Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா, சீனாவுடனான இலங்கையின் நட்புறவினால் இந்தியா பீதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, சீனாவுடனான இலங்கையின் நட்புறவினால் இந்தியா பீதி

[04 - April - 2007]

ஆசியாக் கண்டப் பிராந்தியத்தில் பலம்வாய்ந்த நாடாகவும் எமது அண்டைய நாடாகவும் அமைந்துள்ள இந்தியா, ஷ்ரீ லங்கா மீது வன்மையான முறையில் அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியா எப்பொழுதும் ஷ்ரீ லங்காவை தனது பிராந்தியக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே முயன்று வந்துள்ளது ரகசியமான விடயமல்ல. ஆயினும், நாட்டை ஆளும் சுதந்திர அரசாங்கம் என்ற வகையில் ஷ்ரீ லங்கா இந்தியாவின் அழுத்தத்துக்கு எதிராக நடந்து கொண்டிருப்பதை வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது. இவ்வாறான ஒரு சம்பவம் சேர் ஜோன் கொத்தலாவல ஷ்ரீ லங்காவின் பிரதமராக இருந்த கால கட்டத்திலேயே நிகழ்ந்து விட்டது.

அப்பொழுது இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாடு ஒன்றில் சேர் ஜோன் கொத்தலாவல ஆற்றிய உரை இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகளுக்கு எதிராக அமைந்ததுடன் அது பற்றி இந்தியப் பிரதமர் நேருவும் அதிருப்தியடைந்தார். கொத்தலாவல ஆற்றிய உரையின் முடிவில் நேரு தனது அதிருப்தியை கொத்தலாவலவிடம் அவ்வாறு உரையாற்றுவதற்கு முன்னர் அந்த உரையை தன்னிடம் காட்டியிருக்க வேண்டும் என்று கூறினார். உடனே கோபமடைந்த ஷ்ரீ லங்கா பிரதமர் "நான் இலங்கையின் பிரதமர். நாம் சுதந்திர நாடு. எனது உரையை எதற்காக உங்களுக்கு காட்ட வேண்டும் என்று நான் உரையாற்றுவதற்கு முன் உரையைக் காட்ட வேண்டும். என நீங்கள் எப்படிக் கூற முடியும்? " என்று நேருவுக்குச் சூடாகப் பதிலளித்தார். அதன் பின்னர் நேரு எந்த வாதமும் செய்யாமல் வாயை மூடிக் கொண்டார்.

இது ஒரு சிறு சம்பவமே என்றாலும் அந்த நாட்களிலிருந்து இந்தியா, ஷ்ரீ லங்காவுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். இவ்வாறே ஷ்ரீ லங்காவின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச பதவி வகித்த பின்னைய கால கட்டத்திலும் இந்தியா, ஷ்ரீ லங்கா மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளது. இவ்வாறே தற்போதும் எமது நாட்டின் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் இந்தியா கண்மூடித்தனமாக பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்துக் கொண்டிருக்கிறது. ஷ்ரீ லங்கா அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் இந்தியாவின் கடூரப் பார்வைக்குள்ளாகியுள்ளன.

1. ஷ்ரீ லங்கா அமெரிக்காவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.

2. அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்கு சீனாவின் உதவி பெறும் ஏற்பாடு.

3. வடக்கு கடற் பிராந்தியத்தில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கும இந்திய மீனவர்களுக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்புகளைத் துண்டிக்க, ஷ்ரீ லங்கா கடற்படை மேற்கொண்டு வரும் நடவடிக்கை.

4. வடக்கு, கிழக்கு பிரதேசங்களை புலிகள் இயக்கத்திடமிருந்து விடுவிக்க ஷ்ரீ லங்கா படையினர் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை.

மேற்படி ஷ்ரீ லங்காவின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எல்லாமே தற்போது இந்தியாவின் அதிருப்திக்குள்ளாகியுள்ளன. அன்று சேர் ஜோன் கொத்தலாவெல கூறியதுபோது ஷ்ரீ லங்கா ஒரு சுதந்திர நாடு தான் என்றாலும் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நிலைப்பாடுகளைப் பொறுத்தவரை இந்தியாவின் ஒத்தாசை இல்லாமல் ஷ்ரீ லங்கா எதனையும் சாதிப்பது சிரமமான காரியமாகவே இருக்கும். இந்தியா வேண்டுமென்றால் எமது நாட்டின் மீது பலாத்காரத்தைப் பிரயோகிக்க முடியும். இவ்வாறே 1987 இல் எமது வான் பரப்பின் எல்லையை மீறி பலத்காரமாக வந்து வடக்கு பிரதேசங்களில் உணவுப் பொட்டலங்களை போட்ட சம்பவம் இந்தியாவின் பலாத்கார பிரயோகத்திற்கு ஒரு உதாரணமாகும்.

