Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய நாளிதழ்களில் ...ஒழுக்கத்தை கடைபிடிக்க சொன்னால் சர்வாதிகாரி என்பதா? - நரேந்திர மோதி

Featured Replies

ஒழுக்கத்தை கடைபிடிக்க சொன்னால் சர்வாதிகாரி என்பதா? - நரேந்திர மோதி

இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

இந்து தமிழ்: 'சர்வாதிகாரி என்றுமுத்திரைகுத்துவதா?'

'சர்வாதிகாரி முத்திரை குத்துவதா?'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒழுக்கத்தைக் கடைபிடிக்கச் சொல்பவர்களை சர்வாதிகாரி என்று முத்திரை குத்துவதாக பிரதமர் நரேந்திர மோதி வேதனை தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அந்த பணியில் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவ ராக தனது ஒரு ஆண்டு அனுபவங் கள் குறித்து, 'முன்னேற்றத்தை நோக்கிய முன்னேற்றம் - பணியில் ஒரு ஆண்டு' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மோதி, "நாடு இப்போது இருக்கும் நிலையில், ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்வது ஜனநாயக விரோதமாக பார்க்கப்படுகிறது. ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று யாராவது சொன்னால், அப்படி சொல்பவர்களை சர்வாதிகாரி என்று முத்திரை குத்தி விடுகின்றனர். வெங்கய்ய நாயுடு மிகுந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டவர். எல்லா நிலையிலும் அவர் ஒழுக்கத்தை பின்பற்றி வந்துள்ளார்.

வெங்கய்ய நாயுடு வாட்ச் அணிவது இல்லை. இருந்தாலும், அவர் செல்ல வேண்டிய நிகழ்ச்சிக்கு சரியான நேரத்துக்கு சென்று விடுவார். நேரத்தை வீணாக்காமல் கட்டுப்பாட்டுடன் கடைபிடிப்பார்." என்று பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

தினமணி: 'மூடப்படுகிறதா நேரடி கொள்முதல் நிலையங்கள்?'

நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்படப் போகிறது என்று நேற்று செய்திகள் உலவின. இந்த செய்தியோடு ரேஷன் கடைகளும் மூடப்பட போகிறது என்ற தகவலும் சமூக ஊடகங்களில் பரவியது. இப்படியான சூழ்நிலையில், தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

'மூடப்படுகிறதா நேரடி கொள்முதல் நிலையங்கள்?'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும். மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படவில்லை. சட்டப்பூர்வ விதிகள் காரணமாகத்தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய அரசின் முகவராக இருந்து கொண்டுதான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறோம்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்படும். மேலும், அக்டோபர் மாதத்தில் புதிய ஆதாரவிலை அறிவிக்கப்படும். இது ஏற்கெனவே உள்ள நடைமுறைதான்.

அதே நேரத்தில் வட்டத் தலைநகரங்களில் உள்ள பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். மேலும், நிகழாண்டில் வெளிப்பகுதியில் நெல்லுக்கான விலை குறைத்து வழங்கப்படுவதால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களை நாடுகின்றனர். எனவே, எந்தெந்த இடங்களில் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதோ, அங்கு விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் உடனடியாகத் திறக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன" என்று திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

தினத்தந்தி: 'காரில் கொண்டுசென்ற ரூ.1 கோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் சிக்கின'

மதுரை அருகே காரில் கொண்டுசென்ற ரூ.1 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

கோப்புப் படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் காரில் கடத்திச்செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கருப்பாயூரணி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வரிச்சியூர் பகுதி வழியாக ஒரு கார் வந்தது. போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் பதற்றமடைந்தனர். போலீசார் காரின் பின்புறத்தில் இருந்த ஒரு பையை திறந்து பார்த்தபோது அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என தெரிகிறது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line மல்லையாபடத்தின் காப்புரிமைஇந்து தமிழ் Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'சொன்னதை செய்வேன் - மு.க. அழகிரி'

நான் மறைந்த திமுக தலைவரின் மகன். சொன்னதை செய்வேன் என்று மு.க. அழகிரி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரிபடத்தின் காப்புரிமைTWITTER

ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, செப்டம்பர் 5 ஆம் தேதி நடக்க இருக்கும் கருணாநிதி நினைவு அமைதி ஊர்வலத்திற்கு நான் சொன்னதுபோல் ஒரு லட்சம் பேரை திரட்டுவேன் என்று கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

https://www.bbc.com/tamil/india-45392783

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.