Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்காசியாவில் `ஒரே நாணய' யோசனை பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி -சபை விவாதிக்க வேண்டுமென ரணில் வலியுறுத்தல்

Featured Replies

தெற்காசியாவில் `ஒரே நாணய' யோசனை பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி

-சபை விவாதிக்க வேண்டுமென ரணில் வலியுறுத்தல்

தெற்காசியாவில் `ஒரே நாணய'த்தை புழக்கத்தில் விடுவது தொடர்பாக சார்க் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனை தொடர்பாக நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக சபையில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல் விடுத்தார்.

`ஒரே நாணய'ப் புழக்க யோசனை தொடர்பாக பாராளுமன்றத்துடன் ஜனாதிபதி ராஜபக்ஷ கலந்துரையாடவில்லையெனவும் இந்த விடயம் குறித்து விவாதம் நடத்தப்படுவது அவசியமென்றும் ரணில் விக்கிரமசிங்க வாதிட்டபோதும் அவரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

இந்தியாவில் நடைபெற்று வரும் 14 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் செவ்வாய்க்கிழமை பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெற்காசிய நாடுகளுக்கிடையில் ஒரே நாணயத்தை புழக்கத்தில் கொண்டு வருவதற்கான தருணம் வந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவும் ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று சபையில் சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பினார்.

இதன்போது பேசிய ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. தெரிவிக்கையில்;

நிதிப் பொறுப்புகள் அனைத்தும் பாராளுமன்றம் வசமே இருக்கிறது. அத்துடன், நிதிச் சட்டத்தின் பிரகாரம் நாணய விவகாரங்களை கையாளும் அதிகாரம் பாராளுமன்றத்தினால் மத்திய வங்கிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, பாராளுமன்றத்தில் கலந்து முடிவெடுக்கப்படாமல் எவரும் இவ்வாறு பொது நாணயம் குறித்து அறிக்கைவிட முடியாது. இதன் மூலம் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து விவாதிக்கவென எதிர்வரும் 9 ஆம் திகதி சபை அமர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

நிதி முகாமைத்துவம் என்பது பாராளுமன்றத்திற்குரிய உரிமை. அதை இம்மாதிரியான யோசனைகள் மூலம் செய்துவிட முடியாது. இதன் மூலம் இலங்கையின் இறைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

ஜெயராஜ்

இதன்போது குறுக்கிட்டு பேசிய அரச தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சிறப்புரிமை பிரச்சினையென கூறி இவ்வாறு அறிக்கை விட முடியாதெனவும் இது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசியே முடிவு செய்ய வேண்டுமெனவும் கூறினார்.

ரணில்

எனினும், இவ்விவகாரம் பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பானதென சுட்டிக்காட்டிய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இது நாட்டின் இறைமைக்கு பாதிப்பென்பதை அவரும் சுட்டிக் காட்டினார்.

"அத்துடன், நாங்கள் பிராந்தியத்தில் சுதந்திரமான நாணயங்களின் புழக்கத்தையே விரும்பி நிற்கிறோம். ஒரே நாணய புழக்கத்தை அல்ல. மேலும், பொருட்கள், சேவைகள், மக்கள் மற்றும் யோசனைகள் போன்றவற்றிலும் சுதந்திரமான புழக்கத்துக்கே நாம் ஆதரவளிக்கிறோம்" எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேநேரம், ஜனாதிபதியின் யோசனைப்படி ஒரே நாணயப் புழக்கம் வரும்போது, தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் ஒரே பொருளாதாரமும் ஒரே பாராளுமன்றத்தின் கீழான நிதிக் கொள்கையும் அது மட்டுமல்லாது பொதுவான மத்திய வங்கியுமே இருக்க வேண்டுமெனவும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக் காட்டினார்.

சுசில் பிரேம்ஜயந்த கேள்வி

இதேவேளை, ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைக்கும் யோசனை எவரையும் கேட்டு செய்யப்படவில்லை எனவும் இதன்போது நாட்டின் இறைமை எங்கு சென்றதெனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பினார்.

நிமால் குற்றச்சாட்டு

அத்துடன், போர் நிறுத்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெறாமல் மூடி மறைத்தே கைச்சாத்திட்டதாக சபை முதல்வரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஐ.தே.க.வை குற்றஞ் சாட்டினார்.

ரணில் பதில்

இதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய ரணில் விக்கிரமசிங்க, "2005 இல் போர் நிறுத்த உடன்படிக்கையை விமர்சித்தீர்கள். 2006 இல் அது அவசியமென பாதுகாப்பதாக ஏற்றுக் கொண்டீர்கள். முடிந்தால் அதிலிருந்து விலகிக் கொள்ளுங்களேன்" என்றார்.

