Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜிலிங்கம் மீதான விசாரணை கூட்டமைப்பின் வாயை மூடத் திட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் மீதான விசாரணை கூட்டமைப்பின் வாயை மூடத் திட்டம்? -(அஜாதசத்ரு)

மிகக் கடுமையான நெருக்கடியான சூழ்நிலையொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்களை அமைதி வழி மூலம் தீர்வு காண்பதை விடுத்து அதிகாரத்தை கொண்டு அடக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் ஈடுபட்டு வருவதையே காணக்கூடியதாகவுள்ளது.

இனநெருக்கடித் தீர்வுக்கான சமாதான முயற்சிகள், உட்கட்சி அரசியல் முரண்பாடுகள், எதிரணிக் கட்சிகளுடனான அணுகுமுறைகள், தொழிற்சங்கப் போராட்டங்கள் உட்பட அனைத்து பிரதான விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஆட்சியாளர்கள், அனைத்து தரப்பினராலும் வெறுத்தொதுக்கப்படும் நிலைமையொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக இந்த நாட்டில் பாரிய அழிவுகளையும் பொருளாதார பின்னடைவுகளையும் தோற்றுவிக்க பிரதான காரணமாகவிருந்த உள்நாட்டு யுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த நோர்வே அனுசரணையுடனான போர் நிறுத்த உடன்படிக்கையை இல்லாதொழிப்பதில் மாத்திரம் வெற்றி கண்டுள்ள இன்றைய ஆட்சியாளர்கள், மீண்டுமோர் யுத்தத்தை மிக விரைவாக இந்த நாட்டு மக்கள் மீது திணிப்பதிலேயே தீவிர கவனம் செலுத்தி வருவதை மட்டும் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

நாடு பூராவும் மிக மோசமாக அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்திற்கும் ஆட்சேபத்திற்கும் உள்ளாகியிருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் அதுபற்றிய எந்தவொரு கவலையுமற்றவர்களாக படைத் தரப்பினரின் மனித உரிமை மீறல் சம்பவங்களை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மறுபுறம் இன்றைய ஆட்சியாளர்களை விமர்சிக்கும் அரசியல்வாதிகளை, மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டும் மனித உரிமை ஆர்வலர்களை, உண்மை நிலைவரங்களை வெளியிடும் ஊடகங்களை பழிவாங்கம் அல்லது கொன்றொழிக்கும் போக்குகளே மேலோங்கிக் காணப்படுகின்றன.

இவ்வாறே அரச திணைக்களங்கள், பொதுச் சேவை அமைப்புகள் என்பவற்றின் சுயாதீன செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ள நிலைமையே காணப்படுகின்றது. நூற்றுக்கு மேற்பட்ட அரச திணைக்களங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பெரும்பாலான அமைச்சுக்கள் கூட சுயமாக இயங்க முடியாத நிலையில் நேரடித் தலையீடுகள் ஏற்படுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் குடும்ப உறவினர்கள் தொடர்பாக விமர்சித்தமைக்காகவே மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டு இன்று அரசியல் பழிவாங்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

அமைச்சுப் பதவி பறிக்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் முன்னர் வழங்கப்பட்டிருந்த மேலதிக விசேட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் வழமையான பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோருக்கு எதிராக அரச தொடர்பூடகங்கள் ஊடாக தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதுடன் அவர்கள் இருவரையும் தேசத்துரோகிகளாச் சித்திரிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனைவிட, ஸ்ரீபதி சூரியாராச்சியை அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்துள்ள ஆட்சியாளர்கள், மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளனர்.

மங்கள சமவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் வெளியிட்டு வரும் தகவல்கள் தொடர்பாக அதிர்ச்சியடைந்துள்ள ஆட்சியாளர்கள், இவர்கள் போன்று இனிமேல் எவரும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழக்கூடாதென்ற நோக்குடனேயே அதிகாரத்தை பயன்படுத்தி கடும் போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தின் போது இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமைமீறல் சம்பவங்கள், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடி என்பவற்றுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வந்தமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர்களான லலித் அத்துலத் முதலியும், காமினி திசாநாயக்காவும் எவ்வாறு அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டார்களோ, அதேபோன்ற நிலைமையொன்றையே மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறே அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடி, மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை வெளிக் கொண்டு வரும் ஊடகங்கள், ஊடகவியலாளர் மீதான நேரடியானதும் மறைமுகமான கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரி எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத நிலையில் நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

`மௌபிம' பத்திரிகையின் ஆசிரியர் பல மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டத

சிவாஜிலிங்கத்தின் சாரதி விசாரணையில்

கொழும்பு, ஏப்.16

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங் கத்தின் வாகனச்சாரதி பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பொலீஸாரால் விசா ரணை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற சிவாஜிலிங்கம் வாகனம் ஒன்றைக் கையளித்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்டுவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக அவரது சாரதியும் விசாரிக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட சாரதியே வாகனத்தை எடுத்துச் சென்று வன்னியில் ஒப்படைத்ததாகச் சந்தேகிக்கும் புலனாய்வுப் பிரிவினர் அவரை விசாரணை செய்துள்ளனர்.

இதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலர்களும் விசாரணை செய்யப்பட்டிருந்தனர்.

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.