Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஐக்கிய இலங்கை" அடிப்படையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு: அனுரா

Featured Replies

[வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007, 08:24 ஈழம்] [க.திருக்குமார்]

ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு அமைய வேண்டும் என்று சிறிலங்காவின் தேசிய கலாச்சார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புக்கான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க கூறியதாவது:

தேசிய இனப்பிரச்சனைக்கு ஐக்கிய நாட்டுக் கட்டமைப்பில் மேலதிக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இது எமது தனிப்பட்ட கருத்து. ஆளும் சுதந்திரக் கட்சியினது அல்ல.

இந்த நிலைப்பாட்டைத்தான் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் கொண்டுள்ளன. இருப்பினும் அமைச்சர் என்கிற வகையில் அரசாங்கத்தின் கொள்கையை ஒப்புக் கொள்கிறேன்.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை அண்மித்திருக்கும் வான்படைத் தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் எதிர்பாராதது. இந்த சம்பவத்தினால் மக்கள் ஒரு நாள் கொந்தளிப்பார்கள் மறுநாள் மறந்து விடுவார்கள். ஆனால் இதன் தாக்கம் என்னவெனில் விடுதலைப் புலிகளால் எந்த நேரத்திலும் எந்த இலக்கையும் தாக்க முடியும் என்பது தான்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது வான்படை வலிமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்புகள் தொடர்பில் முற்றாக நான் அதிருப்தி அடைந்துள்ளேன். ஆகையால் விடுதலைப் புலிகளின் முதன்மை இலக்காக உள்ள நாடாளுமன்றத்துக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சபாநாயகரைக் கேட்டுக்கொள்கிறேன்.

முன் எப்போதையும் விட பயங்கரவாதம் என்பது மிகவும் ஆபத்தானதாக தற்போது உள்ளது. வாகன குண்டு தொடர்பாக வாகனங்களைச் சோதனையிடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

காலாவதியான ராடார் தளபாடங்களை சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியதாக கூறுவது முட்டாள்த்தனமானது. சிறிலங்காவைப் பொறுத்த வரையிலான அனைத்துலகத்தின் மதிப்பீடு நன்றாக இல்லை. அதனை மீளக் கட்டமைக்க வேஎண்டும். சிறிலங்காவின் நலனில் அனைத்துலகம் அக்கறை கொண்டிருக்கிறது. அனைத்துலகத்திடம் நாம் பிச்சை எடுக்கச் செல்கிறோம்தான். ஆனால் அவர்களின் அறிவுரையைக் கேட்கத் தயாராக இல்லை. இன்றைய உலகமயமாக்கல் நிலையில் எந்த ஒரு நாடும் தனித்து இயங்கிவிட முடியாது என்றார் அவர்.

நன்றி : புதினம்

முதலில் "ஐக்கிய இலங்கை என்றால் என்ன?" என்ற வரைவிலக்கணம், சிறீ லங்கா பேரிவனாதிகளின் மொழியில் யாருக்காவது இங்கு தெரியுமா? தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கவும்....

[வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007, 08:24 ஈழம்] [க.திருக்குமார்]

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை அண்மித்திருக்கும் வான்படைத் தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் எதிர்பாராதது. இந்த சம்பவத்தினால் மக்கள் ஒரு நாள் கொந்தளிப்பார்கள் மறுநாள் மறந்து விடுவார்கள். ஆனால் இதன் தாக்கம் என்னவெனில் விடுதலைப் புலிகளால் எந்த நேரத்திலும் எந்த இலக்கையும் தாக்க முடியும் என்பது தான்.

காலாவதியான ராடார் தளபாடங்களை சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியதாக கூறுவது முட்டாள்த்தனமானது.

அட நம்ம அனுராக்கு உண்மை எல்லாம் புரியுது, ஆச்சரியமா இருக்கே :lol:

2 நாய்கள் + 1 நரி + 3 கழுகுகள் = "ஐக்கிய இலங்கை"

  • கருத்துக்கள உறவுகள்

2 நாய்கள் + 1 நரி + 3 கழுகுகள் = "ஐக்கிய இலங்கை"

வெங்கட், புரியவில்லை? விளக்கம் தேவை.

நாய்கள் + நரி + கழுகுகள் எல்லாம் பிணந்தின்னிகள்..மீண்டும் "ஐக்கிய இலங்கை" என்பது தமிழீலத்தை இலங்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொல்வது(ஏற்றுக்கொள்வ

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இலங்கை என்ற சொல் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் நெடுங்காலமாக இருந்து வந்த ஒற்றையாட்சி அமைப்பு முறை என்ற சொல்லிலிருந்து வேறுவழியில்லாததால் மாற்றியமைக்கப்பட்ட சொல்லாகும். இதற்கு மாற்றீடாக ஒன்று பட்ட இலங்கை என்ற சொல்லும் அவர்களிடம் பாவனையிலிருக்கிறது. சிங்கள ஆளும்வர்க்கத்தைப் பொறுத்தவரை இம்மூன்று சொற்களும் ஒரே கருத்தையே கொண்டவை. ஆனால் தமிழர்களைப் பேய்க்காட்ட பின்னிரு சொற்களையும் மாற்றிப்போடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். உள்ளடப்பன் என்னவென்று தெரியாமல் இச்சொற்களில் மயங்குவதில் எந்த அர்த்தமுமில்லை. அர்த்தபுஷ்டியுள்ள கூட்டாட்சி அல்லது இணைப்பாட்சி என்னும் சொற்பதங்களை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் இவர்கள் ஐக்கிய அல்லது ஒன்றுபட்ட இலங்கை என்ற சொல்லின்மூலம் தமிழர்களை அரசியல் ரீதியில் ஏமாற்றிவிடலாமென்று பார்க்கின்றனர்.

சிங்களவருக்கு ஒரு பொதுவான எதிரி இருப்பதால் ஆளுக்காள் ஐக்கிய இலங்கை என்று தத்துவம் பேசுகின்றனர். இந்த ஒற்றுமையினால்தான் சிங்களவர் ஓரளவு ஒன்றுபட்டுள்ளனர்.

ஈழம் பிரிந்தால்தால் சிங்களவரின் ஐக்கியத்தைப் பார்க்கத்தானே போகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கமாக இருக்கிறது இந்த பகுதியை வாசிக்கும்போது???

அனுராவின் கருத்தெல்லாம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றதே இவ்விணையத்தில்.

அனுரா மனிதனே அல்ல

மனிதருக்கு உள்ள எந்த நரம்புகளுமே இல்லாத ஒரு பிண்டம்.

யார் கருத்திலெடுக்கின்றனர் இவர் சொல்லை உங்களைத்தவிர.

வெட்கமாக இருக்கிறது

ஜக்கிய இலங்கை என்றால் இலங்கை தீவில் இருக்கும் இலங்கை சோசலிச குடியரசின் ஜக்கிய ஒருமைப்பாட்டை விளக்க சிங்கள பேரினவாதிகள் பயன்படுத்தும் சொல்.இது தமிழீழ அரசினை ஒன்றும் செய்யாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.