Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஜனக பெரேராவை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவும்'

Featured Replies

'ஜனக பெரேராவை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவும்'

"ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை கோத்தபாயாவுக்கு பதிலாக பாதுகாப்புச் செயலாளராக நியமிக்குமாறு" சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறீகோத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

"தற்போது இந்தோனேசிய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனக பெரேரா மிகவும் திறமை வாய்ந்த இராணுவத் தளபதி. மிகவும் செயற்திறன் மிக்கவர். தற்போதைய நாட்டின் இக்கட்டான நிலையில் அவரே மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர்.

பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருப்பவர் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும் ஜனக பெரேரா தளபதியாக இருந்த போது விடுதலைப் புலிகளுக்கு மிகப்பெரும் தோல்வியை கொடுத்தவர்.

அவர் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த போது ஆனையிறவு வீழ்ச்சி கண்ட பின்னர் விடுதலைப் புலிகள் வசம் யாழ். குடா விழும் கட்டத்தில் இருந்த போதும் அதனைக் காப்பாற்றியவர்.

கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் தேர்தல் ஒன்றிற்கு தயாராக இருத்தல் வேண்டும். ஏனெனில் அரசாங்கத்தின் செல்வாக்கு சரிந்து வருகின்றது. தற்போதைய நிலையில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்து கொண்டு அரசாங்கம், பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது என்றார்" அவர்.

http://www.eelampage.com/

இராணுவப் பின்னடைவைத் தவிர்க்க பாதுகாப்புச் செயலரை பதவி நீக்குக!

ஜானக பெரேராவே பொருத்தமானவர் என்கிறார் ரணில்

இராணுவ ரீதியில் நாடு பின்னடைவைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக அதற்குப் பொறுப்பாக உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை ஜனாதிபதி பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஸ்ரீகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை யகத்தில் தேசிய அரச தொழிற் சங்கங்களின் இணையத்தளம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வைபவத்தில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

நாடு தற்போது இராணுவ ரீதியாகப் பாரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

இந்த நிலை தொடருமேயானால் அமைதிப் பேச்சின்போது அது புலிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்துவிடும். புலிகள் தமது கோரிக்கையை மிக இலகுவாக வென்று விடுவர். அவ்வாறானதொரு தோல்வியை இலங்கை சந்திக்காமல் இருப்பதற்கு இலங்கை தற்போது எதிர்கொள்ளும் இராணுவப் பின்னடைவு நிறுத்தப்பட வேண்டும். அதற்குக் காரணமாகவுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவி நீக்கவேண்டும்.

வாகரையைக் கைப்பற்றுவதற்காக நான்கு மாதங்களையும் கோடிக்கணக்கான பணத்தையும் நானூறு படைவீரர்களின் உயிர்களையும் இந்த அரசு பறிகொடுத்துள்ளது. இவ்வாறான இழப்புகளுக்கு மத்தியில் வாகரை கைப்பற்றப்பட்டதை ஒரு வெற்றியாக என்றைக்குமே ஏற்கமுடியாது.

வாகரைத் தாக்குதல் மாத்திரமன்றி கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதலிலும் இராணுவ ரீதியாக இலங்கைக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல்களால் இலங்கைக்குத் தோல்வி ஏற்படக் காரணம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷதான்.

இறந்த படையினரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் படையினரின் உயிர்கள் இனியாவது காப்பாற்றப்பட வேண்டுமென்றால் கோத்தாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு திறமையான ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த விடயத்தில் ஜனாதிபதிக்குப் பாரிய பொறுப்புண்டு. இந்தப் பதவிக்கு மிகவும் தகுதியான ஒருவர் என்றால் தற்போது அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தூதுவராகவுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் ஜனகபெரேராதான். அவரை இப்பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். (அசி)

uthayan.com

Edited by வானவில்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த போது ஆனையிறவு வீழ்ச்சி கண்ட பின்னர் விடுதலைப் புலிகள் வசம் யாழ். குடா விழும் கட்டத்தில் இருந்த போதும் அதனைக் காப்பாற்றியவர்.

அப்பொழுது சந்திரிகா அம்மையார், புலிகள் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கப் போயினம் என்று அழுது குளரி கதிர்காமரை இந்தியாவுக்கு அனுப்பி யாழ் நகரில் உள்ள இலங்கை இராணுவத்தை காப்பாற்றச் சொல்லி உதவி கேட்டதும் இவர்கள் மறந்துவிட்டார்கள் போல. அப்ப ஜானக பிரேரா யாழ்ப்பாணத்தைக் காப்பாற்ற என்ன செய்தவர்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.