Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி? - அடிப்படைத் தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி?படத்தின் காப்புரிமை Getty Images

இன்று கடைபிடிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை ஒட்டி இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.

வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோய் தொடர்பான சில அடிப்படை தகவல்களை இங்கே பகிர்கிறோம்

இரண்டு விதமான நீரிழிவு நோய்கள் உள்ளன.

முதல் வகை நீரிழிவு நோய் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்.

முதல் வகை நீரிழிவு நோயை தடுக்க முடியாது மற்றும் அரிதாக வரக் கூடியது.

இரண்டாம் வகைதான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது.

பிரிட்டன் கணக்குப்படி அந்நாட்டில் நீரிழிவு நோய் இருப்பவர்களில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பேருக்கு இந்த இரண்டாம் வகை நீரிழிவு நோய்தான் உள்ளது.

உடல் எடை அதிகரிப்பது, மாறி வரும் உணவுப் பழக்கம், நம் வாழ்க்கை முறைதான் இந்த வகை நீரிழிவு நோய்க்கு காரணம்.

இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது.

இதில் என்ன நல்ல விஷயம் என்கிறீர்களா? இந்த வகை நீரிழிவு நோயை 80 சதவிகிதம் தடுக்க முடியும்.

p06fc73x.jpg
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்ன?

Exit player
 
நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்ன?

எப்படி தடுப்பது?

பிரதானம் உணவு பழக்கம்தான். ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும்.

அரோக்கியமான உணவு என்றால்? அதிக நார்சத்து உடைய உணவு வகைகள்தான். நார்சத்துமிக்க காய்கறிகள் உடல் செரிமானத்தை அதிகரிக்கும், ரத்தத்தில் சர்க்கரை கலப்பதை தடுக்கும்.

பிரட், பாஸ்தா உணவு வகைகளில் அதிகளவில் மாவுசத்து உள்ளது. நீரிழிவு நோயை தடுப்பதற்கு இந்தவகை மாவுசத்து உணவு வகைகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பதப்படுத்தப்பட்ட கறி உணவினை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி?படத்தின் காப்புரிமை Getty Images

புரதசத்துக்கான மீன், முட்டை,பயறு வகை உணவினை எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் மீன் வறுத்து உண்பதை தவிர்க்க வேண்டும்.

பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லதுதான். ஏனெனில் அவற்றில் அதிகளவிலான விட்டமின், மினரல் மற்றும் நார்சத்து உள்ளது.

கொழுப்பு சத்தும் நல்ல ஆரோக்கியமான உடல்நிலைக்கு நல்லது. ஆனால், அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ள கூடாது. ஆலிவ் எண்ணெய், மீன் கொழுப்பு உடலுக்கு நல்லது.

அதுபோல நீர்சத்து உடலில் எப்போதும் இருப்பதுபோல பார்த்துக் கொள்ள வேண்டும்.

தயிர் (யோகட்) வகைகளில் சர்க்கரை நிறைந்துள்ளது. இவற்றை உண்பவர்கள் தாங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவைதான் உண்டு வருவதாக பொது மக்கள் எண்ணிவிட வேண்டாம் என்கிறது ஆய்வொன்று.

உடற்பயிற்சி

மிகவும் அடிப்படையான தகவல்தான், உடற்பயிற்சி உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இது உடல் எடையை கட்டுக்குள் வைப்பதுடன் ரத்தத்தில் சக்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

இதற்கு நீங்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தினசரி நம் நடவடிக்கைகளை நாம் மாற்றி கொள்வதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்கலாம்.

அதனை சிறு வரைப்படமாக இங்கே பகிர்கிறோம்.

நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி?

அதேநேரம் அண்மைய ஆராய்ச்சி ஒன்று 5 தனித்தனி நோய்களே நீரிழிவு என்று கண்டறிந்துள்ளது.

நீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு இருப்பதைதான் நீரிழிவு என்று கூறுகின்றனர். இது பொதுவாக வகை 1, வகை 2 என இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.

ஆனால், நீரிழிவுக்காக மருந்து எடுத்துக்கொள்வோரின் நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாக ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

https://www.bbc.com/tamil/science-46195764

  • கருத்துக்கள உறவுகள்

உலக சர்க்கரை நோய் தினம் இன்று ..

cover-1542196697.jpg

இன்று உலக சர்க்கரை நோய் தினம். உலக அளவில் இன்று அனைவரையும் அச்சுறுத்தும் விஷயமாக இருப்பது இந்த சர்க்கரை நோய் தான்.

ஏனென்றால் சர்க்கரை வந்துவிட்டாலே அடுத்தடுத்து ஒவ்வொரு நோயாக மாரடைப்பு வரை கொண்டு வந்து விட்டுவிடும்.சர்க்கரை நோயின் தலைமையிடமாகவே இந்திய மாறிவிட்டது என்று சொல்லுமளவுக்கு சர்க்கரை நோய் நம்மடைய நாட்டில் மிக வேகமாகப் பரவிவிட்டது.

சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின் படி, கடந்த 20 வருடங்களில் கிட்டதட்ட 55 சதவீதம் சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் மட்டும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம் உலக அளவில் குறிப்பாக, இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் விகிதம் தாறுமாறாகப் பெருகியிருப்பதற்குக் காரணம் மாறிவிட்ட வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகள் தான். என்னதான் மாத்திரை, மருந்துகள் என தினமும் எடுத்துக் கொண்டாலும் அவை சர்க்கரையைக் கட்டுக்குள் தான் வைத்திருக்குமே ஒழிய தீர்க்காது..

உணவு முறை

அந்த மருந்துகள் யாவும் சர்க்கரை நோய் வந்தபின்பு செய்யும் சிகிச்சைகள். ஆனால் வருவதற்கு முன்னாலே கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால், அதற்கு உணவு முறை மூலம் தான் தீர்வு காண முடியும். சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நம்முடைய முன்னோர்கள் ஏராளமான உணவுமுறைகளை பின்பற்றி வந்துள்ளனர். அதில் மிக முக்கியமான ஒரு பொருள் பூண்டு. இன்று உணவில் பூண்டு இருந்தால் நாம் ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் பூண்டை கீழ்வருமாறு செய்து சாப்பிட்டால் சர்க்கரை இல்லாதவர்களின் பக்கம் அண்டாது. சர்க்கரை ஏற்கனவே  இருந்தால் கட்டுக்குள் வரும்.

பூண்டு

பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு உணவுப் பொருள் ஆகும். தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வது பல்வேறு விதங்களில் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. இதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் பூண்டை எப்படி பயன்படுத்தினால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பூண்டு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

பூண்டு பால்

பூண்டு பல் 10 தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு கப் பாலில் போட்டு பூண்டு ஓரளவு வேகும்வரை பாலைக் காய்ச்சினால் பூண்டு வெந்து பாலிலேயே கரைந்து விடும். பின் அந்த பால் வெதுவெதுப்பான பின், தினமும் தூங்கச் செல்லும்முன் குடிக்க வேண்டும். பூண்டின் குணம் பாலில் இறங்கியதும் பால் லேசான கசப்புத் தன்மையுடன் இருக்கும். அதுதான் உங்கள் ரத்த சர்க்கரையை  கட்டுக்குள் வைக்க உதவும்.

பனங் கற்கண்டு

இந்த பூண்டு பாலை சிறுவர்களுக்குக் கொடுப்பதாக இருந்தால், கசப்பாக இருக்கும் அவர்களால் குடிக்க முடியாது. ஆனால் சர்க்கரை சேர்க்கக் கூடாது. அதற்கு பதிலாக பனங்கற்கண்டு சிறிதளவு கலந்து கொடுக்கலாம்.

வெள்ளை சர்க்கரை 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் "வெள்ளை சர்க்கரையை" கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது. அதற்கு பதிலாக பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பனை வெல்லம், பனங்கற்கண்டு ஆகியவற்றை சிறிய அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம். ரத்த அழுத்தம் இந்த பூண்டு வேகவைத்த பாலை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் மட்டுமல்லாது, மன அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தமும் குணமாகும்.

பூண்டு டீ

இஞ்சி டீ கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோலத் தான் பூண்டு டீயும். ஆனால் இதில் கொஞ்சம்  இஞ்சியும் சேர்க்க வேண்டும்.

வெந்தயப் பால்

பூண்டு பால் தயாரிப்பதைப் போலவே பூண்டுக்கு பதிலாக வெந்தயத்தை ஊறவைத்தும் சேர்த்துக் காய்ச்சி குடிக்கலாம். இந்த வெந்தயப் பால் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைக் கொடுக்கும்.

கருஞ்சீரகம்

நாட்டு மருந்து கடைகளில் கருஞ்சீரகம் கிடைக்கும். அதை கால் கிலோ அளவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சின்ன சின்ன கல், தூசி இருக்கும். அதனால் இதை நன்கு தண்ணீர் விட்டு, அலசிக் கொண்டு அதை வெயிலில் வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள்.

நன்கு காய்ந்ததும் மிக்சியில் போட்டு நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, அதன்பின் ஒரு கிளாஸ் வெந்நீர் குடித்துவிட வேண்டும். இந்த பொடியை சாப்பிட்ட பின்பும், வெந்நீர் குடிப்பது மிக மிக அவசியம். இந்த முறையை தொடர ஆரம்பிக்கும் முன் ஒருமுறை உங்களுடைய ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதியுங்கள். இந்த பொடியை ஒரு மாதம் சாப்பிட்ட பின், மீண்டும் சோதனை செய்யுங்கள்.

உங்களுடைய ரத்த சர்க்கரை அளவில் உண்டாகியிருக்கும் மாற்றத்தை நீங்களே நன்கு உணர்வீர்கள். இந்த உலக சர்க்கரை நோய் தினத்தில் இருந்தாவது சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுங்கள். உங்களுடைய உணவு மற்றும் வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றுங்கள்.

https://tamil.boldsky.com/health/diabetes/2018/world-diabetics-day-three-natural-remedy-for-diabetes-023441.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.