Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுவரம்பும் அத்துளு வெளியும்!

Featured Replies

"லிபரேசன் ஒப்பரேசன்".....

வடமராட்சி மக்களால் எனதூர் நிறைந்தது

இளவட்டம் நிறையவே வந்தது

பு+சாவைத் தப்பிய பெருமூச்சு எங்கும்.

எங்கள் வளவிற்கும் வந்தார்கள்.

காய்த்துக் குலுங்கிய மரமுந்திரிகை,

அது முற்றத்தில் முன்னிற்கு நின்றது.

கனியாதனவும் உண்டார்கள்!

ஐயோ தம்பி பழமே கடினம்

காயாய் வேணாம் சமைக்கிறோம் பொறுங்கள்

முடியாது போனால் கொல்லையில் மாமரம்..…

"முந்திரி தானே உடனே எட்டுது" பசியில் தோய்ந்த பதிலே கேட்டோம்.

ரூபவாஹினிச் செய்தியின் நேரம்

வீட்டிற்குள் குறைந்தது நூறு பேர் இருக்கும்

பு+சாக்குப் போகும் கப்பலைப் பார்த்து

அடையாள அணிவகுப்பு அன்றங்கு நடந்தது!

புங்கடிக் குளமும், ஈட்டி எறிஞ்சானும்

கொட்டிகை வெளியும், கட்டுவரம்பும்

காட்டினேன், அவர்கள் தயங்கிச் சொன்னார்கள்:

"அத்துளு வெளிதான் இன்னமும் நெஞ்சில்"!

சற்றுக் காலத்தில் எனக்கும் புலப் பெயர்வு

கோப்பைகள் கழுவும் அடுப்படி உத்தியோகம்

ஐயோ தம்பி அது மிகக் கடினம் வேறேதும் கிடைக்கும் சற்றுப் பொறும்

"கோப்பை தானே உடனே கிடைத்தது" அவசரம் தோய்ந்த பதிலே சொன்னேன்.

பி.பி.சி செய்தி வருகின்ற நேரம்

எங்கேனும் ஒட்டி ஊர்ப்புதினம் கேட்பேன்

இறந்தவர் பெயர்கள் அறிவிக்கப்பட்டால்

இதயம் பதைக்க அடையாளம் பார்ப்பேன்

நயாகரா வீழ்ச்சியும், ஒன்ராறியோ ஏரியும்,

பெருந்தெருக்களும், தவுசன்ட் ஐலன்ண்ட்சும்,

எல்லாமே காட்டினர். தயங்கிச் சொன்னேன்:

கட்டுவரம்பு தான் இன்னமும் நெஞ்சில்!

Edited by Innumoruvan

பி.பி.சி செய்தி வருகின்ற நேரம்

எங்கேனும் ஒட்டி ஊர்ப்புதினம் கேட்பேன்

இறந்தவர் பெயர்கள் அறிவிக்கப்பட்டால்

இதயம் பதைக்க அடையாளம் பார்ப்பேன்

நாமளும் இது செய்வோம்... <_<

நயாகரா வீழ்ச்சியும், ஒன்ராறியோ ஏரியும்,

பெருந்தெருக்களும், தவுசன்ட் ஐலன்ண்ட்சும்,

எல்லாமே காட்டினர். தயங்கிச் சொன்னேன்:

கட்டுவரம்பு தான் இன்னமும் நெஞ்சில்!

நமக்கு பனங்காடு தான் இன்னும் நெஞ்சில்! :D

  • கருத்துக்கள உறவுகள்

மழை பொழியும் கார்த்திகையில்

நிலந்தெரியாத இருளினுள்

இலாம்புடன் அசைந்துவரும்

குழைவண்டில்களை பார்த்து மகிழ்ந்ததும்

மாசி மாதத்து பனிமூட்டத்தினுள்ளே

தூரத்துப் பனைமரத்தினூடு எழுகின்ற

சூரியக் கதிர்களின் வரவுக்காக

வெற்றுடம்புடன் வெடவெடுத்துக் காத்திருந்ததும்

கொட்டும் மழைக்காலத்தில்

திரண்டோடும் வெள்ளத்தினுள்

காகிதக் கப்பல்கள் விட்டுப்

பின்னால் ஓடியதும்

உக்கிரம் தணிந்த மாலையில்

வல்லை வெளியில் தனிமையையும்

தென்றலையும் தேடி ஒடியதும்

மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்

மறைந்துபோக

நானோ

ஐரோப்பிய முதலாளியின் அடுப்பங்கரையில்

மனிதத்தை இழந்து இயந்திரமானேன்

ஆ.... எங்கேயோ போட்டீங்கள்! நான் இதை முன்பும் உங்கள் வீட்டுக்கு வந்து வாசித்துள்ளேன். பாவிகள் நம்மட அழகிய வாழ்க்கையை நாசமாக்கிப் போட்டாங்கள்... சிங்கிளக் குண்டர் அழிந்து நாசமாப் போக!

