Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரன் பண்டார வன்னியனின் -வெற்றி நாள் கொண்டாட்டம்!!

Featured Replies

மாவீரன் பண்டார வன்னியனின் -வெற்றி நாள் கொண்டாட்டம்!!

 
 

FB_IMG_1535170961854-640x405.jpg

 

 

0

முல்லைத்தீவுக் கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 215 ஆம் ஆண்டு வெற்றி நாள் இன்று கொண்டாடப்பட்டது.

முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், மற்றும் கரைதுரைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

FB_IMG_1535170990864.jpgFB_IMG_1535170988324.jpgFB_IMG_1535170985633.jpgFB_IMG_1535170983027.jpgFB_IMG_1535170980369.jpgFB_IMG_1535170977896.jpgFB_IMG_1535170975306.jpgFB_IMG_1535170972582.jpgFB_IMG_1535170969975.jpgFB_IMG_1535170967405.jpgFB_IMG_1535170964794.jpgFB_IMG_1535170958164.jpgFB_IMG_1535170995945.jpg

https://newuthayan.com/story/10/மாவீரன்-பண்டார-வன்னியனின்-வெற்றி-நாள்-கொண்டாட்டம்.html

  • தொடங்கியவர்

பண்டார வன்னியனுக்கு- வவுனியாவில் நினைவேந்தல்!!

 
 
unnamed-4-8-780x405.jpg
0

வன்னியின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை மீட்டெடுத்த 215 ஆவது ஆண்டு நிறைவு நாள் வவுனியாவில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வவுனியா மாவட்டச் செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு மு.சிற்றம்பலம் மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் சிறப்புரைகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் அமைச்சர் மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, ப. சத்தியலிங்கம்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

unnamed-7-6.jpgunnamed-6-6.jpgunnamed-5-7.jpgunnamed-3-8.jpgunnamed-8-5.jpg

https://newuthayan.com/story/15/பண்டார-வன்னியனுக்கு-வவுனியாவில்-நினைவேந்தல்.html

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும், வணக்கமும்..!

பரவாயில்லை, இன்னமும் நினைவுகூர ஒரு சிலராவது இருக்கிறார்களென்பதறிந்து மகிழ்ச்சி..!

 

FB_IMG_1535170990864.jpg&key=a0c2ea741a5

இது, அந்தக் கோட்டையின் எஞ்சிய பகுதியா..?

  • தொடங்கியவர்

பண்டார வன்னியன் முல்லையை கைப்பற்றிய நாளை, புலிகள் நினைவு நாளாக அறிவித்தனர்!

 Pandara-vannian1.png?resize=768%2C432

வன்னியின் தலை சிறந்த மன்னனான பண்டார வன்னியன் முல்லைத்தீவு கோட்டையை வெற்றி கொண்ட நாள் இன்றாகும். இந்த வெற்றி நாளை நினைவு கூறும் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு கோட்டையை பண்டார வன்னியன் கைப்பற்றிய 215ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு பண்டார வன்னயனின் உருச் சிலைக்கு மலர்மாணி அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இன்றைய நாளை பண்டார வன்னியன் நினைவு நாளாக (1803 ஆகஸ்ட் 25) விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி இடம்பெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கியதுடன் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25. எனவே, பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளாக இன்றைய நாள் நினைவு கூறப்படுகிறது.

பண்டார வன்னியன் கொலைசெய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, இறந்த நாள் (அக்டோபர் 31) என்று கணக்கிடுகிடப்படுகின்றது. எனினும் 1810 ஆம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், போரில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவர் 1811 ஆம் ஆண்டில் பனங்காமத்தில் இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Pandara-vannian2.png?resize=800%2C533

Pandara-vannian3.png?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/92740/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.