தற்போதுள்ள நிலைவரங்களைப் பொறுத்தவரையில் முன்னைய நிலைமையைக் காட்டிலும் தீவிரமாக ஷ்ரீ லங்காவில் செயற்பட வேண்டிய தேவையுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் ஷ்ரீலங்காவுக்கான உயர் ஸ்தானிகர்கள் தமது அதிகாரங்களுக்கும் மேலாக செயற்பட்டு ஷ்ரீ லங்காவின் உள்நாட்டு அரசியல் விடயங்களில் தலையிட்ட சம்பவங்கள் பல உண்டு. இவ்வாறு ஜே.என்.டிக்சிற், நிரூபம் சென், நிருபமா ராவ் ஆகிய இந்திய உயர் ஸ்தானிகர்கள் தமது பொறுப்புகளுக்கு அப்பால் எமது நாட்டின் அரசியல் விடயங்களில் தலையிட்டனர். எந்தச் சூழ்நிலையிலும் ஷ்ரீ லங்கா அரசு, ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை நட்புறவுடன் நெருங்குவதை இந்தியா விரும்பமாட்டாது. இந்திய அரசின் எதிர்பார்ப்பு ஷ்ரீ லங்கா அரசு அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களையும் அதனுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.

எவ்வாறாயினும், தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கும் இந்தியாவை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயமானதும் கடுமையானதுமான பொறுப்பு உண்டு. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்பு கண்மூடித்தனமான முறையில் செயற்பட்டு திருகோணமலையிலுள்ள பெற்றோலியக் களஞ்சியத் தொடர்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டார். அத்துடன், ஷ்ரீ லங்காவின் பெற்றோலிய வர்த்தகத் துறையில் இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு இடம் கொடுத்து பெருந்தொகையான எமது பெற்றோலிய நிரப்பு நிலையங்களை இந்தியாவுக்குக் கொடுத்து விட்டார். அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்திலும் பலாலி விமான நிலைய புனரமைப்புப் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைத்தார். மேலும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் இராணுவ ரீதியிலன்றி ஏனைய வகையில் இந்தியா பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கினார்.

இந்த வகையில் தற்போது எமது வடக்கு கடற்பிராந்தியத்தில் எண்ணெய் அகழ்வுச் செயற்பாடுகளில் பெரும் பிரிவை இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அத்துடன், கொழும்பு கதிர்காமம் வீதியை அமைப்பு வேலைகளின் பெரும்பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், இந்தச் சலுகைகள், சந்தர்ப்பங்கள் எல்லாம் வழங்கப்பட்டாலும் இந்தியா திருப்தியடைய வில்லை.

தற்போது ஷ்ரீ லங்கா அரசு அமெரிக்காவுடன் செய்துள்ள "அக்சா" எனக் குறிப்பிடப்படும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் பொதுவான பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கான ஒரு சாதாரண ஒப்பந்தமாகும். இதற்கேற்ப இராணுவ நடவடிக்கை சம்பந்தப்படாத முறையில் அமெரிக்க இராணுவத்துக்கும் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் விமானங்களுக்கும் வசதிகளை ஷ்ரீலங்கா வழங்க முடியும். இவ்வாறான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உட்பட உலகின் 70 நாடுகளுடன் முன்னரே செய்துள்ளது.

இதேவேளை, இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செயற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும், ஐக்கிய அமெரிக்கா ஷ்ரீ லங்காவுடன் மேற்படி பாதுகாப்பு புரிந்துணர்வுள்ள ஒப்பந்தத்தைச் செய்திருப்பதைத் தொடர்ந்து இராணுவ ரீதியில் ஆசிய பிராந்தியத்தில் மிக முக்கிய ஸ்தானமாகிய திருகோணமலை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமென்று இந்தியா பயம் கொண்டுள்ளது. இவ்வாறாக, முன்னர் ரணில் விக்கிரம சிங்க ஐக்கிய அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்ய முற்பட்ட போது, இந்தியா அது விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதை பின்போடும்படி ரணிலிடம் நேரடியாகவே கூறிவிட்டது.

