Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாணியின் கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ?

- நிர்வாணி -

எங்களின் தாய்நிலத்தை

அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது

காலங்கள் எத்தனை கடந்தாலும்

இந்த உடல்

கோலங்கள் எத்தனை கண்டாலும்

சொந்த மண்ணை மறந்திடமுடியாது

மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி

கனடாவில் குடியேறிவிட்டோம்

கனடியனாய் வாழ்ந்திடுவோம்

வா என்கிறாள்

எனதருமைக் காதலியே

எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?

தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ?

அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ?

கோயில் திருவிழாவில் அழகான

பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற

நாட்களையா?

எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?

சொல்லடி பெண்ணே

எத்தனை காலமடி ?

இன்று நினைத்தாலும்

நெஞ்சம் இனிக்குதடி

எப்படி மறப்பேன்

என் தாய் நிலத்தை ?

http://www.vaarppu.com/php/printer.php?id=15&cat=1

Edited by kirubans

தாயகத்தை பற்றிய அருமையான கவிதை, வெட்டி ஒட்டிய கிருபன் அண்ணாவிற்க்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகம் கிழித்து இன்னொன்று

- நிர்வாணி -

புரட்சி

விடியல்

தேடல்

வர்க்கம்

சாதி

நான் அதிகம் பாவித்த வார்த்தைகள்

நண்பர்கள் அதிகம் கூடினால்

வாக்குவாதம்

இது சம்பந்தமாகவே இருக்கும்

முற்போக்குவாதி

சிந்தனையாளன்

வாசிப்பவன்

ஆராய்ந்து பேசுபவன்

இதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றி

சொன்ன வார்த்தைகள்

மேதாவி என்ற போர்வைக்குள்

ஒளிந்துகொள்ள யாருக்குப்

பிடிக்காது ?

பின்னிரா வேளையில்

எவளோ ஒரு இளம் பெண்

நடந்து செல்ல

அவள் ”அதுவாகத்தானிருக்கும்”

எனக்குள்ளிருக்கும் நான் சொல்லிக்கொண்டது

முகமூடி கிழிந்து முகம் தொங்ய

உனக்காக

பொய்முகத்தோடு

கவிதை

புனைபெயர்

கூட்டத்தில் கத்தல்

எதுவுமே இனி சாத்தியமில்லை

எனக்கு

http://www.vaarppu.com/php/printer.php?id=49&cat=1

Edited by kirubans

எத்தனை காலமடி ?

இன்று நினைத்தாலும்

நெஞ்சம் இனிக்குதடி

உங்களை போல் எனக்கு என் நாட்டை பெற்றி எந்து அம்மா,அப்பா சொல்லித்தான் தெரியும்,

நமக்கு என்ரு தனி நாடு கிடைத்தால் இது தான் என் நாடு என்ரு சொல்ல கூடும்.

அந்த நாளை நாடி இந்த இனியவள்!!

கவிதை அழகு வாழ்த்துக்கள்

கிருபன்ஸ்,

கவிதை வரிகளை வழங்கியமைக்கு நன்றி

கழிந்த அந்த இனிய நாட்கள்

கடந்த இளமைப் பருவங்கள்

பிரிந்த உறவினர் தோழர்கள்

அன்றாடம் ஆயிரம் கேள்விகள்

மீண்டும் வருமா அந்த வசந்தம்

தீர்ந்திடுமா தமிழர் தாகம்

எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ?

- நிர்வாணி -

எங்களின் தாய்நிலத்தை

அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது

காலங்கள் எத்தனை கடந்தாலும்

இந்த உடல்

கோலங்கள் எத்தனை கண்டாலும்

சொந்த மண்ணை மறந்திடமுடியாது

தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ?

அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ?

கோயில் திருவிழாவில் அழகான

பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற

நாட்களையா?

அத்துளு வெளி எங்கிருக்கிறது ?

:mellow:

அத்துளு வெளி எங்கிருக்கிறது ?

:lol:

கிருபன்ஸ் - இந்த கவிதையை எழுதினது - யாராம்?

ஏற்கனவே - தெரிஞ்சவங்களோ.........

நம்ம ஊருக்கு கிட்ட வாறாங்களே.......

அதுதான் - !

உணர்வோட எழுதி இருக்காங்க!! :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்துளு வெளி எங்கிருக்கிறது ?

