Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்ளுக்கு ஐந்து பதக்கங்கள்

Featured Replies

ஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்ளுக்கு ஐந்து பதக்கங்கள்

Untitled-1-191-696x464.jpg
 

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

 

16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இரத்தினபுரி சுமனா மகளிர் கல்லூரி மாணவி எல். ஹபுஆராச்சி (37.91 மீற்றர்), 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவன் ஹிரூஷ ஹஷேன் (7.19 மீற்றர்), பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவி பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா (6 நிமிடம் 37.9 செக்.) ஆகியோர் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இன்று ஆரம்பமாகிய மைதான நிகழ்ச்சிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக ஐந்து பதக்கங்களை வென்றனர்.

இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்களான எஸ். சுகிதர்தன், எஸ். ஜம்சன் மற்றும் ஏ. ஜினோயன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்று அசத்தியிருந்தனர்.

இதன்படி, 4.00 மீற்றர் உயரத்தை தாவிய எஸ். சுகிதர்தன், எஸ். ஜம்சன் ஆகிய வீரர்கள் சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் வர்ண சாதனையுடன், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றிகொள்ள, 3.60 மீற்றர் உயரத்தைத் தாவிய ஏ.ஜினோயன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் இம்மூன்று வீரர்களும் முதல் தடவையாக பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனினும், இப்போட்டியில் 4.10 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு இவ்விரண்டு வீரர்களும் மேற்கொண்ட முயற்சிகள் தவறவிடப்பட்டமை இங்கு கவனிக்கத்தக்கது. அதிலும் குறிப்பாக, சுகிர்தன் தனது இரண்டாவது முயற்சியில் மைதானத்தின் வெளிப்புறமாக விழுந்ததால் துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளானார். எனவே அவர் போட்டியிலிருந்து இடைநடுவில் விலகிக் கொண்டார்.

ஹெரினாவுக்கு 2ஆவது இடம்

18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஹெரினா, 1.54 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

எனினும், இப்போட்டியில் 1.54 மீற்றர் உயரத்தை முதலில் தாவிய ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியைச் சேர்ந்த யசோதா தேஜானி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

hareena-2.jpg

 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜோன் டார்பர்ட் மெய்வல்லுனர் போட்டிகளில் உயரம் பாய்தல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று வருகின்ற ஹெரீனா, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 4 ஆவது இடத்தையும் (1.45 மீற்றர்), கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 4 ஆவது இடத்தையும் (1.50 மீற்றர்) பெற்றுக்கொண்டார்.

எனினும், கடந்த மே மாதம் நடைபெற்ற வட மாகாண விளையாட்டு விழாவில் 1.42 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற ஒரேயோரு பாடசாலை மாணவியான ஹெரீனா, நாளை மறுதினம் (21) நடைபெறவுள்ள பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்டு தங்கப் பதக்கதை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உபாதையுடன் போட்டியிட்ட மிதுன்ராஜ்

போட்டிகளின் முதல் நாளான இன்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தார்.

குறித்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட உபாதையுடன் போட்டியிட்ட அவர், 14.55 மீற்றர் தூரத்தை எறிந்து மூன்றாவது இடத்துடன் திருப்தி அடைந்தார்.

mithunraj-2.jpg

 

இதேவேளை, ஈட்டி எறிதல் மற்றும் பரிதிவட்டம் எறிதல் போட்டிகளிலும் அதிக கவனத்தை செலுத்தி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மிதுன்ராஜ், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.07 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 15.46 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் மாரசிங்க வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், 14.71 மீற்றர் தூரத்தை எறிந்த கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த தெவிந்து போகொடகே வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, மிதுன்ராஜ், கலந்துகொள்ளவுள்ள பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

சொந்த சாதனையை முந்திய பாரமி

17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி, இன்று நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார். அதற்காக அவர் 6 நிமிடங்களும் 37.9 நிமிடங்களை எடுத்துக் கொண்டார்.

