Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL

Featured Replies

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL

 

2017 ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்த முறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது.

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL
 

இந்தியாவில் இனி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் கூட தொலைக்காட்சிகள் அலறப் போகின்றன; இந்திய இளசுகள் எல்லாம், `ஃபுட்பால் ஹேங் ஓவரில்’ இரவு முழுவதும் விழித்துக்கிடக்கப் போகின்றனர். 2018-19 சீஸனுக்கான `சாம்பியன்ஸ்லீக் ஃபுட்பால் இஸ் பேக்’. ஆம், ஐரோப்பாவின் டாப் கிளப்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவான, சாம்பியன்ஸ்லீக் கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தமுறை கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பிலுள்ள `ஃபேவரைட்’ அணிகளைப் பற்றிய அலசல். #UCL

ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)

கடந்த 3 வருடங்களாக கோப்பையைக் கைப்பற்றி, சாம்பியன்ஸ்லீக் தொடரை `குத்தகைக்கு எடுத்திருக்கும்’ ரியல் மாட்ரிட், இந்தமுறையும் கோப்பையைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சீஸனில் இருந்த பலமிக்க அணி இப்போது இல்லை. ஏனென்றால், பயிற்சியாளர் ஜிடேன் கடந்த சீஸனின் இறுதியிலேயே விடைபெற்றுவிட, இந்த சீஸனின் தொடக்கத்தில், மாட்ரிட்டின் `சூப்பர்ஸ்டார்’ கிறிஸ்டியானோ ரொனால்டோ  யுவென்டஸ் அணிக்குச் சென்றுவிட்டார். ரொனால்டோ இல்லாவிட்டாலும் கேரத் பேல், பென்சிமா, மற்றும் இஸ்கோ கூட்டணி இருப்பதால் அட்டாக்கிற்கு பஞ்சம் இருக்காது. நடுகளத்தில் லூகா மோட்ரிச் மற்றும் குரூஸ் நம்பிக்கையளிக்கின்றனர். 

 

 

ரியல் மாட்ரிட் #UCL

அவர்களின் இப்போதைய பிரச்னை டிஃபன்ஸ். செர்ஜியோ ரமோஸ், மார்செலோ ஆகியோர் அட்டாக்கில் அதிக கவனம் செலுத்துவதால், அது அவ்வப்போது எதிரணியினருக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. உலகக் கோப்பையின் சிறந்த கோல்கீப்பர் கோர்ட்வாவை வாங்கியிருப்பதால், கொஞ்சம் நம்பிக்கை கூடியுள்ளது. `குரூப்-ஜி’ ல் இடம்பெற்றிருக்கும் அணிகளில் ரோமாவை சமாளித்தாலே போதும். ரோமாவைத் தவிர மற்ற இரு அணிகளையும் எளிதாக வென்று, அடுத்த சுற்றுக்கு மாட்ரிட் முன்னேறுவது உறுதி.

பார்சிலோனா (ஸ்பெயின்)

கடந்த சீஸனில் இத்தாலியின் ரோமாவிடம் அடிவாங்கி, காலிறுதியில் வெளியேறி அதிர்ச்சியளித்த பார்சிலோனா, இம்முறை சாம்பியன்ஸ்லீக் கோப்பையை முத்தமிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கேப்டனாகப் பதவியேற்றபோது, ``சாம்பியன்ஸ்லீக் கோப்பையினை வெல்ல எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்” என சூளுரைத்திருக்கிறார் `லிட்டில் மாஸ்டர்’ லியோனல் மெஸ்ஸி. ஆர்தர், மால்கம், அர்டுரோ விடால் மற்றும் லெங்லெட் என புதுவரவுகள் பார்சிலோனாவுக்குப் போதுமான பலம் சேர்க்கின்றனர். முன்களத்தில் மெஸ்சி, சுவாரஸ், டெம்பெலே என மூவரும் `சூப்பர் ஃபார்மில்’ இருக்கிறார்கள். இனியஸ்டா எனும் மாபெரும் ஜாம்பவான் இல்லாமல் களமிறங்குகிறது அந்த அணி. ஒரு வீரராக கொடினியோ அவரது இடத்தை நிரப்பினாலும், ஒரு லீடராக இனியஸ்டாவை பார்சிலோனா மிஸ் செய்யும். லீடர் எனும் மிகப்பெரிய ரோலை மெஸ்ஸியால் நிரப்ப முடியுமா. ரசிகர்களின் கேள்விக்கு மெஸ்ஸி பதில் சொல்லவேண்டிய தருணம் இது. 

