Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு உதவிகள் தொடரும் .. இந்தியா அதிரடி அறிக்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு உதவிகள் தொடரும்.. அரசியல் நிகழ்வுகளை கவனிக்கிறோம்.. இந்தியா அதிரடி அறிக்கை

modi0234-1540714155.jpg

டெல்லி: இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. இந்த மாற்றம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

பேசவில்லை

அண்டை நாடான இலங்கையில் இத்தனை பிரச்சனைகள் நடக்கும் நிலையில் இந்தியா அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இந்திய அரசியல் தலைவர்கள் தனி தனியாக நிறைய கருத்துக்கள் சொன்னார்கள். ஆனால் இந்திய அரசு சார்பாக எந்த விதமான அறிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

உன்னிப்பாக கவனிக்கிறோம்

இந்த நிலையில் இலங்கையில் நடக்கும் மாற்றங்கள் குறித்து இன்று இந்திய வெளியுறவுத்துறை சார்பாக அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில், இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடு. இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்கிறோம். இலங்கையில் ஜனநாயகம் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய பந்தம் உள்ளது.

உதவி தொடரும்

இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் தொடரும். இலங்கையில் நடந்து வரும் ஆட்சி மாற்றம் பற்றி இந்தியா முக்கிய முடிவுகளை தேவைப்படும் சமயங்களில் எடுக்கும். இலங்கைக்கு தேவையான பொழுது இந்தியா தேவையான அரசியல் உதவிகளை வழங்க தயாராக இருக்கிறது.

பெரிய பரபரப்பு

இந்த நிலையில் இந்தியாவின் இந்த அறிக்கை இலங்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கைக்கு அரசியல் ரீதியான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருப்பது தமிழர்கள் இடையே அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

https://tamil.oneindia.com/news/delhi/india-will-lend-over-its-support-sri-lanka-on-crisis-says-external-affairs-332962.html

டிஸ்கி :

சும்மா அள்ளி போடபடாது யாருமே அதிர்ச்சி அடையல . இப்படியான அறிக்கை வரலனா தான் அதிர்ச்சி ..

hqdefault.jpg

போக ரொம்ப உன்னிப்பா 5058 வரைக்கும் கவனிங்க .. வாழ்த்துக்கள் ..?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

44938145_1405622236236000_5012141029575360512_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-frx5-1.xx&oh=b4924179376eb768c993adc32f0f9deb&oe=5C3C9D1D

ராஜபக்சவின்,,, தாமரை மொட்டினாலே  தமிழீழம்  மலரும். -சம்பந்தன்.-

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.