Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகள் விடுவிப்பு!

Featured Replies

இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகள் விடுவிப்பு!

 

land-release-720x450.png

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பிடியிலிருந்த மூன்று பகுதிகளிலுள்ள காணித் தொகுதிகள் இன்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன.

மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான காணிப் பத்திரங்கள், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமும், ஆணைக்கோட்டை கூலாவடி பகுதியிலுள்ள படை முகாமொன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பலாலி குரும்பசிட்டி பகுதியிலுள்ள பொதுநூலகம் மற்றும் பாலர் பாடசாலை உள்ளிட்ட கட்டடத் தொகுதியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மயிலிட்டிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் விரைவில் விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார். அதற்கமைய தற்போது குறித்த காணித் தொகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழில்-இராணுவ-பிடியிலிரு/

  • தொடங்கியவர்

மயிலிட்டி பாடசாலை விடுவிப்பு

 

 
 

(ரி.விரூஷன்)

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் காணப்பட்ட பொது மக்களது காணிகளில் ஒரு தொகுதி காணி மற்றும் பாடசாலை என்பன மக்களிடம் இன்று மீள கையளிக்கப்பட்டுள்ளது.

jaffna1.jpg

யாழ்.மயிலிட்டி கலைமகள் வித்தியாலய காணியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வைத்து பாடசாலையின் உறுதிப்பத்திரமானது மாகாண கல்வி பணிப்பாளரிடமும், காணி உறுதிபத்திரமானது மாவட்ட அரச அதிபரிடமும் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியால் வழங்கப்பட்டது.

இதன்படி மயிலிட்டியில் உள்ள கலைமகள் வித்தியாலயம், ஆணைகோட்டை குளாவடி பகுதியில் காணப்படும் இராணுவ முகாம் அகற்றப்பட்டு அதனுள் காணப்படும் எட்டு வீடுகள் என்பனவும் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

jaffna4.jpg

jaffna3.jpg

jaffna2.jpg

இவை தவிர குரும்பசிட்டி பகுதியில் காணப்படும் பல நோக்கூட்டுறவு சங்க கட்டடம் மற்றும் கிராம சங்க கட்டடம் என்பனவும் மீள மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக நேற்றைய தினம் மொத்தம் 4 ஏக்கரும் 7 பரப்பும் அளவான நிலப் பகுதியானது மீள கையளிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/39867

  • தொடங்கியவர்

காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை ; மக்கள் அதிருப்தி

 

 
 

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் வலி வடக்கில் இன்று விடுவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகள் முழுமையாக மக்களிடம் கையளிக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

jaffna2.jpg

கடந்த 27 வருடங்களிற்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் தமது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். இதனால் அம் மக்களது காணிகளை இராணுவம் தனது உயர் பாதுகாப்பு வலய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. 

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களது காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் இன்றைய தினமும் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், தெல்லிப்பழை கூட்டுறவு சங்க கட்டடம், கிராம சங்க கட்டடம் மற்றும் ஆணைகோட்டை குளாவடி இராணுவம் முகாம்  என்பன விடுவிக்கப்பட்டிருந்தன.

இதில் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனைய இடங்களுக்கு போடப்பட்டுள்ள கம்பி கட்டைகள் இன்னமும் இராணுவத்தால் அகற்றப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே விடுவிக்கப்பட்ட இடங்களில் காணப்படும் இராணுவ முட்கம்பி கட்டைகளை விரைவாக அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறு கம்பிகட்டைகள் இன்னமும் அகற்ப்படாமை குறித்து இராணுவத்தினருக்கு அறிவித்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெல்லிப்பழை பிரதேச செயலர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

http://www.virakesari.lk/article/39872

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா காணி விடுவிப்பும்.. அப்பி கென்டத் புளுவங்.. கன்டத் புளுவங் க்கு கீழதான் விடுவிக்கப் படுகுது போல. ?