பார்சிலோனா #UCL

பார்சிலோனாவின் ஒரே பலவீனம் பீக்கே, உம்டிடி, ஆல்பா அடங்கிய டிஃபென்ஸ் லைன் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு தவறாவது செய்துவிடுகின்றனர். கோப்பையை வெல்ல அவர்கள் தடுமாறாமல் இருக்க வேண்டியது அவசியம். `குரூப் ஆஃப் டெத்’ என்றழைக்கப்படும் குரூப்-பி ல், பலமிக்க டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் மற்றும் இண்டர் மிலன் அணிகளுடன் இடம்பெற்றிருக்கும் பார்சிலோனா, குரூப் சுற்றைக் கடக்க கடினமாகப் போராட வேண்டியிருக்கும்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்)

புதிய பயிற்சியாளர் தாமஸ் டுகெல்லின் வருகையால் புதுரத்தம் பாய்ச்சப்பட்டு, இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக விளங்குகிறது பிஎஸ்ஜி. இந்த சீஸனில், இத்தாலியின் யுவென்டஸிலிருந்து வந்திருக்கும் `லெஜெண்ட்’ கோல்கீப்பர் ஜிஜி புஃபோன் மிகவும் அனுபவசாலி. தியாகோ சில்வா, மர்க்யுன்ஹொஸ், டேனி ஆல்வஸ் ஆகிய டிஃபண்டர்களும் போதுமான அனுபவம் கொண்டவர்களே. இதுவரை பின்களத்தில் கொஞ்சம் கோட்டைவிட்டுக்கொண்டிருந்த அணிக்கு, இந்த சீசன் மிகப்பெரிய மாற்றமாய் அமையக்கூடும். 

பி.எஸ்.ஜி #UCL

இன்றைய தேதிக்குக் கால்பந்து உலகின் மிகச்சிறந்த அட்டாக்கிங் பார்ட்னர்ஷிப் கொண்ட அணி பி.எஸ்.ஜி தான். எடின்சன் கவானி, நெய்மர் மற்றும் `யங்ஸ்டார்’ எம்பாப்பே அடங்கிய அட்டாக் எதிரணிகளைப் பந்தாடப்போவது உறுதி. பி.எஸ்.ஜி இருக்கும் `குரூப்-சி’ ல் லிவர்பூல், நெபோலி ஆகிய அணிகள் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேற கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும். கடந்த முறை நெய்மர் காயமடைந்தது போல, இந்தமுறை யாரும் காயமடையாமல் இருந்தாலேபோதும், பிஎஸ்ஜி நிச்சயம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

யுவென்டஸ் (இத்தாலி)

