Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை வேண்டும்: அம்ருதா மனு தள்ளுபடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை வேண்டும்: அம்ருதா மனு தள்ளுபடி

Jayalalitha-720x450.jpg

ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி, அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை, டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூரை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது.

கடந்த 1980 ஆகஸ்ட் 14 ஆம் திகதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில், அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு, அதாவது 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஜெயலலிதா பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி வீடியோவில், அவர் கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக, தமிழக அரசின் சட்டத்தரணி வாதிட்டார்.

ஜெயலலிதாவின் சகோதரி என கூறப்படும் சைலஜா, அம்ருதாவை வளர்த்து வந்ததாக, வழக்கில் வைக்கப்படும் வாதத்தில் உண்மையில்லை எனக் குறிப்பிட்ட அரசின் சட்டத்தரணி, தனது சகோதரரி ஜெயலலிதா எனக்கூறி வார இதழுக்கு பேட்டியளித்த சைலஜாவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு சட்டத்தரணி, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க, அம்ருதாவுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், டி.என்.ஏ. சோதனை நடத்தினால் மட்டுமே தனது தரப்பு நியாயங்கள் உண்மை என்பது தெரிய வரும் என்றும் வாதிட்டார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசின் சட்டத்தரணி எந்த ஒரு ஆதாரங்களும் தாக்கல் செய்யாமல் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் மர்மமாகவே இருந்ததாக கருத்து தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும் டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

 

http://athavannews.com/ஜெயலலிதாவின்-மகள்-என்பதை/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா... இறக்கும் வரை, செல்வி ஜெயலலிதாவாகவே... வாழ்ந்தார்.
அதனால்...  அவருக்கு, பிள்ளை இருக்க வாய்ப்பில்லை  என்பதால்... 
இந்த மனுவை,  நிராகரித்து,   அவர் என்றுமே.... தமிழக மக்களின்,  அம்மா.... என்று தீர்ப்பளிக்கின்றேன்.

?- யாழ். களத்தின்  நீதிபதி தமிழ் சிறி.-  ? ஆர்டர்..  ? ஆர்டர்.......  அடுத்த  "பியர்"  ஓடர்  .:grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த மனுவை,  நிராகரித்து,   அவர் என்றுமே.... தமிழக மக்களின்,  அம்மா.... என்று தீர்ப்பளிக்கின்றேன்.

யுவர் ஆனர் கிபி 304வது சட்டத்தின்படி தான் என்றதை உங்கள் தீர்பில் கூற மறந்துள்ளீர்கள்.

இப்படிக்கு

மேல்நீதிமன்ற நீதிபதி

ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஜெயலலிதா... இறக்கும் வரை, செல்வி ஜெயலலிதாவாகவே... வாழ்ந்தார்.
அதனால்...  அவருக்கு, பிள்ளை இருக்க வாய்ப்பில்லை  என்பதால்... 
இந்த மனுவை,  நிராகரித்து,   அவர் என்றுமே.... தமிழக மக்களின்,  அம்மா.... என்று தீர்ப்பளிக்கின்றேன்.

?- யாழ். களத்தின்  நீதிபதி தமிழ் சிறி.-  ? ஆர்டர்..  ? ஆர்டர்.......  அடுத்த  "பியர்"  ஓடர்  .:grin:

அப்ப சோபன்பாவுக்கு சோறு போட்டு சாம்பார் ஊத்தினதெல்லாம் நடிப்பு எண்டுறியள்? அங்காலை ஒண்டுமில்லை

à®à¯à®¯à®²à®²à®¿à®¤à®¾ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

யுவர் ஆனர் கிபி 304வது சட்டத்தின்படி தான் என்றதை உங்கள் தீர்பில் கூற மறந்துள்ளீர்கள்.

இப்படிக்கு

மேல்நீதிமன்ற நீதிபதி

ஈழப்பிரியன்.

யுவர் ஆனர்.. கிமு  007´வது சட்டத்தின் படி.... நீங்கள், மறதிக்கு மருந்து... எடுக்க வேண்டும்.  

இப்படிக்கு...
நான்  இப்போ... 
அரசியல் வாதி  தமிழ் சிறி.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அப்ப சோபன்பாவுக்கு சோறு போட்டு சாம்பார் ஊத்தினதெல்லாம் நடிப்பு எண்டுறியள்? அங்காலை ஒண்டுமில்லை

à®à¯à®¯à®²à®²à®¿à®¤à®¾ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இது...   "கபர  கொய்யா"   எனும்,  ஆந்திர மொழியில்  வந்த,  
100 நாள்,  சக்கை.... போட்ட,     திரைப்  படத்தில் வந்த  ஒரு  காட்சி. குமாரசாமி அண்ணா. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.