாருங்கள். உடற்தகுதியை வைத்து போட்டிகளில் வெற்றி பெற முடியாது. அதிகமான பயிற்சிப்போட்டிகளில் விளையாட வேண்டும் அல்லது கவுண்டி போட்டிகள் ஆட வேண்டும். தவண், ரஹானே, விஜய் ஆகியோரை நீக்கிவிட்டு, ரிஷாப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர், கருண் நாயரை கொண்டு வாருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

rrJPG
 

அமித் என்பவர் கூறுகையில், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமிக்க வேண்டும் பிசிசிஐ என வலியுறுத்தியுள்ளார்

அனுராக் என்பவர் பதிவிடுகையில், இந்திய அணியில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ரவி சாஸ்திரிக்கு தெரியவில்லை, ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமியுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்

rrJPG
 

மற்றொருவர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருப்பது அணிக்குப் பேரழிவு. அவரை மாற்றிவிட்டு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

netJPG
 

ருத்ரகேஷ் என்பவர் கூறுகையில், ரவிசாஸ்திரியையும், பந்துவீச்சுப்பயிற்சியாளர் பரத் அருணையும் நீக்கிவிட்டு ராகுல் டிராவிட்டையும், ஜாகீர்கானையும் நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

rJPG
 

இதுபோல் பலரும் ரவி சாஸ்திரிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

https://tamil.thehindu.com/sports/article24689505.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் திராவிட் 2017ல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான குழுவுக்கு பயிற்சியாளராக இருப்பதாகவும் இந்திய குழுவுக்கு பயிற்சியாளராக மாட்டேன் எனவும் தெரிவித்து இருந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.