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது அசுர பலத்தில் இருக்கிறது யுவென்டஸ். காரணம் ரொனால்டோ என்னும் `ஒன் மேன் ஆர்மியின்’ வருகை. 2017-ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்தமுறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தமுறை சாம்பியன்ஸ் லீக் வென்றால், 3 வேறு அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் வென்றவர் என்ற மகத்தான சாதனையையும் அவர் படைப்பார். பாலோ டிபாலா, மண்ட்சுகிச், டக்லஸ் கோஸ்டா ஆகியோர் அட்டாக்கில் ரொனால்டோவுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நடுகளத்தில் மடூடி, ஜானிச், கெதிரா மற்றும் எம்ரே சேன் என நிறைய வீரர்கள் இருந்தாலும், மோட்ரிச், கொடினியோ பொன்ற அட்டாக்கிங் ஜீனியஸ்கள் இல்லை. அதனால் அட்டாக் பெரும்பாலும் விங்கர்களை நம்பியே இருக்கிறது. டிஃபென்ஸில் செலினியோடு, மிலனிலிருந்து மீண்டும் அணிக்கு வந்திருக்கும் பொனுச்சி கைகோப்பது அணிக்கு பெரிய பூஸ்ட். ஆனால் புஃபோன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை சீக்கிரம் நிரப்பினால் மட்டுமே யுவென்டஸ் இந்தத் தொடரில் நீடிக்கமுடியும்.

யுவன்டஸ் #UCL

`குரூப்-ஜி’ ல் மான்செஸ்டர் யுனைடெட் தான் யுவென்டஸிற்கு தலைவலியை ஏற்படுத்தும். 2013-ல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ அடித்த கோல்கள், மான்செஸ்டர் யுனைடெட்டை தொடரிலிருந்து வெளியேற்றியது வரலாறு. இந்நிலையில் மீண்டும் ரொனால்டோ தனது முன்னாள் அணியுடன் மோதப் போகிறார் என்பதால் எதிர்பார்ப்புக்குப் பஞ்சமில்லை. அவர் மட்டுமல்லாமல் உலகக் கோப்பை நாயகன் போக்பாவும் இந்தப் போட்டியில் தன் முன்னாள் அணியை எதிர்கொள்ளப்போகிறார். 

பேயர்ன் முனிச் (ஜெர்மனி)

தொடர்ந்து 6 முறை புண்டஸ்லிகா டைட்டிலைக் கைப்பற்றியிருக்கும் பேயர்ன் முனிச், சாம்பியன்ஸ் லீக் அரங்கில் சமீக காலமாக முத்திரை பதிக்க முடியாமல் தடுமாறுகிறது. நிகோ கோவக் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சாம்பியன்ஸ்லீக் கோப்பையை வென்று ஐரோப்பிய அரங்கிலும் ஆதிக்கத்தைச் செலுத்தும் முனைப்பிலுள்ளது. ஆனால், இந்த மாற்றத்தை ஏற்படுத்த பயிற்சியாளர் ரொம்பவே மெனக்கெடவேண்டும். அடிக்கடி அணிக்குள் ஈகோ மோதல் வெடித்துள்ளது. அதைச் சமாளிக்கவேண்டும். முல்லர் போன்ற முன்னணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பும்போது அவர்களை பெஞ்சில் அமர்த்தும் துணிவான முடிவு எடுக்கவேண்டும். முந்தைய பயிற்சியாளர்களைப் போல் தொடர்ச்சியாக ரொடேஷன் செய்யாமல் ஓரளவு நிலையான பிலேயிங் லெவனை அமைக்க வேண்டும். போதாக்குறைக்கு நடுகளவீரர் டொலிஸோ காயத்தால் 6 மாதங்களுக்கு ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் விரைவில் தீர்வு ஏற்படுத்தினால் பேயர்ன் மறுபடி வெல்லும். 

பேயர்ன் மூனிச் #UCL

இந்த அணிகள் தவிர்த்து, கடந்த சீஸனின் `ரன்னர்-அப்’ லிவர்பூல், இந்தமுறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற கடினமாகப் போராடும். வழக்கத்துக்கு மாறாக அந்த அணியின் நடுகளமும், டிஃபன்ஸும் பலமாக இருக்கிறது. சாலா, மனே மற்றும் ஃபிர்மினோ அடங்கிய படையைக் கொண்டிருப்பதால் நிச்சயம் எதிரணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும். பெப் கார்டியோலாவின் தலைமையில் கடந்த சீஸனின் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியும் இந்தமுறை தங்களை நிரூபிக்கக் காத்திருக்கிறது. டேவிட் சில்வா, டி புருய்னே மற்றும் செர்ஜியோ அக்வேரோ போன்ற நட்சத்திர வீரர்கள் நிறைந்த சிட்டி, ஒலிம்பிக் லியான், ஹோஃபென்ஹெய்ம் போன்ற அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு எப்படியும் முன்னேறிவிடும்.