  • தொடங்கியவர்

விடுவிக்கப்படாத காணிகளில் பயிர்ச்செய்கையில் படையினர்! – நேரில் கண்டு கவலையடைந்த மயிலிட்டி மக்கள்

0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=
மயிலிட்டியில் மக்களின் காணிகளில் படையினரால் மேற்கொள்ளப்படும் விவசாயச் செய்கைகளைப் பார்த்துக் கவலை வெளியிட்ட மக்கள், தாம் அல்லுறும்போது இவர்களுக்கு விவசாயம் தேவைதானா என்றும் கேள்வி எழுப்பினர்.
 
நேற்று வியாழக்கிழமை மயிலிட்டியில் கலைமகள் வித்தியாலயம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்க அப்பகுதி மக்களும் சென்றிருந்தனர்.
 
இதன்போது மயிலிட்டிப் பாடசாலையின் காணி முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தக் காணியில் படையினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ளதைமையை நேரில் அவதானிக்க முடிந்தது என்றும், இதனாலேயே அந்தக் காணி விடுவிக்கப்படவில்லை என்றும் அங்கு சென்ற பொதுமக்கள் கூறினர்.
 
“இரவல் காணிகளில் நாங்கள் இடம்பெயர்ந்து வசித்து வருகின்றோம். இப்படி இருக்க எங்கள் காணிகளில் இராணுவம் பயிர் செய்து வருமானம் ஈட்டுகின்றது. நாங்கள் வருமானம் எதுவும் இன்றித் திண்டாடுகின்றோம். இந்தக் காணிகளை எங்களிடம் ஒப்படைத்தால் எமது வாழ்க்கை மேம்படும்” என்று அந்த மக்கள் வேதனையோடு கூறினர்.

http://www.newsuthanthiran.com/2018/09/07/விடுவிக்கப்படாத-காணிகளி/

 

 

வலி. வடக்கில் இன்னமும் 6 பாடசாலைகள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்! – விடுவிப்பை வலியுறுத்துகின்றார் சுகிர்தன்

0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=
 

“2015 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதாவது கடந்த மூன்றாண்டுகளில் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 2,800 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த வருடத்தில் மட்டும் 872 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஆறு பாடசாலைகள் விடுவிக்கப்படாமல் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்றன.”

– இவ்வாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தை விடுவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் மயிலிட்டிக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மயிலிட்டி கலைமகள் பாடசாலையை விடுவிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அந்தப் பாடசாலையை இரண்டு வாரத்துக்குள் விடுவிப்பதாக அவர் உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் இன்று அந்தப் பாடசாலை விடுவிக்கப்பட்டிருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுவதற்கு முன்னர் வலிகாமம் வடக்கில் இராணூவ உயர் பாதுகாப்பு வலயத்தில் 6,300 ஏக்கர் நிலப்பரப்பு இருந்து. ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த மூன்றாண்டுகளில் 2,800 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் இந்த வருடத்தில் மட்டும் 872 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஆறு பாடசாலைகள் விடுவிக்கப்படாமல் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்றன.

குறிப்பாக மயிலிட்டி ஆர்.சி., வயாவிளான் சிறிவேலுப்பிள்ளை வித்தியாசாலை, பலாலி சித்திவிநாயகர், பலாலி அமெரிக்கன் மிசன், காங்கேசன்துறை ஆர்.சி., காங்கேசன்துறை மகாவித்தியாலம் போன்ற பாடசாலைகளே விடுவிக்கப்படாமல் உள்ளன.

இதேபோன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகமும், சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானங்கள் உட்பட பல இடங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

ஆகவே, அந்தக் காணிகளும் பாடசாலைகளும் விரைவில் விடுவிக்கப்படவேண்டும். அதனூடாக வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றம் துரிதமாக நடக்க வேண்டும்” – என்றார்.

http://www.newsuthanthiran.com/2018/09/07/வலி-வடக்கில்-இன்னமும்-6-பா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.