:lol:

அத்துளுக் குளமும் வெளியும் யாழ் கரவெட்டிப் பகுதியில் இருக்கின்றது!

கிருபன்ஸ் - இந்த கவிதையை எழுதினது - யாராம்?

ஏற்கனவே - தெரிஞ்சவங்களோ.........

நம்ம ஊருக்கு கிட்ட வாறாங்களே.......

அதுதான் - !

உணர்வோட எழுதி இருக்காங்க!! :(

கவிதை எழுதியவர் "நிர்வாணி" என்பதையும் அவர் அத்துளுவுக்குக் கிட்டாவா இருந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர கனடா கார்ல்ரன் பல்கலைக் கழகத்தில் படிக்கிறார் (படித்தார்) என்பதையும் அவருடைய சில கவிதைகள் மூலம் தெரிய வந்துள்ளது!! உங்களுக்குக் கிட்டவா (தாயகத்திலும் கனடாவிலும்) இருப்பதால் யாரென்று நீங்கள்தான் கண்டுபிடிக்கவேண்டும். :o

அத்துளுக் குளமும் வெளியும் யாழ் கரவெட்டிப் பகுதியில் இருக்கின்றது!

கவிதை எழுதியவர் "நிர்வாணி" என்பதையும் அவர் அத்துளுவுக்குக் கிட்டாவா இருந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர கனடா கார்ல்ரன் பல்கலைக் கழகத்தில் படிக்கிறார் (படித்தார்) என்பதையும் அவருடைய சில கவிதைகள் மூலம் தெரிய வந்துள்ளது!! உங்களுக்குக் கிட்டவா (தாயகத்திலும் கனடாவிலும்) இருப்பதால் யாரென்று நீங்கள்தான் கண்டுபிடிக்கவேண்டும். :lol:

அடபாவிகளா...........

நானா கண்டு பிடிக்கணும்?

இதெல்லாம் நல்லா - இல்ல...!

சும்மா! ..

நான் நினைச்சேன் எற்கனவே நான்

அறிந்த ... ஒரு ஆளுன்னு!

:(:o

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் தேசம்

நிர்வாணி

1.

எனக்கென்றவொரு பாதையில் சென்றுகொண்டிருந்தேன்

அதே வழியில் என் தம்பியும்

அவனைத்தொடர்ந்து அவனது நண்பர்களும்

பாதையில் ஏதோ தடக்கி விழுந்துவிட்டேன்

உதவிக்காக கரமேதும் வரவில்லை

என்ன மனிதர்களென்று வெறுத்துக்கொண்டு

தலை தூக்கிய என் தலைக்குப்பின்னால்

அத்தனை தலைகளும் இரத்த வெள்ளத்தில்

என் தம்பி உட்பட.

2.

எங்களின் தேசத்தில் உழுது பயிரிட்டு

பச்சையைப் பார்த்து பசியாறியவர்கள்

நாங்கள்

இன்று எம் தேசத்தில்

குண்டுகள் வீழ்ந்து பலியாவதும்

நாங்கள்

ஒரு நீண்ட பயணத்தில்

மீண்டும் எம் தேசத்தில்

வாழ்க்கையை வளமாய்

வாழ்ந்துகொள்வோம்

http://www.vaarppu.com/view.php?poem_id=13

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று, இணைத்தமைக்கு நன்றி. :unsure:

நானும் அத்துளு வெளியில கிரிகெட் விளையாடப் போயிருக்கிறேன். அத்துளு அம்மன் கோவில் என ஒரு கோவிலும் அங்கு பிரபலமாக இருந்த ஞாபகம். அந்த மைதானத்திலே அத்த்துளு அம்மன் விளையாட்டுக் கழகம் என ஒரு அணி பயிற்சி எடுப்பது வழக்கம். அந்த அணியில விளையாடின ஆக்கள் யாரும் இருந்தா சொல்லுங்கோ. ஒருவரின் பெயர் மட்டும் ஞாபகம், அது ஞானதீபன்/உதயதீபன் ஆயிருக்க வேண்டும் :) . அந்த அணியில் பலரும் சகலதுறை வீரர்கள். இவர்களுக்கும் கரவெட்டி கலைமகள் அணிக்கும் இடையிலதான் சரியான போட்டி வாறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.