2014 மற்றும் 2016 வருடங்களின் `ரன்னர்-அப்’ அத்லெடிகோ மாட்ரிட், கடந்த சீஸனின் `யூரோப்பா லீக் சாம்பியன்’ என்ற பெருமையுடன், இம்முறை சாம்பியன்ஸ்லீக் தொடரில் கலந்துகொள்கிறது. கடந்த 2 சீஸன்களாக அவர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தாதபோதும், சிமியோனின் ஜாலத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. 

https://www.vikatan.com/news/sports/137244-favourites-of-ucl-201819-season.html

  • தொடங்கியவர்

மெஸ்ஸியின் ஹாட்ரிக்...இன்டர் மிலானின் கம்பேக்!

3292_thumb.jpg
 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பார்சிலோனா மற்றும் இன்டர் அணிகள் வெற்றி...

 

சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வாரா மெஸ்ஸி?

 

 

ஐரோப்பாவின் சிறந்த லீக் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையின் முதல் நாள் ஆட்டங்கள் முடிவடைந்தன. ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் நெதர்லாந்தின் பிஎஸ்வி அணிகள் மோதிய ஆட்டத்தில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்வி அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸியின் மூன்று கோல்களும், ஓஸுமா டெம்பெளி ஒரு கோலும் அடித்து பார்சிலோனாவை வெற்றியடையச் செய்தனர். எதிரணியின் ஹெர்வின் லோசானோ பல முறை முயன்றும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 

 
 

 

ஆட்டத்தில் சாமுவெல் உம்டிட்டி இரண்டு யெல்லோ கார்டுகளை வாங்கி வெளியேறினார். மெஸ்ஸியின் அட்டகாசமான ஃப்ரீகிக்கும், ஒஸுமா டெம்பிளியின் கோலும் ரசிகர்களை துள்ளிக்குதிக்க வைத்துவிட்டன. இதே நேரத்தில் இத்தாலியின் இன்டர் மிலான் மற்றும் இங்கிலாந்தின் டோட்டன்ஹெம் ஹாட்ஸ்பர் இடையே நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் இன்டர் மிலான் அணி இரண்டு கோல்களை அடித்து வெற்றிபெற்றது. டோட்டன்ஹேம் அணியில் க்ரிஸ்டின் எரிக்ஸன் அடித்த ஒரு கோல், கோல்கீப்பரின் தவறா இல்லை எரிக்ஸனின் அதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. ஆனால், அந்தக் கோல் பலன்தரவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீகுக்கு வந்திருக்கும் இன்டர் அணியின் கம்பேக்கை பார்த்து ஸ்பர்ஸ் அணி அதிர்ந்துபோய் இருக்கிறது. 

https://www.vikatan.com/news/sports/137348-champions-league-day-1-barcelona-and-inter-shines.html

  • தொடங்கியவர்

சிவப்பு அட்டை பெற்று கண்ணீரோடு வெளியேறிய ரொனால்டோ

ronaldo-3-696x513.jpg
 

ஜுவண்டஸ் அணிக்காக தனது முதல் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டியில் ஆடிய போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்ச்சைக்குரிய முறையில் சிவப்பு அட்டை பெற்று கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

 

 

சம்பியன்ஸ் லீக் தொடரின் H குழுவுக்காக தனது ஆரம்பப் போட்டியில் வலென்சியா அணியை எதிர்கொண்ட ஜுவண்டஸ் தனது முன்கள வீரர் ரொனால்டோவை 29 ஆவது நிமிடத்திலேயே இழந்தது. எனினும் நேற்று (19) நடந்த இந்தப் போட்டியில் 10 வீரர்களுடன் ஆடிய ஜுவண்டஸ் இரண்டு பெனால்டி கோல்கள் மூலம் போட்டியை வென்றது.

