Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிடமே வழங்க வேண்டும்: காலத்தை கடத்தாது வீடுகளை நிர்மாணிக்கக் கோருகின்றது கூட்டமைப்பு

Featured Replies

இந்தியாவிடமே வழங்க வேண்டும்: காலத்தை கடத்தாது வீடுகளை நிர்மாணிக்கக் கோருகின்றது கூட்டமைப்பு

 

(ஆர்.யசி)

வடக்கிற்கான வீட்டுத்திட்டம் அமைப்பதை அரசாங்கம் இந்தியா விற்கே கொடுக்க வேண்டும். எமது மக்களின் கலாசாரத்திற்கும் எமது பிரதேச காலநிலைக்குமான தகுந்த வீடுகளை இந்தியாவே நிர்மாணிக்க முடியும் என தமிழ் தேசியக் கூட் டமைப்பு தெரிவித்துள்ளது. யாருக்கு வீட்டுத்திட்டத்தை  கொடுப்பது என பேசிக்கொண்டு காலத்ததை கடத்தாது எமது மக்களுக்கான வீடுகளை உடனடியாக அரசாங்கம் அமைந்துக்கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.  

வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தை இந்தியாவுக்கா அல்லது சீனாவுக்கா கொடுப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் வடக்கில் வீடுகள் நிர்மாணிக்கும் செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவிய போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுள்ள பிரதான நெருக்கடி வீடுகள் இல்லாமையேயாகும். பலர் இன்றும் வீடுகள் இல்லாது மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதால் மக்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். இராணுவத்தில் உள்ளவர்களுக்கு வீடுகளை ஜனாதிபதி நிர்மாணித்து கொடுக்கின்றார். ஆனால் போரிற்கு முகங்கொடுத்த தமிழ் மக்களுக்கு இன்றும் முகாம் வாழ்க்கையே வாழ நேர்கின்றது. காணிகள் முழுமையாக விடுபடாது மிகவும் மோசமான நிலையில் எமது மக்கள் உள்ளனர்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சில நன்மைகள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமிருந்த காணிகள் ஓரளவு விடுவிக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாவும் சில நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் எமது மக்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க வேண்டும். இதில் இந்தியாவா சீனாவா என்ற இழுத்தடிப்புகள் இருக்கக்கூடாது. உடனடியாக வீடுகளை நிர்மாணித்து எமது மக்களின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

 வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பது இந்தியாவா அல்லது சீனாவா என்ற நிலைப்பாடு அரசாங்கத்திடம் உள்ளது. ஆனால் வடக்கில் இந்திய வீட்டுத்திட்டமே உகந்தது. வடக்கு அபிவிருத்திக்கூட்டத்தில் நாம் இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தெரிவித்துள்ளோம். ஏனெனில் வடக்கில் தமிழ் மக்கள் கலாசார பண்பாடுகளுடன் அதற்கேற்ற சூழலில் வாழ்ந்து பழகியவர்கள். அத்தோடு வடக்கின் காலநிலை தன்மைகள் வெப்பம், அமைவு என்பவற்றை கருத்தில் கொண்டும் வீடுகளை நிர்மாணிக்க வேண்டும்.

செங்கல் கொண்டு கட்டும் வீடுகளே எமது காலநிலைக்கும் ஏற்றதாகும். ஆகவே இந்தியா இந்த விடயத்தை சரியாக கையாண்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட ஐயாயிரம் வீட்டுத்திட்டம் எமது மக்களுக்கு சாதகமாக அமைந்தது. சீனாவின் திட்டம் எமக்கு ஏற்றால்போல் இல்லை. நுரைச்சோலை அனல் மின்நிலைய சாம்பலை கொண்டு வீடுகள் அமைப்பதாக கூறுகின்றனர் . இது பக்க விளைவுகளை நோய்களை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. சீட் முறைமை வீடுகள் எவையும் வடக்கிற்கு ஒத்துவராது. ஆகவே இந்தியா வீட்டுதிட்டதியே அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-18#page-1

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்டுத்திட்டம் அதுக்கே இவ்வளவுகாலம் இழுக்கிற அரசியல்வாதிகளால் தீர்வு வருமாம் நம்புங்க மக்களே .

இந்தியாவா சைனாவா என்று இழுபறி படாமல் இரண்டு பேருக்கும் பாதி பாதி என்று பிரித்து கொடுத்துவிட்டால் போட்டியில் நல்ல தரமான வீடுகள் பாதிக்கபட்ட மக்களுக்கு கிடைக்குமாக்கும் . என்ன காரணம் சொன்னாலும் இந்தியா பண நோட்டுகளை கூட அச்சடித்து கொடுப்பது கூட சைனா கொம்பனிதான் இந்த விடயமும் கிட்டடியில் வெளிவந்து மோடியை கிழித்து தொங்க போட்டு உள்ளது நெட்டிசன் குரூப் .

  • தொடங்கியவர்

வடக்கிற்கு இந்திய வீட்டு திட்டமே சிறந்தது: கூட்டமைப்பு

 

 

வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல, ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளானது எமது மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதானதாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கில் வீடுகளற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பது தொடர்பில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தமது திட்ட முன்மொழிவுகளை சமர்பித்துள்ளன.

இந்நிலையில் குறித்த இரண்டு நாடுகளிலும் எந்த நாடு வீட்டுத் திட்டங்களை அமைப்பது என்ற சர்ச்சையான கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக அதன் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் வினாவியிருந்தோம்.

இது தொடர்பாக சுமந்திரன் மேலும் தெரிவித்திருப்பதாவது,

சீன நிறுவனமும் 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதாக தனது திட்ட முன்மொழிவை கொடுத்துள்ளது. ஆனால் அது கல் வீடல்ல. கொங்கீறிட் போன்ற ஒன்றால் அமைக்கப்படும் வீடாகும். ஆனால் இந்தியா அதே பணத்திற்கு கல் வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

எமது மக்களுக்கு கல் வீடே விருப்பம். எனவே, இந்தியாவுடன் பேசி அவ் வீட்டுத் திட்டத்தை செய்யுமாறு அரசாங்கத்திற்கு நாம் தெரிவித்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது கல் வீட்டுத் திட்டத்தை தான் விரும்புகின்றது. அதனை தான் எமது மக்கள் விரும்புகின்றார்கள். எனவே கல் வீட்டுத் திட்டத்தை இந்தியாவோ சீனாவோ இல்லை ரஸ்யாவோ, யார் கல் வீட்டினை கட்டினாலும் நாம் ஏற்றுக்கொள்வோம். எமது மக்களுக்கு தேவையான விருப்பமான கல் வீட்டுத் திட்டத்தினை நடமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

இந்நிலையில் தற்போது மக்கள் விரும்புகின்ற கல் வீட்டுத் திட்டத்தினை இந்தியாவே முன்வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/வடக்கிற்கு-இந்திய-வீட்டு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.