 

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் (6 நிமி. 59.63செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Parami-2000m.jpg

 

இதேநேரம், இலங்கை 16 வயதுக்குட்பட்ட பெண்கள் றக்பி அணிக்காக விளையாடியுள்ள பாரமி வசந்தி, ஜப்பானின் கிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இதனையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆர்ஜென்டீனாவின் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகளிலும் அவர் பங்குபற்றியிருந்தார். தாய்லாந்தின் பெங்கொங் நகரில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இதன்படி, இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் பாரமி பெற்றுக்கொண்டார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இவ்வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர்  குழாமில் சிறப்புக் குழுவிலும் அவர் முதல் தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், பாரமியுடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட வலள ஏ ரத்னாயக்க கல்லூரி மாணவி பி. எதிரிசூரிய (07நிமி. 43.1 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், சுமனா மகளிர் கல்லூரி மாணவி எல். பிரேமதிலக்க (08நிமி. 01.3 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

நீளம் பாய்தலில் சாதனை

16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவன் ஹிரூஷ ஹஷேன், 7.19 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக 2007 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியைச் சேர்ந்த ஆர். குணசிங்க நிலைநாட்டிய சாதனையை சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு ஹிரூஷ ஹஷேன் முறியடித்தார்.

 

இதேவேளை, குறித்த போட்டியில் முதல் நான்கு இடங்களையும் புனித பேதுரு கல்லூரி மாணவர்கள் கைப்பற்றியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

கோலூன்றிப்பாய்தலில் வழித்துத்துடைத்தது மகாஜனக் கல்லூரி!!

 
 
Capture-105-780x288.jpg
 
 

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 88ஆவது சேர் ஜோன்­கா­பெற் தட­க­ளத் தொட­ரில் 18 வய­துப் பிரிவு கோலூன்­றிப் பாய்­த­லில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் வீரர்­கள் தங்­கம், வெள்ளி, வெண்­க­லம் என்று அனைத்­துப் பதக்­கங்­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 88ஆவது சேர் ஜோன்­கா­பெற் தட­க­ளத் தொடர் கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்டு மைதா­னத்­தில் நடை­பெற்று வரு­கின்­றது.

நேற்று நடை­பெற்ற 18 வய­திற்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்­றிப் பாய்­த­லில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னாக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.சுகிர்­தன் 4 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து தங்­கப் பதக்­கத்­தை­யும், எஸ்.ஜம்­ஷான் 4 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், ஏ.ஜெனோ­ஜன் 3.60 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

3-333333333333333.jpg3-11111111111.jpg3-222222222222.jpg

https://newuthayan.com/story/11/கோலூன்றிப்பாய்தலில்-வழித்துத்துடைத்தது-மகாஜனக்-கல்லூரி.html

  • தொடங்கியவர்

சேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் இரண்டாவது நாளில் சாதனை மழை

Untitled-2-12-696x464.jpg
 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 88 ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2 ஆவது நாளான இன்றைய தினம் பன்னிரெண்டு போட்டி சாதனைகளும், 6 முன்னைய போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

இதில், குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 9 நிமிடங்கள் 58.3 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். அத்துடன், தேசிய மட்டத்தில் பதிவாகிய ஐந்தாவது அதிசிறந்த காலமாகவும் இது இடம்பிடித்தது.

 

முன்னதாக, நேற்று (19) நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியிலும் அவர் புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், நேற்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவனான ஹிரூஷ ஹஷேன், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டி மற்றும் ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று இம்முறை சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் ஹெட்ரிக் பதக்கங்களை வென்ற முதல் வீரராகவும் இடம்பிடித்தார்.

parami-1-1.jpg

 

 

இது இவ்வாறிருக்க, மைதான நிகழ்ச்சிகளில் இன்றைய தினமும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வட மாகாண வீரர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

இதேநேரம், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பதுளை சரவஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் சி. அரவிந்தன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்படி, போட்டிகளின் இரண்டாவது நாள் முடிவில் வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக எட்டு பதக்கங்களை வென்றனர்.

மகாஜனாவுக்கு மேலும் இரு பதக்கங்கள்

கோலூன்றிப் பாய்தலில் வழமைபோல் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி அணி, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்தது.

