Jump to content

ஹலோ கனடாக்காரரே!


Recommended Posts

அத்தனை வயசிலும் ஜெயம்ரவியின்ட அவதார் தேவை தானா

:angry:

ஒரு எம்ஜிஆர், நம்பியார்ட அவத்தர்தான் சரி

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

ஒரு எம்ஜிஆர், நம்பியார்ட அவத்தர்தான் சரி

சீ ரோயல் பமிலிக்கு ஏற்ற மாதிரி நாகேச் என்ட அவதார் தான் சரி பட் தூயவன் அண்ணாவுக்கு மட்டும் சிவகுமார் அவதார்

:mellow:

Link to comment
Share on other sites

இலங்கையின் வடகிழக்கு பிரதேசத்தினை தமிழர் தாயகப் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என கனடியத் தமிழர் பேரவை கனடிய அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் கனடிய அரசு சேர்த்துக்கொண்டது. இந்த ஒரு வருட நிகழ்வினை நினைவுகூரும் வகையில், கனடியத் தமிழர் பேரவையினால் ஒட்டாவாப் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று புதன்கிழமை (04-04-2007) உடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கனடிய அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையானது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை எனத் கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர் குகா குகநாதன் தெரிவித்தார்.

மாறாக, விதிக்கப்ப்ட்ட தடையானது தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகளுக்கு உத்வேகமும், ஆதரவும் மட்டுமே கொடுத்திருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளின் மீதான தடையினையடுத்து, 4,000 தமிழர்கள் இலங்கையின் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் (300,000) தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குகநாதன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதோடு, கனடிய அரசாங்கம் -இலங்கைத் தமிழர்களின் தாயகத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை இராணுவ வழி மூலம் தீர்க்க முடியாது எனவும் பேச்சுவார்த்தையே சிறந்த வழிமுறையென ஒன்ராறியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், தற்போது லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான பொப் றே கடந்தவாரம் இந்திய ஊடகமொன்றின் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு குறித்த பொதியினை முதலில் அரசாங்கம் வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published: Apr 11, 2007 04:00 GMT

Copyright 1997-2006, TamilCanadian. Contact us

இலங்கையின் வடகிழக்கு பிரதேசத்தினை தமிழர் தாயகப் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என கனடியத் தமிழர் பேரவை கனடிய அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் கனடிய அரசு சேர்த்துக்கொண்டது. இந்த ஒரு வருட நிகழ்வினை நினைவுகூரும் வகையில், கனடியத் தமிழர் பேரவையினால் ஒட்டாவாப் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று புதன்கிழமை (04-04-2007) உடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கனடிய அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையானது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை எனத் கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர் குகா குகநாதன் தெரிவித்தார்.

மாறாக, விதிக்கப்ப்ட்ட தடையானது தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகளுக்கு உத்வேகமும், ஆதரவும் மட்டுமே கொடுத்திருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளின் மீதான தடையினையடுத்து, 4,000 தமிழர்கள் இலங்கையின் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் (300,000) தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குகநாதன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதோடு, கனடிய அரசாங்கம் -இலங்கைத் தமிழர்களின் தாயகத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை இராணுவ வழி மூலம் தீர்க்க முடியாது எனவும் பேச்சுவார்த்தையே சிறந்த வழிமுறையென ஒன்ராறியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், தற்போது லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான பொப் றே கடந்தவாரம் இந்திய ஊடகமொன்றின் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு குறித்த பொதியினை முதலில் அரசாங்கம் வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published: Apr 11, 2007 04:00 GMT

Copyright 1997-2006, TamilCanadian. Contact us

இங்கேயும் கொஞ்சம் சட்டசிக்கல்,ஊடல்கள் இருக்கிறபடியால் அமத்தி வாசிக்க வேண்டியுள்ளது.கடந்த சம்பவங்களை நினைத்தால் புரிந்து கொள்வீர்கள்
Link to comment
Share on other sites

சட்டச்சிக்கல் எல்லாவிடத்திலும் இருக்கு......