அண்மையில் ஷ்ரீ லங்கா இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள தீர்மானித்திருந்த போதிலும் அந்த முயற்சி ஒப்பந்த வரைவுடனேயே நின்று விட்டதுடன் அவ்வாறான இந்தோ- லங்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள இந்தியா விரும்பவில்லை. முன்னைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காலத்தில் யுத்தத்திற்கு வேண்டிய ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை ஷ்ரீ லங்கா வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்த வேளையில் இந்தியா முதலில் அவற்றை தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படியும் அவ்வாறு இந்தியாவில் பெற முடியாத யுத்த உபகரணங்களை மட்டும் ஐக்கிய அமெரிக்காவிடம் வாங்கும் படியும் கூறியது. ஷ்ரீ லங்காவைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் இந்தோ - லங்கா பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது சாத்தியப்படாத நிலையில் மற்றுமொரு பலம்வாய்ந்த நாட்டின் பாதுகாப்பு உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் அவ்வாறான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக இந்தியா செயற்பட வேண்டிய தேவையில்லை. ஷ்ரீலங்கா யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் நாடாகும். இந்த யுத்தம் தோன்றுவதற்கே மூல காரணமாக இருந்தது இந்தியாவின் முன்னாள் ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சுயநலத்துக்காக அவர்கள் தோண்டிய குழியில் விழுந்து இன்று இந்திய ஆட்சியாளர்களும் யுத்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஷ்ரீலங்கா அமெரிக்காவுடன் செய்து கொண்டிருக்கும் மேற்படி பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஷ்ரீலங்காவுக்கு அமெரிக்காவிலிருந்தும் இஸ்ரேலிடமிருந்தும் நவீன ஆயுதங்கள் கிடைத்து விடும் என்று இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளது.இந்திய இணைத்தளம் ஒன்று தெரிவித்திருக்கும் தகவலுக்கேற்ப ஷ்ரீலங்கா- அமெரிக்கா ஒப்பந்தம் இரண்டு அமெரிக்கப் பிரஜைகளால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா சார்பில் ஷ்ரீலங்காவிலுள்ள அமெரிக்க தூதுவர் கையொப்பமிட ஷ்ரீலங்காவின் சார்பில் ஒப்பமிட்ட பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமை உடையவர் என்பதாலேயே அவ்வாறு இந்திய இணையத்தளம் தெரிவித்திருந்தது. இந்த அளவுக்கு மேற்படி ஒப்பந்தம் பற்றி விமர்சிக்கும் இந்தியா எவ்வாறாயினும் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.

அடுத்து, அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்காக சீனாவுடன் ஷ்ரீலங்கா அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது பற்றியும் சந்தேகத்தை இந்தியா வெளியிட்டுள்ளது. சீனா, ஆசியப் பிராந்தியத்திலுள்ள மூன்று பிரதான நாடுகளிலுள்ள முக்கியமான மூன்று துறைமுகங்களை அமைப்பதற்கு உதவி வழங்கியுள்ளது. அவை பாகிஸ்தானிலுள்ள கவ்டார், பர்மாவிலுள்ள (மியான்மார்) சிற்வே மற்றும் ஷ்ரீலங்காவிலுள்ள அம்பாந்தோட்டை ஆகியவையே இவ்வாறு சீன உதவியில் அமைக்கப்படும் துறைமுகங்களாகும். இந்தத் துறைமுகங்களை அமைக்க சீனா உதவி வழங்கிய போதிலும் இவற்றால் சீனாவுக்கு எந்தவிதமான பொருளாதார இலாபமும் கிடையாது. இதனால், சீனா இவ்வாறு உதவி வழங்குவதற்குத் தயாராகி வருவதற்குரிய காரணம் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஆதிக்கத்திற்கு எதிராக அடி கொடுப்பதே என பாதுகாப்பு விமர்சகர்கள் மூலமாக உலகத்துக்கு இந்தியா தெரிவித்திருக்கிறது. மேற்படி சீனா அமைக்கும் துறைமுகங்கள், சீனாவின் கடற்படையின் நடவடிக்கைகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட முடியும் எனவும் அங்கிருந்து தூரப்புலன் தொழில்நுட்ப உபகரணங்கள் மூலமாக இந்தியாவின் அணுசக்தி நிலையங்கள், வேலைத்திட்டங்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடியும் எனவும் இந்தியா கூறியுள்ளது. அத்துடன், அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து தூர தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் இந்தியாவின் இராணுவ இரகசியங்களையும் தெரிந்து கொள்ளவும் நேரடியாக ஒட்டுக்கேட்கவும் இயலும் என மேலும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த பிரபல விமர்சகர் ராமன் இவ்வாறு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா, தனது இராணுவத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்திலேயே அமைக்க முன்வந்துள்ளதாகக் கூறியுள்ளார். -

லங்காதீப விமர்சனப்பகுதி (ரஞ்சித் ஆனந்த ஜயசிங்க) 25.03.2007

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

[3. வடக்கு கடற் பிராந்தியத்தில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கும இந்திய மீனவர்களுக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்புகளைத் துண்டிக்க, ஷ்ரீ லங்கா கடற்படை மேற்கொண்டு வரும் நடவடிக்கை.