இக்கல்லூரியைச் சேர்ந்த கே. கேதூஷன், 4.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார். இதே ஆற்றலை வெளிப்படுத்திய மகாஜனா கல்லூரியின் மற்றுமொரு வீரரான எஸ். கபில்ஷன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

எனினும், அடுத்த இலக்காக 4.10 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு இவ்விரண்டு வீரர்களும் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

 

  • kabilson.jpg
    எஸ். கபில்ஷன்
  • kethushan.jpg
    கே. கேதூஷ>
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3.80 மீற்றர் உயரத்திற்குத் தாவிய பிபிலதெனிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த அசங்க டில்ஷானுக்கு வெண்கலப் பதக்கம் கிட்டியது.

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்களான எஸ். சுகிதர்தன், எஸ். ஜம்சன் மற்றும் ஏ. ஜினோயன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்று அசத்தியிருந்தனர்.

அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனா கல்லூரி மாணவி சி. ஹெரீனா 1.54 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

மிதுன்ராஜுக்கு 2ஆவது பதக்கம்

16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்குகொண்ட ஹார்ட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், 53.79 மீற்றர் தூரத்தை எறிந்து முன்னைய போட்டி சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற மிதுன்ராஜ், மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்றார்.

இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.55 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.

இது இவ்வாறிருக்க, இன்று காலை நடைபெற்ற பரிதிவட்டம் எறிதல் போட்டியின் ஆரம்ப சுற்றுக்களில் சிறந்த தூரங்களைப் பதிவுசெய்து முன்னிலை பெற்ற மிதுன்ராஜுக்கு, கைவிரலில் ஏற்பட்டுள்ள காயத்தினால் இறுதி சுற்றுக்களில் எதிர்பார்த்தளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. இதன்படி, 53.79 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த அவர், இம்முறை சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் தனது 2 ஆவது பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

mithun-raj.jpg

இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்குபற்றியிருந்த மிதுன்ராஜ், 53.23 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் மிதுன்ராஜுக்கு அண்மைக்காலமாக பலத்த போட்டியைக் கொடுத்து வருகின்ற பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க 61.67 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

முன்னதாக கடந்த வருடம் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த அகலங்க விஜேசூரிய, 52.48 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை ருமேஷ் தரங்க முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அரவிந்தன் அபாரம்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த சந்திரகுமார் அரவிந்தன், குறித்த போட்டியை ஒரு நிமிடமும் 55.65 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். ஆனால் குறித்த போட்டியில் அவருடைய சிறந்த காலத்தை பதிவு செய்ய முடியாமல் போனது.

கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 800 மீற்றரில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அரவிந்தன், ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

aravindan-1.jpg

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் கல்வி பயின்று வருகின்ற அரவிந்தன், 2015ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர், ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் தேசிய இளையோர் விளையாட்டு விழாக்களில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரியின் இசுரு லக்‌ஷான் (ஒரு நிமி. 55.65 செக்.) தங்கப் பதக்கத்தையும், கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் எல். ஜயதிஸ்ஸ (ஒரு நிமி. 57.29 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

அஞ்சலோட்டத்தில் 3 சாதனைகள்

இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்டத்தில் பெந்தொட்ட காமினி தேசிய கல்லூரி அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. குறித்த போட்டியை நிறைவுசெய்ய 49.74 செக்கன்களை அந்த அணி எடுத்துக்கொண்டது.

முன்னதாக 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் வென்னப்புவ திருக்குடும்ப கன்னியர் மடம் மாணவிகளால் (49.96 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு காமினி தேசிய கல்லூரி மாணவிகள் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த போட்டியில் ராஜகிரிய கேட்வே சர்வதேச கல்லூரி அணி (50.86 செக்.) முன்னைய சாதனையை விட சிறப்பாக ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும், குருநாகல் சேர். ஜோன் கொத்தலாவல கல்லூரி (50.96 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

U-18-100X4-GIRLS.jpg

அத்துடன், இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜகிரிய கேட்வே சர்வதேச கல்லூரி அணியில் தேசிய கனிஷ்ட அணியில் இடம்பெற்றுள்ள ஷெலிண்டா ஜென்சன் மற்றும் சதீபா ஹெண்டர்சன் போன்ற அனுபமிக்க வீராங்கனைகளை மிகவும் பின்தங்கிய பாடசாலையான பெந்தொட்டயில் உள்ள காமினி தேசிய கல்லூரி அணி வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 