என்னமோ ஒப்புக்குச் சப்பாணிபோலத்தான்.......

Link to comment
Share on other sites

விபரங்களை சொல்லலாம்.ஆனால் மோகன் அண்ணா தனிப்பட்டவர்கள் பாதிக்கப்படகூடாது என்ற களவிதிமுறைக்கு அமைய உடனடியாக தணிக்கை செய்து விடுவார்,ஏனெனில் பலமுறை அநுபவப்பட்டுவிட்டேன்

Link to comment
Share on other sites

தாயகத்து நிலவரங்களை வெளிக்கொணர அமைதியாக, தொடராக கவனஈர்ப்பு நிகழ்வுகள் செய்யக் கனெடிய சட்டங்களில் தடை உள்ளதா? தெரிஞ்சவங்க யாரேனும் சொல்லுங்கப்பா

Link to comment
Share on other sites

இங்கே வக்கீல்கள் யாருமில்லையா.............?

எங்கே யாழ்க்களத்திலா? அல்லது கனடாப்புலத்திலா?

Link to comment
Share on other sites

ஓ... நிறைய வக்கீலுகள் இருக்காங்களே......

ஆனா அரசியல் பேசமாட்டங்கபோல....

ஒரு காலத்தில விடுதலையைப் பேசி விளம்பரமானவை கனபேர். இப்ப விடுதலையைப்பற்றி மட்டும் கதைக்கிறதில்லை. ஆனா தமிழ் வளர்க்கிறார்கள். அவையளுக்கும் மேடை தேவை பாருங்கோ....

Link to comment
Share on other sites

ஓ... நிறைய வக்கீலுகள் இருக்காங்களே......

ஆனா அரசியல் பேசமாட்டங்கபோல....

ஒரு காலத்தில விடுதலையைப் பேசி விளம்பரமானவை கனபேர். இப்ப விடுதலையைப்பற்றி மட்டும் கதைக்கிறதில்லை. ஆனா தமிழ் வளர்க்கிறார்கள். அவையளுக்கும் மேடை தேவை பாருங்கோ....

அவையள் யாரென்டு சொன்னா நல்லாயிருக்கும் 1 மேடை போட்டுக் கொடுக்கலாம் :rolleyes:

Link to comment
Share on other sites

அவையள் யாரென்டு சொன்னா நல்லாயிருக்கும் 1 மேடை போட்டுக் கொடுக்கலாம் :rolleyes:

அவுஸ்திரேலியாவிலா?

அப்ப முதலாவதா ஆதிக்கு ஒரு மேடை புக் பண்ணுப்பா

அதெல்லாம் ஒரு கனாக்காலம். தாயகநேசிப்புக்கு நானா,நீயா என்று போட்டி போட்டு சனமும் திரிஞ்சுது. (இதில ஒரியினல் எத்தினை என்று கேட்கக்கூடாது) நம்பாளுகளும் நம்பி முன்னுரிமையெல்லாம் கொடுத்தாங்கோ.... வேலைவாய்ப்புப் பெறுவதற்காகத் தாயகப்பற்றைப் பயன்படுத்தி ரொம்பப்பேர் நடிச்சாங்கப்பா... இன்னைக்கு நல்ல வேலை வசதி கண்ணுட்டாங்களா.... தாயகமா? தொண்டர் சேவையா? எங்களுக்கு நேரமில்லைங்கிறாங்கப்பா... ஓய் கோணல்வில், ஆதியைக் கிண்டிக்கிண்டி கதை பொறுக்கிறீரோ? :angry:

Link to comment
Share on other sites

கனடாவில் கூடுதலாக தமிழர்கள் வாழ்கிறார்கள்,உண்மை அதிக எண்ணிக்கையிலிருப்பவர்கள் டொரன்டோ மாநகரிலும் அதுக்கு அடுத்தபடியாக மொன்றியலிலும் வாழ்கிறார்கள்.படித்து பட்டம் பெற்றவர்கள் சாதனையாளர்கள் அதிகமாக டொரன்டோ நகரிலும் எளிமையாக வாழ்வோம் என்ற கோட்பாடு உள்ளவர்கள் மொன்றியலிலும் வாழ்ந்தார்கள்.இதில் கூட வேடிக்கை என்னவெனில் பிரஞ்சு மொழியில் கடமையாற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கூட இருக்கிறார்கள்.கனடாவில் எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியாமைக்கு பல காரணங்கள் உண்டு.சட்டச்சிக்கல்,ஒற்றுமைய