எனக்கும் தனிமையில் பரந்த வெளிகளின் ஊடாக சைக்கிள் ஓடுவது ரொம்பப் பிடிக்கும். பின்னேரம் பலாலி ரோட்டால் போய், அப்படியே உரும்பிராயிற்கு போய், அப்படியே நீர்வேலி போய், பின் புத்தூர் சந்தியூடாக அப்படியே மட்டுவில் போய், பிறகு திரும்பவும் நுணாவில் பக்கத்தால் வந்து, பிறகு செம்மணி கண்டு, பின் நாயன்மார்க்கட்டு வந்து, அப்படியே நல்லூர் கந்தனையும் தரிசித்துக் கொண்டு திருநெல்வேலிப்பக்கமா வந்து அப்படியே வீட்ட வந்து சேர இரவு ஒன்பது மணியாகிப் போடும். அந்தக் காலத்தில் இவ்வாறு தனிமையில் இனிமை காண்பது நமக்கு பொழுதுபோக்கு....

நீங்களும் சேம் டைப் போல இருக்கு... ஆனால், நான் இந்த அனுபவங்களைப் பற்றி இன்னும் கவிதை ஒன்றும் படைக்கவில்லை... ;)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் சேம் டைப் போல இருக்கு... ஆனால், நான் இந்த அனுபவங்களைப் பற்றி இன்னும் கவிதை ஒன்றும் படைக்கவில்லை... ;)

இயற்கை எப்போதுமே இதமானாதுதான்.. எங்கள் பகுதியைச் சுற்றி நிறைய வெளிகள் உள்ளன... வெளியிலேயே நின்று சூரியன் மறைவதை பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு பொழுதுபோக்குத்தான்!

  • தொடங்கியவர்

இயற்கை எப்போதுமே இதமானாதுதான்.. எங்கள் பகுதியைச் சுற்றி நிறைய வெளிகள் உள்ளன... வெளியிலேயே நின்று சூரியன் மறைவதை பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு பொழுதுபோக்குத்தான்!

மரத்தில் இருந்து மாம்பழம் உண்பது. உழுத வயலில் இருந்து வரும் மண் மணத்தை இரசித்தபடி புளுப் பொறுக்கும்

காகங்களை ஆராய்வது, பாலுண்ணும் ஆட்டுக் குட்டியையும் பசுக் கன்றையும் இரசிப்பது, மாரி காலத்தில் இரவில் மழை பெய்ய,

ஓட்டிற்குள்ளால் அரிதாக எப்போதேனும் எம்மீது தெறிகும் மிகச்சிறு மழைத்துளி ஏற்படுத்தும் ஸ்பரிசத்தை உணர்ந்தபடி,

ஒட்டின் மீது நீர்த் துவளைகளின் தாளலயத்தை இரசித்தபடி, உச்சக் குரலில் இயற்கையின்

தெரிவிற்காயப் போட்டி போட்டுக் கத்தும் மாரித்தவக்கையின் றெகே பாட்டை மதிப்பீடு செய்த

படி நுளம்ப வலைக்கு வெளியே யாழ் மீட்டும் நுளம்பைப் பரிகசித்தபடி கற்பனைகளோடு

படுத்திருக்கப் பிடிக்கும். தம்பளப் பு+ச்சியும், சாணகம் உருட்டும் வண்டும், பால் கறக்கையில்

பசுவின் பால் வெண்கலச் செம்பில் ஏற்படுத்தும் ஒலியும் இரசிக்கப் பிடிக்கும். காலையில்,

அதுவும் மழைகாலத்தில், அதுகும் ஒரு விடுமுறை நாளெனின், கீழைத் தேய இசைகளிற்குப்

பியு+சன் செய்வது போல் கட்டைக் குரலில் சேவல் செய்யும் றீமிக்சிங் இரசிக்கப் பிடிக்கும்.

கிழட்டுச் சேவலிற்கு வாழ்க்கைப்படும் கன்னிக் கோழியின் சார்பில் கண்டன உரை

நிகழ்த்துவதும் சிறுவயதில் உண்டு.

மொத்தத்தில் நான் ஒரு காட்டான் :icon_idea:

Edited by Innumoruvan

  • தொடங்கியவர்

..

Edited by Innumoruvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.