விமல் வீரவன்ச

இதேநேரம், போர் நிறுத்த உடன்படிக்கை இரகசியமாக கைச்சாத்திடப்பட்டது குறித்து எமக்குள்ள விமர்சனம் அப்படியே இருக்க, தற்போது அதை நடைமுறைப்படுத்தி செல்வதும் பாராளுமன்ற அனுமதியின்றியே நடைபெறுவதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இறுதியாக இந்த சிறப்புரிமை பிரச்சினை குறித்து ஆராய்ந்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படுமென சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தெரிவித்தார்.

thinakkural.com

  • தொடங்கியவர்

இங்கும் ஏற்கனவே வந்த இன்னொரு செய்தியைப் பார்க்கவும்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21742

மாப்பி செய்தியை வடிவாகா படியுங்கள் :angry:

Edited by வானவில்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நமணயம் எண்டிறது மகிந்தவின்ர உடான்ஸ் பாருங்கோ. தேசிய இனப்பிரச்சனையத் திசை திருப்பி ஆஹா இலங்கை ஜனாதிபதிக்கு எவ்வளவு பரந்த மனம் தெற்காசியாவையே ஒண்டாக்கப் பார்க்கிறார் எண்டு எல்லாரும் நினைக்கட்டுமெண்டதுக்காக ஒரு பம்மாத்துப் பண்ணுறார். மற்றும்படி பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்குள்ள இலங்கைத் தீவை வச்சிருக்கிறதுதான் இவருடைய ஆத்மார்த்த சிந்தனை. அதுக்கு இந்த ஒரே நாணயக் கொள்கை உதவிசெய்யாது. அவருக்கு நல்லாத் தெரியும் இந்தியாவுட பகை நாடான பாகிஸ்தானும் இதுக்கு ஒத்துக் கொள்ளாதெண்டு. தற்செயலா ஒரே நாணயக்கொள்கைக்கு வரவேற்புக் கூடிச்சுதெண்டா றெக்கோட மாத்திப் போடுவார். ஐரோப்பியம் செய்திச்சுது எண்டதுக்காக தாங்களும் ஏதோ அப்பிடிச் செய்யலாமெண்டு யோசிக்கிறது கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி கதையாத்தான் முடியும். ஆகக் குறைஞ்சது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பாலம் போடுறதே இலங்கையுடைய இறைமையைப் பாதிச்சுப் போடுமெண்டு குறுகின வட்டத்தில சிந்திக்கிறவங்கள் ஒரே நாணயத்தையே கொண்டுவரப் போறாங்கள். தெற்காசியாவில இந்த நூற்றாண்டில மானிட வர்க்கம் ஒன்று சேருறதுக்கான வாய்ப்புகளில்ல. அது எந்த நூற்றாண்டில நடக்கும் எண்டும் தெரியாது. இப்ப இருக்கிற இந்தப் போக்கிரிகளுடைய சகாப்தம் முடிஞ்சு ஆராச்சும் புதிய சந்ததி ஆட்சிக்கு வந்தா மட்டும்தான் இதுவெல்லாம் நடக்கும். எதுக்கும் முதலில தமிழீழ தேசம் அங்கீகரிக்கப்படவேணும். அதுவரை எதுவும் நடக்காது.

தெற்காசியாவில் `ஒரே நாணய' யோசனை பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி

-சபை விவாதிக்க வேண்டுமென ரணில் வலியுறுத்தல்

ரனில் வேற மகிந்த விமானத் தாக்குதலோடு பறந்து போன வேட்டியை எட்டி பிடிக்க இப்படியான கதைகளைவிடுவார் ரனில் என்ன என்றால் இருக்கிற கோவணத்தை பறிக்க ப்ளான் போல :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் அடியிலை இவையின்ரை நாணய பெறுமதி குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் காணாமலே போகப்போகிறது.. அதை தடுத்து நிறுத்துவற்கான நரித் தந்திரம்தான் இது..

சிதறிச் சின்னாபின்னப்பட்டுப் போயுள்ள இலங்கை நாணயத்தின் மதிப்பை இப்படியாவது துாக்கி நிறுத்தலாம் என்று கெட்டகைமுனு நினைக்கிறாரோ? இருக்கிற சாக்கு நாடுகளின் பணமதிப்பு ஓரளவு இந்திய நாணயத்திற்குத்தான். அடுத்தது ஓரளவு பாக். பங்களதேசத்திற்கு. மற்ற நாடுகளினது நாணயமதிப்பு சிரிலங்காவை விட மோசம். இதில் ஒரே நாணயமாக்கி விட ஓரளவு பண மதிப்பு இருக்கும் நாடுகள் உடன்படுமா? ஏதோ தன் மேதாவித்தனத்தை காட்ட முட்டாளுக்கு ஒரு மேடை கிடைத்திருக்கின்றது.

ஈழத்திலிருந்து

ஜானா

I think Mahinda wants to print his photo on the coins.

I think Mahinda wants to print his photo on the coins.

ஆமாம்இ மகிந்த தனது தலையை அதில்

பொறித்துக்கொள்ள ஆசை படுகிறார் போல....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.