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
    • பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT 27 செப்டெம்பர் 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது. அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. கார்த்தி-அரவிந்த்சாமி இருவரும் ஒன்றாகத் தோன்றும் இப்படத்தின் ஸ்டில்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகியதில் இருந்தே ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணி. இந்நிலையில், இப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? மெய்யழகன் படத்தின் கதை என்ன? '96' திரைப்படம் போன்றே இந்தப் படமும் 1996-ஆம் ஆண்டு துவங்குகிறது. அருள்மொழி வர்மன் (அரவிந்த்சாமி) ஒரு குடும்பப் பிரச்னையால் தஞ்சாவூரில் தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுகிறார். அவருக்கு உறவினர்களுடன் முற்றிலும் தொடர்பற்றுப்போகிறது. இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தனக்குப் பிரியமான உறவுப்பெண்ணான புவனாவின் (சுவாதி கொண்டே) திருமணத்துக்காக, மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை அரவிந்த்சாமிக்கு ஏற்படுகிறது. பல மனக்குழப்பங்களைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த்சாமி, அங்கு அவர் பாசமாக இருக்கும் ஒரே உறவினர் ராஜ்கிரணைச் சந்திக்கிறார். அங்குதான், அரவிந்த்சாமியை ‘அத்தான்’ என்றழைத்தபடி, அவரை உபசரிக்கும் கார்த்தி அறிமுகமாகிறார். இருவரிடையே ஒரு மெல்லிய பாசம் உண்டாகி, அது ஆழமாகிறது. இருவரும் ஒன்றாகச் சுற்றித்திரிந்து, பல விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார்கள். அதன்பின் அரவிந்த்சாமியின் உணர்வுகள் அவரிடம் என்ன சொல்லின? இதுதான் இப்படத்தின் கதை.   பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT ‘உணர்வுகளே படத்தின் அடித்தளம்’ இப்படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ஊடகங்கள், மனிதர்களிடையே, உறவுகளிடையே உள்ள உணர்வுகள் தான் படத்தின் அடித்தளம் என்று குறிப்பிடுகின்றன. தினமணி இணையதளம், தனது விமர்சனத்தில், இயக்குநர் பிரேம் குமார், ‘உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருப்பதாகக்’ கூறுகிறது. “பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்,” என்றும் கூறியிருக்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், தனது விமர்சனத்தில், இப்படம் அதீத நாடகத்தனமாக முடிந்துவிடும் அபாயம் இருந்தபோதிலும், அப்படிச் செய்யாமல், மெல்லிய சோகம்-இதயத்தை வருடும் காட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே பயணிப்பதாகச் சொல்கிறது. “படத்தின் சில காட்சிகளில், நமது கண்களில் நீர் துளிர்க்கிறது. குறிப்பாக அரவிந்தசாமியும், சுவாதி கொண்டேவும் பேசிக்கொள்ளும் காட்சிகள். அதேபோல் உறவினர்கள் பேசிக்கொள்ளும் சிறிய காட்சிகள் கூட சிறப்பாகவே அமைந்திருக்கின்றன,” என்கிறது இந்த விமர்சனம்.   பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT கார்த்தி, அரவிந்த்சாமியின் நடிப்பு எப்படி? இப்படத்திலுள்ள நடிகர்களின் நடிப்பைப் பற்றிப் பேசும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதள விமர்சனம், அனைத்து நடிகர்களின் நடிப்பும் ‘முதல் தரம்’ என்கிறது. “படம் மொத்தத்தையும் அரவிந்த்சாமியும் கார்த்தியுமே தாங்குகிறார்கள். இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனது கடந்த காலத்திலிருந்து விலகிவர முடியாத ஒருவனது தவிப்பை அரவிந்த்சாமி அற்புதமாகச் வெளிப்படுத்தியிருக்கிறார்,” என்கிறது இந்த விமர்சனம். அதேபோல் கார்த்தியின் நடிப்பைப் பற்றிப் பேசும் தினமணி விமர்சனம், “காட்சிக்கு காட்சி கள்ளமில்லாத ஆன்மாவாக [கார்த்தி] பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன,” என்கிறது. மேலும், “இப்படத்திற்காக