Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் கிண்ணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பிரதமர் கிண்ணம்"
சுற்றுப்போட்டியின்  முதலாவது 
இனிக்ஸ் வெள்ளி இரவுடன் முடிவடைந்தது…!

-----------------------------------------------------------

பிரதமர் கிண்ணத்துக்கான  சுற்றுப்போட்டி 26.10.2018 கடந்த வெள்ளிக்கிழமை  
இரவு மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றவுடன் ஆரம்பமானது.

14 நாட்கள் நடைபெற்று முடிந்த  
முதலாவது  போட்டியில்  மைத்திரி அணியினர் தோல்வியடைந்துள்ளார்.

ஸ்கோர் விபரம்!

நடைபெற்று முடிந்த போட்டியில் வழங்கப்பட்ட
113 என்ற இலக்கை  அடைய  இரு அணிகளும் கடுமையான போட்டிகள் போட்டனர்.

போட்டியின் நேற்றைய   இறுதி நாளில் இறுதிப்பந்தில்  இராஜாங்க அமைச்சர் சிக்ஸ் அடித்தாலும் 113 என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல் மைத்திரி அணியினர் தோல்வி அடைந்தந்துள்ளார்கள். 

பந்து வீச்சு!

போட்டியில் மஹிந்த அணியால் வீசப்பட்ட தூஸ்ரா,வேகப்பந்து வீச்சுக்களுக்கு மொத்தமாக ரணில் அணியில் இருந்து 
ஆறு விக்கெட்டுக்கள் வீழ்தப்பட்டது.

மைத்திரி அணியின் தலைவராக மைதானத்தில்  மஹிந்தராஜபக்ஸ நியமிக்கப்பட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஸவின் கடுமையான துஸ்ரா, வேகப்பந்துகளை இறுதிவரை ரணில் அணியினர் மிகக் கவனமாக துடுப்படித்தாடினர்.

போட்டியில் மஹிந்த அணியினரால் வீசப்பட்டட "யோக்கர்" பந்துகளை மத்திய (துடுப்பாட்டவீரர்களாக SLMC,ACMC) வீரக்களுக்கு வீசினாலும் மிகக் 
கவனமாக பந்தை தட்டிவிட்டு விக்கெட்டுக்களை பறி கொடுக்காமல் இருந்தார்கள்.

இப்போட்டியில் கவலையான 
ஆட்டமிழப்பு ஒன்றாக, 
ஐந்தாவது விக்கெட்டாக வீழ்த்தப்பட்ட வியாழநேந்திரன் (அமல்) TNA அவர்களின் ஆட்டமிழப்பு இருந்தது.

போட்டியில் சல துரையிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி சிறப்பு  ஆட்டக்காரர் விருதை மஹிந்த ராஜபக்ஸ பெற்றுக்கொண்டார்.

போட்டியில் நடுவர்களாக இறுதிவரை கரு ஜெயசூரியா,பூஜித ஜெயசுந்தர ஆகியோர் சிறப்பாக  செயட்பட்டனர்.

இவ்வாறு விறுவிறுப்பாக சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் நடைபெற்று   
முடிந்த 14 நாள் போட்டி 
நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

பிரதமர் கிண்ணத்துக்கான 
அடுத்த இரண்டாவது இணிக்ஸ் இன்று முதல் ஆரம்பமாக  உள்ளது,

இப்போட்டிக்கான  பயிற்சி போட்டிகள் நவம்பர் 19 - 26 வரை நடைபெற்று (வேட்புமனு) 2019 ஜனவரி 5 ம்திகதி இறுதி நாள் ஆட்டம் (தேர்தல்) நடைபெறவுள்ளது.

குறித்த திகதி அறிவிக்கப்பட்டாலும் சுற்றுப்போட்டியின் கட்டுப்பாட்டு சபை (தேர்தர்தல் ஆணைக்குழு) அறிவிக்கும் 
வரை திகதியை உறுதி செய்ய முடியாது.

போட்டிகள் மொத்தமாக மூன்று சுற்றுக்கள் நடைபெற்று பிரதமர் சவால் கிண்ணம் வழங்கி வைக்கப்படவுள்ளது.

முதலாவது இணிக்ஸ் இனிதே நடைபெற்று முடிந்ததுள்ளது.

இரண்டாவது இணிக்ஸ் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனவரி 5ஆம் திகதி வரை இரண்டாவது இணிக்ஸ் நடைபெற்று முடிந்து மூன்றாவது இணிக்ஸ் ஜனவரி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாவது இணிக்ஸ் தொடர்பான  தகவலுடன் சந்திப்போம்.

இதே வேளை பார்வையாளராக மட்டுமே இருந்த அணி (TNA) தாம் நீதிமன்றை நாட உள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

நன்றி வாட்சப் குழுமம்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது இன்னிங்க்சையும் உன்னிப்பாக கவனிக்கின்றோம். அதையும் தருவீர்கள்தானே....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.