இது இவ்வாறிருக்க, 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் கொழும்பு றோயல் கல்லூரி அணி மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான அஞ்சலோட்டத்தில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி அணியும் புதிய போட்டி சாதனைகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தன. அத்துடன், இவ்விரண்டு பாடசாலை அணிகளும் 2015ஆம் மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் நிலைநாட்டப்பட்ட ஜோன் டார்ப்ட் சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

12 போட்டி சாதனைகள் முறியடிப்பு

இன்று காலை நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் வேக நடைப் போட்டியில் மாகந்துர மத்திய கல்லூரி மாணவி சசிகலா தில்ஹானி (27 நிமி. 58.35 செக்.), புதிய போட்டிச் சாதனை படைத்தார்.

முன்னதாக, 2008ஆம் ஆண்டு நமடகஸ்வௌ மத்திய கல்லூரியைச் சேர்ந்த எல்.ஏ நிமாலி நிலைநாட்டிய சாதனையை சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.

இதேவேளை, ஜப்பானின் கிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தையும், அதற்குமுன் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவன் பசிந்து கொடிகார (52.69 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட குழாமிலும் பசிந்து கொடிகார இடம்பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

12 போட்டி சாதனைகள் முறியடிப்பு

இன்று காலை நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் வேக நடைப் போட்டியில் மாகந்துர மத்திய கல்லூரி மாணவி சசிகலா தில்ஹானி (27 நிமி. 58.35 செக்.), புதிய போட்டிச் சாதனை படைத்தார்.

முன்னதாக, 2008ஆம் ஆண்டு நமடகஸ்வௌ மத்திய கல்லூரியைச் சேர்ந்த எல்.ஏ நிமாலி நிலைநாட்டிய சாதனையை சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.

இதேவேளை, ஜப்பானின் கிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தையும், அதற்குமுன் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவன் பசிந்து கொடிகார (52.69 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட குழாமிலும் பசிந்து கொடிகார இடம்பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள கொழும்பு றோயல் கல்லூரி மாணவனான செனிரு அமரசிங்க, 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.10 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, 2004ஆம் ஆண்டு கொடகவல மத்திய கல்லூரியைச் சேர்ந்த டி. ரணதுங்கவினால் நிலைநாட்டிய சாதனையை சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.

இதேநேரம், மத்திய தூரப் போட்டிகளில் தேசிய மற்றும் தெற்காசிய சம்பியனாகிய வலள ஏ. ரத்னாயக்க கல்லூரி மாணவி டில்ஷி குமாரசிங்க, 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் (2நிமி. 12.67 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

 

இதேவேளை, 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி மாணவி ஒவினி சந்திரசேகர (13.15 செக்.), 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த ரமேஷ் மல்ஷான் (21.92 செக்.), 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வலள ஏ ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த டில்ஷி குமாரசிங்க (2நிமி. 12.67 செக்.) மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாதம்பே டி.எஸ் சேனநாயக்க கல்லூரியைச் சேர்ந்த லஹிரு அவிஷ்க குருசிங்க (ஒரு நிமி. 59..02 செக்.), ஆகிய வீரர்கள் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

88 ஆவது தடவையாகவும் நடைபெற்றுவருகின்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடரின் மூன்றாவது நாள் போட்டிகள் நாளை (21) நடைபெறவுள்ளது.

http://www.thepapare.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் பிரகாசித்த ஹார்ட்லி, மகாஜனா வீரர்கள்

 

 

JT-1-696x460.jpg
 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வந்த 88ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதி நாளான இன்றைய தினம் வட பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மேலும் 3 பதக்கங்களை சுவீகரித்தனர்.

 

 

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இம்முறை வட மாகாணம் சார்பாக பங்குகொண்ட யாழ், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 11 பதக்கங்களை வென்றனர்.

எனினும், அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பாடசாலை வீரர்கள், வழமை போன்று இம்முறை நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொள்ளவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொண்டு பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக இம்முறை 3 வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் மைதான நிகழ்ச்சிகளான குண்டு போடுதல், பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை வென்று அசத்தினார்.