கார்த்திக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். ரசிகர்களுக்கு, ‘விருந்து கொடுக்கும்’ வணிக குட்டிக்கரணங்களை அடிக்காமல் முழுமையாகத் தன்னை கதைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்,” என்கிறது. இந்த இருவர் மட்டுமல்ல, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒருசில காட்சிகளிலேயே தோன்றினாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை நினைவில் நிற்கும்படிச் செய்திருக்கிறார்கள், என்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம். கருணாகரன், இளவரசு, ரேச்சல் ரெபெக்கா, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக இந்த விமர்சனம் கூறுகிறது. படத்தின் மிகப்பெரிய குறை இவையனைத்தும் இருந்தும், கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் படத்தின் மிகப்பெரிய குறை என்று ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. அது, இப்படத்தின் நீளம். சுமார் 3 மணிநேரம் (177 நிமிடங்கள்) ஓடும் இப்படம் ஆங்காங்கே ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது, படத்தின் நீளத்தை 20-30 நிமிடங்கள் குறைத்திருக்கலாம், என்கின்றன விமர்சனங்கள். இந்தக் குறையைப் பிரதானமாகச் சுட்டியிருக்கும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளம், “உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான். ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி?” என்று கேட்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம் இப்படத்தை ‘மிக நீளமானது’ என்று குறிப்பிட்டு, சில பகுதிகள் படத்தை மிக நீளமாக்குகின்றன, என்கிறது. அதேபோல், படம் பெரும்பாலும் வசனங்களாலேயே நகர்கிறது என்பதும் ஒரு குறை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம். “3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால அளவில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்,” என்று இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.   பட மூலாதாரம்,YOUTUBE/THINK MUSIC INDIA சொல்ல வந்ததை விட்டுவிட்டு… படத்தின் மற்றொரு குறை, மனித உறவுகளைப் பற்றிச் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பதமில்லாமல், அரசியல், சமூக, வரலாற்று விஷயங்களைப் பேசுவது என்கின்றன சில விமர்சனங்கள். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், “காளைமாடு தோன்றும் ஒரு காட்சி, வரலாறு, போர்கள் ஆகியவற்றைப் பற்றி கார்த்தி பேசும் வசனங்கள் மிக நீளமாகத் தோன்றுகின்றன,” என்கிறது. ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளத்தின் விமர்சனம், ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை’ என கதைக்குச் சம்மந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றிப் படம் பேசுகிறது என்கிறது. இன்னொரு அன்பே சிவம்? இப்படத்தில், அரவிந்த்சாமி-கார்த்தி இருவருக்கிடையே உருவாகும் புரிதலும் பிணைப்பும், ‘அன்பே சிவம்’ படத்தின் கமல்ஹாசன்-மாதவனை நினைவுறுத்துவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால், ‘அன்பே சிவம்’ படம் இரண்டு வேறுபட்ட நபர்கள் ஒருவருக்கொருவரில் தோழமையைக் கண்டடைவது பற்றிய படம். மெய்யழகனோ, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மிகவும் எளிமையான விஷயம் என்று கூறுகிறது, என்கிறது இந்த விமர்சனம். கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயரும் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஒரு வீடற்ற உணர்வினை அரவிந்த்சாமி வெளிப்படுத்துகிறார் என்கிறது இந்த விமர்சனம். https://www.bbc.com/tamil/articles/cwyv6q7yg2eo
    • நல்ல ஒரு காணொளி. இணைப்பிற்கு நன்றி சுவியர். 👍
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.