Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி-கமல் நீதிமன்றில் புகார்

Featured Replies

எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி-கமல் நீதிமன்றில் புகார்

எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி என சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் கமல்ஹாசன்.

செந்தில்குமார் என்ற அசிஸ்டெண்ட் டைரக்டர் `தசாவதாரம்' கதை என்னுடையது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கமல் மீது பொலிஸிலும் புகார் கொடுக்கப்பட்டது.

கமலை விசாரித்த பொலிஸ் கமலின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டது. அதேநேரம், செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில் பதில் மனு அனுப்பும்படி கமலுக்கும், படத்தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி பதில் மனுத் தாக்கல் செய்தார் கமல்ஹாசன். செந்தில்குமாரின் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கிறேன். இந்திய அரசின் பத்மஷ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகள் வாங்கியிருக்கிறேன். `தசாவதாரம்' எனது கற்பனையில் உதித்த கதை. மனுதாரரின் குற்றச்சாட்டு வேண்டுமென்றே எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது என தனது பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார் கமல்.

ஆஸ்கார் ரவிச்சந்திரனும் தனது சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கமல் தனது பதில் மனுவில் 10 வேடங்களில் நடித்த பல ஆங்கில, தமிழ் படங்கள் ஏற்கனவே வந்துள்ளன. இந்நிலையில் 10 வேடங்கள் உள்ள கதையை நான்தான் உருவாக்கினேன் என்று மனுதாரர் கூறுவது தவறானது என குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நிலைவரப்படி கமல் தரப்பு ஸ்ட்ராங்காக இருப்பதாகவே தெரிகிறது. தீர்ப்பும் அவருக்கு சாதகமாக அமையும் என்றே நம்பலாம்.

thinakkural.com

நடிகர் கமலஹாசன் நடித்து வரும் தசாவதாரம் படத்திற்கு தடை நீக்கம் ஐகோர்ட்டு தீர்ப்பு

நடிகர் கமலஹாசன் நடித்து வரும் Ôதசாவதாரம்Õ படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட்டு நேற்று நீக்கியது.

தசாவதாரம்

நடிகர் கமலஹாசன், நடிகை அசின் ஆகியோர் நடித்து வரும் படம் Ôதசாவதாரம்Õ. இந்த படத்தை ஆஸ்கார் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் கதை என்னுடைய கதை என்றும், எனது அனுமதி இல்லாமல் இப்படக்கதையை ஆஸ்கார் படநிறுவனம் பயன்படுத்தியுள்ளது என்றும், சென்னை தாம்பரத்தை சேர்ந்த உதவி இயக்குனர் செந்தில்குமார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த படத்தை தயாரிக்கவும், படத்தை வெளியிடவும் தடைவிதிக்க வேண்டும் என்று மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த படத்தை திரையிடுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் 20&ந் தேதி இடைக்கால தடை விதித்தது.

கமலஹாசன் பதில்

இந்த இடைக்கால தடையை நீக்க வேண்டுமென்று நடிகர் கமலஹாசன் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:&

மனுதாரரின் கதையை திருடியதாக கூறியிருப்பது முற்றிலும் தவறானதாகும். 40 ஆண்டுகளாக நான் சினிமா துறையில் இருந்து வருகிறேன். நான் நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், கதையாசிரியராகவும் செயலாற்றி வந்துள்ளேன். கலைமாமணி, பத்மஸ்ரீ போன்ற விருதுகளை பெற்றுள்ளேன்.

எனது கற்பனையில் புதிய கதையை உருவாக்கி Ôதசாவதாரம்Õ படத்தை உருவாக்கி வருகிறேன். இதற்காக இந்த படத்தில் 10 வேடங்களில் நடித்து வருகிறேன். எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்குடன், வேண்டுமென்றே இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். ஆகவே, இடைக்கால தடையை நீக்கி அவர் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தடை நீக்கம்

இந்த படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியும், இடைக்கால தடை மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அவர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:&

மனுதாரரின் கதைக்கும், Ôதசாவதாரம்Õ கதைக்கும் முற்றிலும் தொடர்பில்லை. இரண்டும் வெவ்வேறு கதையாகும். கதையின் கரு, அமைப்பு எல்லாமே வித்தியாசமாக உள்ளன. தன்னுடைய கதையை தான் கமலஹாசன் எடுத்துக்கொண்டார் என்று தவறாக கருதி மனுதாரர் வழக்கு தொடர்ந்தது துரதிருஷ்டவசமானது. தவறான வழக்கு தொடர்ந்தது மட்டுமல்லாமல், இடைக்கால தடையும் பெற்றுள்ளார்.

இந்த வழக்கில் சந்தேகத்தை நீக்குவதற்காக மனுதாரரின் கதையும், தசாவதாரத்தின் கதையும் இக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. தசாவதாரம் படத்தின் கதையின் Ôசஸ்பென்சைÕ தெரிவிக்கும் வகையில் தனது கதையை படத்தயாரிப்பாளர் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார். தனது கதை தான் என்பதை நிரூபிப்பதற்காக படதயாரிப்பாளர் இந்த கதையை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. மனுதாரர் கதை ஒன்றை உருவாக்கியுள்ளார். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இதை போல ஒவ்வொருவரும் ஒரு கதையை உருவாக்குவார்கள்.

மனுதாரர் கதை

மனுதாரர் கதையில் கதாநாயகன் ஒரு நிருபராகும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தொழிற்சாலையில் ஏற்படும் மாசுவை மையமாக வைத்து கதை அமைத்துள்ளார். இதனால் கதாநாயகன் எம்.பி.யின் கூலிப்படையினரால் தாக்கப்படுகிறார்.