இதில் எதிரணி பின்கள வீரர் ஜெய்சோன் முரில்லோவின் தலையை பிடித்த சம்பவத்திற்காகவே ரொனால்டோ வெளியேற்றப்பட்டார்.  

இந்நிலையில் நடத்தை விதி மீறலுக்காக ரொனால்டோ இரண்டு போட்டித் தடைக்கு முகம்கொடுக்க வாய்ப்பு எற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது சொந்த மைதானத்தில் நடைபெறும் யங் போய்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் பற்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.    

போட்டியின் 29 ஆவது நிமிடத்தில் வைத்து எதிரணி பெனால்டி எல்லைக்குள் நுழைவதை தடுத்த முரில்லோவை ரொனால்டோ தனது பூட்ஸ் பாதத்தால் தடுக்கிவிழச் செய்தார். கிழே விழுந்த முரில்லோவை எழுந்து நிற்கச் செய்வதற்காக ரொனால்டோ அவரது தலைமுடியை பிடித்து இழுத்தார்.

இதனைத் அடுத்து வலென்சியா வீரர்கள் உடனடியாக ரொனால்டோவின் செயலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு நடுவரிடம் முறையிட்டதுடன்,  ரொனால்டோவோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்

 

 

சம்பவம் குறித்து நடுவர் பெலிக்ஸ் ப்ரிச் சக நடுவர்களுடன் ஆலோசனை பெற்றுவிட்டு ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை காண்பித்தார். இதனைப் பார்த்த ரொனால்டோ அதிர்ச்சியில் கீழே விழுந்து தனது அதிருப்தியை வெளியிட்டார். தொடர்ந்து கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.  
போட்டி நடைபெறாத வேளையிலேயே முரில்லோவுக்கு எதிராக ரொனால்டோ இப்படி நடந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 154 சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ஆடியிருக்கும் ரொனால்டோ சிவப்பு அட்டை பெற்று வெளியேறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எனினும் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் சிவப்பு அட்டை பெறுவது இது 11 ஆவது தடவையாகும். கடைசியாக 2017 ஓகஸ்டில் ரியல் மெட்ரிட்டுக்காக ஆடியபோது பர்சிலோனா அணிக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்றார்.

எனினும், ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக சிவப்பு அட்டை பெற்ற அணியாக ஜுவண்டஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜுவண்டஸ் இந்த தொடரில் மொத்தம் 26 சிவப்பு அட்டைகளை பெற்றிருப்பதோடு இது வேறு எந்த அணியை விடவும் ஏழு அட்டைகள் அதிகமாகும்.   

 

 

‘வீடியோ உதவி நடுவர் (VAR) முறை மூலம் நடந்ததை தவிர்த்திருக்கலாம். அது சரியான முடிவை தந்திருக்கும். போட்டித் தடை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம்’ என்று ஜுவண்டஸ் பயிற்சியாளர் மெக்ஸ் அல்லெக்ரி இந்த சம்பவம் தொடர்பில் குறிப்பிட்டார்.

ரொனால்டோ இதற்கு முன்னரும் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கண்ணீர் விட்டிருந்தபோதும் அது அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரியல் மெட்ரிட்டுக்காக நான்கு முறை சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்த தருணங்களில் விட்ட ஆனந்தக் கண்ணீராகவே இருந்தது.

ஒன்பது ஆண்டுகள் ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் அணிக்கு ஆடிய ரொனால்டோ இந்த பருவத்தில் இத்தாலியின் ஜுவண்டஸ் அணிக்கு 100 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தமானார்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.