இந்த நிலையில், போட்டிகளின் முதல் நாளான நேற்றுமுன்தினம் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட மிதுன்ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

போட்டிகளின் 2ஆவது நாளான நேற்று (20) நடைபெற்ற பரிதிவட்டம் எறிதலில் அவர் 53.79 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து முன்னைய போட்டி சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து போட்டிகளின் இறுதி நாளான இன்று காலை (10) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட மிதுன்ராஜ், 57.60 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

mithun-raj-1-1.jpg

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெற்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 54.33 மீற்றர் தூரத்தை எறிந்து அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இறுதிவரை மிதுனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க 66.50 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும், சிலாபம் புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த ஹஷான் கோசல 55.15 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

எனினும், இப்போட்டியில் முதல் ஐந்து இடங்களையும் பெற்றுக்கொண்ட வீரர்கள் வர்ண சாதனைகளை பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

மகாஜனாவுக்கு எட்டுப் பதக்கங்கள்

இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவிகளான சந்திரசேகரன் ஹெரீனா மற்றும் ரோஹினி கனகசுந்தரம் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டனர்

 

 

அண்மைக்காலமாக வட மாகாணத்தைப் பிரதிநித்துப்படுத்தி தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற பாடசாலை மாணவியான ஹெரீனாவுக்கு, இம்முறை ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் எதிர்ப்பாத்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் 2.85 மீற்றர் உயரத்தை ஹெரீனா வெற்றிகரமாக தாவினார். எனினும், 2 ஆவது சுற்றில் 2.95 மீற்றர் உயரத்தை தாவுவதற்காக அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய இறுதியில் 2.85 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

Hareena-1.jpgமுன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளின் முதல் சுற்றில் அனித்தா ஜெகதீஸ்வரனுடன் போட்டியிட்ட ஹெரீனா, தேசிய மட்ட வீராங்கனைகளையெல்லாம் பின்தள்ளி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியில் 3.10 மீற்றர் உயரத்தைத் தாவிய அவர், கோலூன்றிப் பாய்தலில் தனது சிறந்த உயரத்தையும் பதிவு செய்தார்.

அதேபோல, கடந்த ஏப்ரல் மாத முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட ஹெரீனா, தனது சொந்த போட்டி சாதனையை 0.01 மீற்றரினால் தவறவிட்டு (2.90 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதுஇவ்வாறிருக்க, நேற்றுமுன்தினம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட ஹெரீனா, 1.54 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இதேநேரம், நீர்கொழும்பு நியூஸ்டட் கல்லூரியைச் சேர்ந்த அவ்ஷிதி விக்ரமசேகர, 3.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும், 2.65 மீற்றர் உயரம் தாவிய மகாஜனாவின் மற்றுமொரு மாணவியான கே. ரோஹினிக்கு வெண்கலப் பதக்கமும் கிட்டியது.  

இதன்படி, கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான போட்டிகளில் மகாஜனா கல்லூரிதான் கலக்குது போலக் கிடக்குது.வாழ்த்துக்கள்... யாராவது மகாஜனா மாணவர்கள் இங்கே இல்லையா, வந்து ரெண்டு வார்த்தை பிள்ளைகளை வாழ்த்தி விட்டுப் போறது.....!  tw_blush:

  • தொடங்கியவர்

இளம் பயிற்சியாளராக மகாஜனாவுக்கு பெருமை தேடிக் கொடுத்த டிலக்ஷான்

 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரிக்கு பல பதக்கங்களைப் பெற்றுக் கொடுக்க சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கிய அக்கல்லூரியின் கோலூன்றிப் பாய்தலுக்கான உதவிப் பயிற்றுவிப்பாளர் டிலக்ஷான்

 

 

 

 

அம்மாவின் வழிகாட்டலினால் சாதனை படைத்த மாணவன் ஜம்சன்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவனான எஸ். ஜம்சன், வெற்றியின் பின்னர்

 

 

 

தடைகளைத் தாண்டி சாதித்த மகாஜனா வீரன் ஜினோயன்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவனான ஏ. ஜினோயன்

 

 

இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுக்க காத்திருக்கும் சுகிர்தன்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவனான எஸ். சுகிதர்தன்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.