அப்பாவி தமிழக மீனவர்களைக் கொல்வதுதான் அந்த நடவடிக்கையோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி தமிழக மீனவர்களைக் கொல்வதுதான் அந்த நடவடிக்கையோ?

நேற்றிலிருந்து இந்திய கடற்படை பாக் ஜல சந்தியில் கச்சைதீவை அண்டி தனது இரண்டு கெலிக்கொப்டர் தாங்கி போர்க்கப்பல்களை நகர்த்தி கடற்கண்காணிப்பையும் கடல் ரோந்தையும் அதிகரித்துள்ளது..! இது போதாதா... அடிவாங்கும் சிங்களக் கடற்படைக்கு அடைக்கலம் அளிக்க..! :P :rolleyes:

இந்த கட்டுரையை வாசித்தால் இந்தியாவுக்கு யார் நண்பன் யார் எதிரி என நல்லா தெரியும்.தற்போது இந்தியாக்கு எதிராக நடவடிக்கைகளை இலங்கை அரசு முடக்கி விட்டுள்ளது ஜேவிபி மற்றும் சிங்கள கடும்போக்காளர்கள் இந்திய தலையீட்டை எதிர்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் அது மட்டுமல்ல இந்த நேரத்தில் லங்காதீப போன்ற பத்திரிகையிலும் இந்திய தலையீட்டை எதிர்க்கும் வண்ணமான செய்திகள் வந்து கொண்டுதான் இருகின்றன.இந்தியாவை தன் வலையில் வீழ்த்தி தன் தாளத்துக்கு ராஜீவை ஆட்டி அதன் மூலம் தமிழ் மக்களை கொன்று குவித்தார் ஜெயவர்த்தன ஆனால் இந்தியாவில் இருக்கும் பிராமண அரசியல் அலோசகர்களும் பத்திரிகையாளர்களும் தமிழ் தேசியத்தின் மேல் இருக்கும் கோபத்தினால் பிழையான அணுகுமுறைகளை இந்திய ஆட்சியாளர்களுக்கு பரிந்துரைகின்றன.இந்தியாவை மிரட்டிப்பாக்கும் நடவடிக்கையையே மகிந்த தன் சிங்கள பேரினவாத நண்பர்கள் மூலம் செய்ய பார்கின்றார் அதாவது புலிகளால் தமக்கு ஆபத்தில்லை என IAF தளபதி சொன்னதும் மற்றும் புலிகளின் வாந்தாக்குதலில் தன் வலையில் இந்தியா விழாததுக்குமாக சேர்த்து மிரட்டி ஈந்தியாவை பணிய வைக நப்பாசைபடுகின்றார் மகிந்த.ஆனால் இந்தியா தன் பட்டறிவின் மூலம் சரியான தீர்கதரிசனமான முடிவையே இனி மேற்கொள்ளும் என நம்பலாம்.

கந்தப்பு சொன்னது போல புலிகளுக்கும் தமிழக மீனவ சமுகத்துக்குமான தொடர்பை முறிக்க இலங்கை கடற்படை கொலைகளை செய்கின்றது இதனை லங்காதீப அப்பட்டமாக்கியுள்ளது நாமறிந்தவரைக்கும் இலங்கை கடற்படை எந்தவிதமான வேறு சுமுகமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை அது தன் கொலை வெறியை தமிழக மீனவர் மேல் நடாத்தி

1.கூட்டு கடல் ரோந்து

2.இந்தியாவை புலிகளுக்கு எதிராக திருப்புதல்

3.தமிழக மீனவர்களை புலிகளுக்கு உதவாமல் செய்தல்

போன்ற 3 மாங்காய்களை ஒரு கல்லில் அடிக்க பார்கின்றது அதுக்கு தமிழக அர்சியல் வாதிகளும் இந்திய மத்திய அரசியல் வாதிகளும் தீர்கமான ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளாமல் மகிந்தவுக்கு தாளம் போட்டுகொண்டு இருகின்றனர்.

இந்தியா இவ்மீனவ படுகொலையை தடுக்க குறைந்த பட்ச நடவடிகையாக இலங்கை தூதுவரை வெளிநாட்டு அமைச்சுக்கு அழைத்து தன் அதிருப்தியையும் கண்டனத்தையுமாவது தெரிவிக்க வேண்டும்.அப்படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கடற்படை செய்ததாக ஆதாரமில்லை என கூறிக்கொண்டு இருக்குமேயானால் தன் சொந்த மக்களை நம்பாமல் கொலைஞர்களின் சொல்லுக்கு தலையாட்டுவதாகவே எடுத்து கொள்ள வேண்டும்.

இந்திய வெளியுறவு கொள்கையாலும் இலங்கை அரசின் நரித்தனத்தாலும் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த தமிழினமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.