Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கல்வி மட்டம் குறைவடைந்துள்ளமைக்கு வட மாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் – சரா புவனேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி மட்டம் குறைவடைந்துள்ளமைக்கு வட மாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் – சரா புவனேந்திரன்

வடமாகாணம் கல்வி மட்டத்தில் 9வது மாகாணமாக விளங்குவதற்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் நேற்று(சனிக்கிழமை) யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கல்வித் தரத்தில் வடமாகாணம் 9வது இடத்திலும், கிழக்கு மாகாணம் 8வது இடத்திலும் இருக்கின்றது. வடகிழக்கு மாகாணங்களில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர், இந்த நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட போது, விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், வேறு துறைகளுக்குச் சென்றுவிட்டார்கள். வடகிழக்கு மாகாணங்களில் கணித விஞ்ஞான பாட ஆசிரியர்கள் மிகக்குறைவாக இருக்கின்றார்கள். ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களின் 394 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதேபோன்ற ஒரு விபரத்தை தயாரித்து வழங்கி வருகின்றோம். மாற்று வழிகளை தேடுமாறு கோரியிருந்தோம். பட்டதாரிகளுக்கு நியமனம் கொடுக்கின்றார்கள். மாகாணத்தில் மட்டும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு மத்திய அமைச்சு நியமனம் கொடுக்கின்றது.

அமைச்சர்களின் விருப்பமாகவும், பாடசாலைக்குச் செல்லாதவர்களும், தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்படுகின்றது. கணித பாட ஆசிரியர்கள் 188 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. விஞ்ஞான பாடத்திற்கு 161 ஆசிரிய வெற்றிடங்களும், ஆங்கில பாடத்திற்கு 51 வெற்றிடங்களும் நிலவுகின்றன.

தமிழ் பாட ஆசிரியர்கள் 99 வெற்றிடங்கள் நிலவுகின்றன. இந்த நியமனங்களை யார் வழங்குவது? மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, வேறு மாகாணங்களில் வழிவகுத்த விடயங்களை மாகாண கல்வி அமைச்சிடம் கொடுத்தோம். அதை யாரும் கேட்பதாக இல்லை.

கடந்த 5 வருடங்களாக மாகாண சபையில் சண்டையும் சர்ச்சரவும் நிகழ்ந்தது. தற்போது, ஓய்ந்து நின்மதியாக இருக்கின்றது“ என தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/கல்வி-மட்டம்-குறைவடைந்து/

 

 

14 minutes ago, கிருபன் said:

வடமாகாணம் கல்வி மட்டத்தில் 9வது மாகாணமாக விளங்குவதற்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது சங்கத்து உறுப்பினர்கள் பாடசாலையில் ஒழுங்காக கல்வி புகட்டுவதில்லை! மாணவர்களை தனியார் வகுப்புகளுக்கு அலைக்கழித்து இரட்டை ஊதியம் பெற்று வருகின்றனர் என்ற உண்மையை மறைத்து பழியை வேறிடம் போடுவது அழகல்ல. 

முன்னர் பாடசாலை பணிகளை செவ்வனே முன்னெடுத்த பல நல்லாசிரியர்கள் ஓய்வு பெற்றதும், புது நியமனம் பெறும் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பணிகளை உரிய முறையில் செய்வதில்லை என்ற உண்மையை வட-கிழக்கு மாகாணங்கள் அறியும்.  

அத்துடன் திறமையான பலர், புலம்பெயர்வதையே குறிக்கோளாக கொண்டிருப்பதாலும் தகுதியான ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த இடங்களை வேலைவாய்ப்பு கேட்டு போராட்டம் நடத்தும் தகுதியற்ற பிச்சைகாரப் பட்டதாரிகள் பெறுகின்றனர். 

இவ்வாறு பிச்சையெடுத்து / முறையற்ற முறைகளில் வன்னி மாவட்டங்களில் பதவியைப் பெறுபவர்கள் அங்கு  கல்வி போதிப்பதில் அக்கறை எடுப்பதில்லை. நாளாந்தம் யார் ஓய்வு பெறுகிறார்கள் என்று தகவல் சேகரிப்பதில் காலத்தை செலவிட்டு விரைவில் இடம்மாறி தங்கள் ஊர்களுக்கு அண்மையில் செல்வதே அவர்களின் அடுத்த செயற்பாடு. 

இவற்றை சரி செய்ய வேண்டியது ஆசிரிய சங்கத்தின் பொறுப்பாகும். 

முதலில் இதை செய்து கொண்டு பின்னர் வட மாகாணசபையின் மீது பழியை போடுவது பொருத்தமாக இருக்கும். 

வட மாகாணசபையின் கீழ் இயங்கிய  மாகாண கல்வித்துறையிலுள்ள அதிகாரிகளின் செயற்பாடுகள் வினைத்திறன் குறைந்ததாகவே இருந்தது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கும் கிழக்கும் முதலிடத்துக்கு வர அனைவரும் பாடுபட வேண்டுமே தவிர மற்றவர்கள் மேல் பழியை போட்டு தப்பிக்க கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.