கதாநாயகன் சாப்ட்வேர் மூலம் பெரிய பணக்காரராகிறார். கூலிப்படையினரால் கதாநாயகனும், அவரது காதலியும் தாக்கப்படுகிறார்கள். காதலி கொலை செய்யப்படுகிறார். இதற்காக கதாநாயகன் பழிவாங்குகிறார். இதுதான் மனுதாரரின் கதையாகும்.

தசாவதாரம் கதை

ஆனால் தசாவதாரம் படத்தின் கதை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. 12&ம் நூற்றாண்டில் ஒரு வைணவ நம்பிக்கு மன்னரால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற வரலாற்று பின்னணியில் தொடங்கப்பட்ட இந்த கதை 21&ம் நூற்றாண்டுக்கு வருகிறது. கதாநாயகனோ ஒரு விஞ்ஞானி. அவர் வேலைபார்க்கும் ஆய்வுகூடத்தில் சில உயிரியல் ஆயுதங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். இந்த முறையில் தான் தசாவதாரம் கதை அமைந்துள்ளது.

எனவே, மனுதாரரின் கதைக்கும், தசாவதாரம் படத்தின் கதைக்கும் முற்றிலும் மாறுபாடு உள்ளது. ஆகவே, இந்த படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இடைக்கால தடை கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

dailythanthi.com

  • 2 months later...

கமலுக்கு மறுபடியும் சோதனை

கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கு மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது.

கடும் உழைப்பு, தொழில் அக்கறை, பர்பக்ஷனுக்குப் பெயர் போனவர் கலைஞானி கமல்ஹாசன். இன்று நடித்துக் கொண்டிருக்கும் இளம் நடிகர்களின் வயதை விட கமல்ஹாசனின் திரையுலக அனுபவம் பெரியது.

நல்ல சினிமாக்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பவர் கமல். சீரியஸாக அதை செய்தும் கொண்டுள்ளார். ராக்கெட் குறித்த விழிப்புணர்ச்சி தமிழகத்தில் பரவியிராத காலத்தில் விக்ரம் படத்தைக் கொடுத்தார்.

ஆளவந்தான் என்ற பிரமிப்புப் படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். இப்போது தசாவதாரம் என்ற படு வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார்.

இந்திய திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத அளவுக்கு 10 வேடங்களில் நடித்து வருகிறார் கமல். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இப்படத்தைத் தயாரிக்கிறார். வெற்றிப் பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்காக இதுவரை ரூ. 48 கோடி வரை செலவிட்டுள்ளார்களாம். படம் முடியும் தருவாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதி படத்தைத் திரையிட உத்தேசித்துள்ளனர்.

படம் ஆரம்பித்தபோது, செந்தில்குமார் என்கிற உதவி இயக்குநர், தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது என்று கூறி வழக்குப் போட்டார். கமல் தனது கதையைத் திருடி விட்டதாக குற்றம் சாட்டினார் செந்தில்குமார்.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், கதை கமலுடையதுதான் என்று தீர்ப்பளித்து செந்தில்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்ட கமல், தனக்கு எதிராக பெரும் சதி நடப்பதாகவும், திரையுலகைச் சேர்ந்த ஒரு பிரபல கதாசிரியர்தான் இதற்குக் காரணம் என்றும் கூறி பரபரப்பைக் கூட்டினார்.

இந்த நிலையில் மீண்டும் செந்தில்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள புதியமனுவில்,தசாவதாரம் எனது கதை என்பதற்கு என்னிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன.

கடந்த முறை சரியாக விசாரிக்காமல் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. ஆனால் தசாவதாரம் கதை என்னுடையதுதான் என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் என்னிடம் இன்னும் உள்ளன. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் தயாராக உள்ளேன்.

எனவே படத்தை திரையிடுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் அதைப் போட்டுக் காட்ட தசாவதாரம் படக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும். அப்போது எனது கதைக்கும், படத்தின் கதைக்கும் வித்தியாசம் இருந்தால் எனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் செந்தில்குமார்.

இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரரும், தசாவதாரம் படக் குழுவும் தங்களது கதையைஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.

இந்தப் புதிய வழக்கு குறித்து செந்தில்குமார் கூறுகையில், நீதிமன்றத்தின் மூலம் படத்திற்குத் தடை வாங்கப் போவதை முன்கூட்டியே உணர்ந்து விட்ட கமல்ஹாசனும், தயாரிப்பாளரும் ஆளுங்கட்சிக்குச் சொந்தமான கலைஞர் டிவிக்கு தசாவதாரத்தை வி்ற்று விட்டனர்.

இதன் மூலம் என்னை மிரட்டப் பார்க்கின்றனர். ஆனால் எனது முயற்சிகளை நான் கைவிட மாட்டேன். இறுதித் தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்கும் என்றார்.

கமல் தரப்பில் இதுகுறித்து கருத்து கேட்க முயன்றபோது அவர் கிடைக்கவில்லை. ஆனால் கமல்ஹாசனின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, இதுகுறித்து கமல் இப்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

படம் வருவதற்குள் இன்னும் எத்தனை 'அவதாரங்களை' கமல் சந்திக்க வேண்டியிருக்குமோ!

-thatstamil-

  • தொடங்கியவர்

அடடடா கமல் படம் என்றாலே பிரச்சினைதானா?

அடடடா கமல் படம் என்றாலே பிரச்சினைதானா?

உவருக்கு சினிமாவில மட்டுமல்ல நிஜத்திலும் பல பிரச்சினைகளை கொண்டவர் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.